Thursday, August 30, 2007

திருட முயன்றவர் மீது தாக்குதல்!

இந்தியா

10.திருட முயன்றவர் மீது தாக்குதல் சிறுபான்மை கமிஷன் நோட்டீஸ்

புதுடில்லி :பீகார் மாநிலம் பகல்பூரில், திருட முயற்சித்த முஸ்லிம் இளைஞர் மீது பொதுமக்களுடன் சேர்ந்து போலீசாரும் நடத்திய மிருகவெறி தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் படி தேசிய சிறுபான்மையினர் கமிஷன் பீகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பகல்பூரில் நேற்று முன்தினம் முஸ்லிம் இனத்தை சேர்ந்த முகமது அவுரங்கசீப் என்ற இளைஞர், பெண்ணிடம் நகை பறிக்க முயன்றதாக, பொதுமக்களால் வெறித்தனமாக தாக்கப்பட்டார். அங்கு வந்த போலீசாரும் அவரை கடுமையாக தாக்கியதுடன், மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்றனர். இச்செயலில் ஈடுபட்ட துணை சப்இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க, பீகார் மாநில அரசு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஆலோசிக்க தேசிய சிறுபான்மையினர் கமிஷன் கூட் டம், ஹர்சரண் சிங் தலைமையில் நடந்தது. இதில் கமிஷனின் உறுப்பினர்கள் ஹசன் மற்றும் பங்லீ ஆகியோரும் கலந்து கொண் டனர். பின்னர் ஹர்சரண் சிங் கூறியதாவது:பகல்பூர் சம்பவத்தில் அவுரங்கசீப், பொதுமக்களுடன், போலீசாரும் சேர்ந்து கொண்டு, ஒரு மிருகத்தை போலவும் கொத்தடிமையைப் போலவும் நடத்தப் பட்டுள்ளார். போலீசாரின் நடவடிக்கை மிருகத்தனமாக உள்ளது. இது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்கும் படி பீகார் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.இவ்வாறு ஹர்சரண் சிங் கூறினார்.

நன்றிங்க dinamalar 30/08/07

"முஹம்மத் அவுரங்கசீப்" என்னும் பெயருடைய இந்த நபரை கேவலமாக அடித்துத் துவம்சம் செய்த கொடூரக் காட்சிகளும், போலீஸ் தனது பைக்கில் கட்டி இழுத்துச்சென்ற வீடியோவை மீடியாக்களில் மனதை உறைய வைக்கும் காட்சிகள்.

மேலும் செய்திகள்.
--------------------------------------

இசுலாமியன்

"பாக்கி சட்டைகள்"
பதம் பார்த்து பஞ்சாக்க,
காக்கிச்சட்டையும்
களம் இறங்கியது
இரக்கமும் ஏங்கிட,

பகல் பொழுதில்,
பகல்பூரில்
விரட்டி விரட்டி,
புரட்டி புரட்டி,
போவோர், வருவோர்,
கடை வீதியில்.

வாகனத்தில் அமர்ந்து,
உருட்டியது தெருவெங்கும்,
"காவல் நாய்",
ஆவலுடன்,
"சனாதன சரக்குடன்",
"மிடுக்குடன்",

உடல் தேய்ந்து,
உருக்குலைந்து,
உயிருக்கு போராடும்,
"திருடன்"
-இந்தியன் அல்ல?

நன்றிங்க

No comments: