Monday, August 13, 2007

தேர்தலுக்கு ரெடியா...?

ஆட்சியில் தொடர்வதா, இல்லையா?-காங். முடிவு
செய்யட்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ


ஆகஸ்ட் 13, 2007

திருவனந்தபுரம்: அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆட்சியில் தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எங்கள் கட்சியின் நிலையை ஏற்கனவே தெரிவித்து விட்டோம். இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஆனால் மத்திய அரசு அதையும் மீறி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கும்.

மத்திய அரசுக்கு ஆதரவு தரவேண்டும் என்பது எங்கள் கடமை கிடையாது. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ், மைனாரிட்டி அரசு என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

இந்த அரசு தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை காங்கிரஸ் தான் தீர்மானிக்க வேண்டும்.

அணு ஒப்பந்தம் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் மார்க்சிஸ்ட் கட்சி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் என்றார் காரத்.

நன்றிங்க

தேர்தலுக்கு நீங்கள் ரெடியா...?

No comments: