Friday, December 29, 2006

2.இன்னுமொரு தஞ்சை மண்!?




















நன்றிங்க


கருப்பாகி வருவது தஞ்சை தமிழ் மண் மட்டுமில்லீங்க. வடநாட்டு மண்ணும்...

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் கருப்பு.






செய்தியை படியுங்கள்


புனித கயிறின் மகிமைதான் என்ன?

யாராவது காதிம் குதுப்புதீனிடம் கேட்டு சொல்லுங்களேன்???

குடியும் குடுத்தனமும்.

இஸ்லாமிய சட்டப்படி கணவன்_மனைவி இடையேயான திருமண பந்தத்தை முறைப்படி முடிவுக்குக் கொண்டுவரும் 'தலாக்' என்ற வார்த்தையை, குடிபோதையில் உளறிக் கொட்டிவிட்டு, குடும்பத்தோடு சேர முடியாமல் நடுத்தெருவில் நிற்கிறார் ஓர் அப்பாவி. இவருக்கு ஏற்பட்டுள்ள இந்த அனுபவம், இவரது குடும்பத்தை மட்டுமின்றி நாடு முழுக்க உள்ள இஸ்லாமிய சமூகத்தவரிடையே தாக்கத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பர்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது அக்தர். குடிப்பழக்கம் உடைய அக்தர், தன் மனைவி சகினாவுடன் அவ்வப்போது வாய்த் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இருபது நாட்களுக்கு முன்பு ஓர் இரவில் கொஞ்சம் அதிகமாகவே குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்ய, பக்கத்து வீட்டுக்காரர்களும் இவர்கள் வீட்டு முன்பு கூடிவிட்டார்கள்.

அக்தரின் போதை அதிகமானதால் டென்ஷனான மனைவியும் சூடாகி சப்தம் போட, கோபம் தலைக்கேறிய அக்தர், மனைவியைப் பார்த்து ''தலாக்.. தலாக்.. தலாக்..'' என்று மூன்று முறை சொல்லிவிட்டார். சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, யாரோ ஒருவர் லோக்கல் மௌலவியான (முஸ்லிம் திருமணப் பதிவு மற்றும் முறிவு விவரங்களைப் பதிவு செய்யும் அதிகாரம் படைத்தவர்) இம்மானுல் ஹக் கானுக்குத் தகவல் சொல்லிவிட்டார்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இம்மானுல் ஹக், நடந்த விஷயம் பற்றிக் கேட்டறிந்து 'அக்தர் தலாக் சொன்னது இஸ்லாமிய சட்டப்படி செல்லுபடியான ஒன்றுதான். எனவே, மனைவி சகினாவைப் பிரிந்துதான் இனி அவர் வாழவேண்டும்!'' என்று தீர்ப்பளித்து அதைப் பதிவும் செய்து கொண்டார்.

அடுத்த நாள் காலையில் போதை தெளிந்த அக்தர், நடந்தவற்றைக் கேள்விப்பட்டு, துடிக்க ஆரம்பித்துவிட்டார். ''போதையில் நான் என்ன சொன்னேன் என்றே தெரியவில்லை. தலாக்கை எத்தனை முறை சொன்னேன் என்பதுகூட நினைவில்லை. ஆனால் நான் மூன்று முறை சொன்னதாகக் கிராமத்தினர் வலியுறுத்திச் சொல்கிறார்கள். என் மனைவியையும் அதை ஒப்புக்கொள்ளச் சொல்லி நிர்ப்பந்திக்கிறார்கள்.

நான் மூன்று முறை தலாக் சொன்னதாகவே வைத்துக் கொண்டாலும், அதை நான் போதையில் சொன்னதை எல்லோரும் அறிவார்கள். எனவே, அதை மன்னித்து, என்னை என் மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்.'', என்கிறார் கதறி அழுதபடி. அவர் சொன்ன வார்த்தைகளை கிராமத்தினர் யாரும் காதில் வாங்கவில்லை.

''அவர் குடிபோதையில்தான் தலாக் சொன்னார். என்னைப் பிரியும் நோக்கம் அவருக்கு இல்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து வாழவே விரும்புகிறோம். ஆனால் சமூகக் கட்டுப்பாட்டுக்குப் பயந்து தனியாக வாழவேண்டியுள்ளது. எங்கள் நிலையை உணர்ந்து, அவரை மன்னிக்க வேண்டும்!'' என்று சகினா விடுத்த வேண்டுகோளுக்கும் இன்றுவரை பாஸிடிவான பதில் கிடைக்கவில்லை.

'சேர்ந்து வாழ்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. மூன்றுமுறை தலாக் சொன்ன அந்தக் கணமே விவாகரத்து அமலுக்கு வந்துவிடுகிறது. மதுவை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஆனால் குடித்துவிட்டு தலாக் சொன்னாலும், அது விவாகரத்து என்றே ஏற்றுக்கொள்ளப்படும்!'' என்று மௌலவி இம்மானுவேல் ஹக் தனது இறுதித்தீர்ப்பையும் சொல்லிவிட, அதன் பிறகுதான் நாடு தழுவிய சர்ச்சையும் ஆரம்பமானது.

இஸ்லாமிய பழைமைவாதிகள் நிறைந்த இந்த ஊரில், மதப் பெரியவர்கள் என்று சொல்லப்படும் சிலர் ஒரு யோசனையைச் சொல்லியிருக்கிறார்கள். 'அக்தர், விவாகரத்தான தன் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டுமானால், சகினா இன்னொருவரைத் திருமணம் செய்து, அவரையும் விவாகரத்து செய்ய வேண்டும். அதன்படியே அக்தர் சகினாவை மீண்டும் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ முடியும்'', என்பதுதான் அந்த யோசனை.

சம்பவம் நடந்த நாளிலிருந்தே தான் வைத்திருக்கும் டெய்லரிங் கடையில் தனியாகக் குடியிருந்து வரும் அக்தர் இதைக் கேட்டுக் கொதித்துப் போனார். 'இவர்கள் சொல்வது மாதிரி, சகினா இன்னொரு திருமணம் செய்வது நடந்தால், நான் தற்கொலை செய்து கொள்வேன்!' என்றும் சொல்லிவருகிறார் அக்தர்.

ஒரு கிராமத்துக்குள் நடந்த இந்த வாதப் பிரதி வாதங்கள்தான் இன்று நாடு முழுக்க ஒரு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்லாமிய சட்டப்படியே பார்த்தாலும், தன் மனைவியைப் பிரிய நினைக்கும் அவர் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்றுமுறை 'தலாக்' சொல்ல முடியாது.

'தலாக்' சொன்ன பிறகு இத்தா காலம் எனப்படும் கரு அறியும் காலம் வரை (மூன்று மாதங்கள்) காத்திருக்க வேண்டும். அந்த நேரத்திலும் கணவன், மனைவி ஒரே வீட்டில் வசிக்கலாம். மூன்று மாத முடிவில் மத்தியஸ்தர்கள் மூலமாக சமாதானம் ஏற்படுத்த முயற்சிப்பதையும் அனுமதிக்கிறது இஸ்லாம். சமாதானம் ஏற்பட்டால் நடந்ததை மறந்து சேர்ந்து வாழலாம்.

இந்தப் பிரிவுகள் மற்றும் சமாதானங்கள் நடக்கும்போது, இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் இருவர் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. விதிமுறைகள் இப்படி இருக்க, இதில் எதையும் கடைப்பிடிக்காமல், தவறுதலாக அக்தர் சொன்ன தலாக்கை ஏற்று இருவரையும் பிரித்து வைத்திருப்பதைக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள், பெண்ணுரிமையை நிலைநாட்ட விரும்பும் இஸ்லாமிய சமூகத்தினர் பலரும். தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முன்னாள் தலைவரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஃபதர் சயீத், இந்த சம்பவத்தைக் கடுமையாக எதிர்க்கிறார். ''லோக்கல் மௌலவி செய்தது இஸ்லாமிய சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது. தலாக் சொன்ன பிறகு மூன்று மாதம் கால அவகாசம் தரவேண்டும். மனப்பிணக்கைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். சமாதானம் ஏற்பட்டால் சேர்த்து வைக்கலாம் என்றெல்லாம் உச்சநீதிமன்றமே பலமுறை தெளிவுபடுத்தி தீர்வுகளை வழங்கியிருக்கிறது. இஸ்லாமிய சட்டமும் அதைத்தான் சொல்கிறது.

இதை மனதில் கொள்ளாமல் அவசரக் கோலத்தில், குடியின்பிடியில் சொல்லப்பட்ட தலாக்கை ஏற்றுக்கொண்டதாகச் சொல்வது தவறான நடவடிக்கை. என்னைப் பொறுத்தவரை அக்தரும், சகினாவும் சேர்ந்தே வாழலாம். அவர்கள் இருவருக்கும் அதற்கு ஆசை இருக்கும் போது, பிரிந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. இஸ்லாத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்ட யாருமே லோக்கல் மௌலவி செய்துள்ள காரியத்தை ஆதரிக்க மாட்டார்கள். ஆதரிக்கவும் கூடாது!'' என்று உறுதியான குரலில் சொன்னார் ஃபதர் சயீத்.

இஸ்லாமியப் பெண்களின், உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதிலும், அதுகுறித்த கருத்துக்களை வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் சொல்லும் கவிஞர் சல்மாவும் இதே கருத்தைத்தான் சொல்கிறார். ''ஒவ்வொரு தலாக்குக்கும் ஒரு மாத இடைவெளி இருக்க வேண்டியது அவசியம். ஒரே நேரத்தில் மூன்று முறை சொன்னால் அதை இஸ்லாமிய சட்டப்படி விவாகரத்தாகக் கருத முடியாது.

இஸ்லாமிய நாடுகளில் 'தலாக்' முறையை விதிமுறைகளின் படியே கடைப்பிடிக்கிறார்கள். அதனால், அங்கு இதுமாதிரி தவறான முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. இஸ்லாத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத பழைமைவாதிகளால்தான் இந்தியாவில் இதுமாதிரியான சர்ச்சைகள் எழுகின்றன. மதத்தை வழி நடத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் சில மதப் பெரியவர்களே இப்படிச் செய்வது இஸ்லாத்துக்கும், இஸ்லாமிய பெண்களுக்கும் எதிரான காரியமாகும்.

இது மாதிரி தவறுகள் நடக்கும்போது அதைச் சுட்டிக்காட்டிக் கொண்டேதான் இருக்கிறோம். இஸ்லாமிய சட்டப்படி பெண்களுக்கு உள்ள உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு, இச் சமூகப் பெண்களிடம் இன்னும் அதிகமாகப் பரவ வேண்டி உள்ளது. அந்த விழிப்புணர்வைப் பெறாதவரை இது மாதிரியான ஆணாதிக்க விளைவுகளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

ஆனாலும் இது மாதிரி மதத்தைத் தவறாக அணுகுவோருக்கு மதம் துணை போகாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே அக்தரும், சகினாவும் தவறான தீர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு சேர்ந்தே வாழலாம். சமூகத்தின் பெயரைச்சொல்லி, யாராவது துன்புறுத்த நினைத்தால், பாதுகாப்புக் கேட்டு போலீஸ§க்குப் போவதிலும் தவறில்லை,'' என்று ஆவேசப்பட்டார் சல்மா.

இந்த வாதப் பிரதிவாதங்கள் குறித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச் ஜவாஹிருல்லாவிடம் பேசினோம். ''அக்தரின் விஷயத்திற்குள் போகும் முன்பாக ஒரு கருத்தைச் சொல்லிவிடுகிறேன். இந்தியாவில் சமீபகாலமாக முஸ்லிம்கள் விஷயத்தில் பாரபட்சமான போக்கையே ஊடகங்கள் கடைப்பிடிக்கின்றன. சின்ன விஷயங்களைக்கூட, தேசியப் பிரச்னைபோலக் காட்டி விவாதத்தைக் கிளப்புகிறார்கள். இது முஸ்லிம் சமுதாயத்தின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சி. ஊடகங்களின் ஒரு பிரிவினர் செய்யும் இந்தக் காரியங்களால் முஸ்லிம்களின் மனம் ரணமாக்கப்பட்டிருக்கிறது. இனி பிரச்னைக்குள் வருகிறேன். தொழுகைக்குப் போகும்போது, மது அருந்திவிட்டுப் போகக்கூடாது என்று வலியுறுத்துகிறது திருக்குரான். குடித்து, சுய நினைவு இழந்த நிலையில் செய்யப்படும் தொழுகையை அங்கீகரிக்க முடியாது என்பதால்தான் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே, குடித்துவிட்டு மூன்றுமுறை அல்ல... முந்நூறு முறை தலாக் சொன்னாலும் அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது அல்ல.

அக்தர் விஷயத்தில் நடந்த விஷயங்கள்அனைத்தையும் ஊடகங்கள் சரியாக வெளிக்கொண்டு வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் இது மாதிரி நடந்திருக்குமானால் அது தவறுதான்.

திருமணம், பிரிவு, வாழ்க்கை முறை என்று எல்லா விஷயங்களைப் பற்றியும் இஸ்லாமியச் சட்டம் தெளிவாக எடுத்துச் சொல்லுகிறது. ஒரு சிலர் விதிவிலக்காக மனம் போனபடி செயல்படுகிறார்கள் என்பதற்காக, இந்த மதத்தையே ஒட்டுமொத்தமாகக் குறை சொல்ல யாரேனும் முற்பட்டால் அதை ஏற்க முடியாது.

குடும்ப நல நீதிமன்றங்களில் இன்று நிலுவையில் உள்ள வழக்குகளைப் பாருங்கள்... முஸ்லிம் சமுதாயத்தவரின் வழக்குகள் அதில் குறைவாகவே இருக்கும். இந்தச் சமுதாயத்தில் அதுமாதிரியான பிரச்னைகள் குறைவு என்பதற்கு இதுவே சாட்சி . இந்த நிலையில், இம்மதத்தின் செயல்பாடுகளை பழைமைவாதிகள், புதுமைவாதிகள் என்று பிரித்துப் பார்ப்பது தவறான செயலாகும்!'' என்று சொல்லி முடித்துக் கொண்டார் ஜவாஹிருல்லா.

இதற்கிடையில் அக்தரின் நிலைமை பற்றி அறிந்த 'அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்' மேல் விசாரணைக்காக அக்தரை வரவழைத்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

''எவரேனும் அறியாமையின் காரணமாக யாதொரு தீமையைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக வருந்தி, அதிலிருந்து விலகி சீர்திருத்திக்கொண்டால் அவனுடைய குற்றங்களை இறைவன் மன்னித்து விடுவான். ஏனென்றால், மிக மன்னிப்போனும் கிருபையடையவனுமாக அல்லாஹ் இருக்கின்றான்'' என்ற குரான் வாசகத்திற்கு ஓர் அர்த்தம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார் அக்தர்.

நன்றிங்க

போதைப் பொருள் அனைத்தும் ஹராம் என்று இஸ்லாம் தடுத்திருத்திக்க போதைக்கு அடிமையாகிய முஹம்மது அக்தரை செருப்பால் அடித்து அதே கையோடு 'இம்மானுல் ஹக் கான்' என்ற அடி முட்டாள் மத புரோகிதரையும் நாலு சாத்து சாத்த வேண்டும். இஸ்லாத்தை விளங்காத இந்தப் புரோகிதர்களால் முஸ்லிம் சமூகத்துக்கு இழுக்கு.

போதையிலுள்ளவன் மற்றும் நிர்ப்பந்திக்கப்பட்டவனின் மணவிலக்கு செல்லாது என்பதே இஸ்லாத்தின் ஷரியாவிலிருந்து பெறப்படும் சட்டம்.

'எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், தவறுதலாக செய்திருப்பினும் எங்களைத் தண்டித்து விடாதே' (அல்குர்ஆன் 2:286)

Thursday, December 28, 2006

எம்மா...

border="0" />

புகைப்படம் பார்த்தவுடன் உள்ளத்தில் தோன்றுவதை சொல்லுங்களேன்? அது கவிதையாக இருந்தாலும் எழுத்தில் வடியுங்களேன்.

Monday, December 25, 2006

வேண்டாம் குடும்பக் கட்டுப்பாடு.

"கு.க. வேண்டாம், விட்டுடுங்க' * ஆர்.எஸ்.எஸ். சுதர்சன் சொல்கிறார்

சண்டிகார்: "இந்துக்களே, நீங்கள் இனி, குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை பின்பற்ற வேண்டாம். இந்துக்கள் ஜனத்தொகை கணிசமாக குறைந்து வருகிறது. அதனால், கு.க. திட்டங்களை கைவிட்டு விடுங்கள்'யார் இப்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் தெரியுமா, "ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்க்' என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் சுதர்சன்.

ஏற்கனவே, சமீபத்தில் பல்வேறு தரப்புகள் மூலம் எடுத்த சர்வேக்களில், குடும்பக் கட்டுப்பாட்டு முறையை இந்துக்கள் தான் அதிகம் பின்பற்றுகின்றனர். மற்றவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை என்று தெரியவந்துள்ளது. இது தான் ஆர்.எஸ்.எஸ். உட்பட பல இந்து அமைப்புகளின் அச்சத்துக்கு காரணம்.

இப்போதே, பஞ்சாப், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் ஆண்களை விட, பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று இன்னொரு சர்வே கூறுகிறது. ஒரு குழந்தை, இரு குழந்தை பெறுவதை கண்டிப்பாக பின்பற்றுவது இந்துக்களில் பலரிடம் உள்ளது.

இப்படியே போனால், இந்துக்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். இப்போது தெரியாவிட்டாலும், எதிர்காலத்தில், 25 ஆண்டுகளில் கணிசமான அளவில் இந்துக்கள் எண்ணிக்கை பெரும் ஆபத்தான் நிலைக்கு போய்விடும் என்றும் இந்த அமைப்புகள் அஞ்சுகின்றன.

இதை வலியுறுத்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது. கடந்த வியாழன் அன்று சண்டிகாரில் சுதர்சன் ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களால், இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று வருத்தப்பட்டு பேசினார்.

அவர் பேசியதாவது: இப்போதுள்ள நிலை தொடர்ந்தால், வரும் 2060ம் ஆண்டுகளில் இந்துக்கள், இந்தியாவில் சிறுபான்மையினராக வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள் இப்போதுள்ள நிலையை வைத்து கணிதத்தில் இந்த அதிர்ச்சிதரத்தக்க கணிப்பு கிடைத்தது.

"நாம் இருவர், நமக்கு இருவர்' என்ற பிரசாரம், இந்துக்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்கள் எல்லாருக்கும் தான். ஆனால், சமீபத்தில் சர்வேக்களில் பார்த்தால், முஸ்லிம்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதில்லை என்பது இதில் தெரிகிறது.

ஜனத்தொகை வளர்ச்சி வீதம் என்று எடுக்கப்பட்ட கணக்கில், இந்துக்கள் 21 சதவீதம் என்றும், முஸ்லிம்கள் 29 சதவீதம் என்றும் தெரியவந்துள்ளது. அப்படியானால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே இந்துக்கள் சிறுபான்மையினராக வேண்டிய ஆபத்து உள்ளது.

இந்து குடும்பங்களில் உள்ளவர்கள், இனி நீங்கள் குடும்பக்கட்டுப்பாட்டு திட்டங்களை பின்பற்ற வேண்டாம். "நாமிருவர், நமக்கிருவர்' என்ற பிரசாத்தை பின்பற்றாமல், நீங்கள் குறைந்தபட்சம் மூன்று குழந்தைகளை பெற வேண்டும்.

மத்திய அரசு, குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை போடும் போதே, எல்லா சமூகத்தினரும் இதை பின்பற்றும்படி செய்ய வேண்டும். அப்படியில்லாவிட்டால், இப்படி ஒரு ஆபத்தான வளர்ச்சி வீதம் தெரியவந்தபோதாவது, திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்.

இவ்வாறு சுதர்சன் கூறினார்.

நன்றிங்க-தினமலர்

வறுமை பஞ்சம் இவைகளுக்கு காரணம் மக்கள் தொகை பெருக்கம் என்பது சுத்த அசட்டுத்தனமான பிரச்சாரம். மக்கள் தொகைப் பெருகி அதிகரிக்கும்போது தேவைகளும் அதிகரித்து, அந்த தேவைகளை பூர்த்தி செய்ய மனிதன் புதிய கண்டு பிடிப்புகளில் இறங்குகிறான். அதில் வெற்றியும் பெற்று வருகிறான்.

மக்களிடையே குடும்ப அங்கத்தினர் அதிகரித்து விட்டால் உணவு நெருக்கடி ஏற்படும் என்று அஞ்சி, தம் மக்களை கொன்று விடும் பழக்கம் இருந்து வந்தது. இது தொடர்பாக இறை மறையின் கட்டளை இறங்கியது. 'வறுமையை பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவு வழங்குகிறோம். நிச்சயமாக அவர்களைக் கொல்வது மாபெரும் பாவமாகும்.' அல் குர்ஆன் 17:31

இறை மறையின் இந்த அறிவிப்பு வருங்காலத்தில் எவ்வளவு மக்கள் தொகைப் பெருக்கமும் பூமியில் உணவு நெருக்கடியைத் தோற்றுவித்து விட முடியாது. மக்கள் தொகைக்கிற்கேற்ப உணவு பெருக்கமும் என்றும் எப்போதும் பொருத்தமாக ஏற்பட்டு கொண்டே இருக்கும் என்ற வாதமம் கூட.

முஸ்லிம்கள் இறை மறையின் அறிவிப்பின் உண்மையை எல்லாக் காலத்திலும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டு வந்துள்ளனர். அதனால்தான் இன்றைய காலத்திலும் கூறப்படும் கருத்தடை குடும்பக் கட்டுப்பாடு என்ற உணர்வு முஸ்லிம்களிடம் ஒரு போதும் தோன்றுவதில்லை. அவர்கள் இறைவனின் உணவு வழங்கும் ஆற்றலின் மீது பூரண நம்பிக்கை கொண்டு உணவுப் பிரச்சனையை அவனிடமே ஒப்படைத்து விட்டனர்.

சகோதரர்களே நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களானாலும் நிறைய மக்கள் செல்வங்களை பெற்றெடுங்கள் யார் கண்டது அதில் பலர் ஜீனியஸாக விளங்கலாம்.

Sunday, December 24, 2006

காவலர்கள் பொதுமக்களின் நண்பர்கள்.

போலீசாரின் "வாடா...போடா'வுக்கு இனி "தடா' தரக்குறைவாக பேசினால் நடவடிக்கை பாயும்.

கோவை:
"மக்களிடம் மரியாதையின்றி பேசும் போலீசார் மீது கடும் நடவடிக்கை பாயும். இச்செயல் சட்ட விரோதமானது மட்டுமல்ல; அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பானது,''என தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.

"காவலர்கள் பொதுமக்களின் நண்பர்கள்' திட்ட துவக்க விழா, கோவை சி.ஐ.டி., கல்லூரியில் நேற்று நடந்தது. இதில், மேற்கு மண்டல ஐ.ஜி.ராஜேந்திரன் பேசியதாவது:

"காவலர்கள் பொதுமக்களின் நண்பர்கள் திட்டம்' 275 போலீஸ் ஸ்டேஷன்களில் நாளை (இன்று) முதல் அமலுக்கு வருகிறது. புகார் பதிவு செய்ய ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தலா இரு வரவேற்பாளர்கள், புகார் பதிவு செய்யும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் போலீஸ் ஸ்டேஷன் செல்லலாம்.

இன்ஸ்பெக்டர் இல்லை, எஸ்.ஐ. இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். புகார் பதிவு செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் எப்.ஐ.ஆர்.நகல் வழங்கப்படும். அதன் பின் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, நியாயமானதாக இருக்கும். இடைத்தரகர்களுக்கு செலவழிக்க வேண்டிய அவசியமிருக்காது. அதிகாரிகளை சந்திக்க, மக்கள் தவமிருக்க தேவையில்லை. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் தினமும் காலை 8.30 முதல் 9.00 மணி, மாலை 7.00 முதல் 8.00 மணி வரை ஸ்டேஷனில் கட்டாயம் இருப்பர்.

போலீஸ் நடவடிக்கை திருப்தி இல்லை என்றால், உயர் அதிகாரிகளை சந்திக்கலாம். அதிகாரிகளுக்கு நம்பிக்கையான நபர்களை கொண்டு போலீசாரின் செயல் உளவு பார்க்கப்படும். இதற்கான பணியை எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி.,க்கள் மேற்கொள்வர். அவசியம் ஏற்பட்டால், ஐ.ஜி. அலுவலகமும் கவனிக்கும்.

"வாய்யா... போய்யா... வாடா...போடா...' என மரியாதையின்றி போலீசார் பேசக்கூடாது. "தற்கொலை' வழக்குகளில் தரகர்களுக்கு இடமளிக்காமல், உறவினர்களை துன்புறுத்தாமல் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மக்களை மரியாதையுடன் நடத்தும் பொறுப்பு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்களை சாரும். இவர்களை கண்காணிக்க வேண்டியது டி.எஸ்.பி.க்களின் பொறுப்பு. இதில், தவறு நேர்ந்தால் கடுமையான நடவடிக்கையும், சிறப்பாக செயல்பட்டால் வெகுமதியும் வழங்கப்படும். ஏழைகளை அவமதிப்பதும், புறக்கணிப்பதும் சட்ட விரோதமானது மட்டுமல்ல அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பானது.

ஏழை, ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில் மரியாதை குறைவாக நடத்தப்பட்டால், பணம் செலவழிக்கப்பட்டால், எப்.ஐ.ஆர்.வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை (3பி, சார்ஜ்) எடுக்கப்படும். உளவுப்பணியில் கோட்டை விட்ட, நுண்ணறிவுப்பிரிவு அதிகாரி மீதும் நடவடிக்கை பாயும்.

இவ்வாறு ஐ.ஜி.,ராஜேந்திரன் பேசினார்.

இக்கருத்தரங்கில் டி.ஐ.ஜி.க்கள் மஞ்சுநாதா(கோவை), அலெக்ஸாண்டர் மோகன்(சேலம்), சேலம் போலீஸ் கமிஷனர் கோபாலகிருஷ்ணன், எஸ்.பி.க்கள் துரைக்குமார் (கோவை), வித்யாகுல்கர்னி (நீலகிரி), பாஸ்கர்(சேலம்), தீபக் டமோர் (நாமக்கல்), ஜெயராம் (தர்மபுரி), தேன்மொழி (கிருஷ்ணகிரி) மற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட 400 போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நன்றிங்க-23/12/2006 தினமலர்.

பொது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல் துறையினரின் அலட்சியப் போக்கு காவல் துறை என்றாலே நீதி கேட்டு நெருங்க முடியாத அளவுக்கு மக்களை கிலி பிடிக்க வைத்து விட்டது. புகார் செய்வதற்கு காவல் நிலையத்தை அணுகினால் எடுத்த எடுப்பிலேயே தண்டம் அளந்து விட்டுத்தான் காவல் நிலைய படியைத் தாண்டி உள்ளே செல்ல முடிகிறது. காவல் துறை உங்கள் நண்பன் என்று எழுதிக் கொண்டு பொதுமக்களின் விரோதியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

புகார் செய்ய வருபவர்கள் மரியாதையாக நடத்தப்படுவதில்லை என்பதை அவர்களே சம்மதிக்கிறார்கள். இதெல்லாம் சட்ட விரோதமானது என்றும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பானது எனவும் இப்பொழுது தூசி தட்டுகிறது காவல் துறை. எப்படியோ ''காவல்துறை செய்தாலும் குற்றம் குற்றமே'' என நடவடிக்கை எடுத்தால் சரி.

''என் மீதா புகார் கொடுக்கிறாய் இரு இரு உன்னை கவனித்துக் கொள்கிறேன்'' என்று புகார் கொடுக்க வந்த அப்பாவியின் மீது சிறப்பு குண்டர் சட்டம் அல்லது தடுப்புக் காவல் சட்டம் அல்லது வகுப்புவாத பயங்கரவாதி என்று செக்ஷனை போட்டு உள்ளே வைக்காமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் "காவலர்கள் பொதுமக்களின் நண்பர்கள் திட்டம்'' வெறும் ஏட்டளவில் இருந்து காவல்துறை மீதான பொது மக்களின் அவநம்பிக்கை நீடிக்கும்.

Friday, December 22, 2006

நமக்கேன் வம்பு.

நமது பொதுவாழ்வில் நடைபெறும் பல முக்கிய விவாதங்கள் இரு துருவங்களாகப் பிரிந்த நிலையிலேயே நடைபெறுகின்றன. எதிரெதிர் விளிம்புகளுக்கு நடுவிலும் நிலைப்பாடுகள் இருக்கின்றன என்பதைப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறையுங்கள் என்று கேட்பவன் தேசபக்தி இல்லாதவன்.

ரிஷி பிரகாஷ் தியாகிக்குத் தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள் என்றால், அவன் காவல்துறையின் எடுபிடி. சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து தமிழர்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றால், அவன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன். புலிகள் நடத்திய 'துன்பியல் சம்பவத்தை' நினைவுகூர்ந்தால், அவன் தமிழர் நலனுக்கு எதிரானவன்.

அப்பாவி மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்தால் அவன் தேசிய வெறியன். காவல்துறையின் மனித உரிமைகள் மீறலைக் கண்டித்தால் அவன் பயங்கரவாதி. இவ்வாறு இரு துருவங்களில் இருந்தும் இப்படிப்பட்ட முத்திரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நபர்களுக்கு குத்தப்படுகின்றன.

நன்றி-ஜூனியர் விகடன் 24/12/2006

ம்ஹும்... பொது வாழ்வில் சம்பவிக்கும் முக்கிய விவாதங்கள் இரு துருவங்களாக இல்லை. நமக்கேன் வம்பு என ஒதுங்கியிருந்தாலும் இவனுக்கு ஒன்றுமே தெரியாது என்று மூன்றாவது முத்திரையும் குத்தப்படுகிறது.

Thursday, December 21, 2006

ரஜினியின் வாய் கொழுப்பு.

ரஜினிகாந்த் அவ்வப்போது எதையாவது பேசி பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம். ஆனால், சமீபத்தில் அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டிக்கிறது.

நடிகர் விவேக் கதாநாயகனாக நடிக்கும் 'சொல்லி அடிப்பேன்' என்ற படத்தின் ஆடியோ கேசட் விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, ''விவேக் அரசியலும் பேசுவார், ஆன்மிகமும் பேசுவார், கம்ப்யூட்டர் பற்றியும் தெரியும், பூகோளம் பற்றியும் தெரியும். இவ்வளவு அறிவுஜீவியான விவேக் ஒரு பிராமணராக இருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது பின்னர்தான் தெரியவந்தது'' என்று ஆச்சரியப்பட்டுப் பேசியிருந்தார்.

விவேக் பற்றி ரஜினி கூறியுள்ள இந்த கமெண்ட்தான் பெரும் சர்ச்சையைக் கிளம்பியுள்ளது. தேவர் இனத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவரை பிராமணர் என்று சொல்லியதன் மூலம் ஒட்டுமொத்த தேவர் இனத்தையே ரஜினி அவமானப்படுத்திவிட்டார் என்று எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசினார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனரான டாக்டர்சேதுராமன். ''தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த விவேக் பற்றி ரஜினிகாந்த் பேசியிருப்பது அவரது அறியாமையைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறது. தேவர் இனத்தில் மட்டுமின்றி எல்லா சமுதாயத்திலும் அறிவாளிகளும், நல்லவர்களும் இருக்கிறார்கள். அதுபோல் பிராமண சமுதாயத்தில் வன்முறை எண்ணம் கொண்டவர்களும், முட்டாள்களும் இருக்கிறார்கள். இதெல்லாம் தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார் ரஜினி.

நன்றிங்க - 21/12/2006 குமுதம்

அடுத்தவங்க எழுதிக் கொடுப்பதை வெள்ளித்திரையில் நோகாமல் பேசி கைத்தட்டல் வாங்கிடும் ''ஹீரோக்கள்'' நிஜவாழ்க்கையில் எங்கே எப்படி பேசணும் என்கிறது கூட தெரியாமல் ஜீரோவாகி விடுகிறார்கள். ரஜினி பேசாமல் நிஜவாழ்க்கையிலும் பேசுவதற்கு டயலாக் எழுத யாரையாவது வேலைக்கு வைத்துக்கொள்ளலாம்.

Wednesday, December 20, 2006

கனவு நிறைவேறட்டும்.

இணைந்து செயல்படுவோம்: பாக்.கிற்கு பிரதமர் மன்மோகன் அழைப்பு

20 டிசம்பர் 2006

கடந்த காலங்களை மறந்துவிட்டு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட இதுவே தக்க தருணம் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு பஞ்சாப் மாநிலம் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், இன்று அமிர்தசரசில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:

கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.அனைத்து புதிய யோசனைகளையும் நான் திறந்த மனதுடன் வரவேற்கிறேன்.பரஸ்பர ஆலோசனைகள் மூலம் நாம் ஒரு அமைதியான சூழ் நிலையை உருவாக்குவோம். இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த காலங்களை மறந்துவிட்டு, புதிய எதிர்காலத்திற்காக சிந்தித்து இணைந்து செயல்பட இதுவே தக்கதருணமாகும்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது. ஆனால் அது சாத்தியமாவதற்கு இரு நாடுகளிடையே அமைதி, நட்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படவேண்டும். அதற்கு இடையூறாக உள்ள சிறிய தடைகளை ஒதுக்கி வைத்தால், அது போன்ற ஒப்பந்தம் ஏற்படுவது சாத்தியமானதுதான் என்பது எனது நம்பிக்கையாக உள்ளது.

இரு நாடுகளிடையேயான எல்லைப் பகுதிகளில் அமைதி ஏற்பட இது போன்ற ஒப்பந்தம் ஏற்படுவது மிக அவசியமானது.

இவ்வாறு மன்மோகன் கூறினார்.

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சி வழங்குவது உட்பட நான்கு அம்ச யோசனைகளை பாகிஸ்தான் அதிபர் முஷ்ரப் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

பாரதப் பிரதமரின் கனவு நிறைவேறட்டும்.

Tuesday, December 19, 2006

தினமலரின் குசும்பு.

வெள்ளி நங்கை சாந்தி ஏற்கனவே மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் குவித்துள்ளதோடு, தென்கொரியாவில் நடந்த உலக அமைதி மற்றும் சமாதான விளையாட்டுப் போட்டிகள், இலங்கையில் நடந்த தெற்கு ஆசியா விளையாட்டுப் போட்டி, பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி உட்பட பல பதக்கங்களை வென்றுள்ளார்.

அப்போதும் சர்வதேச விதிமுறைப்படி இதுபோன்ற பல மருத்துவப் பரிசோதனைகள் அவருக்கு நடத்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் அவரது பெண்மை தன்மை குறித்து எந்தவித ஐயப்பாடும் எழுந்ததில்லை.

தோஹா அதிகாரிகளின் இந்த ஐயப்பாடு சாந்தியின் பெண்மைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக உள்ளது.

கிராமப் பகுதியில் பிறந்து வளர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் சாந்தியிடமிருந்து பதக்கத்தை பறிக்க தோஹா அதிகாரிகள் முயற்சிப்பதாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தலித் அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதைக் கண்டித்து புதுக்கோட்டை புதிய ஸ்டான்ட் பகுதியில் தோஹா அதிகாரிகளின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற திராவிடர் விழிப்புணர்ச்சிக் கழக செயலாளர் நாடிமுத்து, எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க பொதுச்செயலாளர் பரமசிவம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் மாயவன், அலெக்ஸ் நடிகர்மன்ற மாவட்டச் செயலாளர் வேம்பரசன், நகர பொருளாளர் பொற்பனையான், தே.மு.தி.க., தொழிற்சங்க செயலாளர் அழகேசன் ஆகியோரை கணேஷ்நகர் போலீஸார் கைது செய்தனர்.

*******************************

தேனுங்க கத்தார் கவுண்டரே!

அம்மிணி சாந்தி முழுசா போம்பிளெ இல்லைன்னு தோஹா வெளயாட்டுக் கமிட்டி சொல்லிச்சுங்களாமா.

ஆனா பாருங்க இந்த தினமலர், அம்மிணி தலித்துங்கறதினாலெதான் வெள்ளி பதக்கத்தெ பறிச்சாங்கண்ணு எழுத.

நெசமாங்களா? கத்தர் அரபிங்களும் தலித்துங்களெ அடெயாளம் கண்டுபிடிப்பாங்களா?

Monday, December 18, 2006

பாஜகவின் பரிதாபம்.

கட்சியை விட்டு யாரும் விலக வேண்டாம் பா.ஜா.க தலைவர் வேண்டுகோள்

Date : 12/18/2006 6:24:00 AM

கருத்து வேறுபாடு காரணமாக இயக்கத்திலிருந்து வெளியேறக் கூடாது என்று பாஜகவின் முன்னாள் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

சென்னை மாவட்ட பாஜக சார்பில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் குருஜீ கோல்வால்கரின் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில் அவர் பேசியதாவது:

பொதுவாழ்வில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. இருப்பினும் பணியில் இருந்து நாம் விலகக் கூடாது.

நம்மை மன வேறுபாடுகள் பிரிப்பதை அனுமதிக்கக் கூடாது. இயக்கத்தை விட்டு வெளியேறும் சிந்தனை நமக்குத் தோன்றக் கூடாது.

அண்மைக் காலமாக பாஜகவில் இத்தகைய போக்கு அதிகரித்துள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

பதவிப் பொறுப்பில் இருப்பது முக்கியம் அல்ல. ஆனால், கட்சிக்கு வேண்டப்பட்டவராக இருக்க வேண்டும்.

கட்சிக்குள் அனைவருக்கும் பொறுப்பும் உண்டு. அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால்தான் நமது லட்சியங்களை அடைய முடியும்.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எதிரானது அல்ல. ஆனால், இத்தகைய பொய் பிரசாரம் தொடர்கிறது.

ஒரே சிவில் சட்டம்: ஜனசங்கத்தின் பரிணாம வளர்ச்சியே பாஜக.

சீனாவில் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் உள்ளன.

இதே போல நம் நாட்டிலும் ஒரே சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. ஆனால், எங்களை வகுப்புவாத சக்திகள் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்க்கின்றன என்றார் ஜனா. கிருஷ்ணமூர்த்தி.

நன்றிங்க

அயோத்தியாவும் பொதுசிவில் சட்டமும் பாஜகவின் இரு ஹெட்லைட். இதை கொண்டு பரிவார வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன எல்லாம் இந்துத்துவ படுத்தும்பாடு.

ஜோக்: //முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எதிரானது அல்ல. ஆனால், இத்தகைய பொய் பிரசாரம் தொடர்கிறது.//

டூப்: //ஜனசங்கத்தின் பரிணாம வளர்ச்சியே பாஜக.//

Saturday, December 16, 2006

பெண்ணாகப் பிறந்தவள்...

குழந்தை பெற்றார் 9-ம் வகுப்பு மாணவி

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9-ம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவி, வியாழக்கிழமை ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

குடியாத்தம் செதுக்கரையைச் சேர்ந்த, கணவனால் கைவிடப்பட்ட கூலித் தொழிலாளியின் மகள் இந்த மாணவி; வீட்டருகே வசிக்கும் இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதில் அவர் கர்ப்பமடைந்துள்ளார். (தாய், மகள் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)

இந்நிலையில், புதன்கிழமை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இம் மாணவி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 2.7 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது.

காதல், கர்ப்பம் குறித்து தாயும் மகளும் யாருடனும் பேச மறுத்து வருகின்றனர். போலீஸில் புகார் கொடுப்பீர்களா, காதலனுடன் வாழ அனுமதிப்பீர்களா என்று கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் சொல்லவில்லை.

மிரட்டப்பட்டுள்ளார்களா என்று கேட்டதற்கும் பதில் சொல்லத் தயங்குகின்றனர்.

நன்றிங்க

பெண்ணாக பிறந்தவள் பெண் என்று உடற்கூறு பாலின வேறுபாடு கொண்டவளாகப் பார்க்கப்படுவதில்லை. அழகு சுகம் மென்மை இப்படித்தான் பார்க்கப்படுகிறாள். அதன் அவலம்தான் அன்றாட செய்திகளில் படிக்க முடிகிறது. 9ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றாள் என்பது அதிசயமில்லை. பெண்கள் பருவமடைந்தால் குழந்தை பெறும் தகுதியை அடைகிறார்கள். வீரம் வலிமை வேகம் என்ற போலி வக்கிரங்களுக்கு மெளனமாக இரையாகி விடுகிறார்கள்.

இரட்டைத் தீர்ப்புகள்.

கேரளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஜே.பி யைச் சேர்ந்த (யுவமோர்ச்சா) ஜெயகிருஷ்ணன் என்னும் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். அதன் பேரில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு விசாரணை நீதி மன்றமும் மேல் முறையீட்டில் உயர்நீதி மன்றமும் தூக்குத் தண்டனை விதித்திருந்தன.

உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் நால்வரது தூக்குத் தண்டனை ரத்துச் செய்யப் பட்டு விடுதலை செய்யப் பட்டனர். மற்றொரு தூக்குத் தண்டனைக் கைதிக்கு ஆயுள் தண்டனையாகத் தண்டனை குறைக்கப் பட்டது.

கீழ் நீதி மன்றமும் கேரள உயர்நீதி மன்றமும் வழங்கிய தூக்குத் தண்டனை, காவல் துறையின் கதையைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பியதால் ஏற்பட்ட அல்லது திட்டமிட்ட நிகழ்வு. இதை உச்ச நீதிமன்றம் சரியான கண்ணோட்டத்தில் அணுகியதால் ஐவரும் உயிர் தப்பினர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வழக்கில் காவல்துறை வழக்குப் புனைந்ததில் "ஒப்பிச்ச தரிகிட பரிபாடிகளை"த் தோலுரித்துக் காட்டிக் காவல் துறையைக் கண்டித்தனர். மேலும் பொய் சாட்சி சொன்ன ஆசிரியர் ஒருவரையும் கண்டித்தனர். பள்ளி மாணவர்கள் அளித்த சாட்சியத்தைக் கணக்கில் கொண்டு நால்வரை விடுதலை செய்தனர்.

(அப்ஸல் வழக்கிலும் இந்தக் கதைதான் நடந்திருக்குமோ?)


இதே செய்தியை 'தினமலரும்' பிரசுரித்துள்ளது கீழே:-

கேரள குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை "ஆயுளாக' குறைப்பு.

புதுடில்லி: கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் தொண்டர் ஒருவருக்கு கொலை வழக்கில் அளிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் ஜெய் கிருஷ்ணன் என்ற பள்ளி ஆசிரியர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டரான பிரதீபன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இது தவிர மேலும் நான்கு பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை வழக்கை விசாரித்த கீழ் கோர்ட்டுகள் ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்தன. கேரள ஐகோர்ட்டும் ஐந்து பேர் மீதான மரண தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி.சின்கா மற்றும் மார்கண்டேய கட்ஜு ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், பிரதீபனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இது தவிர மீதி நான்கு பேரும் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
------------------------

மரண தண்டனை என்பது ஒரு மனிதனின் உயிர் போகிற சமாச்சாரம். உயிர் போனால் போனதுதான் போன உயிரை திரும்ப கொண்டு வர முடியாது அதில் எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

நீதித்துறை கனவான்களே ஒரு வழக்கை ஒரு தடவைக்கு நாலு தடவை விசாரியுங்கள். ஏன் நாப்பது தடவையும் விசாரியுங்கள். ஒரு வருஷத்துக்கு பல வருஷம் விசாரணை செய்யுங்கள். ஆனா தீர்ப்பு மட்டும் ஒரு தீர்ப்பா இருக்கட்டும். (இத எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? எல்லாம் தமிழ் மக்களிடம் கேட்டதுங்க.)

Wednesday, December 13, 2006

வசதியாக மறைத்தல்

பாபுஜி எழுதிய இருளும் மருளும் நேச குமாருக்கு - சில வரிகள் என்ற திண்ணை கடிதத்தில் நேச குமார் என்ற இஸ்லாமோஃபோபிக் நபருக்கு இரண்டு கேள்விகளை வைத்திருந்தார். அதுக்கு விளக்கமாக இஸ்லாமோஃபோபிக் நபர் அபூ சுஃப்யான் பற்றிய விளக்கத்தை மழுப்பலாக சொல்லிட்டு அபூ சுஃப்யானின் மனைவியை பற்றிய கேள்வியை வசதியாக மறைத்து விட்டார்.

Thursday November 16, 2006

இருளும் மருளும் நேச குமாரும் - சில வரிகள்!

பாபுஜி

இருளும் மருளும் இஸ்லாமும்" என்ற தலைப்பில் எனக்கு சில வரிகளை நேச குமார் என்ற பெயரில் யாரையோ, எதையோ சொக்க வைக்கும் உத்வேகத்தில் எழுதி வருகிற இஸ்லாமோஃபோபிக் நபர் கடந்த 19 அக்டோபர் அன்று எழுதியதை இன்று தான் பார்க்க முடிந்தது.

தனிப்பட்ட முறையில் நான் அவர் மீது விமர்சனம் செய்திருப்பதாகச் சொல்கிறார். நான் சொன்னது 'இஸ்லாமோஃபோபிக் ' என்பதைத் தான். அதுகூட ஏளனமான தொனியில் இணைய முஸ்லிம் எழுத்தாளர்களை அவர் 'இஸ்லாமிஸ்ட்' என்று சொல்லிவருவதை உணர்த்தத் தான். இஸ்லாமிஸ்ட் என்ற வார்த்தை என்னளவில் கேவலமில்லை என்றாலும், நேச குமார் உபயோகிக்கிற தொனி எல்லோரும் அறிந்தது தானே!

ஆனால், கோடானுக்கோடி முஸ்லிம்களின் உணர்வுகளை தன் பேனாவின் முனையால் குத்திக் கூறுபோடத் துடிக்கிற இந்த நபரை குறித்து யாரும் எதுவும் சொல்லக்கூடாதாம் . சேனிட்டியாம்.

நேச குமார் ஒரு பார்ப்பனர் என்பதும், பார்ப்பனீயப் பித்தர்களால் (மனித நேயமிக்க நல்ல பார்ப்பனர்கள் மன்னிக்கவும்) ஆதிக்கப்பறிப்புகளைத் தாங்கிக்கொள்ள மாட்டாத நிலையில், காழ்ப்புணர்வின் ஒரு செயலாகவே அவருடைய இஸ்லாம் குறித்த விமர்சனங்களும் இருக்கின்றன என்பதும் இன்றைக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்பட்டு விட்ட நிலையில், இன்னும் எத்தனைக் காலத்துக்கு தான் ஒரு பிற்படுத்தப்பட்டவன் என்ற பொய்யை தொடர விரும்புகிறார் என்பதை தெளிவுபடுத்தட்டும் .

நேச குமார் என்ற பெயரில் எழுதுகிற அந்த நபர் தொடர்ந்து சொல்வதெல்லாம் இஸ்லாம் மீதான அவருடைய உன்மத்தங்களையே!.

கடும் விரோதிகளாயிருந்த பகைவர்கள் மீது வெற்றி வாய்ப்பு கிடைக்கும்போது பழிதீர்த்துக்கொள்ளவே முனைகிற மனிதர்களிடையே, அப்போதும் ஓரிறையை ஏற்கவைத்த; சொந்தப் பகைமைகளை மறந்து மன்னித்த; வரலாற்றில் பதிவான மாபெரும் மன்னிப்பை காழ்ப்புணர்வின் காரணத்தால் திரித்தும் மறுத்தும் சொல்ல, நல்லவேளை நான் உங்களைப்போன்ற கடும்காஃபிரில்லை நேச குமார் அவர்களே . (இப்போதும் ஒரு முஸ்லிமாக, உங்களை காஃபிர் என்று சொல்வதனை நான் விரும்பவில்லை . நாளையே உங்கள் நிலை மாறக்கூடும். ஆயினும் நீங்கள் இஸ்லாமோஃபோபிக் என்று சொல்வதை விடவும் காஃபிர் என்று சொல்வதை விரும்புவீர்கள் என்பதால் சொல்கிறேன் ).

அதே அபூ சுஃப்யான் அவர்களின் மனைவியாகவும், நபியவர்களின் நேசத்திற்குரிய சிறியதந்தையைக் கொன்று ஈரலைக் கடித்துத் துப்பியவருமான -ஹிந்த் அவர்களையும் இஸ்லாத்தின் பொருட்டால் மன்னித்து, அதே -ஹிந்த் அவர்களால் "இறைத்தூதர் அவர்களே ! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது) பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபிறகு) இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது" என்று நேற்றைய எதிரிகளாலும் பாராட்டுப்பெற்ற நபியவர்களை சுய வன்மத்தின்; சுயநலத்தின் காரணமாகவே ஏற்காதிருக்க நான் நல்லவேளை, உங்களைப்போல ஆதிக்க சாதியிலில்லை நேச குமார் அவர்களே!

இருள் மருள் காரணமாகவே, முஸ்லிம்கள் இஸ்லாத்தினை விட்டு விலகாதிருக்கிறார்கள் என்று 'கண்டுபிடித்து' வைத்திருக்கும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

ஹிந்து மதம் நெகிழ்ச்சித் தன்மை உடையது என்று சொல்கிறீர்களே, பிராமணீய மதத்தவர்களால் ஏன் இன்னும் வர்க்கபேதத்தின் வரையறையாய் விளங்கும் பூணூலைத் தாண்டி வரமுடியவில்லை? பதில் சொல்வீர்களா? நன்றி.

Friday, December 08, 2006

சிலைகள் திறப்பு விழா.

பெரியார் சிலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை - கருணாநிதி

07 டிசம்பர் 2006

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து காங்கிரஸ் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் கருணாநிதி, இந்த சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி தமக்கு காலையிலேயே வந்தது என்று கூறினார்.

பெரியார் சிலை மட்டுமின்றி பெரும் தலைவர்களுடைய சிலைகளிலும் அந்த தலைவர் சொன்ன கருத்துக்களிலும் வேறுபாடான நிலை சிலருக்கு இருக்கலாம் என்றும், அதற்காக சிலையை உடைப்பதை ஒரு போதும் இந்த அரசு அனுமதிக்காது என்றார்.

பெரியாரின் சிலை என்பது அதை சேதப்படுத்தியவரையும் சேர்த்து மனிதராக்கியவரின் சிலை என்றும், அதை உடைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க முடியாது என்றும் கருணாநிதி கூறினார்.

கருத்துக்கு கருத்து, எண்ணங்களுக்கு எண்ணம், கொள்கைக்கு கொள்கை என்று மோதல் இருக்க வேண்டுமே தவிர, சிலைகளை உடைப்பதையோ அதை சீரழிப்பதையோ ஒருபோதும் ஏற்க முடியாது என்று அவர் கூறினார்.

சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் உடனடியாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்தப் பிரச்சனையை யாரும் மேலும் வளர்த்து பூதாகாரமாக்க வேண்டாம் என்றும் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

நன்றிங்க

நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் சிலை திறப்பு

08 டிசம்பர் 2006

நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த மத்திய அமைச்சரும் திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாாறன் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் நேற்று நடைபெற்ற அதிமுக நிறுவனரும் மறைந்த தமிழக முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிலை திறப்பு விழாவில் திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மையார், முரசொலி மாறனின் மனைவி மல்லிகா, அவரது மகனும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

நன்றிங்க

மத்திய, மாநில அரசியலில் மாற்றம் வரும் - ஜெயலலிதா

07 டிசம்பர் 2006

மத்தியிலும் மாநில அளவிலும் அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் எம்ஜிஆர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா எனினும் அதுபற்றி விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.

முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் இரு மாநில முதலமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு தோல்வியடைந்த உடனேயே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறினார். இரு மாநிலங்களின் பொதுப் பணித் துறை அமைச்சர்கள் பேசுவதில் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

சக்தி வாய்ந்த பல பெண்கள் அரசியலில் ஈடுபட்டுள்ள போதிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்றார்.

பாரத ரத்னா விருது பெற்ற எம்ஜிஆரின் சிலை திறப்பு விழாவை திமுக புறக்கணித்ததை கண்டித்த போதிலும், இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்காதது பற்றி அவர் கருத்து கூற மறுத்துவிட்டார். இதுபற்றி அவரிடம் கேட்ட போது சோனியா காந்தியிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று அவர் பதிலளித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா மற்றும் பெரியாரின் சிலைகளை திறக்க முயற்சிகள் மேற்கொண்டதும் அதிமுகதான் என்று ஜெயலலிதா கூறினார்.

நன்றிங்க

அரிய வாய்ப்பை நழுவவிட்டவர் ஜெயலலிதாதான் - கருணாநிதி

08 டிசம்பர் 2006

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் அரிய வாய்ப்பை தவற விட்டது ஜெயலலிதா அரசுதான் என்று முதலமைச்சர் கருணாநிதி புகார் கூறியுள்ளார்.

மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுவையில் இவ்வாறு கூறினார்.

முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதாதான் என்றும் எனவே வாய்ப்பை நழுவ விட்டது அவரது ஆட்சிதான் என்றும் கருணாநிதி குற்றம்சாட்டினார்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக இரு மாநில அமைச்சர்களும், கலந்து பேசவிருப்பதாகவும் அவர்கள் தரும் தகவல்கள் அடிப்படையில் மீண்டும் இரு மாநில முதலமைச்சர்களும் அடுத்த கட்ட பேச்சு நடத்த ஏற்பாடுகள் நடைபெறும் என்று அவர் கூறினார்.

அந்த முயற்சியிலும் தோல்வி ஏற்பட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகும் என்று கருணாநிதி தெரிவித்தார்.

எம்ஜிஆர் சிலை திறப்பதை தாமதிக்க தாம் குறுக்கிட்டதாக ஜெயலலிதா கூறியிருப்பது அவதூறு வழக்கு போடுவதற்குரிய வாசகம் என்றும் கருணாநிதி கூறினார்.

நன்றிங்க

தென் தமிழ் நாட்டில் மட்டுமில்லை வடமாநிலங்களிலும் சாதிக் கலவரங்களுக்கு சிலைகள் சேதப்படுத்தப் படுவதுதான் காரணியாக இருக்கிறது. இதனால் அரசியல் தலைவர்களின் சிலைகள் இரும்புக் கூட்டுக்குள் வைக்கப்படும் அவலத்தை பார்க்கிறோம்.

சிலை வைப்பதற்காக போராட்டம் சிலை வைக்கக்கூடாது எனவும் போராட்டம். வழக்கு வம்பு அடிதடிகள் உயிர் சேதங்கள் தண்டனைகள் இதையெல்லாம் மறைந்த தலைவர்கள் இன்று இருந்திருந்தால் இந்த வன்முறை போக்குகளை விரும்ப மாட்டார்கள்.

-முஸ்லிம்

சரியான போட்டி.

அரசியல் பாடம் கற்க வேண்டும்: விஜயகாந்துக்கு கருணாநிதி பதில்

03 டிசம்பர் 2006

நதிநீர் பிரச்சனை உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களூக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவி அளிக்கக் கூடாது என மத்திய அரசு வழிமுறை வைத்துள்ளது என்று, விஜயகாந்துக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஞாயிறு அன்று கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசில் நீர்வளத்துறையை கேட்டு பெறவேண்டியது தானே என்று விஜயகாந்த் கூறுகிறார். நதிநீர் பிரச்சனை உள்ள மாநிலங்களுக்கு அந்த துறையை ஒதுக்குவதில்லை என்று மத்திய அரசு கொள்கை முடிவு கொண்டுள்ளது. இதனால் தான் 2 மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அந்த துறை ஒதுக்கப்படவில்லை. இந்த அரசியல் பாடத்தை விஜயகாந்த் முதலில் கற்க
வேண்டும் என்று கூறியுள்ளார்.

முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யத்தயாரா என்று விஜயகாந்த் கேட்டுள்ளார். அவர் நடித்துள்ள திரைப்படத்தில்,
'டைட்டிலுக்கு' பிறகு 'கிளைமாக்ஸ்' காட்சி வந்துள்ளதா? என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

இலவச சமையல் எரிவாயு அடுப்பு வழங்குவது பற்றி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கிலோ அரிசி 2 ரூபாய் திட்டம், சத்துணவில் வாரம் 2 முட்டை, வண்ணத் தொலைக்காட்சி உட்பட அரசின் பல திட்டங்களுக்கு அவர் எதிர்ப்பு காட்டி வந்துள்ளார். இது ஜெயலலிதாவின் நல்லெண்ணத்துக்கு அடையாளம் என்று தனது அறிக்கையில் கருணாநிதி மேலும் கூறியுள்ளார்.

நன்றிங்க

சபாஷ் சரியான போட்டி

-முஸ்லிம்

Wednesday, December 06, 2006

2.சேதியைக் கேட்டியளா?

குடியரசுத் தலைவர் பதவி: கலாமுக்கு பா.ஜ. ஆதரவு

30 நவம்பர் 2006

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இரண்டாவது முறையாக அந்த பதவியில் தொடருவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூலையுடன் முடிவடைகிறது. இரண்டாவது முறையாக அவர் குடியரசு தலைவர் பதவியை தொடர வேண்டும் என்று பரவலாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. மாணவ அமைப்புகள் சில, இதற்காக ஆதரவு திரட்ட தனி இணையதளம் துவக்கி பிரச்சாரம் செய்து வருகின்றன.

எனினும் முக்கிய அரசியல் கட்சிகள், குடியரத் தலைவர் தேர்தல் தொடர்பாக மவுனம் காத்து வருகின்றன. இதற்கிடையே குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் உட்பட சிலர் அந்த பதவிக்கு குறிவைத்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் மீண்டும் தொடர பாரதிய ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாரணாசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மிகப் பெரிய விஞ்ஞானியான கலாம், தனது பதவி காலத்தில் சிறப்பாகவும், தொலைநோக்கு பார்வையுடனும் செயல்படுவதாக கருத்து தெரிவித்தார்.

நாட்டுக்கு கலாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அவர் இரண்டாம் முறையாக குடியரசுத் தலைவராக தொடர பாரதிய ஜனதா ஆதரவு அளிக்கும். முஸ்லீம்களுக்கு தங்கள் கட்சி விரோதி அல்ல என்று ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்தார்.


நன்றிங்க

அடடா..... முஸ்லிம் சமுதாயத்தின் மீது இந்த பாஜக தலைவருக்குத்தான் எவ்வளவு அக்கறை புல்லரிக்குது போங்க.

இப்போ அடுத்த செய்தியை பாருங்களேன்.

பாபர் மசூதி : மக்களவை ஒத்திவைப்பு

06 டிசம்பர் 2006

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து மக்களவையில் இன்று பிஜேபி, சிவசேனா உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 14வது ஆண்டு தினமான இன்று மக்களைவில் பிஜேபி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இன்று காலை அவை கூடியதும், பிஜேபி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்று, ஜெய் ஸ்ரீராம், அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக் கொண்டிருந்தனர்.

மேலும் முகமது அப்சாலை தூக்கிலிட வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

காங்கிரஸ், சமாஜ்வாடி, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கடும் கூச்சல் - குழப்பம் நிலவியது.

இதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்தி வைத்து சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.
நன்றிங்க

ஒரு முஸ்லிம் அப்துல் கலாம் மீது அக்கறை கொண்டவர்களாக பாஜக கட்சி காட்டி கொண்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் எப்படி அல்வா கிண்டுறாங்கன்னு பாருங்களேன். முதல் செய்தியில் நாங்கள் முஸ்லிம்களுக்கு விரோதி அல்ல என்று வாயாற சொல்லிவிட்டு இரண்டாவது செய்தியில் நாங்க மட்டும்தான் முஸ்லிம்களின் விரோத கட்சி என்று வாய்கூசாமல் சொல்லி பாதகையில் எழுதி காட்டுறாங்களே இந்த பாஜாக கட்சிக்காரங்க என்னமா புளுகுறாங்கப்ப.

-முஸ்லிம்

சமயத் தேர்வு சுதந்திரம்.

மனிதன் ஆன்மீக சமயத் தேர்வுகளை சுயமாக தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருக்கிறான். இதற்கு இஸ்லாம் முழுமையான சுதந்திரம் வழங்கியிருக்கிறது. 21ம் நூற்றாண்டின் அரசியல்வாதிகள் அரசியல் தலைவர்கள் மதமாற்றம் தண்டிக்கப்படும் குற்றமென்று சட்டமியற்றினார்கள்.

மதமாற்றத்தை கண்டித்து நிறைவேற்றிய சட்டத்தை ஆன்மீகவாதிகளும் மதத்தலைவர்களும் சரிகண்டு ஆதரவளித்ததோடு மதமாறுவது மாபெரும் அபாயம் என்பதாவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒருவருக்கு விருப்பமான சமய நெறியை பின்பற்றவும் ஏற்று கொண்ட மதநெறியை எண்ண எழுத பிரச்சாரம் செய்யலாமெனவும் இந்திய அரசியல் சாசனம் அடிப்படை உரிமை வழங்கியிருந்தும் அரசியல் தலைவர்களும் மதத்தலைவர்களும் சர்வாதிகாரத்தை கையிலெடுத்து தனியொரு மனிதனின் அடிப்படை உரிமையில் மூக்கை நீட்டினார்கள்.

இந்த நூற்றாண்டிலும் மதமாற்றத்தால் 'வானம் இடிந்து தலையில் விழுந்து விடும்' என்கிற மாதிரி பூச்சாண்டி காட்டியவர்கள் மத்தியில் மத சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும்?

'உளத்தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன். அவனையன்றி நீங்கள் விரும்பியதை வணங்கிக் கொள்ளுங்கள்.' அல்குர்ஆன் 39:14-15.

இதுதான் சமயத் தேர்வு சுதந்திரம்.

-முஸ்லிம்

Tuesday, December 05, 2006

06.12.1992

பாபர் மசூதியும்

நாங்களும் ஒன்றுதான்!

இடிக்க மட்டுமே வருகிறார்கள்!!

கட்டுவதற்குக்குத்தான் யாருமில்லை!!!


-முதிர்கன்னிகள்

பாதுகாப்பு தகர்க்கப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு தினம்: சபரிமலையில் கடும் பாதுகாப்பு

03 டிசம்பர் 2006

பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 3 தினங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் தீவிரவாதிகள் நாசவேலையில் இறங்கலாம் என்பதால் பொது இடங்கள், முக்கிய கட்டிடங்கள், கோயில்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிப்பது வழக்கம்.

தற்போது மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். டிசம்பர் 6ம் தேதி வருவதை ஒட்டி, சபரிமலையில் கடும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரும் 5ம் தேதி தொடங்கி, 7ம் தேதிவரை 3 தினங்களுக்கு பாதுகாப்பு கருதி புதிய கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்துள்ளனர். இதன்படி, 5ம் தேதி இரவு முதல் 6ம் தேதி அதிகாலை வரை 18ம் படி மீது பக்தர்கள் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். 6ம் தேதியன்று 18ம் படியைத் தவிர வேறு வழியில் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு
அனுமதி கிடையாது.

மேலும், இருமுடியைத் தவிர வேறு எந்த உடைமைகளையும் எடுத்துச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்களிடம் 'மெட்டல் டிடெக்டர்' மூலம் சோதனை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

நன்றிங்க

மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்கா விட்டால் மடங்களும் ஆலயங்களும் வழிபாட்டுத்தலங்களும் அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். அல்குர்ஆன் 22:40.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

ஒவ்வொரு சமயத்தினரும் பிற சமயத்தினரின் வழிபாட்டுத்தலங்களைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபடாத வரை அனைவரின் வழிபாட்டுத்தலங்களும் பாதுகாக்கப்படும். கோவில் ஒன்றை இடித்தால் தங்கள் பள்ளிவாசலுக்கு இருந்த பாதுகாப்பு வளையத்தை அவர்கள் உடைத்து விட்டார்கள். பள்ளிவாசல் ஒன்றை இடித்தால் தங்கள் கோவில்களுக்கு இருந்த பாதுகாப்பு வளையத்தை அவர்கள் உடைத்து விட்டார்கள்.

தாம் வழிபடும் ஆலயம் பத்திரமாக இருக்க வேண்டுமானால் பிற சமயத்தினரின் ஆலயங்களும் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும்.

-முஸ்லிம்

Monday, December 04, 2006

ஒரு படத்துக்கு எத்தனை கிளைமாக்ஸ்?

ஒரே படத்துக்கு எத்தனை முறை "கிளைமாக்ஸ்' காட்சிகள் வரும் என்று முதல்வர் கருணாநிதிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான் கிளைமாக்ஸ். கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும் இந்தப் படத்துக்கு இன்னொரு கிளைமாக்ஸ் எழுதியிருக்கிறார். ஆகவே ஒரே படத்துக்கு எத்தனை முறை கிளைமாக்ஸ் எழுத முடியும். ஒருவேளை கருணாநிதி சிறந்த திரைப்பட வசனகர்த்தா என்பதால் அவர், இதற்கு தனியாக ஒரு கிளைமாக்ஸ் வைத்திருக்கிறாரோ என்னவோ?

திரும்பத் திரும்ப ஆரம்பத்திலிருந்து படத்தைக் காட்டிக் கொண்டிருந்தால் எத்தனை பேர் பார்ப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசும், கேரள அரசும் விதம் விதமாக புதிய கதை ஆரம்பத்திலிருந்து எழுதிக் கொண்டேயிருக்கின்றன. தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விவரத்தை இரு மாநில முதல்வர்களும் வேறு விதமாகக் கூறியிருப்பதே இதற்குச் சான்று.

தமிழக அரசு அதிநவீன மற்றொரு அணை கட்டிக்கொள்ளலாம், ஆனால் தண்ணீர் கிடைக்கும் அளவைப் பொருத்துத்தான் கேரளம் தமிழக்துக்குத் தண்ணீரைத் திறந்துவிடும் என்று கூறியதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருக்கிறார்.

தமிழக முதல்வரோ, அண்டை மாநிலங்களுடன் சுமுக உறவை விரும்புவதாகக் கூறுகிறார்.

கடந்த 29-ம் தேதி அறிவாலயத்தில் தில்லி பேச்சுவார்த்தை குறித்து பேட்டியளித்துவிட்டு, அதுகுறித்த விவரங்கள் 30-ம் தேதி பிற்பகலுக்குப் பிறகுதான் விளம்பரமாக வெளியிடப்பட்டன. ஆனால் இதன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று முன்பே நான் கேட்டேன். காக்கை உட்கார பனம்பழம் விழவில்லை. பனம்பழம் விழவேண்டும் என்று காக்கை உட்கார்ந்ததைப் போலாகிவிட்டது.

ஐடி அமைச்சரைக் கேட்டுப் பெறும்போது, நீர்வளத் துறை கேட்டுப் பெற முடியாதா?: சன் டி.வி., சூர்யா டி.வி., போன்ற டி.வி.க்களை நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பதவியைக் கேட்டுப்பெற முடிந்தது. ஆனால் நீர்வளத்துறை அமைச்சரைக் கேட்டுப் பெற முடியாதது ஏன்?. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஆந்திரத்தைச் சேர்ந்த ராவ் என்பவர் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது கர்நாடகம், ஆந்திரம் இடையே கிருஷ்ணா நதி நீர் பிரச்சினை இருந்தது. தற்போது கர்நாடகம், மகாராஷ்டிரம் இடையே பெல்காம் எல்லைப் பிரச்சினை உள்ள நிலையில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சிவராஜ் பாட்டீல் உள்துறை அமைச்சராக இல்லையா?

திருமண மண்டபம் இடிப்பு விவகாரம்: திருமண மண்டபத்தை எந்தப் பகுதியில் இடிக்கப் போகிறீர்கள் என்று வழக்கறிஞர் மூலமாக கேட்டாலும் அதற்கு இதுவரை உரிய பதில் இல்லை. முன்னுக்குப் பின் முரணாகவும், பொய் பேசும் மத்திய அமைச்சருக்கு பதில் கூற விரும்பவில்லை. மண்டபம் இடிப்பதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

மூன்றாவது அணியல்ல, முதல் அணி: மூன்றாவது அணி அமைப்பீர்களா என்கிறீர்கள்? என்னை மூன்றாவது அணியாக நினைக்கவில்லை. முதல் அணி என்றே கருதுகிறேன். மற்ற கட்சியிலிருந்து தேமுதிக-வில் பலர் சேர்கின்றனர். கடந்த காலத்தில் ஊழல் புகாரில் சிக்கியவர்கள் கட்சியில் சேர்ந்தது குறித்து கேட்கிறீர்கள், அவர்கள் திருந்த வாய்ப்பு உள்ளது. பல இடங்களிலிருந்து நீர் கடலில் கலந்தாலும், கடலின் தன்மை மாறாமலிருப்பதைப் போல் நான் மாறாமல் இருக்கிறேன்.

தற்போது விலைவாசியும், வறுமையும் பூதாகர பிரச்சினை. இதை மறைக்கவே முல்லைப் பெரியாறு விவகாரத்தைப் பெரிதாகப் பேசுகின்றனர். தொடர் மழை பெய்ததால், அணையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் 136 அடியைக் கடந்து தண்ணீர் நிரம்பியதாக சரித்திரம் இல்லை.

ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம்: மலையுடன் மோதுவதாகக் கூறுகிறார்கள். காங்கிரஸ் என்ற மலையுடன் மோதி திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக என்ற மாபெரும் மலையுடன் மோதி அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எம்ஜிஆர் பதவியில் இருந்தவரை திமுக ஆட்சியைப் பிடிக்கவேயில்லை. அந்தவகையில் மலையுடன் மோதி ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம் என்றார் விஜயகாந்த்.

நன்றிங்க

விஜயகாந்த் சார் ஒரு படத்துக்கு எத்தனை கிளைமாக்ஸ் இருந்தால் என்ன? அத்தனை கிளைமாக்ஸிலும் நீங்க நடிக்கலாமே. எம்ஜிஆர் பதவியில் இருந்தவரை திமுக ஆட்சியைப் பிடிக்கவேயில்லை வாஸ்தவந்தான் அதுமாறி கருணாநிதி பதவியிலிருக்கம்வரை தேமுதிக ஆட்சியை பிடிக்க முடியாதுன்னு சொல்ல வர்றீங்களா?

Friday, December 01, 2006

2.கொலை வழக்கு: சித்து குற்றவாளி

01 டிசம்பர் 2006

கொலை வழக்கு ஒன்றில் விடுதலை செய்யப்பட்டிருந்த பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து குற்றவாளி என்று பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கொலை வழக்கு ஒன்றில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 304 மற்றும் 34 வது பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்த சித்துவை பாட்டியாலா மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் 1999ம் ஆண்டு விடுதலை செய்திருந்தது.

குர்னாம்சிங் என்பவர் கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சித்து குற்றவாளி என்று கூறி வழக்கு தொடரப்பட்டது.

பாட்டியாலாவில் வங்கி ஒன்றின் முன்பு 1988ம் ஆண்டு, வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், குர்னாம் சிங்கை சித்துவும், அவருடன் இருந்தவர்களும் அடித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விடுதலையான சித்துவின் வழக்கு மேல்முறையீட்டில் அவர் குற்றவாளி என்றும், அவருக்கான தண்டனை வரும் புதன் கிழமை அறிவிக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றிங்க

நீதித்துறை கனவான்களே ஒரு வழக்கை ஒரு தடவைக்கு நாலு தடவை விசாரியுங்கள். ஏன் நாப்பது தடவையும் விசாரியுங்கள். ஒரு வருஷத்துக்கு பல வருஷம் விசாரணை செய்யுங்கள். ஆனா தீர்ப்பு மட்டும் ஒரு தீர்ப்பா இருக்கட்டும். (இத எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? எல்லாம் தமிழ் மக்களிடம் கேட்டதுங்க.)

Thursday, November 30, 2006

துரோகி எனும் சொல்.

முஸ்லிம்களில் சிலர் துரோகியென்ற சொல்லின் ஆழம் தெரியாமல் முஸ்லிம்களில் சிலரை 'இனத்துரோகிகள்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இஸ்லாம் கண்டிக்கும் இந்த செயல் வெறுக்கதக்கது என்பதை இவர்கள் உணரவில்லை. அடுத்தவரை குறிவைத்து பேசப்படும் வார்த்தைகள் அந்தவார்த்தைக்கு அவர் தகுதியில்லாதவராயிருந்தால் குறிவைத்து பேசிய வார்த்தை மீண்டும் பேசியவரை நோக்கி திரும்பிவிடும் என்பதை இந்த இஸ்லாமியர்கள் அறிந்திருக்கிறார்களா?

அறிந்திருந்தால் இந்த அவதூறு சொல்லை சொல்லியிருக்கமாட்டார்கள். தனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாத ஒன்றை பற்றி எந்த முஸ்லிமும் பேசமாட்டான். அப்படி பேசியவன் வெறும் பெயர்தாங்கியாக இருப்பான். யார் நல்லறம் செய்கிறாரோ அது அவருக்குரியது. யார் தீமை செய்கிறாரோ அது அவருக்கே எதிரானது. 41:46 என்ற இறைவாக்கின்படி அடுத்தவருக்கு தீமை செய்பவர் தீமையை எண்ணுபவர் தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறார். தனக்கே தீமையை எண்ணுகிறார்.

அவதூறு பேச்சின் சுடு சொல் தாளாமல் கலங்கி நிற்பவர்களின் கலக்கத்துக்கும் மனஉளச்சலக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் புண்ணியவான்களே(!?) உங்கள் இறைவனிடம் இதற்கு என்ன சமாதானம் சொல்லப்போகிறீர்கள்? எவரும் செய்யாத ஒன்றை அவதூறாக சொல்லி அவரை நோவினைப்படுத்துபவர் வெளிப்படையான பாவத்தை சுமக்கிறார் 33:58 என்ற இறைவனின் எச்சரிக்கை உங்களுக்கு விளங்காமல் போய்விட்டதா?

யாரோ முகம் தெரியாதவர் கூறிய செய்தியை சிந்திக்காமல் தீர்க்க ஆராயமல் அதை அப்படியே மறு செய்தியாக அதனினும் (இனத்துரோகிகள் என) கடுஞ்சொல்லாக வார்த்து விட்டீர்களே இதை செவியேற்றபோது இது பற்றி பேச நமக்கு தகுதியில்லை என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா 24:16

சொல்வதற்கு நிறைய இருப்பினும் சிந்திப்பவர்களுக்கு இது போதும். அவதுறு சுமத்தியவர்களே அவதூறுக்கு பரிகாரமாக என்ன செய்யப்போகிறீர்கள்? கேட்டு விடைபெறுகிறேன்.

இப்படிக்கு
முஸ்லிம்களில் ஒருவன்.

Saturday, February 25, 2006

அவலம்.

சுய மரியாதை முன்னேற்றத்தில் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு மனித பண்பாடுகள் உயர்ந்திருக்கிறது. அதனால் என்ன? சமூகத்தில் பழைய பண்பாட்டு மரபு - கலாச்சாரத்தை!? கட்டிக் காப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் எனும்போது பெருமையாக!? இருக்கிறது. 20ம் நூற்றாண்டில் - 1996ல் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட சமூக அவலம் செய்தியாக கீழே. அவலம் நிறைவேற தீர்ப்பு வழங்கிய புண்ணியவான்களில் பள்ளி ஆசிரியரும் ஒருவர், அடடா... வாழ்க (கட்டாய) காலில் விழ வைக்கும் கலாச்சாரம்.

செய்தி

விஜயகுமாரி(32) என்ற நர்ஸ் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கும் தீரன் சின்னமலைப் போக்குவரத்துப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றிய திருமலைச்சாமி என்பவருக்கும் சென்ற ஆண்டில் திருமணம் நடந்தது.

விஜயகுமாரி கொண்டு வந்த வரதட்சணையில் திருமலைச்சாமி திருப்தி அடையவில்லை. ''இன்னும் 25 ஆயிரம் ரூபாய் கொண்டு வா'' என்று கொடுமைப்படுத்தினார். அந்த அளவு பணம் கொண்டு வர இயலாததால், அந்தப் பெண்ணை எரித்து விடவும் முயற்சி செய்தனர். 16.01.96ல் இந்த சம்பவம் நடந்தது. அதிலிருந்து தப்பி தனது பிறந்த வீடு சென்று வாழ்ந்து வந்தார் விஜயகுமாரி.

இதைத் தொடர்ந்து உச்சக்கட்டக் கொடுமை அரங்கேறியது.

அந்தக் கணவன் சார்பாக பச்சப் பெருமாள் கிராமத்தில் பஞ்சாயத்து கூடியது. அங்கு அப்பாவிப் பெண் விஜயகுமாரி வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டாள்.

விஜயகுமாரிதான் குற்றவாளி என்று ஒரு சார்பாக பஞ்சாயத்து முடிவு செய்து ''கணவனுடன் நீ சேர்ந்து வாழ வேண்டும், இல்லையென்றால் நீ ரூபாய் 45ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும்'' என்று 'தீர்ப்பு' கூறப்பட்டது. ''என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது. அபராதப் பணம் கட்டுவதற்கும் எனக்கு வசதியில்லை'' என்று கூறி அழுதிருக்கிறார் அந்தப்பெண்.

''நீ அபராதம் கட்ட வேண்டும், இல்லையென்றால் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து வணங்க வேண்டும். நீ ஒவ்வொரு முறை விழும் போதும் அபராதத்தில் ரூபாய் 5 குறைப்போம்'' என்று இரக்கமில்லாமல் கூறினார்கள் பஞ்சாயத்து 'நீதிபதிகள்'

அந்தப் பெண் தொடர்ந்து 4 மணி நேரம் காலில் விழுந்து எழுந்தார். அப்படியும் 4800 தடவை காலில் விழுந்து 24 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையைத்தான் அவரால் கழிக்க முடிந்தது. ரூபாய் 21ஆயிரம் பாக்கி இருந்ததாம். அந்தத் தொகையைக் கட்டாயப்படுத்திப் பிடுங்கிக் னொண்டார்களாம்!

போலீசுக்குப் போனால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதால் பிப்ரவரியில் நடந்த இந்த சம்பவத்தைப் பற்றி விஜயகுமாரி போலீசிலும் புகார் செய்யவில்லை. அதையும் மீறி உப்பிலியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். அவர்கள் வழக்குப் பதிவு செய்யாமல், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி பஞ்சாயத்தாரிடம் கூறியிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யாமல் நாட்களைக் கடத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் அனார்கலி பேகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். விஜயகுமாரியின் கணவன், நாத்தனார்கள், பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவரான பள்ளி ஆசிரியர் ரங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் 8 பேர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Monday, February 20, 2006

கார்ட்டூன் விவகாரம்.

முகம்மது நபிகள் கார்ட்டூன் விவகாரம்: மன்னிப்பு கோரியது டென்மார்க் நாளிதழ்


துபை, பிப். 20: முகம்மது நபிகளின் கார்ட்டூனை வெளியிட்டதற்காக டென்மார்க்கைச் சேர்ந்த பத்திரிகையான 'ஜைலாண்ட்ஸ் - போஸ்டன்' ஞாயிற்றுக்கிழமை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக, கொட்டை எழுத்துகளில் ஒருபக்க அளவில் மன்னிப்பு கோரும் விளம்பரத்தை அரபு நாடுகளில் வெளியாகும், 'அஷர்க் அல்-அவாசத்' என்னும் நாளிதழில் டென்மார்க் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

"அந்தப் படங்கள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனத்தைப் புண்படுத்திவிட்டது. நடந்துவிட்ட சம்பவங்களுக்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவ்வாறு நடக்க வேண்டும் என்பது எங்களது எண்ணமில்லை்"

"எந்த மதத்தையும் அவமானப்படுத்த வேண்டும் என்பதோ, அவமதிக்க வேண்டும் என்பதோ எங்களது நோக்கமல்ல. நாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டோம். அதற்காக மன்னிப்பு கோருகிறோம். யாரையும் குறிவைத்து அந்தப் படங்களை வெளியிடவில்லை என்பதை வலியுறுத்தித் தெரிவித்துக்கொள்கிறோம். கருத்து வேறுபாட்டை அகற்றுவதற்கு இது உதவும் என நம்புகிறோம்; கடவுள் ஆசீர்வதிக்கட்டும்'' என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் இறுதியில், ஜைலாண்ட்ஸ் - போஸ்டன் நாளிதழின் தலைமை ஆசிரியர் கார்ஸ்ட்டன் ஜஸ்ட் கையொப்பம் இட்டுள்ளார்.

ஜைலாண்ட்ஸ்-போஸ்டன்' இதழின் இணையப் பக்கத்திலும் அதே மன்னிப்புக் கடிதம் அரபி மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் அந்த கார்ட்டூன்கள் முதன்முதலாக டென்மார்க் நாட்டு நாளிதழான 'ஜைலாண்ட்ஸ்-போஸ்டனி'ல் பிரசுரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியாகும் பல்வேறு இதழ்களும் அதை மறுபிரசுரம் செய்தன. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அதற்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். லிபியா, நைஜீரியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த போராட்டங்களில் இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். இந் நிலையில், அந்த கார்ட்டூன்களை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளது, டென்மார்க் நாளிதழ்.

செய்தி - தினமணி

Thursday, February 09, 2006

முனைவர் மங்கள முருகேசன் பேட்டி!

(மக்கள் உரிமை வாரப் பத்திரிகையிலிருந்து)

'உண்மையைச் சொல்லியே தீர வேண்டும்'
முனைவர் மங்கள முருகேசன் பேட்டி


தமிழக அரசு 12ம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் 19வது பாடமான 'விடுதலைக்குப் பின் இந்தியா' என்ற பாடத்தில் சில முக்கியமான வரலாற்றுக் குறிப்புகளை திடீரென்று நீக்கியது. ''மகாத்மா காந்தி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்து வெறியனால் கொலை செய்யப் பட்டார்'' என்பதே தமிழக பாடநூலிலிருந்து நீக்கிய முக்கியமானப் பகுதியாகும். இதைக் கடந்த வாரம் எழுதியிருந்தோம்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூல் 7 வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டு, நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட்டது. அப்போதெல்லாம் கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்புலம் குறித்து ஏதும் சொல்லாமல், பாஜகவும் - சங்பரிவார இயக்கங்களும் மிரட்டல் விடுத்த பிறகு, கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணி பற்றியக் குறிப்புகளை அரசு நீக்கியது சரியல்ல. கல்வியில் காவியைப் புகுத்துவது ஆபத்தானது என்றும் எச்சரித்திருந்தார், இந்தப் பாடநூல் ஆசிரியர் குழுவின் தலைவர் டாக்டர் மங்கள முருகேசன்.

இவர் 100க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை எழுதியவர். இரண்டு பிஎச்.டி பட்டங்களைப் பெற்றவர். (காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றிருப்பது ஒரு சுவையானத் தகவல்.)

இவருக்கு சங்பரிவார சக்திகள் மிரட்டல் விடுத்துள்ளன. அவற்றையெல்லாம் துச்சமாய் மதிக்கும் இவர் கடவுள் மறுப்பாளர் அல்ல, பக்திமிக்க இந்துதான்.

கொல்கத்தாவில் சென்ற வாரம் நடைபெற்ற இந்திய வரலாற்றுக் குழுவின் (Indian History Congress) சிறப்புக் கூட்டத்தில் தமிழகக் கல்வித்துறை, கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்ன ணியை நீக்கியிருப்பதை எடுத்துரைத்து தமிழக அரசின் வரலாற்றுத் திரிபுக்கு எதிராகத் தீர்மானமும் நிறைவேற்றச் செய்துள்ளார்.

IHCன் சிறப்புக் கூட்டத்தை முடித்து சென்னை திரும்பியவுடன் முதலில் நம்மிடம் மனம் திறந்தார் டாக்டர் மங்கள முருகேசன். அவரோடு உரையாடியதிலிருந்து...

மக்கள் உரிமை: காந்தியடிகளைக் கொன்ற கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்புலம் குறித்து நீங்கள் வரலாற்றுப் பாடநூலில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

மங்கள முருகேசன்: இந்தியா விடுதலை அடைந்த பிறகு நடைபெற்ற மிகமுக்கியமான வரலாற்றுச் சம்பவம் காந்தியடிகளின் படுகொலை. இதைப் பற்றிய உண்மைகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் 35 ஆண்டு காலம் கல்லூரியில் பேராசிரியராக மாணவர்களுக்குப் பயிற்றுவித்தவன். காந்தியடிகள் படுகொலைப் பற்றிய பாடத்தை நடத்தும் போது மாணவர்களுக்கு இயல்பாக ஏற்படும் சந்தேகம், காந்தியடிகள் கடவுள் பக்திமிகுந்த ஓர் ஆச்சாரமான இந்து. அவரைப் பிற மதத்தை சேர்ந்த யாராவது கொன்றிருந்தால் கூட அதை மதக் காழ்ப்புணர்ச்சி என்று கூறலாம்.

உலகத் தலைவர்களால் போற்றிப் புகழப்பட்ட, இந்து சமயத்திற்குப் பெருமையை சேர்த்த ஆச்சாரமான இந்துவான காந்தியடிகளை, ஏன் ஒரு இந்துவே படுகொலை செய்தார் என்பதுதான் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகம்.

மதவெறி முற்றினால் சொந்த மதத்துக்காரரையே படுகொலை செய்யுமளவுக்கு மூர்க்கத்தனம் பெருகும். மதவாதம் மிக ஆபத்தானது என்பதுதான் கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணியை வெளிப்படுத்துவதன் மூலம் நாங்கள் கூறவரும் கருத்து.

மக்கள் உரிமை: கோட்சே ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிய பிறகே காந்தியடிகளைக் கொன்றார். காந்தியடிகளைக் கொன்றபோது கோட்சே ஆர்எஸ்எஸ்காரர் அல்ல என்று அத்வானி போன்றவர்களும், பாஜக பரிவாரங்களும் இப்போது சாதிக்கிறார்களே?

மங்கள முருகேசன்: நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ்காரர் இல்லை என்று சொல்பவர்கள் (அத்வானி) கோழைகள் என்று கோட்சேவின் உடன்பிறந்த சகோதரரான கோபால் கோட்சே பதிலடி கொடுத்துள்ளார்.

''நானும், எனது சகோதரர் நாதுராம் கோட்சேவும் எங்கள் வீட்டில் வளர்ந்ததை விட, ஆர்எஸ்எஸ்ஸில் வளர்ந்ததே அதிகம். ஆர்எஸ்எஸ் தான் எங்களுடைய குடும்பம்'' என்று கூறியுள்ளார்.

காந்தியடிகள் கொலை வழக்கில் கோபால் கோட்சேவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நாதுராம் கோட்சே தூக்கில் தொங்குவதற்கு முன்பு, ஆர்எஸ்எஸ்ஸின் தேசியப் பாடலை பாடிவிட்டுத்தான் தூக்கில் தொங்கினான். கோட்சேவின் சாம்பலை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அகண்ட பாரதம் அமைந்த பிறகுதான் கரைக்கப் போவதாக எடுத்து வைத்துள்ளார்கள்.

இந்தியா டுடே, ஃபிரண்ட் லைன் போன்ற ஏடுகள் காந்தியடிகளைப் படுகொலை செய்த கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணி குறித்து பலமுறை எழுதியுள்ளன.

நீங்கள் மிகமுக்கியமான ஒரு செய்தியை கவனிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர் முறை என்பதே கிடையாது. உறுப்பினர் கட்டணம், உறுப்பினர் அட்டை, சந்தா எதுவுமே ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு கிடையாது. இந்தியாவில் சட்டப்பூர்வமான எந்த இயக்கமும் இப்படி இயங்குவதில்லை.

ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் எத்தனைப் பேர் என்று அதன் தலைவரால் கூட சொல்ல முடியாது. இன்றுவரை உறுப்பினர் அட்டையே இல்லாமல் இயங்கிவரும் ஒரு கூட்டத்தில் ஒருவரை உறுப்பினர் என்றோ, உறுப்பினர் இல்லை என்றோ எப்படிக் கூறமுடியும்?

கோட்சே ஆர்எஸ்எஸ் இல்லை என்கிறது பாஜக. இறுதிவரை அவர் ஆர்எஸ்எஸ்தான் என்று ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறார் அவரது உடன்பிறந்த சகோதரர் கோபால் கோட்சே.

தெருவில் போகிறவர்கள் கூறுவதை விட உடன்பிறந்தவர் கூறும் செய்தியே உண்மையென்று ஏற்க முடியும்.

மக்கள் உரிமை: காந்தியடிகளைக் கொன்ற கோட்சே ஆர்எஸ்எஸ்காரர் இல்லை என்று பாஜகவும், சங்பரிவாரங்களும் மறுப்பதற்குக் காரணம் என்ன?

மங்கள முருகேசன்: அன்றைய ஆர்எஸ்எஸ்காரர்கள் வெளிப்படையானவர்கள். வெறிமிகுந்தவர்கள். உறுப்பினர்களும் குறைவு. ஆகவே, காந்தியடிகளைக் கொன்ற பழியை அவர்கள் பெருமையாகவே கருதினர்.

இன்றைய ஆர்எஸ்எஸ்காரர்கள் பசுத்தோல் போர்த்திய நரிகள். தங்களை சமூக சேவகர்களாக அடையாளப் படுத்துகின்றனர். அதன் அரசியல் கரமான பாஜக பல மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சிக்கு வந்துள்ளது. தேசத்தந்தையைப் படுகொலை செய்த இவர்களின் உண்மை முகம் வெகுமக்களுக்குத் தெரியவந்தால், இவர்களால் மக்கள் ஆதரவைப் பெற முடியாது. ஆகவே, காந்தியடிகளைப் படுகொலை செய்ததை இப்போது மூடிமறைக்க முயலுகிறார்கள்.

மக்கள் உரிமை: இந்தியா டுடே, ஃபிரண்ட்லைன் உள்ளிட்ட பத்திரிகைகள் கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணி குறித்து எழுதியபோது மவுனமாக இருந்த பாஜகவும், சங்பரிவாரமும் மாணவர்கள் மட்டுமே படிக்கின்ற பாடநூல்களில் இடம்பெற்ற கருத்துகளுக்காக ஏன் கொந்தளிக் கிறார்கள்?

மங்கள முருகேசன்: ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட வேண்டுமானால் புரட்சியை உருவாக்கும் கருத்துக்கள் இரு குறிப்பிட்ட வர்க்கங்களைச் சென்று சேர்ந்தால் போதுமானது. ஒன்று தொழிலாளர் வர்க்கம், மற்றொன்று மாணவர் வர்க்கம்.

மாணவர் வர்க்கத்தின் மனதில் பதியும் கருத்துக்கள் மாபெரும் மாற்றங்களுக்கு வழிகோலும். செய்தி ஏடுகளில் இடம் பெறும் கருத்துகளை விட பாடநூல்களில் இடம்பெறும் கருத்துகளுக்கு கனம் அதிகம். இரண்டாம் வகுப்பில் நாம் படித்த மனப்பாடச் செய்யுளும், அதன் கருத்தும் இப்போதும் நினைவிருக்கும்.

அத்தகைய மாணவ உள்ளங்களில், மதவாதம் கொடியது, அந்த மதவாதம் தான் நமது தேசத்தந்தையின் உயிரைப் பறித்தது என்ற கருத்து அழுத்தமாகப் பதியுமானால் அது மதவாத அரசியல் செய்பவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். அதனால்தான் கொதிக்கிறார்கள், துடிக்கிறார்கள்.

மக்கள் உரிமை: மதவாதம் கொடியது என்பதை தேசத்தந்தை காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கூறித்தான் நிறுவ வேண்டுமா?

மங்கள முருகேசன்: வரலாற்று உண்மைகளைக் கூடுதல் குறை வில்லாமல் உள்ளது உள்ளபடி பதிவு செய்ய வேண்டியது ஒரு கல்வியாளரின் கடமை. மேலும், பாஜக தலைமையிலான முந்தைய மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்த NCERT (NATIONAL COUNCIL FOR EDUCATIONAL RESEARCH AND TRAINING) வெளியிட்ட பாடநூல்களில், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவமே மறைக்கப்பட்டு, 'காந்தியடிகள் இறந்து போனார்' என்று இயற்கை மரணம் போல எழுதினார்கள்.

NCERT வெளியிட்ட வரலாற்றுப் பாடநூல்களில் இடம்பெற்ற ஏராளமான பிழைகளைக் கண்டுபிடித்து ஒரு தனி புத்தகம் எழுதியபோது 130 பக்கங்களுக்கும் மேலாக அது அமைந்தது. 51 ரூபாய் அதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு புத்தகத்தின் பிழைகளே இன்னொரு புத்தகமாக உருவாகுமென்றால், அந்தப் பிழைகள் எல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டவைதானே...

ஆகவே, வருங்காலத் தலைமுறைக்கு வரலாற்று உண்மைகளைச் சொல்லியே தீர வேண்டும் என்பதற்காகவே, கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணியை பாடநூல்களில் இடம்பெறச் செய்தோம்.

Wednesday, February 08, 2006

வாருங்கள் நண்பரே!

வாருங்கள் அரவிந்தன் நீலகண்டன்!

தமிழோவியத்தில் நல்லடியாரின் கட்டுரையில் பின்னூட்டப் பெட்டியில் இருவரும் கருத்துக்களை இட்டு வந்தோம். சம்பந்தப்பட்ட பின்னூட்டப் பெட்டியில் திடீரென்று தமிழோவியம் பெரிய பூட்டாகப் போட்டு நிரந்தரமாக மூடிவிட்டது. இப்படித்தான் நமது பின்னூட்டங்கள் துண்டிக்கப்பட்டன.

நிற்க!
திரட்டியில் இல்லாத உங்கள் வலைப்பூவை நான் எப்படிப் பார்த்திருக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?. சிந்தித்துப் பாருங்கள் நவம்பர் 11.2005லிருந்து, நவம்பர் 12.2005வரை சிலமணித்துளி நேரங்களே கால வித்தியாசம் இருக்கும், இதை பெருங்குறையாக எடுத்துக்கொண்டு, நவம்பர் 12வரை.. பதிலளிக்கவில்லை என்ற ஆர்ப்பாட்டம் தேவைதானா?.

முஸ்லிம்களை விட, இஸ்லாத்தின் மீது உங்களுக்கு அக்கறை அதிகம் அதனால் தமிழ்மணம் வலைப்பூவின் திரட்டிக்கு கண்டிப்பாக மீண்டும் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

கணினிப் பொறியோடு எனக்குள்ள தொடர்பு, அள்ளி சாப்பிடுவது போல் இல்லை, தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் மாதிரிதான். நேரம் கிடைக்கும்போது தமிழோவியப் பின்னூட்டங்களின் கருத்துக்களை மீண்டும் இங்கே புதுப்பித்துக்கொள்ளலாம் சரிதானா நண்பரே?

அன்புடன்,
முஸ்லிம்

அம்மாடி இதுதான் அரசியலா?

(மக்கள் உரிமை பிப்ரவரி, 03-09,2006 வாரயிதழில் வெளிவந்த செய்தி!)

காந்தியடிகளைக் கொன்ற கோட்சே, ஆர்எஸ்எஸ் இல்லையாம்...!

தமிழக அரசு முடிவு! கல்வியாளர்கள் அதிர்ச்சி!!

தேசத் தந்தை காந்தி படுகொலை தொடர்பான பாடத்தில் தமிழகக் காவல்துறை செய்த திடீர் திருத்தம் வரலாற்றாய்வாளர்களையும், கல்வியாளர்களையும் பொங்கியெழ வைத்துள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளுக்காக தமிழக பள்ளிக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தில் காந்தியடிகள் படுகொலை பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. அதில், மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் வினாயக் கோட்சே, ''ஒரு இந்து வெறியன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்'' என்ற தகவலும் இடம்பெற்றிருந்தன.

அக்.3, 2005 தேதியிட்டு, பள்ளிக் கல்வி இயக்கம் அனுப்பிய சுற்றறிக்கையில், காந்தியாரைக் கொன்ற கோட்சேயின் ஆர்.எஸ்.எஸ் பின்னணியை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆர்எஸ்எஸ் கும்பலின் நெருக்கடிக்கு தமிழக கல்வித்துறை பலியாகி விட்டதோ என்ற சந்தேகத்தை இந்நடவடிக்கை கிளப்பியுள்ளது. பாடப்புத்தகங்களில் வரலாற்றுத் திரிபுகளுக்கெதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவின் உயர்நிலை நிர்வாகிகள், முன்னாள் துணைவேந்தர்கள் சே.சாதிக், பி.ஜெகதீசன், வே.வசந்திதேவி ஆகியோர் இதற்கெதிராக நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். இதன் உறுப்பினரான ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியரும், அண்ணா ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநருமான எம்.எப்.கான், ஆர்.எஸ்.எஸ் நெருக்கடிக்கு அரசு பலியாகி இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

பாடப்புத்தகங்களில் கோட்சே ஓர் ஆர்.எஸ்.எஸ் வெறியர் என்று எழுதப்பட்டதற்கு பாஜக முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக எம்.எல்.ஏ எச்.ராஜா இதுகுறித்து பாடநூல் குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். பாடநூல் குழுவினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர் எஸ் எஸ்ஸும் இதற்காக ஒரு வழக்கு போட்டுள்ளது. ஆனால் பாடநூல் குழுவினர் இதற்கெல்லாம் அசரவில்லை. பாடநூலாசிரியர் குழுவின் தலைவரான திரு. என்.கே. மங்கள முருகேசன், ''ஆர் எஸ் எஸ் பற்றியும், கோட்சே பற்றியும் பாடநூல்களில் நாங்கள் எழுதியுள்ள தகவல் அசைக்க முடியாத உண்மை. அதற்கு வலுவான ஆதாரங்களும் உண்டு. அவற்றை நீக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆர்.எஸ்.எஸ் விடுக்கும் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை என்று கூறினார்.

வரலாற்றாசிரியர் தங்கள் கூற்றில் மிக உறுதியாக நிற்கும்போது பள்ளிக்கல்வி இயக்குனரகம், பாடப்புத்தகத்தில் திருத்தம் செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பியது கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாடநூலாசிரியர் உறுப்பினர் பேராசிரியர் எல்.ராமமூர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குனர், தான் அனுப்பிய சுற்றறிக்கை குறித்து விளக்கம் தரவேண்டும் என்று கோரியுள்ளார். காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவின் ஆர்.எஸ்.எஸ் பின்னணி குறித்த வலுவான ஆதாரங்களை பாடநூலாசிரியர் குழுத் தலைவர் மங்கள முருகேசன் சமர்ப்பித்துள்ளார்.

கோட்சே பற்றிய எனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை, மன்னிப்பு கேட்கவும் போவதில்லை. வலுவான ஆதாரங்களோடு நான் குறிப்பிட்ட கருத்தை தமிழக அரசு பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கியிருப்பது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது என்கிறார் பாடநூல் ஆசிரியர் மங்கள முருகேசன்.

தேசத்தந்தை காந்தியார் படுகொலை பற்றிய உண்மைகளை ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற இந்துத்துவ சக்திகள் மூடிமறைக்க முயலுகின்றன. இந்த வன்முறைக் கும்பலைப் பற்றி வருங்காலத் தலைமுறை அறிந்து கொள்ளக் கூடாது என்பதே அவர்களின் எண்ணம்.

மதவெறிக் கும்பலின் மிரட்டலுக்கு தமிழக அரசு பணிந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கல்வியாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

இந்திய வரலாற்றுப் பேராயம் (ஒய்க்ண்ஹய் ஐண்ள்ற்ர்ழ்ஹ் ஈர்ய்ஞ்ழ்ங்ள்ள் ஒஐஈ) தலைவருக்கு இதுகுறித்து மங்கள முருகேசன் விரிவான கடிதமும் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள சாந்தி நிகேதனில் ஜனவரி,28-30, 2005ல் கூடிய இந்திய வரலாற்றுப் பேராயத்தின் கூட்டத்தில், பாஜக - சங்பரிவார் கும்பலின் வரலாற்றுத் திரிபுகளுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வித் திட்டத்தில் காவித் தலையீடுகளைக் கடுகளவும் அனுமதிக்கக் கூடாது, கல்வியாளர்களுக்கு முழுமையான கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒளரங்கசீப் போன்ற முஸ்லிம் மன்னர்களைக் கொடுமையாளர்களாகவும், அக்பர் போன்ற ஒழுக்கம் கெட்டவர்களை மகா புருஷர்களாகவும் சித்தரிக்கின்ற சங்பரிவார கும்பல், காந்தியடிகளைக் கொன்ற தனது கயமைத்தனத்தை மூடிமறைக்க முழுமூச்சாய் களமிறங்கியுள்ளது.

வரலாற்றுத் திரிபுகள் மூலம் வருங்காலத் தலைமுறையை வஞ்சிக்க முயலும் கொடியவர்களுக்கு மதச்சார்பின்மையைக் காப்பதாகப் பதவிப் பிரமாணம் எடுத்தள்ள அரசு பணிவது அவலகரமானது.

காந்தியைக் கொன்ற கோட்சேவை ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து நீக்குவது தமிழக அரசின் வேலையல்ல. உண்மைகளை மறைப்பதும், அவற்றைத் திரிப்பதும், பொய்களை உண்மைகளாய்ச் சொல்வதும் வரலாற்றுத் திரிப்பின் வகைகள். இவற்றை பாஜக ஆளும் மாநிலங்கள் முழுவீச்சில் நடைமுறைப்படுத்துகின்றன.

சமூக நீதி பூமியான தமிழகத்திலும் சங்பரிவாரின் சதிகள் அரங்கேறுவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு உடனடியாக வரலாற்றுத் திரிபை சரிசெய்ய ஆவணச் செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

சங்பரிவாருக்கு ஆதரவாக தமிழக அரசு எடுத்த இந்த நடவடிக்கையை தெஹல்கா ஆங்கில வார இதழில் அதன் சென்னை செய்தியாளர் வினோஜ்குமார் அம்பலப்படுத்தியுள்ளார். மற்ற தமிழ் இதழ்கள் இந்தச் செய்தியை கண்டு கொள்ளவேயில்லை.