Monday, August 27, 2007

குரங்கு வடிவத்தில் அருள் பாலித்த அனுமன்

குரங்கு வடிவத்தில் அருள் பாலித்த அனுமன்: சிறையில் நடிகர் சஞ்சய் தத்தின் கடவுள்

பக்தி புனே: புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் சஞ்சய் தத், துõங்கப் போகும் முன் "அனுமன் புராணம்' படித்து விட்டுத்தான் துõங்குவார். 101வது முறையாக, "அனுமன் சலிசா' படித்துவிட்டு தூங்கி எழுந்த மறுநாள், சஞ்சய் தத் பார்த்தது, சிறை அறையின் முன் இருந்த ஒரு மரத்தில் இருந்த குரங்கை.

அன்று தான், சுப்ரீம் கோர்ட் அவரை இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்ட செய்தியும் கிடைத்தது. சஞ்சய் தத், புனே எரவாடா சிறையில் அண்டா செல்லில் தான் அடைக்கப் பட்டார். பின்னர், அதற்கு எதிரில் உள்ள சிறை அறையில் அடைக்கப்பட்டார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சக கைதிகளுடன் உரையாட சஞ்சய் தத் விரும்பினாலும், அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். அண்டா செல் சிறையறையில் அடைக்கப்பட்டுள்ள யாகூப் மேமனுடன் மட்டும் தான் சஞ்சய் தத்தால் உரையாட முடிந்தது. பாதுகாப்பு தேவைப்படும் கைதி என்பதால், நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறைக்குள் சுதந்திரமாக நடமாட அதிகாரிகள் தடை விதித்து இருந்தனர். சஞ்சய் தத்தும், அவரது நண்பர் யூசுப் நுல்வாலாவும் சிறை வராந்தாவில் மட்டும் சற்று நேரம் உலாவ அனுமதிக்கப்பட்டனர். சஞ்சய் தத் ஒரு செயின் சுமோக்கர். அவரது உதடுகளில் எப்போதுமே, "மல் பரோ' சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும்.

ஆனால், சிறையில் இருக்கும் போது அவர் புகைத்தது, இந்தியாவில் தயாரான, "கோல்டு பிளேக்' சிகரெட் தான். அதுவும் குறிப்பிட்ட இடைவெளியில், கட்டுப்பாடுகளுடன் தான் அளிக்கப்பட்டது. சிறைக்கு சென்றதும், பானு என்ற முடி திருத்துனர், சஞ்சய் தத்துக்கு முடி வெட்டினார். ஆனால், அதில் சஞ்சய் தத்துக்கு விருப்பம் இல்லை. சிறையில் இருக்கும் போதே முடி அதிகமாக வளர்ந்த போது, நாளிதழில் வெளியான கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் படம் சஞ்சய் தத்துக்கு பிடித்து போனது. அவரைப் போல தனது முடியை திருத்திக் கொள்ள விருப்பப் பட்டார்.

இதை நண் பர் யூசுப்பிடம் கூறிய போது, "வேண்டாம்; இப்படியே இருக்கட்டும்' என்று கூறினார். ஆனாலும், முடி அதிமாக வளர்ந்து விட்டதால், முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கூறினார் சஞ்சய் தத். இதற்கு முன் வந்த முடி திருத்துனர் பானு வேண்டாம் என்றும், புதிய நபரை வரவழைக்கவும் கேட்டுக் கொண்டார். சிவா என்ற முடி திருத்துனர் வந்தார். சஞ்சய் தத்தின் விருப்பப்படி டேவிட் பெக்காம் ஸ்டைலில் அவரது முடியை திருத்தி அமைத்தார். நடிகர் சஞ்சய் தத், அனுமான் பக்தர். தூங்கப் போவதற்கு முன், "அனுமான் புராணம்' படிப்பது வழக்கம். சிறைக்கு சென்றதில் இருந்து 101வது முறையாக, "அனுமன் புராணம்' படித்து விட்டு தூங்கினார் சஞ்சய் தத்.

மறுநாள் காலை அவர் கண் விழித்ததும், அருகில் உள்ள ஒரு மரத்தில் குரங்கை பார்த்தார். இதை தன் நண்பர் யூசுப்பிடமும் கூறினார். அன்றே அந்த செய்தியும் அவருக்கு கிடைத்தது. சஞ்சய் தத், அவரது நண்பர் யூசுப் உட்பட ஐந்து பேரை இடைக்கால ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தான் அது. நல்ல செய்தி வரும் என்று அதிகாலையிலேயே குரங்கு வடிவில் அனுமன் வந்து காட்சி அளித்ததாக யூசுப்பிடம் கூறி மகிழ்ந்தார் சஞ்சய் தத்.பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் தத்துக்கு, சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் அதே சாப்பாடு தான் வழங்கப்பட்டது.

அரிசி சோறுடன், ஒரு நாளுக்கு 13 சப்பாத்திகள் மட்டுமே வழங்கப்பட்டன. காலையில் மூன்று சப்பாத்திகளும், மதியம் மற்றும் இரவில் தலா ஐந்து சப்பாத்திகளும், "டால்' மற்றும் "முலலி கி பாஜி'யுடன் வழங்கப்பட்டது. பாலிவுட்டில் கோடிக் கணக்கில் சம்பளம் பெறும் நடிகர் சஞ்சய் தத்துக்கு, 23 நாட்களும் சிறையில் மூங்கில் பிணைந்ததற்காக கிடைத்த சம்பளம் ரூ.25.70 மட்டுமே. அந்த சம்பளப் பணத்தையும் பவ்வியமாக வாங்கிக் கொண்டு தான் சிறையில் இருந்து வெளியில் வந்தார் சஞ்சய் தத்.

நன்றிங்க, dinamalar 27/08/07

23 நாட்கள் பாலிவுட்டில் பணியாற்றியிருந்தால் கணிசமாக சில லகரங்களை பெற்றிருப்பார், ஆனால் ஜெயிலில் உழைத்து பெற்ற 25.70 ரூபாயை வாழ்நாளில் அவரால் மறக்கவே முடியாது.

1 comment:

மாசிலா said...

அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய செய்தி.
முஸ்லிம் எனது இந்த பதிவையும் கொஞ்சம் போய் படியுங்கள். இந்தியாவில் எத்தனை வித கைதிகள் உண்டென்று தெரியும்.