Wednesday, August 15, 2007

கட்சி மாறினார்கள்.

04. அ.தி.மு.க.,வில் 2,400 பேர் இணைந்தனர்

சென்னை : தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து, பெண்கள் உட்பட இரண்டாயிரத்து 400 பேர், ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தனர்.

மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகியவர்கள் அ.தி.மு.க.,வில் இணையும் விழா, நேற்று மாலை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, மாலை 4.40 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

அவரை, ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வரவேற்றனர்.திண்டுக்கல், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நான்கு பேர், நகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆறு பேர், ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றும் 88 பேரும், அக்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் என மொத்தம் 488 பெண்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்து 375 பேர், சம்பந்தப்பட்ட கட்சிகளில் இருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

25 மாவட்டங்களுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, மகளிர் அணி செயலர் வளர்மதி உடனிருந்தார்.முன்னதாக கட்சியில் சேர வந்தவர்கள் அனைவரும் தனித்தனி குழுவாக பிரித்து உள்ளே அனுப்பப்பட்டனர். அனைவரும், ஜெயலலிதாவுடன், "குரூப் போட்டோ' எடுத்ததால், ஒன்றரை மணி நேரம் வரை நிகழ்ச்சி நடந்தது. மாலை 6.00 மணிக்கு ஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நன்றிங்க

? அப்ப இந்தவாட்டி ஆட்சியை பிடிச்சிருவாங்கன்னா சொல்றீங்க...?

! என்னமோ நான் என்னத்தைக் கண்டேன்!

No comments: