Friday, December 01, 2006

2.கொலை வழக்கு: சித்து குற்றவாளி

01 டிசம்பர் 2006

கொலை வழக்கு ஒன்றில் விடுதலை செய்யப்பட்டிருந்த பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து குற்றவாளி என்று பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கொலை வழக்கு ஒன்றில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 304 மற்றும் 34 வது பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்த சித்துவை பாட்டியாலா மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் 1999ம் ஆண்டு விடுதலை செய்திருந்தது.

குர்னாம்சிங் என்பவர் கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சித்து குற்றவாளி என்று கூறி வழக்கு தொடரப்பட்டது.

பாட்டியாலாவில் வங்கி ஒன்றின் முன்பு 1988ம் ஆண்டு, வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், குர்னாம் சிங்கை சித்துவும், அவருடன் இருந்தவர்களும் அடித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விடுதலையான சித்துவின் வழக்கு மேல்முறையீட்டில் அவர் குற்றவாளி என்றும், அவருக்கான தண்டனை வரும் புதன் கிழமை அறிவிக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றிங்க

நீதித்துறை கனவான்களே ஒரு வழக்கை ஒரு தடவைக்கு நாலு தடவை விசாரியுங்கள். ஏன் நாப்பது தடவையும் விசாரியுங்கள். ஒரு வருஷத்துக்கு பல வருஷம் விசாரணை செய்யுங்கள். ஆனா தீர்ப்பு மட்டும் ஒரு தீர்ப்பா இருக்கட்டும். (இத எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? எல்லாம் தமிழ் மக்களிடம் கேட்டதுங்க.)

No comments: