Thursday, August 30, 2007

மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய ஆசிரியை!

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விபச்சாரத்தில் தள்ளிய ஆசிரியை!

ஆகஸ்ட் 30, 2007

டெல்லி: டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகளை விபச்சாரத்துக்கு தூண்டியதுடன், ஆபாச படம் எடுத்த வக்கிர ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மத்திய டெல்லியில் உள்ளது சர்வோதயா கன்யா வித்யாலயா. இப்பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியை அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு டியூசன் சொல்லித் தருவதாக வீட்டுக்கு அழைத்து, போதை மருந்து கொடுத்து அவர்களை மயக்கப்படுத்தி, நிர்வாணமாக்கி ஆண்களுடன் பலான போஸ்களில் இருக்க வைத்து வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அதைக் காட்டி மாணவிகளை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளியுள்ளார். அதையும் படம் எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

இந்த ஆசிரியையின் செயல்பாடுகளை ரகசியமாக வீடியோ படம் எடுத்த தனியார் சேனல் அதை ஒளிபரப்பியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆசிப் அலி ரோட்டில் இருக்கும் அப்பள்ளி முன்பாக போராட்டத்தில் குதித்ததுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கிருந்த ஒரு வாகனத்தை எரித்தனர்.

நிலைமை மோசமடைவதை பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டீச்சரை கைது செய்தனர். பள்ளியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நன்றிங்க

அடி சண்டாளி!

No comments: