Sunday, September 30, 2007

மாணவி தனியறையில் அடைப்பு!

9.மாணவி தனியறையில் அடைப்பு : அரசு பள்ளி ஆசிரியர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை காரையூர் மறவாமதுரையைச் சேர்ந்த மாணவி உஷா (வயது15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படிக்கிறார். செப்., 26ல் சக மாணவியருடன் பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்புக்கு சென்றார். அன்று மாலை பள்ளி முடிந்தும், உஷா வீடு திரும்பவில்லை. அவரை தேடி பெற்றோர் பள்ளிக்கு சென்றனர். சிறப்பு வகுப்பு நடத்திய ஆசிரியர் முத்து (36)விடம் விசாரித்தனர். சக மாணவியுடன் உஷா, மங்கனூர் கிராமத்துக்கு சென்றதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், பெற்றோர், வகுப்பறைகளை திறந்து பார்த்தனர். ஆசிரியர் தங்கும் அறையில் உஷா மட்டும் தனியாக இருந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். ஆசிரியர் முத்து தவறான எண்ணத்துடன் தன்னை அழைத்தார். பாலியல் பலாத்காரம் செய்வதற்காக தனியாக அடைத்து வைத்திருந்தார் என உஷா தெரிவித்தார். ஆசிரியர் முத்து, ஏற்கனவே திருமணம் ஆனவர். இரு குழந்தைகளும் உள்ளனர். ஏற்கனவே இத்தகைய புகார்களுக்கு ஆளானவர்.

பெற்றோர், பொதுமக்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். போலீசார் சமாதானம் செய்தனர். பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பும் தடைபட்டது. ஆசிரியர் முத்துவை காப்பாற்ற கல்வித்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். முதன்மைக்கல்வி அலுவலர் செல்லம் தலைமையில், சமாதானக்குழு அமைத்து, பெற்றோருடன் பேச்சு நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாததால், ஆசிரியர் முத்து மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். வேறுவழியில்லாத முதன்மைக்கல்வி அலுவலர் செல்லம், ஆசிரியர் முத்துவை சஸ்பெண்ட் செய்தார்.

நன்றிங்க, தினமலர் 30.09.2007

மாணவியின் மீது பாலியல் பலாத்காரம் தாக்குதலுக்கு தயாரான அயோக்கினுக்காக என்ன பரிந்து பேச வேண்டியிருக்கு? சட்டப்படி தண்டிக்க வேண்டியதுதானே முறை!

Labels: ,

Saturday, September 29, 2007

2.கட்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்.

'கட்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்' அமைச்சர் பேச்சால் சலசலப்பு!

சனிக்கிழமை, செப்டம்பர் 29, 2007

கரூர்:

கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட வணிக வரித்துறை அமைச்சர் எஸ்.எம்.உபையதுல்லா, கட்சி தான் முக்கியம். எம்.எல்.ஏ, அமைச்சர் பதவி எல்லாம் பிறகுதான் என்று பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

கருரில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், வணிகவரித் துறை அமைச்சர் உபயதுல்லா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாக வந்தார். இதுகுறித்து தனது பேச்சின்போது கூறுகையில், என்னைப் பொறுத்தவரை இயக்கப் பொறுப்பு, கட்சிப் பணிதான் முதலில் முக்கியம்.

எம்.எல்.ஏ., அமைச்சர் பதவி எல்லாம் அதற்குப் பிறகுதான். நான் நகர செயலாளராக இருப்பதால் எங்கள் பகுதிக்கு வந்த அமைச்சர் முக ஸ்டாலினை வழி அனுப்பி வைத்துவிட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இதுதான் நான் நிகழ்ச்சிக்கு தாமதமாக வரக் காரணம் என்றார்.

ஏழைகளுக்கு இலவச நிலப் பட்டா வழங்கும் விழாவுக்கு தாமதமாக வந்ததற்கு அமைச்சர் உபையதுல்லா கூறிய இந்தக் காரணம், கூடியிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

நன்றிங்க

பொறுப்பில்லாத அமைச்சர்,
ஏழைகளுக்கு இலவச நிலப் பட்டா வழங்கும் விழாவை தாமதப்படுத்தியது இல்லாமல் எனக்கு ஏழைகளை விட கட்சிக்கு மணியாட்டுவதுதான் ரொம்ப முக்கியம்னு தெனாவட்டான பேச்சு வேறயா..?

எல்லாம் அவரை தேர்ந்தெடுத்த மக்களைச் சொல்லனும்..!

Labels: ,

பெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு!

பெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு! அமெரிக்காவில் பரபரப்பு!!



சனிக்கிழமை, செப்டம்பர் 29, 2007

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் புகுந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாட்ரிசியா ரோஜர் என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்.

அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடைகளை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினர். மேலும், பாட்ரிசியா தொடர்ந்து கடுமையாக வாந்தியும் எடுத்தபடி இருந்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை.

இதைப் பார்த்து குழம்பிய டாக்டர்கள், எக்ஸ் ரே எடுக்க முடிவு செய்தனர். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது டாக்டர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாட்ரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.

உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்தனர் டாக்டர்கள். இதையடுத்து பாட்ரிசியாவை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கினர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடி வெளியே வந்தது.

இதைப் பார்த்த ஒரு நர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். டாக்டர்களும் கூட ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

அந்தப் பாம்பு சிறிதாக இருந்தபோதே பாட்ரிசியாவின் குடலுக்குள் புகுந்துள்ளது. பாட்ரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதுவும் வளர்ந்து வந்துள்ளது.

எப்படி இந்த பாம்பு பாட்ரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்குக் கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாட்ரிசியா, டூர் சென்றிருந்தபோது அங்கு ஆற்று நீரை அள்ளிக் குடித்துள்ளார்.

அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் போயிருக்கலாம். அந்த பாம்புதான் தற்போது வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகப்படுகின்றனர்.

பாட்ரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு 1.83 மீட்டர் நீளம் இருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பின் உடலில் கருப்புப் பட்டைகள் காணப்பட்டன. வாய் அகலமாக இருந்தது.

ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது.

16ம் நூற்றாண்டில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைப் பொறுக்க முடியாமல் அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்தார். பின்னர் அவரை சவப் பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டனர். ஆனால் சில நாட்கள் கழித்து அந்த சவப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு பாம்பு வந்தது.

அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என்பது பின்னர் தெரிய வந்தது.

இதேபோல, 1642ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த காத்தரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து பல்லிகளைக் கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்து பயங்கர சம்பவமாகும்.

இந்த நிலையில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிங்க

பாம்பு நல்ல வசதியாக வயிற்றில் வளர்ந்திருக்கிறது, ஆச்சரியந்தான்!

Labels: ,

04.இரட்டை டம்ளர் முறை ஒழிக!

04.இரட்டை டம்ளர் முறையை ஒழிக்ககோரி டீக்கடையில் முற்றுகை



தேனி: இரட்டை டம்ளர் முறையை ஒழிக்கக்கோரி அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்கம் டீ கடைகளில் முற்றுகை போராட்டம் நடந்தது.தேனி, காட்டுநாயக்கன்பட்டி டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை உள்ளதாகக்கூறி, அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்க சின்னமனுõர் ஒன்றிய பொறுப்பாளர் சுப்பையா தலைமையில் ஆண்டிபட்டி, போடி, தேனி பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் டீ கடைகளை முற்றுகையிட்டனர். எல்லா இனத்தவரையும் போல் அருந்ததியரையும் பெஞ்சில் உட்கார வைத்து டீ வழங்க வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான டம்ளரில் வழங்கவேண்டும் என கூறி டம்ளர்களை உடைத்தனர்.

நன்றிங்க

பொதுவானவை.

Labels: ,

Friday, September 28, 2007

03.ஏ.டி.எம் அட்டைகள் ஜாக்கிரதை!

03. வேலை பார்த்த வீட்டில் கிரெடிட் கார்டு திருடி ரூ.14 லட்சம் "லபக்' * ஷேர் ஆட்டோக்கள் வாங்கிய புது பணக்காரன் சிக்கினான்

சென்னை : கிரெடிட் காடு மற்றும் ஏ.டி.எம்., கார்டுகளை திருடி ரூ.18 லட்சம் மோசடி செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஷேர் ஆட்டோகள், ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ முதல் தெருவில் வசிப்பவர் சீனிவாசன்(52). பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்.

இவரது சகோதரர் கல்யாணகிருஷ்ணன்; சாப்ட்வேர் இன்ஜினியர். அமெரிக்காவில் கட்டட கான்ட்ராக்டராக உள்ளார். சீனிவாசனின் மனைவி மற்றும் மகன்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். நெல்லை குறுக்கல்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள்(50). சென்னை தண்டையார் பேட்டையில் தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தவர், சீனிவாசனின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். சீனிவாசன் சொந்தமாக கார் வைத்திருந்தார். செல்லம்மாளின் உறவினர் நெல்லையை சேர்ந்த முத்துராஜ்(32), சீனிவாசனின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார்.

கல்யாணகிருஷ்ணன் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணக்கில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள புதிய கிரெடிட் கார்டு பெற்றார். அதை சீனிவாசனிடம் கொடுத்து விட்டு அமெரிக்கா சென்றார். சீனிவாசனின் வீட்டில் இருந்த புதிய கிரெடிட் கார்டு செல்லம்மாளிடம் கிடைத்தது. அதை முத்துராஜிடம் கொடுத்தார். கார்டை பயன்படுத்த தெரியாத முத்துராஜ் நான்கு மாதம் வீட்டில் வைத்திருந்தார். பின்னர் நண்பரிடம் காண்பித்தார். ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டை போட்டு பணம் எடுக்கும் விதத்தை முத்துராஜூக்கு அவரது நண்பர் சொல்லிக் கொடுத்தார்.

இதையடுத்து சிறிது சிறிதாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.14 லட்சத்தையும் முத்துராஜ் எடுத்தார். சொந்த ஊரான குறுக்கல்பட்டியில் ரூ.2 லட்சத்தில் பழைய வீட்டை புதுப்பித்தார். ரூ.4 லட்சத்தை வட்டிக்கு விட்டார். ரூ.8 லட்சத்தில் இரண்டு ஷேர் ஆட்டோக்கள் வாங்கி சென்னையில் வாடகைக்கு விட்டார். அமெரிக்காவில் இருந்த கல்யாணகிருஷ்ணன் சென்னை திரும்பினார். அவரது வங்கி கணக்கில் ரூ.14 லட்சத்துக்கு பதிலாக ரூ.112 மட்டுமே இருந்தது. இது குறித்து போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் அவர் புகார் அளித்தார். உதவி கமிஷனர் பன்னீர்செல்வம், சப்இன்ஸ்பெக்டர்கள் முத்து, ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையிலான போலீசார் புது பணக்காரனான முத்துராஜ் மற்றும் வேலைக்காரி செல்லமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி பணத்தில் வாங்கப்பட்ட ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு சம்பவம்:

இதேபோன்ற மற்றொரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. அதன் விவரம்: சென்னை ராஜாஜி சாலையில் "ஆல்பா லைன்ஸ் ஷிப்பிங்' என்ற தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இதன் மேலாளர் தப்பான் உபாசக். நிறுவனத்தின் பெயரில் எச்.எஸ்.பி., வங்கியில் இரண்டு ஏ.டி.எம்., கார்டுகளை பெற்றார். ஏ.டி.எம்., கார்டு மற்றும் ரகசிய குறியீட்டு எண் அடங்கிய கவரை, சிங்கப்பூரில் உள்ள நிறுவன உரிமையாளருக்கு கூரியர் மூலம் அனுப்பினார். சிங்கப்பூரில் இருந்த உரிமையாளர், உலகம் முழுவதிலும் உள்ள தனது நிறுவனத்தின் கணக்குகளை ஆன்லைனில் தினமும் சரி பார்த்து வந்தார்.

சென்னையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் எடுக்கப்பட்டிருந்தø த கண்டுபிடித்தார். சென்னை நிறுவன அதிகாரியான தப்பான் உபாசக்கிடம் பேசினார். "வங்கி கணக்கில் ஏ.டி.எம்., கார்டு பெற்று உங்களுக்கு அனுப்பியுள்ளேன்' என அவர் கூறியுள்ளார். "சிங்கப்பூருக்கு ஏ.டி.எம்., கார்டு வந்து சேரவில்லை' என உரிமையாளர் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம், உபாசக் நேற்று முன்தினம் காலை புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தினர்.

சென்னையில் "டி.டி.டி.சி.,' கூரியர் நிறுவனத்தில் விசாரணை நடத்தினர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த மோகன் மகன் நாகேந்திரன்(22). கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர், பார்சலை உடைத்து அதில் இருந்த ஏ.டி.எம்., கார்டுகளை திருடினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதுப்பாளையம் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்த காமராஜ் மகன் ஸ்ரீராஜ்(24) மற்றும் நாகேந்திரன் நண்பர்கள். இருவரும் சேர்ந்து ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி ரூ.4 லட்சம் எடுத்து இருந்தனர். நாகேந்திரன், ஸ்ரீராஜ் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்த ரூ.4 லட்சத்தையும் போலீசார் மீட்டனர்.

நன்றிங்க

''திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்

அதைச் சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கும்

திருடராய் பார்த்து...''

Labels: ,

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு!

குண்டுவெடிப்பு: 41 பேருக்கு 9 ஆண்டுகள் சிறை; மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை!

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 28, 2007

கோவை:

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்படுவதாக தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 41 பேருக்கு 5 முதல் 9 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் ஜாமீனில் விடுதலையாக நீதிமன்றம் அனுமதித்தது.

இவர்கள் தவிர அல் உம்மா பாஷா, அன்சாரி உள்ளிட்ட 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இன்று அவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

முதலில் மதானி உள்ளிட்ட 8 பேரும் நிரபராதிகள் என கூறி அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி உத்திராபதி அறிவித்தார்.

இதையடுத்து சாதாரண குற்றச்சாட்டுக்கள் நிரூபணமான 80 பேருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி வெளியிட ஆரம்பித்தார். முதற்கட்டமாக இன்று 41 பேருக்கு தலா 5 முதல் 9 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் 25 பேருக்கு தலா 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும், 10 பேருக்கு தலா 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், 6 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இவர்கள் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலத்தில் கழித்துக் கொள்ளலாம் என நீதிபதி அறிவித்தார். எனவே தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே சிறையில் 9 வருடங்களுக்கு மேலே இருந்திருப்பதால் 41 பேரும் விடுதலை ஆனார்கள்.

விடுவிக்கப்படுகிறவர்கள் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை வழக்கு குறித்து வெளிப்படையாகப் பேசக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தொடர்ந்து தண்டனை விவரத்தை நீதிபதி உத்திராபதி நாளை அறிவிப்பார் என்று தெரிகிறது.

தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதையொட்டி கோவை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர வாகனச் சோதனை மற்றும் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றிங்க

தண்டனை அனுபவித்து முடிந்தபின் தீர்ப்பும், விடுதலையும்.

Labels: , ,

01. ஆஸ்திரேலியா பெண் சுமையாவை கைது செய்ய போலீசார் தீவிரம்!

01. ஆஸ்திரேலியா பெண் வரதட்சணை கொடுமை வழக்கில் புதிய திருப்பம் * சுமையாவை கைது செய்ய போலீசார் தீவிரம்

ராமநாதபுரம் : ஆஸ்திரேலியா பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய துபாய் கணவர் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் வெளிபட்டிணத்தை சேர்ந்தவர் கரீம்கனி(67). இவரது பேத்தி சுமையா(21) பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். சுமையாவுக்கும் பெரியபட்டிணத்தை சேர்ந்த மொகைதீன்ஹாருனுக்கும் திருமணம் நடந்தது

கணவருக்கு ஆஸ்திரேலியாவில் விசா வாங்கியிருந்த சுமையா, 2007 மார்ச் 13ல் தனக்கும் தனது கணவருக்கும் இடையே உள்ள உறவு, கருத்து வேறுபாடால் முறிந்துவிட்டது என ஆஸ்திரேலியா ஹைகமிஷனில் முறையிட்டு, கணவரின் விசாவை ரத்து செய்யும்படி மனு செய்தார். ஆஸ்திரேலியா ஹைகமிஷன் 2007 ஏப்.2ல் மொகைதீன் ஹாருனின் விசாவை ரத்து செய்தது. அதன் பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், மொகைதீன் ஹாருன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக ராமநாதபுரம் மகளிர் போலீசில் சுமையா புகார் கொடுத்தார். மொகைதீன் ஹாருனின் வீட்டிற்கு சென்ற பெண் போலீசார், மொகைதீனின் தாயார் முகபத்பீவியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். மொகைதீனின் தாய்மாமன் மெக்தர்அலி, சுமையாவின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அவரையும் வழக்கில் சேர்த்து கைது செய்தனர்.

மறுநாள், சுமையா மற்றும் அவரது உறவினர்கள், பெரியபட்டிணத்தில் மொகைதீன் ஹாருன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக திருப்புல்லாணி போலீசார், சுமையா

உள்ளிட்ட ஆறுபேரை தேடி வருகின்றனர்.

நன்றிங்க

பெண்கள் பயன்படுத்தும் ''வரதட்சணை கொடுமை'' என்ற விஷம ஆயுதத்தால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்பட்டு பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது.

Labels: ,

Thursday, September 27, 2007

பெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது!

பெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது

மும்பை: தனக்கு பிறந்த பெண் குழந்தையை, எட்டு வயதில் இருந்து தாரமாக மாற்றி நான்காண்டுகளாக தொடர்ந்து கற்பழித்து வந்த காமுகன் கைது செய்யப்பட்டான்.

மும்பையைச் சேர்ந்தவன் மோதிலால் சிங். வயது 32. புறநகர் பகுதியில் வடை, பஜ்ஜி விற்பது தான் தொழில். தனது தாய், மனைவி மற்றும் குழந்தையுடன், நிர்மல் நகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறான் மோதிலால் சிங். மனைவி மட்டுமின்றி, தனது சொந்த மகள் மீதும் காமம் கொண்டான் மோதிலால் சிங். சிறுமிக்கு எட்டு வயதானதிலிருந்து, அவளை கதறக் கதற கற்பழித்தான்.

இந்த விஷயம், அவன் குடும்பத்தில் யாருக்குமே தெரியாது. மனைவி மற்றும் தனது தாய் இல்லாத சமயங்களில் தான் தனது மகளுடன் தகாத உறவு வைத்துக் கொள்வது மோதிலால் சிங்கின் வழக்கம்.சில நாட்களுக்கு முன், மோதிலாலின் மனைவியும் தாயும் ஒரு திருமணத்துக்காக வெளியில் சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த சிறுமி கெஞ்சியும், கதறியும் மனமிறங்காமல் மீண்டும் கற்பழித்தான் மோதிலால்.வீடு திரும்பிய மோதிலால் மனைவியும், தாயும், சிறுமி அழுது கொண்டிருப்பதை பார்த்தனர்.

அவளிடம் விசாரித்த போது, இதுவரை நடந்த எல்லா விஷயத்தையும் கண்ணீருடன் கொட்டித் தீர்த்து விட்டாள் அந்த சிறுமி.அதன் பிறகு என்ன? வழக்கம் போலத் தான். கணவனுடன் மனைவி சண்டை போட, மகனை தாய் திட்ட, குடும்பத்தில் தினமும் ரகளைதான். இதனால் மிரட்சியடைந்த சிறுமி, யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். ஒரு ரயிலில் ஏறி, லோயர் பரேல் ரயில் நிலையத்தில் இறங்கி விட்டாள். அதன் பிறகு என்ன செய்வது என்பது தெரியாமல், ரயில் நிலையத்திலேயே சுற்றிச் சுற்றி வந்தாள்.சந்தேகமடைந்த பெண் போலீஸ் ஒருவர், சிறுமியிடம் விசாரித்தார்.

முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னாள் சிறுமி. இதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்காக பாடுபடும், "சாத்தி' என்ற சமூக சேவை நிறுவனத்தாருக்கு ரயில்வே போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள், சிறுமியிடம் விசாரித்த போது, ஓரளவு தகவல்கள் தெரிய வந்தன.மும்பை மத்திய ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விஷயத்தை கூறினர். போலீசார் சிறுமியிடம் சகஜமாக பேச்சுக் கொடுத்து விசாரித்தனர். அப்போது எதற்காக வீட்டை விட்டு வெளியேறினாள் என்பது உட்பட எல்லா விஷயத்தையும் கூறினாள் சிறுமி. நாக்படா போலீஸ் மருத்துவமனையில் அந்த சிறுமியை பரிசோதித்தனர். அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டிருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து மோதிலால் சிங் மீது வழக்கு பதிவு செய்து, அவனை கைது செய்தனர். அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

நன்றிங்க

படிக்கும்போது நெஞ்சு பதறி கண்ணீர் நிறைகிறதய்யா :(((

Labels:

Wednesday, September 26, 2007

04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறல்!

04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறும் கிராமம் பாப்பாபட்டியில் தான் இந்த அவலம்



உசிலம்பட்டி :உள்ளாட்சி தேர்தலால் கடந்த சில ஆண்டுகளாக கலகலத்துப் போன பாப்பாபட்டி கிராம மக்களை, இப்போது ஒரு எண் பாடாய் படுத்துகிறது. ஒன்பது என்ற எண்ணைக் கண்டாலே அலறி அடிக்கின்றனர் கிராமவாசிகள்.

ஒன்பதாம் நம்பர் என்றால் பலருக்கு உற்சாகம். வீட்டு எண் உட்பட அன்றாட உபயோக எண்ணின் கூட்டுத்தொகையாவது ஒன்பது வந்துவிட வேண்டும் என வேண்டி விரும்புபவர்கள் உண்டு.உசிலம்பட்டியிலிருந்து பாப்பாபட்டிக்கு டவுன் பஸ் இயக்கிய போது அதன் தடம் நம்பர் "9' என குறிப்பிடப்பட்டிருந்தது.

பாப்பாபட்டி கிராமவாசிகளின் வெளியூர் உறவினர்கள் இந்த எண்ணை வைத்து, கிராமத்திலுள்ள அனைவரையும் அரவாணியாக குறிப்பிட்டு கிண்டல் செய்தனர். அவதிப்பட்ட கிராமத்தினர் போராடி, இந்த எண் வழித்தட பஸ்சை பேரையூருக்கு திருப்பி விட்டனர்.அந்த பிரச்னை முடிந்தாலும், கிராமவாசிகளுக்கு புதிய எண் தலைவலி ஏற்பட்டது.

உசிலம்பட்டி வத்தலக்குண்டு ரோட்டிலிருந்து பாப்பாபட்டி செல்லும் ரோடு பிரியும் இடத்தில், "பாப்பாபட்டி ஒன்பது கிலோ மீட்டர்' என நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை வைத்தது. ஓட ஓட விரட்டி வந்து ஒட்டிக் கொள்ளும் இந்த எண்ணை மாற்ற, கிராம மக்கள் கடும் பிரயாசம் எடுத்துக் கொண்டனர். கிராம இளைஞர்கள் ஒன்பது என்ற எண்ணை அறிவிப்பு பலகையில் அழித்து விட்டு 10 கி.மீ., என குறித்து வைத்துள்ளனர். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் படுத்திய பாட்டால் மனம் வெதும்பி புண்ணாகி போயிருந்த கிராம மக்கள், துரத்தும் நம்பர் ஒன்பதை தவிர்க்க பாடாய் படுகின்றனர்.

நன்றிங்க

அப்ப ஒன்பதாம் தேதியில் குழந்தை பிறக்காதா?

ஒன்பதாம் தேதியில் திருமணம் நடத்தமாட்டார்களா என்ன?

Labels: ,

எஸ்எஸ்எல்சி, +2 கட்டணம் ரத்து

எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ கட்டணம் ரத்து

புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007

சென்னை:

பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாநில கல்வித் திட்டத்தின் கீழ் 10,12ம் வகுப்புகள் பயிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இது பொருந்தும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும், உதவி பெறாத பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 10ம் வகுப்பு தேர்வுக் கட்டணமாக ரூ. 115ம், பிளஸ் டூ தேர்வுக் கட்டணமாக ரூ.175ம் வசூலிக்கப்பட்டு வந்தது.

செய்முறை தேர்வுடன் கூடிய பாடங்கள் படிக்கும் பிளஸ் டூ மாணவர்களிடம் ரூ.205 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண ரத்து மூலம் சுமார் 6 லட்சம் எஸ்எஸ்எல்சி மாணவர்களும், 5.5 லட்சம் பிளஸ் டூ மாணவர்களும் பலனடையவுள்ளனர்.

இந்த கட்டண ரத்தால் அரசுக்கு சுமார் ரூ.16 கோடி இழப்பு ஏற்படும். ஆனாலும் இந்தச் சலுகை மூலம் மேலும் பல மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியை நாடுவார்கள் என்பதால் இத் திட்டம் அமலாக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

நன்றிங்க

பொதுவானவை.

Labels: , ,

ஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு!

ராதிகா செல்வி Vs கீதா ஜீவன்: ஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு

புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007

தூத்துக்குடி:

தூத்துக்குடியில், மத்திய இணை அமைச்சர் ராதிகா செல்வி ஆதரவாளர்களுக்கும், தமிழக அமைச்சர் கீதா ஜீவன் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் ஒன்றிய செயலாளர் வெட்டப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் சக்திவேல். இவர் தமிழக அமைச்சர் கீதா ஜீவனின் ஆதரவாளர். அப்பகுதியில் நடக்கும் அரசு விழா, மற்றும் கட்சி விழாக்களில் மத்திய இணை அமைச்சர் ராதிகா செல்வியின் பெயரை அழைப்பிதழ்கள் -போஸ்டரில் போடாமல் புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராதிகா செல்வி ஆதரவாளர்கள் கோபத்துடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் விஸ்வ ஹந்து பரிசத் முன்னாள் எம்.பி வேதாந்தியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் கட்சியனர் 8 பேர் ஒரு வாகனத்தில் உடன்குடி திரும்பியுள்ளனர்.

அப்போது வரண்டிவேல் விலக்கு என்ற பகுதி அருகே ஒரு கார் இவரது வாகனத்தை மறித்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றிய செயலாளர் சக்திவேலை அரிவாளால் வெட்டி வாகனத்தையும் சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனராம்.

இது குறித்து குரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெட்டப்பட்ட ஒன்றிய செயலாளர் சக்திவேல் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒரே கட்சியின் இரு பெண் அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றிங்க

என்ன அநியாயங்க இது?

ஒரு கட்சிக்குள்யேயே இப்படி வெட்டுக் குத்து நடந்தால், ஒரே கட்சிக்காரங்க யாருக்காக போராட்டம் நடத்துவது?

Labels: ,

2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்!

விமான இறக்கையில் தொங்கியபடி 2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்

புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007

மாஸ்கோ:

ரஷ்யாவின் பெர்ம் நகரிலிருந்து மாஸ்கோ வரை சென்ற போயிங் விமானத்தின் இறக்கையில் திருட்டுத்தனமாக தொங்கியபடி 2 மணி நேரம் பறந்துள்ளான் 15 வயது சிறுவன். இடையில் பனி தாக்கியதால் கை, கால் விரைத்துப் போய் மாஸ்கோ விமான நிலையத்தில் மயங்கி விழுந்தான்.

ரஷ்யாவின் ஊரல்ஸ் பகுதியைச் சேர்ந்தவன் ஆண்ட்ரி. இவனது தந்தை குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவருக்கும், ஆண்ட்ரிக்கும் ஒத்துப் போகவில்லை. ஆண்ட்ரியின் தாயாரும், தனது கணவருக்கு ஆதரவாகவே பேசுவாராம்.

இதனால் மனம் வெறுத்த ஆண்ட்ரி அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டுக்கு கிளம்பிச் சென்றான். தாத்தா வீட்டுக்கு வந்த அவன் அருகில் உள்ள பெர்ம் நகருக்குக் கிளம்பினான்.

பெர்ம் வந்த ஆண்ட்ரிக்கு மாஸ்கோ போகும் எண்ணம் வந்துள்ளது. இதையடுத்து பெர்ம் நகர விமான நிலையத்திற்குள் நைசாக புகுந்து அங்கு மாஸ்கோ செல்லத் தயாராக இருந்த போயிங் விமானத்தில் ஏறியுள்ளான்.

விமானத்தின் இறக்கைப் பகுதியில் பதுங்கிக் ெகாண்டான். பெர்ம் நகரிலிருந்து அந்த விமானம் கிளம்பியதும் இறக்கையில் இறுகப் பிடித்தபடி இருந்துள்ளான். பெர்ம் நகரிலிருந்து மாஸ்கோவின் நுகோவா விமான நிலையம் கிட்டத்தட்ட 1,300 கிலோமீட்டர் தூரமாகும்.

இத்தனை தூரத்தையும் ஆண்ட்ரி இறக்கையில் தொங்கியபடி பயணித்துள்ளான். அவன் பயணித்த விமானம் மணிக்கு 900 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. வழியில் -50 டிகிரி அளவுக்கு கடும் பனி நிலவியது. இத்தனையையும் தாங்கியபடி விமானத்தில் பயணித்துள்ளான் ஆண்ட்ரி.

விமானம் மாஸ்கோ வந்து சேர்ந்ததும், அதுவரை இருந்த உறுதி குலைந்து அப்படியே தரையில் மயங்கி விழுந்தான் ஆண்ட்ரி. இதைப் பார்த்ததும் விமான நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து அவனை மீட்டனர்.

கை, கால்கள் விரைத்துப் போன நிலையில் இருந்த அவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவனது உடைகளைக் கூட கழட்ட முடியாத அளவுக்கு விரைத்துப் ேபாயிருந்தன கை, கால்கள்.

தற்போது ஆண்ட்ரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனது பெற்றோருக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மாஸ்கோ விரைந்து வந்தனர்.

ஆண்ட்ரி உயிருடன் வந்தது மிகப் பெரிய அதிசயம் என்று டாக்டர்கள் வியப்பு வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஒரு சிறுவன் விமானத்தில் ஏறி இறக்கையில் பயணிக்கும் அளவுக்கு பாதுகாப்பு குளறுபடிகள் பெர்ம் நகர விமான நிலையத்தில் இருப்பது பெரும் கேள்விக்குறியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றிங்க

அதிசயந்தான்!!!

Labels: ,

மலேசியா போய் பிச்சை எடுத்த தமிழர்!

மலேசியாவில் வேலைக்குப் போய் பிச்சை எடுத்த நெல்லை தமிழர்!

புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007

சுரண்டை:

அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, வெளிநாட்டு வேலைதான் வேண்டும் என்று மலேசியாவுக்கு சென்று, கடைசியில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த இளைஞர் ஒரு வழியாக சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

சுரண்டை சந்தைபஜார் செண்பகக் கால்வாய் ஓடைப் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். கட்டிட தொழிலாளியான இவர் வீட்டுக்கு கடந்த ஆண்டு கடையநல்லூர் சொக்கம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துபாண்டியன் என்பவர் வந்தார்.

மலேசியாவுக்கு கட்டிட தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் மாதம் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் என்றும் கூறியுள்ளார். மேலும் மலேசியாவிற்கு செல்லவும், வேலை செய்யும் நிறுவனத்திற்கு கொடுக்கவும் ரூ.85 ஆயிரம் செலவாகும் என்றார்.

இதை உண்மை என்று நம்பிய சந்திரன் குடும்பத்தினர், அவரை மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்ப சம்மதித்தனர். இதற்காக சிரமப்பட்டு பலரிடம் கடன் வாங்கி பணத்தை தயார் செய்தனர்.

பின்னர் கடந்த 10-03-2006ல் ரூ.22 ஆயிரமும், 05-06-2006ல் ரூ.60 ஆயிரமும் என மொத்தம் ரூ.82 ஆயிரத்தை சந்திரன் வீட்டார் முத்துபாண்டியனிடம் கொடுத்தனர். பணத்தை பெற்றுக் கொண்ட முத்துப்பாண்டியன் பாஸ்போர்ட், விசா தயார் செய்து சென்னைக்கு வர செய்தார்.

சென்னையில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து அங்கு சந்திரனை தங்க வைத்தார். அப்போது சுரண்டையை சேர்ந்த கோமுச்சாமி, காந்தி ஆகியோரும் மலேசியா செல்ல வந்திருந்தனர். சில நாட்களில் அவர்கள் 2 பேரையும் முத்துப்பாண்டியன் மலேசியாவுக்கு அனுப்பி வைத்தார்.

சில நாட்களுக்கு பிறகு சந்திரனிடம் மதுரையை சேர்ந்த அருணகிரி என்பவர் முலம் பாஸ்போர்ட், விசா கொடுக்கப்டடது. அதை பெற்றுக் கொண்ட சந்திரன், விமானம் முலம் மலேசியா சென்றார்.

அங்கு சென்ற பின் அது மலேசியாவில் தங்கி வேலை செய்யக்கூடிய விசா இல்லை எனவும், போலி விசா என்றும் சந்திரன் அறிந்தார். இது பற்றி முத்துப்பாண்டியனிடம் கேட்டபோது அருணகிரி அங்கு வருவார், அவரிடம் கேளுங்கள் என சொல்லியதோடு அவரை தொடர்பு கொள்ள முடியாதபடி போன் நம்பரையும் மாற்றி விட்டாராம்.

இதனிடையே மலேசியா சென்ற அருணகிரி சந்திரனின் பாஸ்போர்ட்டை நைசாக பேசி வாங்கி அதை ரூ.10 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். பாஸ்போர்ட், விசா பறிபோனதை எண்ணி கலங்கிய சந்திரன் மலேசியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

பல நாட்கள் பட்டினி கிடந்தும், பிச்சை எடுத்தும் வயிற்று பாட்டை கவனித்துள்ளார். பின்னர் ஒரு வழியாக ஊருக்கு திரும்பிய சந்திரன் முத்துப்பாண்டியனை சந்தித்து தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு முத்துப்பாண்டியன் மறுத்துள்ளார்.

இதனால் முத்துப்பாண்டியன் பற்றி கடையநல்லூர் போலீசில் சந்திரன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதையடுத்து நெல்லை கலெக்டரிடம் அவர் புகார் கொடுத்துள்ளார்.

சந்திரன் போன்று ஏராளமானோர் போலி விசா மூலம் மலேசியா அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும் சந்திரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இம்மாவட்டத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்ப பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களை அரசும், காவல்துறையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக..மிக..அவசியம்.

மேலும் இதே போன்று செங்கோட்டையிலிருந்து வெளிநாடுக்கு கட்டிட வேலைக்கு சென்ற 2 இளைஞர்கள் கண் பார்வை பறிபோனதை நாம் ஏற்கனவே எழுதியிருந்தது குறிப்பிடதக்கது.

நன்றிங்க

அவலம்.

Labels: ,

Tuesday, September 25, 2007

3. பாவம், யானைகள் என்ன செய்யும்?



நன்றிங்க

பாவம், யானைகள் என்ன செய்யும்?

பிச்சையெடுக்க வைத்தவர்களையல்லவா கட்டிப்போட வேண்டும்! என்ன நாஞ்சொல்றது? :)

Labels: , ,

3. வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா!

வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா!



செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007

சேலம்:

சேலத்தில் பல இடங்களில் நக்சல் இயக்கங்கள் சார்பில் இந்து மதத் தலைவர்களின் தலைக்கு விலை நிர்ணயித்து பகிரங்கமாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்பியும், விஎச்பியைச் சேர்ந்தவருமான ராம்விலாஸ் வேதாந்தி என்பவர், ராமரை பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்காக, அவரின் நாக்கையும், தலையையும் துண்டித்து வந்தால் அதற்கு எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்படும் என்று 'பாத்வா' விடுத்தார்.

இதற்கு தமிழகத்தில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இதன் விளைவாக சென்னை உட்பட பல இடங்களில் உள்ள பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டன. இந்நிலையில், வேதாந்தி நான் யாருக்கும் பாத்வா விடுக்கவில்லை. நான் சொல்லியதை பத்திரிக்கையாளர்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளனர் என்று அந்தர் பல்டி அடித்தார் சாமியார்.

அதே போல பாஜகவும் யாரோ ஒரு வேதாந்தி என்பவர்சொன்ன கருத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஏன் எங்களை தாக்குகிறீர்கள் என அழாத குறையாக அறிக்கை விடுத்தது.

இது தொடர்பாக சேலத்தில் விவசாயிகள் முன்னேற்ற முன்னணி, புதிய ஜனநாயக முன்னேற்ற முன்னணி போன்ற நக்சல் ஆதரவு இயக்கங்கள் சார்பில் இந்து மதத் தலைவர்களின் தலைகளுக்கு விலை அறிவித்து போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

இதில், அயோத்தி ராமன் தலையை கொண்டு வந்தால் 2 பைசாவும், பாஜக மூத்தத் தலைவர் அத்வானி தலையை கொண்டு வந்தால் 5 பைசாவும், அசோக் சிங்காலின் தலைக்கு 6 பைசாவும் கொடுக்கப்படும். விஎச்பி தலைவர் பிரவீன் தொகாடியா தலைக்கு 6 பைசாவும், தமிழக முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்த ராம்விலாஸ் வேதாந்தி தலைக்கு 6 பைசா நிர்ணயம் செய்துள்ளனர்.

ஆனால் தமிழகத்தை சேர்ந்த இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் தலையை கொண்டு வந்தால் எதுவும் தர மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். மொத்தம் 25 பைசா பரிசாக கொடுக்கப்படும் என்று அறிவித்து சேலத்தின் பல இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மிகவும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த போஸ்டர் எங்கு அச்சடிக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. போலீசார் இந்த போஸ்டர் ஒட்டியவர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

நன்றிங்க

என்னத்தே சொல்ல!!!

Labels: ,

Monday, September 24, 2007

2. அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை?

அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை?- கோமாவில் திருச்சி பெண்

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007

திருச்சி:

வரதட்சணை கொடுக்காததால், தனது மகளை கொடுமைப்படுத்தி கோமா நிலைக்குத் தள்ளி விட்டதாக, அமெரிக்க மாப்பிள்ளை மீது அந்தப் பெண்ணின் தந்தை திருச்சி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் செபாஸ்டின். இவரின் மகள் ஸ்மாலின் ஜெனிட்டா (23). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், காட்டூர் ஸ்ரீராம் நகரில் வசித்து வரும் சேவியர் மகன் கிறிஸ்டி டேனியல் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.

திருமணத்தின்ேபாது, மகளுக்கு 50 பவுன் நகையும், மணமகன் கிறிஸ்டிக்கு 10 பவுன் நகை போட்டும் திருமணத்தை தனது செலவில் நடத்தியுள்ளார் செபாஸ்டின்.

மணமகன் கிறிஸ்டி டேனியல் அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கிறிஸ்டி தனது திருமணத்திற்கு பிறகு மனைவி ஜெனிட்டாவையும், தனது பெற்றோரையும் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அமெரிக்காவில் தனது குடும்பத்தோடு காரில் போகும் போது விபத்துக்குள்ளாகி அனைவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஜெனிட்டா பல அடி தூரம் தூக்கியெறியப்பட்டு எலும்புகள் உடைந்த நிலையில் தற்போது அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமா நிலையில் உள்ளார்.

இந்த விபத்து குறித்து ஜெனிட்டா வீட்டாருக்கு கிறிஸ்டி எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லையாம். தனது மகள் கோமாவில் இருப்பது, அமெரிக்காவில் இருக்கும் குடும்ப நண்பர் மூலமாகத்தான் தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியுற்ற செபாஸ்டின் இதுகுறித்து விசாரிக்க கிறிஸ்டி டேனியல் குடும்பத்தாரிடம் விசாரிக்க தொடர்பு கொள்ள முயன்று விரக்தியடைந்து விட்டார்.

இதனால் தனது மகள் வரதட்சணை கொடுமை காரணமாக சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணி, செபாஸ்டின் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது அவர்கள் 75 பவுன் நகையும், மாப்பிள்ளை திருமணத்துக்கு பிறகு வெளிநாடு சென்று விடுவதால் சீர்சாமான்களுக்கு பதிலாக 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கேட்டனர்.

ஆனால் நான் 50 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு 10 பவுனும் போடுகிறேன் என்று சொன்னதற்கு சரியென்று ஒத்துக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதே இடையில் திடீரென்று பணமும், நகையும் கேட்டார்கள்.

என்னால் கொடுக்க முடியவில்லை. திருமணத்தை என் செலவில் தான் நடத்தினேன். திருமணம் நடந்த நாளில் இருந்து என் பெண்ணிடம், கிறிஸ்டி சந்தோஷமாகவே பேசுவதில்லை.

இந்த விபத்திற்கு முன்னர் எனக்கு மெயில் அனுப்பிய ஜெனிட்டா, வரதட்சணை கேட்டு மாமியார், மாமனார், கணவர் கொடுமைப்படுத்துவதாக சொல்லியிருந்தார்.

பணத்துக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

விபத்துக்குள்ளான தனது மகளை பார்க்க அமெரிக்கா செல்ல செபாஸ்டின் முயன்று வருகிறார். இது தொடர்பாக அமெரிக்க போலீசுடன் தொடர்பு கொண்டு உரிய விசாரணை நடத்துமாறு தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளார் செபாஸ்டின்.

நன்றிங்க

யாரைத்தான் நம்புவதோ...

Labels: ,

01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.

01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை * துபாய் கணவர் தலைமறைவு

ராமநாதபுரம் : ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய துபாயில் பணியாற்றும் இன்ஜினியரை, ராமநாதபுரம் மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் வெளிபட்டினத்தைச் சேர்ந்தவர் கரீம் கனி(67). இவரது பேத்தி சுமையா(21), பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்திய கலாசாரத்தில் வாழ விரும்பிய சுமையாவுக்கு, ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்த மொகைதீன் ஹ