Tuesday, August 21, 2007

வகுப்பறையில் செக்ஸ் டார்ச்சர் அதிகரிப்பு.

வகுப்பறையில் செக்ஸ் டார்ச்சர் அதிகரிப்பு பள்ளியை விட்டு வெளியேறிய மாணவியால் பரபரப்பு

ஈரோடு: "பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அடிக்கக் கூடாது' என்று முதல்வர் அறிவித்த உத்தரவை, பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் வாசித்த, மாணவியை செக்ஸ் டார்ச்சர் செய்ததாக, ஆசிரியர்கள் மீது கடும் புகார் கூறப்பட்டுள்ளது. ஈரோடு, மொடக்குறிச்சி அடுத்த கல்யாணிபுரம் பி.கே.பி., மெட்ரிக்., பள்ளி கணக்கு ஆசிரியர் இளையராஜா. பாடம் நடத்தும் போது மாணவிகளிடம் சில்மிஷம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மாணவிகளின் புகாரை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. தொல்லை தாங்க முடியாமல் இந்தப் பள்ளி பிளஸ் 2 மாணவி ரேவதி, கடந்த 16ம் தேதி பள்ளி விடுதியில் இருந்து தப்பி காட்டுக்குள் ஓடி மூன்று நாட்களுக்குப்பின் உறவினருடன் ஈரோடு வந்தார். போலீசார் மாணவியை மீட்டு, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கொடுமுடி மாஜிஸ்திரேட் முன் மாணவியை ஆஜர்படுத்த ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாணவிக்கும் பாதுகாப்பு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ரேவதி கூறியதாவது: நான் சிறந்த சாரணருக்கான விருதை கவர்னரிடம் பெற்றுள்ளேன். பல்வேறு கலைகளில் 117 விருதுகள் எனக்கு கிடைத்துள்ளன. சிறப்பாக படிப்பேன். பள்ளியில் கணக்கு ஆசிரியர் இளையராஜா. அனைத்து மாணவிகளுக்கும் செக்ஸ் தொல்லை கொடுத்தார். மாணவிகள் அருகே உரசிக் கொண்டு நிற்பார். தள்ளி அமர்ந்தால், "ஏன் தள்ளி தள்ளி போற?' எனக் கன்னத்தைக் கிள்ளி இழுப்பார். "பின்னால் தட்டுவது, இடுப்பை கிள்ளுவது,' என தொல்லை கொடுப்பார். இவரது தொல்லையால் பல மாணவிகள் வெளியேறியுள்ளனர். நிர்வாகத்திடம் புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தினமும் பத்திரிகையில் வெளியாகும் ஓரு செய்தியை வழிபாட்டுக் கூட்டத்தின் போது வாசிக்க வேண்டும். "மாணவர்களை அடித்து துன்புறுத்தக் கூடாது என்று முதல்வர் அறிவித்த உத்தரவு செய்தியை நான் வாசித்தேன். இந்த செய்தியை ஏன் வாசித்தாய் என்று மிரட்டினர். அன்றிலிருந்து தொல்லை அதிகமானது. எனது அப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். எனது அப்பா 16 ம் தேதி ஏ.ஓ., லட்சுமணனிடம் கடிதத்தை காட்டி பேசினார். அதன் பிறகு லட்சுமணன், இளையராஜா இருவரும் என்னை மிகவும் கேவலமாக பேசி அடித்தனர். இதனால் தான் பள்ளியை விட்டு வெளியேறினேன். இவ்வாறு ரேவதி கூறினார்.

நன்றிங்க, DINAMALAR 21/08/07

வேலியே பயிர்களை மேயப் பார்க்கிறதா...?

No comments: