Sunday, August 19, 2007

ஓ.பி. தலைமையில் சிறப்புப் பூஜை!

மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்க
ஓ.பி. தலைமையில் சிறப்புப் பூஜை!


ஆகஸ்ட் 19, 2007

நெல்லை: திமுக ஆட்சி அகன்று, மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டி தட்சிணாமூர்த்தி கோவிலில் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.

தென்னகத்தின் திரிகூடமலை அடிவாரமான திருநெல்வேலி மாவட்டம் புளியரையில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் புகழ்பெற்ற குருஸ்தலமாகும்.

கடந்த 8-ந் தேதி சனி பெயர்ச்சி முடிந்துள்ளது. நவம்பர் மாதம் குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக தேரத்ல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக பிரமுகர்கள் இன்று அதிகாலை இக்கோவிலுக்கு வந்தனர்.

இக்குழுவில் கே.ஏ.செங்கோட்டையன், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவினர் கோவிலில் சிறப்புப் பூஜை நடத்தினர்.

இந்த திடீர் சிறப்பு பூஜை குறித்து அதிமுக தரப்பில் கேட்டபோது, குரு பெயர்ச்சியால் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அகன்று, அ.தி.மு.க ஆட்சி மலர வேண்டும். அதை வேண்டித்தான் இந்த சிறப்பு பூஜை என்றனர்.

நன்றிங்க, THATSTAMIL 19/08/07

பூஜை செய்து விட்டால், ராவோடு ராவாக தி.மு.க ஆட்சி அகன்று அ.தி.மு.க ஆட்சி வந்துருமா என்ன பன்னீர் சார்?

No comments: