Tuesday, September 04, 2007

அனாதை இல்லம் என்ற பெயரில் விபச்சாரம்!

திருநெல்வேலி: அனாதை ஆசிரமம் என்ற பெயரில் விபசாரம் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் அன்னை தெரசா அனாதை இல்லம் ஒன்றை அப்பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய மேரி என்பவர் நடத்தி வந்தார். இதில் 8 குழந்தைகள் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் இவ்வாசிரமத்தின் செயல்பாடுகள் குறித்து புகார் செல்லவே, போலீசார் விசாரித்ததில், ஆரோக்கிய மேரி இரண்டு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் ஆரோக்கிய மேரி, உஷா, கலைவாணி மற்றும் பாலு என்ற நான்கு பேரை இது தொடர்பாக கைது செய்தனர்.

நன்றிங்க, தினமலர்-04.09.2007

அட பாவிங்களா விபச்சாரம் நடத்த எத்தனையோ இடங்கள் இருக்க அனாதைகளின் பெயரை பயன்படுத்தி இந்த தரங்கெட்ட செயல் தேவைதானா..?

No comments: