Friday, August 31, 2007

அவுரங்கசீப்பை கட்டியிழுத்த காவலர்கள் டிஸ்மிஸ்!

அவுரங்கசீப்பை கட்டியிழுத்த காவலர்கள் டிஸ்மிஸ்!

ஆகஸ்ட் 31, 2007

பாகல்பூர்: பீகார் மாநிலம், பாகல்பூரில் செயினை பறிக்க முயன்ற திருடன் அவரங்கசீப்பை மோட்டார் சைக்கிளில் கயிறு கட்டி இழுத்து சென்ற காவலர்கள் இருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

href="http://bp2.blogger.com/_mCzcNx857bg/RtfbDmCnAaI/AAAAAAAAAEs/lWfOpMbwCXc/s1600-h/bihar.jpg">

பீகார் மாநிலம், பாகல்பூரில் உள்ள நாத்நகரில் கோவிலுக்கு வந்த பெண் ஒருவரிடம், ஒரு வாலிபர் சங்கிலியை பறிக்க முயன்றார். அந்த பெண் சத்தம் போட்டதை பார்த்த மக்கள் சங்கிலி திருடனை விரட்டி பிடித்தனர்.

திருட முயன்ற அந்த வாலிபர் பெயர் அவுரங்கசீப். பொது மக்களிடம் சிக்கிய அவரை, தெருவில் வருவோர், போவோர் எல்லாம் அடித்து உதைத்தனர்.

அப்போது அங்கு வந்த இரு போலீசார் தங்கள் பங்குக்கு அவுரங்கசீப்பை போட்டு மிதித்ததில் அவர் மயங்கினார்.



எழுந்து நடக்ககூட முடியாத நிலையில் இருந்த அவரை, போலீசார் காலை கயிற்றால் கட்டி மோட்டார் சைக்கிளில் தரதரவென இழுத்துச் சென்றனர்.

இந்த கொடூர தாக்குதல் நாடெங்கும் பயங்கர அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பீகார் மாநில அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் வந்ததால், அம்மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி, மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்த போலீஸ்காரர்கள் ராமச்சந்திர ராய் மற்றும் சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்களிடம் கடந்த 3 தினங்களாக நடந்த விசாரணையில் அவர்கள் செய்த தவறு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் பீகார் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட செய்யப்பட்ட இரு போலீஸ்காரர்களையும் டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டனர்.

காட்டுமிராண்டி தனமாக தாக்கப்பட்ட அவுரங்கசீப் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. தாக்குதலில் அவருடைய இடுப்பு எலும்புகள் முற்றிலும் நொறுங்கி விட்டதால் இனிமேல் அவரால் எழுந்து நடப்பது கடினம் தான் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றிங்க

//காட்டுமிராண்டி தனமாக தாக்கப்பட்ட அவுரங்கசீப் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. தாக்குதலில் அவருடைய இடுப்பு எலும்புகள் முற்றிலும் நொறுங்கி விட்டதால் இனிமேல் அவரால் எழுந்து நடப்பது கடினம் தான் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.//

இதற்கு அவனை கொன்றே போட்டிருக்கலாம்!

Labels:

Thursday, August 30, 2007

திருட முயன்றவர் மீது தாக்குதல்!

இந்தியா

10.திருட முயன்றவர் மீது தாக்குதல் சிறுபான்மை கமிஷன் நோட்டீஸ்

புதுடில்லி :பீகார் மாநிலம் பகல்பூரில், திருட முயற்சித்த முஸ்லிம் இளைஞர் மீது பொதுமக்களுடன் சேர்ந்து போலீசாரும் நடத்திய மிருகவெறி தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் படி தேசிய சிறுபான்மையினர் கமிஷன் பீகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பகல்பூரில் நேற்று முன்தினம் முஸ்லிம் இனத்தை சேர்ந்த முகமது அவுரங்கசீப் என்ற இளைஞர், பெண்ணிடம் நகை பறிக்க முயன்றதாக, பொதுமக்களால் வெறித்தனமாக தாக்கப்பட்டார். அங்கு வந்த போலீசாரும் அவரை கடுமையாக தாக்கியதுடன், மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்றனர். இச்செயலில் ஈடுபட்ட துணை சப்இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க, பீகார் மாநில அரசு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஆலோசிக்க தேசிய சிறுபான்மையினர் கமிஷன் கூட் டம், ஹர்சரண் சிங் தலைமையில் நடந்தது. இதில் கமிஷனின் உறுப்பினர்கள் ஹசன் மற்றும் பங்லீ ஆகியோரும் கலந்து கொண் டனர். பின்னர் ஹர்சரண் சிங் கூறியதாவது:பகல்பூர் சம்பவத்தில் அவுரங்கசீப், பொதுமக்களுடன், போலீசாரும் சேர்ந்து கொண்டு, ஒரு மிருகத்தை போலவும் கொத்தடிமையைப் போலவும் நடத்தப் பட்டுள்ளார். போலீசாரின் நடவடிக்கை மிருகத்தனமாக உள்ளது. இது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்கும் படி பீகார் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.இவ்வாறு ஹர்சரண் சிங் கூறினார்.

நன்றிங்க dinamalar 30/08/07

"முஹம்மத் அவுரங்கசீப்" என்னும் பெயருடைய இந்த நபரை கேவலமாக அடித்துத் துவம்சம் செய்த கொடூரக் காட்சிகளும், போலீஸ் தனது பைக்கில் கட்டி இழுத்துச்சென்ற வீடியோவை மீடியாக்களில் மனதை உறைய வைக்கும் காட்சிகள்.

மேலும் செய்திகள்.
--------------------------------------

இசுலாமியன்

"பாக்கி சட்டைகள்"
பதம் பார்த்து பஞ்சாக்க,
காக்கிச்சட்டையும்
களம் இறங்கியது
இரக்கமும் ஏங்கிட,

பகல் பொழுதில்,
பகல்பூரில்
விரட்டி விரட்டி,
புரட்டி புரட்டி,
போவோர், வருவோர்,
கடை வீதியில்.

வாகனத்தில் அமர்ந்து,
உருட்டியது தெருவெங்கும்,
"காவல் நாய்",
ஆவலுடன்,
"சனாதன சரக்குடன்",
"மிடுக்குடன்",

உடல் தேய்ந்து,
உருக்குலைந்து,
உயிருக்கு போராடும்,
"திருடன்"
-இந்தியன் அல்ல?

நன்றிங்க

Labels:

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

பெண்ணின் சம்மதத்தோடு செக்ஸ் உறவு
வைப்பது கற்பழிப்பு ஆகாது: சுப்ரீம் கோர்ட்


ஆகஸ்ட் 30, 2007

டெல்லி: திருமணம் செய்து கொள்வதாக கூறிய பின்னர் அந்தப் பெண்ணின் சம்மதத்தோடு உடலுறவு வைத்துக் கொண்டு பின்னர் அந்தப் பெண்ணை ஏமாற்றுவோர் மீது கற்பழிப்பு வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப்குமார். இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, அவருடன் நெருங்கிப் பழகி செக்ஸ் உறவும் வைத்துக் கொண்டு விட்டு பின்னர் கம்பி நீட்டி விட்டார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பிரதீப் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் பிரதீப்குமார் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பிரதீப் சார்பில் பீகார் மாநில உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இங்கும் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் பிரதீப்.

பிரதீப்குமார் தாக்கல் செய்த மனுவில், முழு சம்மதத்துடன் தான் அந்த பெண் என்னோடு செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார். இதில் நம்பிக்கை மோசடிக்கோ அல்லது கற்பழிப்புக்கோ இடமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கே.ஜெயின், அரிஜித் பசாயத் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில்,

ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஒரு ஆண் உறுதி அளித்து அந்த பெண்ணின் முழு சம்மதத்துடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட பின்பு, அவர் திருமணம் செய்து கொள்ளாமல் கொடுத்த வாக்குறுதியை மீறினாலும் அவர் மீது கற்பழிப்பு குற்றம் சுமத்த முடியாது.

அதே நேரத்தில் பலவந்தப்படுத்தியோ அல்லது பயமுறுத்தியோ அந்த பெண்ணின் சம்மதத்தை பெற்றிருந்தால் அதை கற்பழிப்பாக கருத முடியும்.

மேஜர் ஆன பெண் ஒருவர், திருமண வாக்குறுதியை நம்பி, கர்ப்பமாகும்வரை செக்ஸ் உறவுக்கு சம்மதம் கொடுத்திருந்தால் அதை அஜாக்கிரதையாக கருத வேண்டுமே தவிர, அந்த பெண் உண்மையை தவறாக புரிந்து கொண்டதாக கருத முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

பிரதீப்குமார் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றிங்க

முதலில், நீதிமன்றங்களின் இந்த இரட்டை தீர்ப்பு ஒழிய வேண்டும்!

Labels: ,

மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய ஆசிரியை!

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விபச்சாரத்தில் தள்ளிய ஆசிரியை!

ஆகஸ்ட் 30, 2007

டெல்லி: டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகளை விபச்சாரத்துக்கு தூண்டியதுடன், ஆபாச படம் எடுத்த வக்கிர ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மத்திய டெல்லியில் உள்ளது சர்வோதயா கன்யா வித்யாலயா. இப்பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியை அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு டியூசன் சொல்லித் தருவதாக வீட்டுக்கு அழைத்து, போதை மருந்து கொடுத்து அவர்களை மயக்கப்படுத்தி, நிர்வாணமாக்கி ஆண்களுடன் பலான போஸ்களில் இருக்க வைத்து வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அதைக் காட்டி மாணவிகளை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளியுள்ளார். அதையும் படம் எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

இந்த ஆசிரியையின் செயல்பாடுகளை ரகசியமாக வீடியோ படம் எடுத்த தனியார் சேனல் அதை ஒளிபரப்பியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆசிப் அலி ரோட்டில் இருக்கும் அப்பள்ளி முன்பாக போராட்டத்தில் குதித்ததுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கிருந்த ஒரு வாகனத்தை எரித்தனர்.

நிலைமை மோசமடைவதை பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டீச்சரை கைது செய்தனர். பள்ளியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நன்றிங்க

அடி சண்டாளி!

Labels: ,

Monday, August 27, 2007

குரங்கு வடிவத்தில் அருள் பாலித்த அனுமன்

குரங்கு வடிவத்தில் அருள் பாலித்த அனுமன்: சிறையில் நடிகர் சஞ்சய் தத்தின் கடவுள்

பக்தி புனே: புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் சஞ்சய் தத், துõங்கப் போகும் முன் "அனுமன் புராணம்' படித்து விட்டுத்தான் துõங்குவார். 101வது முறையாக, "அனுமன் சலிசா' படித்துவிட்டு தூங்கி எழுந்த மறுநாள், சஞ்சய் தத் பார்த்தது, சிறை அறையின் முன் இருந்த ஒரு மரத்தில் இருந்த குரங்கை.

அன்று தான், சுப்ரீம் கோர்ட் அவரை இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்ட செய்தியும் கிடைத்தது. சஞ்சய் தத், புனே எரவாடா சிறையில் அண்டா செல்லில் தான் அடைக்கப் பட்டார். பின்னர், அதற்கு எதிரில் உள்ள சிறை அறையில் அடைக்கப்பட்டார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சக கைதிகளுடன் உரையாட சஞ்சய் தத் விரும்பினாலும், அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். அண்டா செல் சிறையறையில் அடைக்கப்பட்டுள்ள யாகூப் மேமனுடன் மட்டும் தான் சஞ்சய் தத்தால் உரையாட முடிந்தது. பாதுகாப்பு தேவைப்படும் கைதி என்பதால், நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறைக்குள் சுதந்திரமாக நடமாட அதிகாரிகள் தடை விதித்து இருந்தனர். சஞ்சய் தத்தும், அவரது நண்பர் யூசுப் நுல்வாலாவும் சிறை வராந்தாவில் மட்டும் சற்று நேரம் உலாவ அனுமதிக்கப்பட்டனர். சஞ்சய் தத் ஒரு செயின் சுமோக்கர். அவரது உதடுகளில் எப்போதுமே, "மல் பரோ' சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும்.

ஆனால், சிறையில் இருக்கும் போது அவர் புகைத்தது, இந்தியாவில் தயாரான, "கோல்டு பிளேக்' சிகரெட் தான். அதுவும் குறிப்பிட்ட இடைவெளியில், கட்டுப்பாடுகளுடன் தான் அளிக்கப்பட்டது. சிறைக்கு சென்றதும், பானு என்ற முடி திருத்துனர், சஞ்சய் தத்துக்கு முடி வெட்டினார். ஆனால், அதில் சஞ்சய் தத்துக்கு விருப்பம் இல்லை. சிறையில் இருக்கும் போதே முடி அதிகமாக வளர்ந்த போது, நாளிதழில் வெளியான கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் படம் சஞ்சய் தத்துக்கு பிடித்து போனது. அவரைப் போல தனது முடியை திருத்திக் கொள்ள விருப்பப் பட்டார்.

இதை நண் பர் யூசுப்பிடம் கூறிய போது, "வேண்டாம்; இப்படியே இருக்கட்டும்' என்று கூறினார். ஆனாலும், முடி அதிமாக வளர்ந்து விட்டதால், முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கூறினார் சஞ்சய் தத். இதற்கு முன் வந்த முடி திருத்துனர் பானு வேண்டாம் என்றும், புதிய நபரை வரவழைக்கவும் கேட்டுக் கொண்டார். சிவா என்ற முடி திருத்துனர் வந்தார். சஞ்சய் தத்தின் விருப்பப்படி டேவிட் பெக்காம் ஸ்டைலில் அவரது முடியை திருத்தி அமைத்தார். நடிகர் சஞ்சய் தத், அனுமான் பக்தர். தூங்கப் போவதற்கு முன், "அனுமான் புராணம்' படிப்பது வழக்கம். சிறைக்கு சென்றதில் இருந்து 101வது முறையாக, "அனுமன் புராணம்' படித்து விட்டு தூங்கினார் சஞ்சய் தத்.

மறுநாள் காலை அவர் கண் விழித்ததும், அருகில் உள்ள ஒரு மரத்தில் குரங்கை பார்த்தார். இதை தன் நண்பர் யூசுப்பிடமும் கூறினார். அன்றே அந்த செய்தியும் அவருக்கு கிடைத்தது. சஞ்சய் தத், அவரது நண்பர் யூசுப் உட்பட ஐந்து பேரை இடைக்கால ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தான் அது. நல்ல செய்தி வரும் என்று அதிகாலையிலேயே குரங்கு வடிவில் அனுமன் வந்து காட்சி அளித்ததாக யூசுப்பிடம் கூறி மகிழ்ந்தார் சஞ்சய் தத்.பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் தத்துக்கு, சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் அதே சாப்பாடு தான் வழங்கப்பட்டது.

அரிசி சோறுடன், ஒரு நாளுக்கு 13 சப்பாத்திகள் மட்டுமே வழங்கப்பட்டன. காலையில் மூன்று சப்பாத்திகளும், மதியம் மற்றும் இரவில் தலா ஐந்து சப்பாத்திகளும், "டால்' மற்றும் "முலலி கி பாஜி'யுடன் வழங்கப்பட்டது. பாலிவுட்டில் கோடிக் கணக்கில் சம்பளம் பெறும் நடிகர் சஞ்சய் தத்துக்கு, 23 நாட்களும் சிறையில் மூங்கில் பிணைந்ததற்காக கிடைத்த சம்பளம் ரூ.25.70 மட்டுமே. அந்த சம்பளப் பணத்தையும் பவ்வியமாக வாங்கிக் கொண்டு தான் சிறையில் இருந்து வெளியில் வந்தார் சஞ்சய் தத்.

நன்றிங்க, dinamalar 27/08/07

23 நாட்கள் பாலிவுட்டில் பணியாற்றியிருந்தால் கணிசமாக சில லகரங்களை பெற்றிருப்பார், ஆனால் ஜெயிலில் உழைத்து பெற்ற 25.70 ரூபாயை வாழ்நாளில் அவரால் மறக்கவே முடியாது.

Labels: ,

ஐதராபாத்தில் பலி வாங்கிய ரசாயன குண்டு.

இந்தியா

ஐ.எஸ்.ஐ., தலிபான், அல்குவைதா உதவியுடன் செயல்படும் "ஹூஜி'* ஐதராபாத் பயங்கரவாத அமைப்பின் பின்னணி!

ஹர்கத் உல் ஜிகாத் இஸ்லாமி (ஹூஜி) எனும் பயங்கரவாத அமைப்புதான், ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானுடன் ரஷ்யா போர் புரிந்த நேரத்தில், ரஷ்யாவை எதிர்த்த பயங்கரவாத முஜாகிதீன்களின் முகாம் புனரமைப்புப் பணிகளுக்காக 1980ம் ஆண்டில் துவக்கப்பட்டதுதான் ஹூஜி.ஜமாத் உல் உலமா இ இஸ்லாமி (ஜுல்) மற்றும் தப்லிக் இ ஜமாத் (திஜ்) ஆகிய இரு பாகிஸ்தான் அமைப்புகள்தான், "ஹூஜி'யை நிறுவிய மத அமைப்புகள். அப்போது, மவ்லவி இர்ஷாத் அகமது என்பவர், "ஹூஜி'யின் தலைமைப் பொறுப்புகளை கவனித்து வந்தார். அடிப்படையிலேயே, "ஹூஜி'க்கு பாகிஸ்தான் தொடர்பு இருந்த போதிலும், ஆப்கனில் ரஷ்ய படைகளுக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஹூஜிக்கு தாராளமாக உதவ முன்வந்தது. ஹூஜி அமைப்புக்குத் தேவைப்படும், பயங்கரவாதிகளை தேர்வு செய்யவும், அவர்களுக்கு பயிற்சி அளித்து ஆப்கனுக்கு அனுப்பும் வேலையையும் மனம் உவந்து ஐ.எஸ்.ஐ., செய்தது. இது இப்போதும் தொடர்கிறது.

ஹிஸ்ப் இ இஸ்லாமி யூனஸ் காலிஸ் (ஹெல்கே) ஆப்கன் பயங்கரவாத அமைப்புடன், "ஹூஜி' தொடர்பு வைத்திருந்தது. 1985ம் ஆண்டில் மவ்லவி இர்ஷாத் மறைவுக்குப் பின்னர், "ஹூஜி' மூன்றாக பிரிந்தது. புதிய அமீர் (தலைவர்) காசி சைபுல்லா அக்தர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஹர்கத் உல் முஜாகிதீனை (காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு காரணமான அமைப்பு) தலைமை கமாண்டர் பஷல் உர் ரஹ்மான் காலில் துவக்கினார். மவ்லானா மசூத் காஷ்மீரி என்பவர் ஜமாத் உல் முஜாகிதீன் எனும் பிரிவுக்குத் தலைமையேற்றார்.

கடந்த 1991ம் ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்னை அதிகரித்த போது, இந்த மூன்று அமைப்பும் ஒன்றாக வேண்டும் என்று இஸ்லாமிய உலமாக்கள் கருதியதால், ஹர்கத் உல் அன்சார் எனும் புதிய அமைப்பு பாகிஸ்தானில் தோற்றுவிக்கப்பட்டது. வங்கதேசத்துக்கு ஒரு கிளை பயங்கரவாத அமைப்பு தேவைப்பட்ட போது, அதற்கு அல்குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் உதவினார். சவுகத் உஸ்மான் என்ற ஷேக் பாரித் என்பவர் வங்கதேச, "ஹூஜி' பிரிவுக்கு பொறுப்பேற்று பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு காரணமாக அமைந்தார். இன்றும், அங்கு இந்த அமைப்பு பயங்கரவாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ஹூஜி பிரிவுக்கு தலைமையேற்ற மவுலானா மசூத் அசார், போர்ச்சுக்கீசிய பாஸ்போர்ட் உடன், இந்தியா வந்து 1994 பிப்ரவரியில் காஷ்மீர் சென்று சேர்ந்தார். அங்கு, பிப்ரவரி 10ம் தேதி, பிளவுபட்ட மூன்று அமைப்புகளுக்கான ஒரு கூட்டத்தை கூட்டி, காஷ்மீர் பிரிவினையே தனது குறிக்கோளாக அறிவித்தார். இதற்காக அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களையும் தீர்மானித்தார். இந்திய பாதுகாப்புப் படையினர் இவரை கைது செய்த போதும், 1999ம் ஆண்டில் இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கனில் உள்ள காந்தகாருக்கு கடத்தி சென்று பயணிகளை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக்கினர். பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று தலிபான்கள் கோரிய பயங்கரவாதிகளில் மசூத் அசாரும் ஒருவர். அதன்படியே இந்தியாவும் விடுவித்தது. விடுதலை ஆன மசூத் உடனே, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை (2001 பார்லிமென்ட் தாக்குதலில் தொடர்புடைய அமைப்பு) துவக்கினார். ஹூஜி அமைப்புக்கு முகமது அப்துல் ஷாகித் என்ற பிலால் தலைமையேற்றார். இவர், கடந்த பிப்ரவரியில் டில்லி லாகூர் இடையேயான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர். காஷ்மீரில் மட்டும் தாக்குதல் நடத்துவதைவிட, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தும் தாக்குதல்கள் தான், தங்கள் மீது கவனம் பெறும் என்ற அடிப்படையில் இந்த பயங்கரவாத அமைப்பினர் தற்போது செயல்பட்டு வருகின்றனர். இதுவே, ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு காரணம். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச பயங்கரவாத தொடர்பு உள்ளது என்று கூறியிருப்பது சம்பவத்தில், "ஹூஜி' மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளின் பின்னணியை உறுதிப்படுத்துகிறது. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த அமைப்பு தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்திய அரசு பயங்கரவாத முறியடிப்புக்கு என தனித் துறையை உருவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதையே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் காட்டுகிறது.

-------------------------------------------------------------

ஐதராபாத்தில் 42 பேரை பலி வாங்கியது பயங்கர ரசாயன குண்டு.

ஐதராபாத்: "ஐதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் "நியோஜெல்90' என்ற ரசாயனத்தை அடிப்படையாக கொண்ட நவீன குண்டுகளை பயங்கரவாதிகள் பயன்படுத்தி உள்ளனர்' என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு படையை சேர்ந்த தலைமை அறிவியல் அதிகாரி டி.சுரேஷ் கூறியதாவது:

ஐதராபாத்தில் மே 18ம் தேதி மசூதியில் நடந்த குண்டு வெடிப்பும், நேற்று முன்தினம் நடந்த இரட்டை குண்டு வெடிப்பும் வெவ்வேறு வகையில் நடத்தப்பட்டுள்ளன. மசூதி குண்டு வெடிப்பில் ஆர்.டி.எக்ஸ்., மற்றும் டி.என்.டி., வெடிமருந்துகளின் கலவை பயன்படுத்தப்பட்டு இருந்து. நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பில் அமோனியம் நைட்ரேட் என்ற ரசாயனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மசூதி குண்டு வெடிப்பில், வெடிமருந்து பைப்களில் அடைக்கப் பட்டு இருந்தன.நேற்று முன்தினம் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பிறகு பல இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். மாலாபாடா என்ற இடத்தில் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. அந்த குண்டில் "நியோஜெல்90' என்ற அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. ரசாயனத்துடன் சிறிய இரும்பு குண்டுகள் கலக்கப்பட்டு இருந்தன. அலாரம் கடிகாரம் மற்றும் டெட்டனேட்டர்கள் ஆகியவை ஒரு பேட்டரியுடன் இணைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் "கோகுல் சாட்' என்ற உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர்.

இங்கு ஐஸ் கிரீம் இயந்திரம் மீது, தரையில் இருந்து ஐந்து அடி உயரத்தில் குண்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோல செய்துள்ளனர்.இவ்வாறு சுரேஷ் கூறினார். வெடிகுண்டில் பயன்படுத்தப் பட்ட "நியோஜெல்90' என்ற ரசாயனத்தை நாக்பூரில் உள்ள "அமின் கெமிக்கல்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதை உள்ளூரிலேயே பயங்கரவாதிகள் வாங்கியுள்ளனர். இரும்பு பெட்டியில் வெடிமருந்தை நிரப்பி, அதை ஒரு பையில் போட்டு மறைத்து வைத்துள்ளனர். பிரின்ஸ் நிறுவனம் தயாரித்த அலாரம் கடிகாரம் குண்டுகளில் இணைக்கப்பட்டுள்ளன. "லும்பினி பார்க்' பகுதிக்கு நேற்று காலை ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனாம் ராமநாராயணன ரெட்டியும் வந்து இருந்தார். அவர் கூறுகையில்,"சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை. இது கண்டனத்துக்கு உரியது. பயங்கரவாதத்தை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். எதிர்காலத்தில் "லும்பினி பார்க்' எந்த வகையான பாதுகாப்பு அளிப்பது என்பது குறித்து சுற்றுலாத் துறையும், ஐதராபாத் நகர மேம்பாட்டுத் துறை அதிகாரிகளும் கலந்து ஆலோசித்து முடிவு செய்வர்' என்றார்.

"நியோஜெல்90' தயாரிப்பது எப்படி?:ஐதராபாத்தில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய குண்டு, "நியோஜெல்90' எனும் அமோனியம் நைட்ரேட்டால் ஆன வெடிபொருள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலந்து இந்த வெடிபொருளை தயாரிக்கின்றனர். அமோனியம் நைட்ரேட் குவாரி மற்றும் சுரங்கப் பகுதியில் வெடி பொருளாகப் பயன்படுத்தப்படுவதாலும், டீசல் அல்லது மண்ணெண்ணெய் சாதாரணமாக கிடைக்கக்கூடியது என்பதால், யாரும் சந்தேகப்படாத வகையில் குண்டுகளை தயாரிக்க பயங்கரவாதிகள் இப்போது இவ்வகை குண்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஜெலட்டின் மற்றும் டைனமைட்டை பெற்று குண்டுகள் தயாரிப்பதில் உள்ள சிக்கல் இதில் இல்லை. அமோனியம் நைட்ரேட் உடன் அலுமினிய பவுடர் சேர்த்து அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அமோனியம் நைட்ரேட் வெடிபொருளின் வெடிக்கும் வேகம் பொதுவாக வினாடிக்கு 10 ஆயிரத்து 700 அடி வேகத்தில் சிதறடிக்கும்.அயர்லாந்தில் செயல்படும் பயங்கரவாதிகள் இந்த வகை வெடிபொருட்களை பயன்படுத்துகின்றனர். 1995ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒக்லஹாமா வெடிகுண்டு சம்பவத்திலும்கூட இந்த வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது.போரில் பயன்படுத்தப்படும் சில வகை குண்டுகளில் கூட அமோனியம் நைட்ரேட் கலக்கப்படுகிறது. தரைக்கு மேலே வெடித்து தரையில் உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்படுத்தக்கூடிய "டெய்சி கட்டர்' குண்டுகளிலும் அமோனியம் நைட்ரேட் பயன்படுகிறது. ஆப்கன் போரின் போது அமெரிக்கா இதைப் பயன்படுத்தியது.

ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் பலி: ஐதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். ஐதராபாத்தில் ஹூமாயூன் நகரில் உள்ள கோல் கண்டா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முகமது சலீம்(40); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பரீதா நாஸ்(36), மகன்கள் அமர்(9), அலி(6). நேற்று முன்தினம், "கோகுல் சாட்' என்ற உணவகத்தில் குண்டு வெடித்து ஏராளமானவர்கள் கொல்லப் பட்டனர். சம்பவம் நடந்த போது முகமது சலீம் குடும் பத்தினரும் அங்கு சென்றிருந்தனர். அவர்கள் நான்கு பேரும் குண்டு வெடிப்பில் இறந்து விட்டனர். முகமது சலீமின் சகோதரர் சமீர் கூறுகையில், ""குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து விட்டது என்று கேள்விப் பட்டதும் முகமது சலீமை தொடர்பு கொள்ள முயன்றேன், முடியவில்லை. உடனடியாக அங்கு சென்று பார்த்தோம். யாரும் கிடைக் கவில்லை. பின்னர் தேடிப் பார்த்ததில் நான்கு பேரின் உடல்களையும் ஓஸ்மேனியா மருத்துவமனையில் கண்டு எடுத்தோம்,'' என்றார்.

நன்றிங்க, dinamalar 27/08/07

பொதுவானவை.

Labels:

Sunday, August 26, 2007

தமிழகம் முழுவதும் உஷார் நிலை.

தமிழகம் முழுவதும் உஷார் நிலை
முன்னெச்சரிக்கையாக 700 பேர் கைது


ஆகஸ்ட் 26, 2007

சென்னை: ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

இதேபோல கோவையிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகர மற்றும் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.

மேலும் தமிழத்தின் இதர பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்ள், கோவில்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாமீனில் வெளியே இருக்கும் குற்றவாளிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்றிங்க

பொதுவானவை!

Labels: ,

ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு, பயங்கரம்.

ஹைதராபாத்தில் பயங்கரம்: 2 குண்டுவெடிப்புகளில்
47 பேர் பலி - 100 பேர் படுகாயம்


ஆகஸ்ட் 26, 2007

ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேச தலைநகர் ஹைதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த இரட்டை வெடிகுண்டு சம்பவங்களில் 47 பேர் உடல் சிதறி பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதிச் செயலாக இது கருதப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஆந்திரத் தலைநகரில் பெரும் பதட்டம் நிலவுகிறது.



நேற்று இரவு லும்பினி பார்க் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் லேசர் காட்சி நடந்து கொண்டிருந்தது. 500க்கும் மேற்பட்டோர் அதைக் காண கூடியிருந்தனர். அப்போது இரவு 7.40 மணிக்கு முதல் குண்டு வெடித்தது.

இந்த பயங்கர குண்டுவெடிப்பினால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கு விழுந்து கிடந்தன. தரையெல்லாம் ரத்த வெள்ளமாக காணப்பட்டது. இந்த இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலியானார்கள்.

2வது குண்டு கோடி என்ற இடத்தில் உள்ள கோகுல்சாட் என்ற பிரபல ஹோட்டலில் வெடித்தது. லும்பினி பார்க்கிலிருந்து இது 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குதான் உயிரிழப்பு அதிகம். 32 பேர் இங்கு மட்டும் உயிரிழந்துள்ளனர்.

லும்பினி பார்க் அருகே தான் ஆந்திர மாநில தலைமைச் செயலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு குண்டுவெடிப்புகளிலும் 47 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாவு எண்ணிக்கை 50 இருக்கும் என கூறப்படுகிறது.



குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து விரைவு அதிரடிப்படையினர், விரைந்து வந்து அந்தப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மீட்புப் படையினர் துரித கதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்து துடித்துக் கொண்டிருந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் 35 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி பார்வையிட்டார். முதல்வர் ராஜசேகர் ரெட்டி லும்பினி பார்க் பகுதிக்கு விரைந்து சென்று சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.

குண்டுவெடிப்பு நடந்த இரு இடங்களிலும் துயரக் காட்சிகள் காண்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது. தங்களது உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் குண்டுவெடிப்பில் என்ன ஆனார்கள் என்பதை அறிய அவர்கள் அலறி அடித்தபடி அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தனர்.

படுகாயமடைந்த பலர் வலியால் துடித்தபடி ரத்தம் சிந்தியபடி வேதனையில் முணகியபடி இருந்தனர். அவர்களை போலீஸாரும், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் மீட்டு ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர்.

இறந்தவர்களில் 6 பெண்கள் உள்ளிட்ட 11 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்திருந்த மாணவர்கள் சிலரும் பரிதாபமாக பலியாகி விட்டனர்.

2 குண்டுகள் கண்டுபிடித்து செயலிழப்பு:

இந்த நிலையில், வேறு எங்கும் குண்டுள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, தில்சுக்நகர் பகுதியில் பாலத்தின் கீழ் ஒரு குண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டு 9.35 மணிக்கு வெடிக்கும் வகையில் டைம் செட் செய்து வைக்கப்பட்டிருந்தது. இந்தக் குண்டை பத்திரமாக மீட்ட பாதுகாப்புப் படையினர் அதை பின்னர் செயலிழக்கச் செய்தனர்.

இந்த குண்டு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தது. செல்போன் மூலம் இதை இயக்கும் வகையில் அந்தக் குண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதேபோல, தியேட்டர் ஒன்றின் அருகே வைக்கப்பட்டிருந்த இன்னொரு வெடிகுண்டையும் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர்.

வெடிகுண்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து ஹைதரதாபாத்தில் நேற்று இரவு சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து தியேட்டர்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கிறதா என்று தீவிர சோதனை நடத்தப்பட்டது.

ஐஎஸ்ஐ சதி:

வங்கதேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற ஹூஜி ஜிஹாதிஸ் என்ற தீவிரவாத அமைப்பே இதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் கடந்த மே 18ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர்.

இதுகுறித்து ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி கூறுகையில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயின் சதியாகவே இதை நாங்கள் நினைக்கிறோம்.

குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பாதுகாப்புத் துறையின் குளறுபடி எதுவும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. அப்படி இருந்திருந்தால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.

ஆந்திராவில் எட்டரை கோடி பேர் உள்ளனர். அனைவரையும் உஷார்படுத்துவது என்பது இயலாத காரியம். காயமடைந்துள்ளவர்களுக்கு அரசு சார்பில் நல்ல சிகிச்சை அளிக்கப்படும் என்றார் ஜனா ரெட்டி.

திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிப்பு:

ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து திருப்பதியில் பாதுகாப்பு பன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருச்சானூர் பத்மாவதி கோவில், ஸ்ரீகாளஹஸ்தி கோவில், கனிபாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர திருப்பதி கோவில் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை - கொல்கத்தா பிரிவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு வாகனச் சோதனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் கண்டனம்:

ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவங்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் முகம்மது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் மாளிகை இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். மத ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் குலைக்க நினைப்போரின் செயல் தான் இது. இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.

சிவராஜ் பாட்டீல் இன்று ஹைதராபாத் வருகிறார். ஆந்திர அரசுக்கு தீவிரவாதிகளை ஒடுக்கும் செயலில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என உறுதியளித்துள்ளது.

பலியானோருக்கு ரூ.5 லட்சம் பணம், அரசு வேலை:

ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியான ஒவ்வொருவரின் குடும்பத்தாருக்கு ஆந்திர அரசின் சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரண நிதியுதவியும், அக்குடும்பத்தில் உள்ள தகுதியான ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும்.

காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதியாக கொடுக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இன்று கூட்டிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

நன்றிங்க

கண்டிக்கத்தக்கது, :(((

Labels: ,

Thursday, August 23, 2007

ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரியலாம்

ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரியலாம்

மெல்போர்ன், ஆக. 23: டாக்டர் முகமது ஹனீப் ஆஸ்திரேலியாவில் பணிபுரிய விரும்பினால் மீண்டும் பதிவு செய்து கொள்ளலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டீபன் ராபர்ட்சன் புதன்கிழமை தெரிவித்தார்.

ஹனீபின் விசா ரத்து செய்யப்பட்டது செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், சுகாதார அமைச்சரின் கருத்து ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கான வாய்ப்பை அதிகரித்திருக்கிறது.

லண்டன் தீவிரவாதச் சதிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கடந்த மாதம் 2-ம் தேதி டாக்டர் ஹனீப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோதும், அவரது விசா ரத்து செய்யப்பட்டதால், அவர் 25 நாள் தனிமைச் சிறையில் இருக்க நேர்ந்தது.

அதன்பிறகு, ஹனீப் மீதான குற்றச்சாட்டை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டு, அவரை வலுக்கட்டாயமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.

இதற்கிடையே, விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஹனீப் தொடர்ந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஹனீபின் விசாவை ரத்து செய்த குடியமர்வுத்துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸின் உத்தரவு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், "ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிக்குத் திரும்பினால் மகிழ்ச்சியடைவேன். அவரை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்' என அமைச்சர் ஸ்டீபன் ராபர்ட்ஸ்ன் தெரிவித்துள்ளார்.

அடுத்தமாதம் இதற்காக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையில் ஹனீப் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ராபர்ட்ஸன் கூறியுள்ளார்.

விசாரணை விவரம் வெளியீடு:இதற்கிடையே, ஹனீபிடம் ஆஸ்திரேலிய போலீஸôர் நடத்திய விசாரணையின் விவரங்களை அவரது வழக்கறிஞர் பீட்டர் ரூசோ புதன்கிழமை வெளியிட்டார்.

ஹனீப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த விசாரணையில் சில குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளதாக பீட்டர் ரூசோ கூறினார்.

"தன்மீது ஆஸ்திரேலிய போலீஸôர் சுமத்திய குற்றச்சாட்டுகளும் அதற்கு தான் அளித்த விளக்கங்களும் பொதுமக்களுக்குத் தெரிய வேண்டும் என ஹனீப் விரும்பினார். அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து நடக்கும் முயற்சிகளை முறியடிப்பதற்கு இது உதவும் என அவர் கருதுகிறார்.

தனது சகோதரருடன் இணைய அரட்டை அறை (சாட் ரூம்) வழியாக பேசியது குறித்து விசாரணை முடிவடையும் நிலையில்தான் ஹனீபிடம் கேட்கப்பட்டுள்ளது.

இணைய அரட்டையில் பேசிய தகவல்களின் மொழி மாற்றத்தை திருத்த முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என போலீஸôரே ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த இணைய அரட்டை ஜூலை 2-ம் தேதி மாலை 4.13 மணிக்குத் தொடங்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் ஹனீப் மருத்துவமனையில் இருந்திருக்கிறார்.

சபீல் அகமதுவிடம் கொடுத்த சிம் கார்டு குறித்து தெரிந்து கொள்வதற்காக லண்டனில் உள்ள துப்பறியும் நிபுணர் டோனி வெப்ஸ்டரிடம் ஹனீப் 3 முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால் ஜூலை 2-ம் தேதி மாலை 4.32 மணிக்கு சபீலுடன் பேசும்போது இது பற்றிக் கேட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்பதால்தான இந்தத் தகவல்களையெல்லாம் போலீஸôரிடம் ஹனீப் கூறியிருக்கிறார். ஆனால் இணைய அரட்டையின் சில தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு போலீஸôர் ஹனீப் மீது குற்றம்சாட்ட முற்பட்டிருக்கின்றனர்.

உண்மையில் விசாரணையில் போலீஸாருக்கு உதவவே ஹனீப் எல்லா நேரத்திலும் முயற்சி செய்திருக்கிறார். இந்த விசாரணைத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதால், ஹனீப் எதையும் மறைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது' என்றார் ரூசோ.

நன்றிங்க

ஆஸ்திரேலியா அரசும், நீதிமன்றமும் எவ்வளவு துரிதமாக செயல்படுகின்றன. நம்மூரிலும் இருக்கே, ம்ஹும்...

Labels: ,

Wednesday, August 22, 2007

ஜமாத் தலைவர் மலேசியாவில் கைது?

தவ்ஹீத் ஜமாத் தலைவர் மலேசியாவில் கைது?:
ஆதரவாளர்கள் சென்னையில் போராட்டம்!


ஆகஸ்ட் 22, 2007

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் மலேசியாவில் கைது செய்யப்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் மலேசியா சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு பொதுக் கூட்டம் எதிலும் பேசக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. இதையடுத்து சுற்றுலா விசாவில் அவர் மலேசியா சென்றார்.

இந் நிலையில் கோலாலம்பூரில் நடந்த ஒரு இஸ்லாமிய அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் ஜெய்னுலாப்தீன். அவரது பேச்சு அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையடுத்து ஜெய்னுலாப்தீனை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிகிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். உடனடியாக ஜெய்னுலாப்தீனை நாடு கடத்துமாறு மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்தத் தகவல் நேற்று நள்ளிரவில் சென்னையில் பரவியது. இதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஏராளமானோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் முன்பு திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.

போலீஸார் விரைந்து வந்து அவர்களை அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இன்று காலையும் ஜமாத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று மலேசிய துணைத் தூதரகம் முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே ஒருமுறை இலங்கை சென்றபோதும் ஜெய்னுலாப்தீன் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

பொதுவானவை.

Labels: ,

சிலிக்கான் சென்னைக்கு வயது 368!

'சிலிக்கான்' சென்னைக்கு வயது 368!
ஆகஸ்ட் 22, 2007

- எம். ஹூஸைன் கனி

பட்டணம் என்று செல்லமாக அழைக்கப்படும், சென்னை, இன்று தனது 368வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.



பழைய கருப்பு - வெள்ளை சினிமா படங்களில் சென்னையைக் காண்பிக்கும்போது சென்டிரல் ரெயில் நிலையத்தையும், அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தையும் காட்டுவார்கள். பிறகு வந்த படங்களில் அண்ணா சமாதியின் அழகுமிகு ஆர்ச் காட்டப்படும் அல்லது கடற்கரை உழைப்பாளர் சிலை காட்டப்படும்.



இன்று எல்.ஐ.சி. கட்டிடத்தை விட உயரமான பெரிய பெரிய கட்டிடங்களையும், கண்களைக் கவரும் வகையிலான கலர் கலர் கம்ப்யூட்டர் நிறுவன வளாகங்களையும், வழுக்கிக் கொண்டு ஓடும் அதி நவீன கார்களையும், வாகன நெரிசல்களையும் கொண்டு, நீண்டு விரிந்து பரந்து போய்க் காணப்படுகிறது சென்னை மாநகரம்.



குதிரை வண்டிகளும், டிராம்களும், கை வண்டி ரிக்ஷாக்களும் ஓடிய அண்ணா சாலையில் இன்று விதவிதமான வெளிநாட்டு சொகுசு கார்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன.



வானளாவிய உயர்ந்த கட்டிடங்களையும், நவீன வசதிகளையும் கொண்டுள்ள சென்னை நகரம் உருவான வரலாறு நெடியது. தென்னிந்தியாவின் முதன்மையான நகராகவும், இந்தியாவின் நான்காவது பெருநகரமாகவும் திகழும் சென்னைக்கு இன்றுடன் 368 வயது ஆகிறது.



எப்படி பிறந்தது சென்னை:

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் ஆகிய இருவரும்தான் சென்னையை உருவாக்கியவர்கள். இப்போதைய சென்னை அந்த காலத்தில் 'சென்னப்பட்டினம்' என்றும், 'மெட்ராஸ்பட்டினம்' என்றும் அழைக்கப்பட்டு வந்தது.



மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருவொற்றியூர் என்று பல்வேறு சிறுசிறு கிராமங்களாகவும், சிறு சிறு குறு நகர்களாகவும் காணப்பட்டது அந்தக்கால சென்னைப்பட்டினம். புதர்கள், காடுகள், மரங்கள் சூழ்ந்த இந்த ஊர்களுக்கு இடையே கூவம், அடையாறு போன்ற ஆறுகள் பாய்ந்து ஓடின.



ஆங்கிலேயர்கள் வருகை:

சென்னப்பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவியம் மற்றும் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்குப் பின்னரே அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி. 1552-ம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோமில் குடியேறி வியாபாரம் செய்தனர்.



சென்னப்பட்டினத்தில் விலை உயர்ந்த ஜவுளி மூலப்பொருட்கள் கிடைத்தன. இதை குறிவைத்து இங்கு கால்பதிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் என்ற 2 வியாபாரிகளை சென்னப்பட்டனத்திற்கு அனுப்பி வைத்தது. சென்னப்பட்டினத்துக்கு வந்த அவர்கள் இருவரும் வணிக மையம் கட்டுவதற்காக இடம் பார்த்தனர்.



ஜார்ஜ் கோட்டை:

அதற்காக பூந்தமல்லி நாயக்கர் மன்னரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை வாங்கினார்கள். அந்த இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையத்தையும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் 22.8.1639-ல் கட்டினர். இதுதான் சென்னை உருவாக முதல் அடிக்கல் எனலாம்.



பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டப்பட்டதால் ஐரோப்பியர்கள் நிறைய பேர் வந்தனர். அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றிலும் வீடு கட்டி குடியேறினர். அந்த பகுதி வெள்ளை பட்டினம் என்று அழைக்கப்பட்டது. அதற்கு வெளிப்புற பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான நெசவாளர்கள் குடியேறினர். இது கறுப்பு பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்த பகுதிதான் பின்னர் ஜார்ஜ் டவுண் ஆனது.



கைமாறியது:

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராஸ் பட்டனம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டணங்களையும் ஒன்றுசேர்த்து ஆங்கிலேயர்கள் மதராஸ் பட்டினம் என்றும், தமிழர்கள் சென்னப்பட்டினம் என்றும் அழைத்தனர்