Thursday, September 20, 2007

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்.

டிவி பார்க்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்

வியாழக்கிழமை, செப்டம்பர் 20, 2007

சென்னை:

வீட்டிற்கு டிவி பார்க்க வந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரனை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்துள்ள பெருங்குடியைச் சேர்ந்தவர் வாணி (13)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் முருகேசன் (30). முருகேசன் வீட்டிற்கு வாணி அடிக்கடி டிவி பார்க்க செல்வாராம்.

டிவி பார்க்க வந்த வாணியின் மீது முருகேசனின் வக்கிர பார்வை விழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி முருகேசன் வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற வாணியை பலாத்காரம் செய்துள்ளார் முருகேசன். இதைப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியும் உள்ளார்.

இதனால் பயந்து போன வாணிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனது. பெற்றோர் வாணியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வாணியின் பெற்றோர் வாணியிடம் விசாரித்தபோது அழுது கொண்டே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதையடுத்து வாணியின் பெற்றோர் முருகேசன் மீது போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நன்றிங்க

அட சண்டாளப் பாவி!

No comments: