Wednesday, October 31, 2007

தூண்டிவிட்ட மோடி.

04.11.07 மற்றவை

சி.என்.என்._ஐ.பி.என்., தொலைக்காட்சியில் ஓர் அரசியல் நேர்காணல். நடத்தியவர் பிரபல அரசியல் பேட்டியாளர் கரன் தாப்பர். கிடுக்கிப்பிடி கேள்விகளால் எதிரே இருப்பவரை சிக்கவைப்பதில் சமர்த்தர். நம்மூர் ஜெயலலிதா, வைகோ முதல் பல தேசியத் தலைவர்களை திக்குமுக்காட வைத்தவர். இந்தமுறை அவருக்கு எதிரே அமர்ந்திருந்தார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

ஒவ்வொரு கேள்வியும் தீப்பந்தாகப் பாய்ந்து வந்து மோதின. எல்லாவற்றையும் தனக்கேயுரிய பாணியில் சாமர்த்தியமாக எதிர்கொண்டார் மோடி. திடீரென ஒரு கேள்வி. அவ்வளவுதான். நெருப்பில் பட்ட ரப்பர் பலூன் போல சுருங்கியது மோடியின் முகம். என்னென்னவோ பேசினார். 'தாகமாக இருக்கிறது, தண்ணீர் வேண்டும்' என்றார். பதில் சொல்லாமல் தப்பிக்கும் எல்லாவித முயற்சியிலும் ஈடுபட்டார். விளைவு, பேட்டி பாதியிலேயே முடிக்கப்பட்டது. அவசர அவசரமாக வெளியேறினார் நரேந்திர மோடி.

அப்படியே 'முதல்வன்' படத்தில் ரகுவரன், அர்ஜுன் நடித்த காட்சி போலவே இருந்தது. விஷயம் என்னவென்றால், கரன் தாப்பர் கேட்டது கோத்ரா மற்றும் குஜராத் கலவரம் பற்றிய கேள்விதான். மோடி பதிலளிக்கத் தடுமாறியது அப்படியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தக் காட்சிகள் குஜராத் அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்தது.

மோடியின் தடுமாற்றத்துக்கு இதுவரை பா.ஜ.க. தரப்பில் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், அதற்கு பதிலளிக்கும் விதமாக தெஹல்கா இணையதளம் சென்ற வாரம் வீடியோகாட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோத்ரா தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான ஹரேஷ் பட் உள்ளிட்ட சிலருடைய பேட்டிகள் ஒளிபரப்பாகின. அவர்கள் அத்தனை பேருமே கோத்ரா மற்றும் குஜராத் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம்.

ரகசிய கேமரா மூலம் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிப்பது தெஹல்காவுக்கு வழக்கமான விஷயம்தான். இந்தமுறை அவர்கள் குறிவைத்தது நரேந்திர மோடியை. இதற்காக கோத்ரா சட்டமன்ற உறுப்பினர், குஜராத் கலவரத்தில் களத்தில் இறங்கி 'செயல்பட்ட' ஏழு பேர், மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அரசு வழக்கறிஞர் ஒருவர் மற்றும் ஐந்து குஜராத் 'கரசேவகர்கள்' ஆகியோருக்கு வலை விரிப்பது என முடிவு செய்தது தெஹல்கா நிருபர் குழு. இவர்களுக்குத் தலைமை, ஆஷிஷ் கெய்தான் என்கிற நிருபர். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தனர்.

'அய்யா, நாங்கள் இந்துத்வாவைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறோம். புத்தகத்தின் பெயர் ''வி.ஹெச்.பி.யும் இந்துத்வாவும்.' அதற்கு உங்களுடைய கருத்துக்கள் அவசியமாகின்றன. புத்தகத்துக்காக நாடு முழுக்கத் தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கிறோம். நிறையப் பேர் பேசியிருக்கிறார்கள். நீங்களும் பேசினால் புத்தகம் மிகச்சிறப்பாக வரும். குறிப்பாக, கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேச வேண்டும். இந்துத்வத்தின் பெருமை எல்லோர் மத்தியிலும் பரவும்.'

இதுதான் அந்த நிருபர் ஆஷிஷ் கெய்தான் விரித்த வலை. 'இந்துத்வா பரவும்' என்கிற வார்த்தைகள் அவர்களைச் சுண்டி இழுத்துவிட்டன. மளமளவென நடந்த சம்பவங்களை வார்த்தை விடாமல் ஒப்பித்துவிட்டனர்.

அப்படி என்ன சொல்லிவிட்டார்கள் அவர்கள்?

ஒவ்வொரு நபராகப் பார்க்கலாம்.

சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட்:

'கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள், பஜ்ரங் தள், வி.ஹெ.ச்பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, 'நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்' என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடி, எல்லோரையும் பாராட்டினார்.'

மதன் சாவல் பா.ஜ.க. தொண்டர்:

'முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஓடினோம். அவர்களை எல்லாம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே நாங்கள் ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டோம். உடனே அவர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து எங்களையெல்லாம் கலைந்து போகச் சொன்னார். நாங்களும் சரி என்றோம். அவர் பணத்தைத் தருவதற்காகக் கதவைத் திறந்ததும் விருட்டென வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். உடனடியாக இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, அவருடைய கையை நான் வெட்டினேன். அவருடைய ஆண்குறியையும் வெட்டினேன். பிறகு அவரைத் துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். மோடியின் முயற்சியால்தான் எங்களால் சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. நீதிபதிகளை இடமாற்றம் செய்து, வசதியான நீதிபதிகளை பணியிலமர்த்தியதால் எங்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைத்தது.'

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி:

'வழியில் தென்பட்ட கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என்று தெரிந்ததும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தினேன். உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து வீசி எறிந்தேன்.'

அனில் படேல் மற்றும் தாபல் ஜெயந்தி படேல்:

'எனக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தான் கலவரத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பணியில் வி.ஹெச்.பி. தொண்டர்கள் ஈடுபட்டனர். எல்லா விஷயமும் போலீஸாருக்குத் தெரியும். ஆனால், அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், விஷயம் வெளியே கசியாதவாறு அவர்கள்தான் பார்த்துக்கொண்டனர். அந்தக் குண்டுகளை வைத்துத்தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.'

பிரகாஷ் ரத்தோட்:

'பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயா பென் தெருத்தெருவாகச் சென்று தொண்டர்களைக் கலவரம் செய்வதற்கு ஊக்கப்படுத்தினார். 'முஸ்லிம்கள் ஒருவரைக் கூட விடக்கூடாது. வேகமாகக் கொன்று குவியுங்கள்' என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டே நடந்தார்.'

சுரேஷ் ரிச்சர்ட்:

'முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் நாங்கள் திணறியபோது போலீஸாரே சில இடங்களைச் சுட்டிக் காட்டினர். நாங்கள் அங்கு சென்று கதவுகளை மூடிவிட்டு, அவர்களை உள்ளேயே வைத்து எரித்துவிட்டோம்.'

அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா:

'கலவரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு எதிரான வழக்குகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். காவல்துறை அதிகாரிகள் இந்துக்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கோத்ரா சம்பவம் மோடியை ரொம்பவே வருத்தப்பட வைத்திருந்தது. அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால், முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட தினத்தை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றார் மோடி.'

வி.ஹெச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி:

'மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்குச் சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சாதகமாக அவர்கள் வாதாடினர்!'

மேலே இருக்கும் கருத்துகள் அத்தனையும் குஜராத் கலவரத்துக்கு மோடியின் பங்களிப்பை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளன.

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ராமர் பால விவகாரம் தங்களுக்குத் தேனை வார்க்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், தேளை வார்த்திருக்கிறது தெஹல்கா வீடியோ.

விரைவில் நடைபெற இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இந்த வீடியோ பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். என்ன செய்யப் போகிறார் மோடி?

நன்றிங்க, KUMUDAM REPPORTER

"அரசியல் அரக்கர்கள்"

01. "மலடி' பட்டம் சூட்டி விரட்டிய மாமியார்.

கணவரோடு சேரவிடாமல் தடுத்ததோடு "மலடி' பட்டம் சூட்டி விரட்டிய மாமியார்: போலீசில் பெண் புகார்

சென்னை: பன்னிரென்டு ஆண்டுகளாக முதலிரவே நடக்கவிடாமல் தடுத்ததோடு, "மலடி' என்று பட்டம் கொடுத்து கணவருக்கு வேறு திருமணம் செய்து வைத்த மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் மனைவி புகார் கொடுத்தார். சென்னை வியாசர்பாடி மூன்றாவது கீழத் தெருவில் வசிப்பவர் சாகுல் ஹமீது (35). இவரது மனைவி தமீம் நிஷா (31). இவர்களுக்கு 1995ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. மாமனார், மாமியார் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். தமீம் நிஷா நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார்.

அப்புகாரில் கூறியிருப்பதாவது: "பாஸ்ட் புட்' நடத்தும் என் கணவர் விடியற்காலையில் வேலைக்கு சென்று விட்டால் நள்ளிரவு தான் வீடு திரும்புவார். திருமணமான நாள் முதலே கணவரோடு பேசவும், தனியறையில் படுக்கவும் என் மாமியார் அனுமதிக்கவில்லை. திருமணத்தின் போது எனக்கு 45 சவரன் நகைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களை என் பெற்றோர் கொடுத்தனர். ஆனால், மாமியார் தினந்தோறும், "உனது வீட்டில் இருந்து பணம் வாங்கிவா? அப்போது தான் கணவரோடு சேர்த்து வைப்பேன்' என்று மிரட்டுவார். வாங்கி வரவில்லை என்றால் "மலடி' என்று பட்டம் சுமத்தி திட்டுவார்கள். இப்படியே என் வீட்டிலிருந்து பல லட்சம் வாங்கி கொடுத்து விட்டேன். அப்படி இருந்தும் கணவருடன் சேர அனுமதிக்கவே இல்லை. நான் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது என்று கேட்டால், "உனது கர்ப்பப் பையில் கோளாறு இருக்கிறது. உங்கள் வீட்டில் தான் மருத்துவம் பார்க்க வேண்டும்' என்று கூறினர். மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் எனக்கு எந்த குறையும் இல்லை.

கடந்த டிசம்பர் மாதம் அவரது குடும்பத்தினர் மலடி என்று திட்டி அடித்து உதைத்தனர். இவர்களின் தொல்லையால் மனமுடைந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். இந்நிலையில், எனது கணவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து விட்டனர்.கணவரோடு ஒன்று சேரவிடாமல் தடுத்துவிட்டு "மலடி' என்று பட்டம் சுமத்தி, துரத்திய மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வரதட்சணையாக நான் கொடுத்த நகைகளை மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிங்க, தினமலர் 31/10/07

எங்கும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி.

ஏன்...
கணவனுக்கு புத்தி எங்கே போச்சு என்கிறீர்களா...?

அதுவும் நியாயம் தான்!

05. வாலிபருக்கு நடந்த சித்ரவதை

05. பொதுமக்கள் முன் வாலிபருக்கு நடந்த சித்ரவதை : கொடூர செயல்புரிந்த போலீசாருக்கு சர்டிபிகேட்



பாட்னா: பீகாரில், பெண்ணிடம் நகை திருட முயன்று, பொதுமக்களால் கடுமையாக தாக்கப்பட்ட வாலிபரை, மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்று சித்ரவதை செய்த

போலீஸ் அதிகாரிகளுக்கு அம்மாநில சட்டசபை குழு நற்சான்றிதழ் அளித்துள்ளது. அவர்களை, மீண்டும் பணியமர்த்த பரிந்துரை செய்துள்ளது.

பீகார் மாநிலம், பகல்பூர் அருகில் உள்ள நாத்நகரில், கோவில் முன் ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற முகமது அவுரங்கசிப் என்ற வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்து கடுமையாக தாக்கினர். அங்கு விரைந்த உதவி எஸ்.ஐ.,எல்.பி.சிங் மற்றும் கான்ஸ்டபிள் ராமச்சந்திர ராய் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து அவுரங்கசிப்பை தாக்கியதோடு, அவரை மோட்டார் சைக்கிளில் கட்டி சில அடி தூரம் இழுத்துச் சென்றனர். மயக்கமடைந்த அவுரங்கசிப்பை மாட்டுவண்டியில் போட்டு பின்பு எடுத்துச் சென்றனர்.

இதை `டிவி' சேனல்கள் படம் பிடித்து ஒளிபரப்பின. போலீசாரே அத்துமீறலில் ஈடுபட்டதற்கு நாடு முழுவதும் மனித உரிமை அடிப்படையில் கண்டனம் எழுந்தது. இதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட போலீசார் இருவரும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க மார்க்சிஸ்ட் கட்சியின் பாசுதேவ் பிரசாத் சிங் தலைமையில் ஐந்து பேர் கொண்ட சட்டசபை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவர் பாசுதேவ் பிரசாத் சிங், போலீசார் இருவருக்கும் நற்சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்தார். அவர் கூறியதாவது: அவுரங்கசிப்பை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காகத்தான் போலீசார் இருவரும் முயற்சித்தனர். அவுரங்கசிப்பை மோட்டார் சைக்கிளில் பொதுமக்கள் தான் கட்டி உள்ளனர். தொடர்ந்து அவர் தாக்கப்படுவதை தடுப்பதற்காகத் தான் மோட்டார் சைக்கிளை அவர் ஓட்டத்துவங்கினார்.

சிறிது தூரத்துக்கு மட்டுமே அவுரங்கசிப் இழுத்துச்செல்லப்பட்டார். எனவே போலீசாருக்கு சட்டசபை குழு நற்சான்றிதழ் வழங்குகிறது. போலீசார் மீது முழுமையாக எந்த தவறும் இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. அதற்காக பணியில் இருந்தே நீக்குவது என்பது மிகப்பெரிய தண்டனை. அது அவர்களுக்கு அளிக்கப்படும் மனித உரிமை மீறல். எனவே, அவர்களை எச்சரித்தோ அல்லது ஒரு சம்பள உயர்வை ரத்து செய்துவிட்டோ மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பாசுதேவ் பிரசாத் சிங் கூறினார்.

சட்டசபை குழுவின் பரிந்துரை குறித்து வியப்பும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், `சம்பவத்தை `டிவி' சேனல்கள் அப்பட்டமாக ஒளிபரப்பின. அதில் போலீசார் இருவரும் நடந்து கொண்ட கொடூரம் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

நன்றிங்க. தினமலர் 31/10/2007

அப்படி போடு...!

02. இரு பெண்கள்: 'ஓரினக்' கல்யாணம்!

ஆந்திராவில் இரு பெண்கள்: 'ஓரினக்' கல்யாணம்!



புதன்கிழமை, அக்டோபர் 31, 2007

ஹைதராபாத்: ஆந்திராவில் இரு பெண்கள் கல்யாணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஓரினச் சேர்க்கைப் பழக்கமுடைய இந்தப் பெண்கள் கல்யாணம் செய்து கொண்டதற்கு பல்வேறு பெண்கள் அமைப்புகள் ஆதரவும், ஆசியும் வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த 'தம்பதிகளின்' பெயர் கே.குமாரி (19), வரலட்சுமி (18). சம்பாவரம் என்ற ஊருக்கு அருகே உள்ள லிங்கால திருகுடு கோவிலில் வைத்து கடந்த 16ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வரலட்சுமி கழுத்தில் குமாரி தாலி கட்டினார்.

இந்து முறைப்படி கல்யாணத்தை முடித்துக் கொண்ட இருவரும் அருகில் உள்ள சர்ச்சுக்குப் போய் அங்கு பைபிள்களை மாற்றிக் கொண்டனராம். புதுமணத் தம்பதிகளாக ஒரு வீட்டில் சேர்ந்து வசிக்க ஆரம்பித்துள்ளனர். வீட்டுக்கு அருகே உள்ள நர்சரிப் பள்ளியில் வேலை பார்த்து வருகின்றனர்.

பொறுப்பான 'கணவராக' குமாரி நடந்து கொள்கிறாராம். ஆண்கள் அணிவது போல பேன்ட், சட்டை போட்டுக் கொண்டு அசத்துகிறார் குமாரி. வழக்கமான இல்லத்தரசிகளைப் போல புதுக் கல்யாண மெருகோடு நாணத்துடன் வளைய வருகிறார் வரலட்சுமி. கழுத்தில் தொங்கும் குமாரி கட்டிய தாலியைப் பார்த்து பெருமிதப்படுகிறாராம்.

முதலில் இவர்களின் திருமணத்தைப் பார்த்து முகம் சுளித்த சம்பாவரம் பகுதி மக்கள் இப்போது அவர்களை கணவன், மனைவியாக அங்கீகரித்துள்ளார்களாம்.

குமாரிக்கு சொந்த ஊர் அனகாபள்ளி. இவரது பெற்றோர் இறந்தவுடன், தனது அக்காவுடன் சம்பாவரத்திற்கு வந்துள்ளார். அங்கு வரலட்சுமியை சந்தித்துள்ளார். பார்த்தவுடன் இருவருக்கும் 'காதல்' மலர்ந்துள்ளது. நெருக்கமாக பழக ஆரம்பித்தனர்.

இருவரும் அருகில் உள்ள சர்ச்சுக்கு போவார்கள். அங்கு சிறு சிறு வேலைகளைச் செய்தனர். அப்போது நெருக்கம் அதிகமாகி, கல்யாணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இந்த விவரம் சர்ச் ஊழியர்களுக்குத் தெரிய வர அவர்களை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

இதையடுத்து தனி வீட்டை எடுத்து குடித்தனம் செய்ய ஆரம்பித்தனர். மகளின் இந்த செயலைப் பார்த்து வரலட்சுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். மகளை கட்டாயப்படுத்தி வீட்டுக்குக் கூட்டிச் சென்று விட்டார். ஆனால் குமாரியை வரலட்சுமியால் மறக்க முடியவில்லை.

சிரஞ்சீவி மகள் ரேஞ்சில், வீட்டை விட்டு வெளியேறி குமாரியை மணந்து கொண்டார். இதில் விசேஷம் என்னவென்றால், கல்யாணத்தின்போது முக்கிய சாட்சிகளாக இருந்தவர்களில் ஒருவர், வரலட்சுமியின் தாயார்.

இந்தக் கல்யாணம் குறித்து குமாரி கூறுகையில், இதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை. முதலில் இருவரும் நல்ல தோழிகளாகப் பழகினோம். பிறகு காதலர்களாக மாறினோம். இப்போது கணவன், மனைவியாகி விட்டோம் என்றார். 'கணவன்' பேசுவதை ஆவலுடன் வெட்கப் புன்னகை சிந்த அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் வரலட்சுமி.

குமாரியை மணந்துள்ள வரலட்சுமிக்கு ஏற்கனவே ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த ஒருவருடன் (அவர் ஆண்தான்) கல்யாணமாகியுள்ளது. ஆனால் அவரைப் பிடிக்காமல் பிரிந்து வந்து விட்டார் வரலட்சுமி. முறைப்படி அவரிடமிருந்து விவாகரத்து கூட இன்னும் அவர் பெறவில்லையாம்.

குமாரி, வரலட்சுமி தம்பதிக்கு வீடு வாடகைக்கு விட்டுள்ள வீட்டு உரிமையாளர், இந்த வினோத தம்பதிக்கு வீடு கொடுத்திருப்பதற்காக வருத்தப்படவில்லையாம்.

வாடகையை சரியாக கொடுத்தால் போதும், பிரச்சினை இல்லாமல் இருந்தால் போதும். மற்றபடி அவர்களால் எனக்கோ, என்னால் அவர்களுக்கோ எந்த தொந்தரவும் கிடையாது என்று 'பிராக்டிகலாக' பேசுகிறார்.

கலி காலம் சாமி.. கலி காலம்!

நன்றிங்க

படிச்சி முடிச்சப்பறம் சும்மா 'திக்' ன்னு இருக்கு நெஞ்சு.

காட்டுக்கு தீ வைத்த சிறுவன் (!?)

கலிபோர்னியா: காட்டுக்கு தீ வைத்த சிறுவன்

புதன்கிழமை, அக்டோபர் 31, 2007

லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகருக்கு அருகே காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலம் நாசமானதற்கும், அந்தத் தீ கலிபோர்னியாவுக்குப் பரவியதற்கும் ஒரு சிறுவன்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

அந்த சிறுவனின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அந்த சிறுவனக்கு 13 வயதுக்குள்தான் இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

கடந்த 22ம் தேதி லாஸ் ஏஞ்செலஸ் அருகே உள்ள சான்டா கிளாரிடா பகுதியில் காட்டுத் தீயினால் 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நாசமாகின. 63க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. இதற்கு இந்த சிறுவன்தான் காரணமாம்.

இந்த சிறுவன் காட்டுப் பகுதியில் தீக்குச்சிகளை வைத்து விளையாடியுள்ளான். அப்போதுதான் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில்தான் இத்தனை நாசம் ஏற்பட்டு விட்டதாக லாஸ் ஏஞ்சலெஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் விட்மோர் கூறியுள்ளார்.

முதலில் மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் இதற்கு சிறுவன்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அந்த சிறுவனை தற்போது போலீஸார் விசாரணைக்குப் பின் திருப்பி அனுப்பி விட்டனர். அவன் மீது வழக்கு தொடருவதா, வேண்டாமா என்று சட்ட நிபுணர்களின் கருத்தை போலீஸார் கேட்டுள்ளனராம்.

இங்கு பிடித்த தீதான், கடந்த வாரம் கலிபோர்னியா காட்டுப் பகுதிக்குப் பரவி 2300க்கும் மேற்பட்ட கட்டடங்களை சேதப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 78 பேர் காயமடைந்தனர்.

நன்றிங்க

எப்படியோ தீ எரிந்து சாம்பலாகி விட்டது. இனிமே வழக்கு போட்டு ஒன்னும் ஆகப் போறதில்ல.

Monday, October 29, 2007

புயல் ஆபத்து நீங்கியது!



தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது-கன மழை தொடரும்

திங்கள்கிழமை, அக்டோபர் 29, 2007

சென்னை: தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த புயல் சின்னம் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.

வங்கக் கடலில் தாழ்வு நிலையாக பரவியிருக்கும் இந்த மண்டலம் வட மேற்கு திசை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதால் தமிழகத்துக்கு விடுக்கப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சிறப்பு செய்திக் குறிப்பில்,

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்தின் மீது இந்த தாழ்வு மண்டலம் பரவியுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆந்திரத்திலும் தமிழகத்திலும் இடியுடன் கூடிய மிக பலத்த பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்துக்கு புயல் அபாயம் நீங்கினாலும் கன மழை தொடரவுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் ஆந்திரத்தின் தென் பகுதிகளிலும் மழை கொட்டும்.

இதற்கிடையே மதுரை, வேலூர், கடலூர், திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்த மழை கொஞ்சம் நின்றுள்ளது.

கன மழையால் வைகை அணையின் நீர் மட்டம் 65.68 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 4,995 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1,241 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த அணையின் கொள்ளவு 71 அடியாகும்.

அதே போல முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமும் 135 அடியை எட்டியுள்ளது.

மதுரையில்....

தொடர் மழையால் மதுரை அவனியாபுரம் அருகே சாமநத்தம் கிராமத்தில் குடிசை
மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்தது. சுமார் 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

கள்ளந்திரி அருகே செம்பனூர் கண்மாய்க்கரையில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. அது அங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் புகுந்தது.

ராமநாதபுரத்தில்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் பல கண்மாய்கள் உடைந்துவிட்டன. முதுகுளத்தூரில் 78 மி.மீயும், கமுதியில் 61.5 மி.மீயும் மழை பதிவாகியுள்ளது. புயல் சின்னம் காரணமாக ராமேசுவரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில்...

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 115.05 அடியாக உயர்ந்தது.

புதுச்சேரி...

புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மண்ணாடிப்பட்டு புது நகரில் 3 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன.

நன்றிங்க

பொதுவானவை.

Saturday, October 27, 2007

நாடி வைத்தியம்.

03.நாடி பிடித்து பார்த்து 10 ரூபாய் வைத்தியம் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் இந்த அவலம்

பெங்களூரு :பெங்களூரு நகரில், ஒரு பக்கம் சாப்ட்வேர் நிறுவனங்கள் தலைதுõக்கினாலும், இன்னொரு பக்கம், மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் போலி "டென்ட்' கிளினிக்குகள் அதிகரித்து வருகின்றன.

பெங்களூரு நகரில் முக்கிய சாலைகளில் இவர்களின் நடமாட்டம் இல்லை. ஆனால், ஹெப்பால், அடுகோடி உட்பட பகுதிகளில், சாலைகளில், கூடாரம் போட்டு, கிளினிக் நடத்துகின்றனர். இந்த கிளினிக்குகளில், டாக்டர் என்று சொல்லிக் கொள்ளாமல், ஒரு "வைத்தியர்' இருக்கிறார். அவரிடம் நோயாளி சென்றால், நாடியை பிடித்து பார்த்து, நோயை பற்றி சொல்கிறார். அதற்கு 10 ரூபாய் தான் கட்டணம்.பலவீனம், தலைசுற்றல், வாந்தி பேதி, வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்ற சாதாரண பாதிப்புகளுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கு, மாதவிடாய் தள்ளிப்போவது போன்ற பாதிப்புகளுக்கும் சர்வசாதாரணமாக மருந்துகளை தருகின்றனர்.

இந்த "டென்ட்' வைத்தியர்கள்."நீங்கள் டாக்டருக்கு படித்தவர்களா?' என்று கேட்டால், "நாங்கள் டாக்டர் அல்ல; இமயமலையில் இருந்து மூலிகைகளை திரட்டி வந்து எங்கள் குரு தருவார். அதைத்தான் உங்களுக்கு தருகிறோம். நம்பினால் வாங்குங்கள்; இல்லாவிட்டால் நடையை கட்டுங்கள்' என்று சொல்லி, பகிரங்கமாக தொழில் செய்கின்றனர்.இவர்களை போலீசார் கண்டுகொள்வதில்லை.

ஆனால், இப்படிப்பட்ட, "டென்ட்' போட்டு கிளினிக் நடத்தும் சிலர், ஆயுர்வேத மருத்துவம் என்று போர்டு போட்டு மருத்துவம் பார்க்கின்றனர். ஆனால், சிலர், பணத்தை குறிவைத்து, நோயாளிகளுக்கு இன்ஜெக்ஷன் கூட போடுகின்றனர்.சிக்பல்லபூர் பகுதியில், சில நாள் முன், இந்த போலி டாக்டர்களிடம் காட்டி சிகிச்சை பெற்ற இரு குழந்தைகள் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களுக்கு, போலி டாக்டர்கள் இன்ஜெக்ஷன் போட்டதால், உடல்நிலை மோசமானது கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும், அந்த குழந்தைகள் இறந்துவிட்டனர். இப்படிப்பட்ட போலி டாக்டர்கள் பற்றி, கர்நாடக மருத்துவ கவுன்சிலுக்கு பல புகார்கள் வந்துவிட்டன. நடவடிக்கை எடுக்க, சட்டமும் உள்ளது. ஆனால், அதில் ஓட்டைகள் இருப்பதால், பலரும் சிக்குவதில்லை. இதனால், புது சட்டம் கொண்டு வர கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.பதிவு செய்யப்படாத அலோபதி டாக்டர்கள், தனியாக மருத்துவம் பார்க்க தடை விதித்து, கடும் தண்டனை வழங்கும் வகையில், புதிய சட்டம் அமையும்.

நன்றிங்க, தினமல்ர் 28/10/2007

தினமலர்லே ராசி பலன் என்றொரு பகுதி உள்ளதே அதுவும் இதே அவலத்தை சேர்ந்தது தானே! இல்லையா பின்னே!!

தமிழகத்தில் மழை 3 பேர் பலி.

03. 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்: இதுவரை 3 பேர் பலி

சென்னை : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடும் மழைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையின் அளவு விவரம்: வலங்கைமான், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, உதகமண்டலம் ஆகிய இடங்களில் ஆறு செ.மீ., மழை பெய்துள்ளது. விருத்தாசலம், கும்பகோணம், திருவையாறு, நாகப்பட்டினம், சீர்காழி, திருத்தணி, செஞ்சி, பெரம்பலூர், புல்லாம்பாடி ஆகிய இடங்களில் ஐந்து செ.மீ., மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், பாபநாசம், முத்துப் பேட்டை, ராதாபுரம், முசிறி ஆகிய இடங்களில் நான்கு செ.மீ., மழையும் பொன்னேரி, காஞ்சிபுரம், மதுராந்தகம், தொழுதூர், திருக்காட் டுப்பள்ளி, வேதாரண்யம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, செய்யூர், போளூர், வந்தவாசி, மேட்டுப்பாளையம், சூளூர், திருப்பூர், லால்குடி ஆகிய இடங்களில் மூன்று செ.மீ., மழையும் பெய்துள்ளது.

இரண்டு பேர் பலி: கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் 26 ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. மணிமுத்தாறு, வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் அருகே சாலையை துண்டித்து தண்ணீரை வடிய செய்தனர். சேத்தியாதோப்பு, கும்பகோணம் சாலையில் மருவாய் அருகே 12 கி.மீ., சாலை அதிகளவு சேதமடைந்துள்ளது. குறிஞ்சிப்பாடி அருகே கல்வெட்டு பாலம் அடியில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி சிவசங்கரன்(6) என்ற சிறுவன் இறந்தார். கடலூர் அடுத்த நாணமேடு கிராமம் சுப உப்பலவாடி கிராமத்தில் உள்ள தரைப் பாலம் அருகே குளித்த போது சுரேந்திரன் என்பவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தார்.

மண்சரிவில் பெண் பலி: நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக, கேத்தியில் 106 மி.மீ., மழை பதிவாகியது. ஊட்டியில் 50.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 715 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் கனமழை பெய்ததால், மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று அதிகாலை 2.00 மணியளவில் ஊட்டி அருகேயுள்ள தலையாட்டுமந்து பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில், வீடு தரைமட்டமானது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கோவிந்தம்மாள் (38) மண்ணில் புதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கோவிந்தம்மாளின் இரு குழந்தைகள் நாகமணி (12), நாக சபரீசன் (9) ஆகியோர் உயிர் தப்பினர். மண் சரிவு காரணமாக, குன்னூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில்,6மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

என்.எல்.சி.,யில் நிலைமை சீராகவில்லை: தொடர் மழையால் நெய்வேலி முதல் சுரங்கம், முதல் சுரங்க விரிவாக்கம், இரண்டாவது சுரங்கம் மற்றும் விரிவாக்கம் பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.மழையால் நிலக்கரி முதல் அனல் மின் நிலையம் விரிவாக்கம் மற்றும் இரண்டாவது அனல் மின் நிலையம் உற்பத்தி பகுதிகளுக்கு நிலக்கரி அனுப்ப முடியவில்லை. இதனால் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் மின்உற்பத்தி குறைந்து வருகிறது. நேற்று ஆயிரம் மெகாவாட் மட்டுமே மின்உற்பத்தி செய்யப் பட்டது. நிலைமை சீரடைய இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ள நிவாரணம் கணக்கெடுக்க முதல்வர் உத்தரவு : தமிழகத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடவும், சேத விவரம் குறித்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்கவும், 13 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, கடலோர மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ள நிவாரண பணிகளை அமைச்சர்கள் பார்வையிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை விரைவுபடுத்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், மனித உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும், பயிர் வகைகளுக்கும் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை மதிப்பிட்டு அரசுக்கு அறிக்கை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம்-கோ.சி.மணி, உபய துல்லா, விழுப்புரம் மாவட்டம்- பொன்முடி, கடலூர் மாவட்டம்- எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கோவை மாவட்டம்-பொங்கலூர் பழனிச்சாமி, காஞ்சிபுரம் மாவட்டம்- தா.மோ.அன்பரசன், கன்னியாகுமரி மாவட்டம்- சுரேஷ்ராஜன், ராமநாதபுரம் மாவட்டம்- சுப.தங்கவேலன், ஈரோடு மாவட்டம்- ராஜா, திருநெல்வேலி மாவட்டம்- பூங்கோதை, தூத்துக்குடி மாவட்டம்- கீதா ஜீவன், திருவள்ளூர் மாவட்டம்- சாமி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மதிவாணன் ஆகியோர் நேரில் பார்வையிடுவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் இன்று முதல் பார்வையிட உள்ளனர். நிவாரணப் பணிகள் மற்றும் சேத மதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகளும் ஒருவாரம் வரை நடைபெறலாம் . அதன்பிறகு சேத மதிப்பு குறித்த அறிக்கை முதல்வரிடம் வழங்கப்படும். அதன் அடிப்படையில் வெள்ள நிவாரண தொகையை வழங்க முதல்வர் உத்தரவிடுவார்.

நன்றிங்க, தினமலர் 28/10/2007

பொதுவானவை

02. மோடியால் உலகளவில் நாட்டுக்கு களங்கம்!

மோடியால் உலகளவில் நாட்டுக்கு களங்கம்-காங்கிரஸ்

சனிக்கிழமை, அக்டோபர் 27, 2007

சென்னை: இந்தியாவின் பெருமைக்கு உலகளவில் களங்கம் கற்பிக்கும் வகையில் மத வெறியுடன் செயல்பட்டு வரும் நரேந்திர மோடியின் அரசியல் முகமூடி தெஹல்கா மூலம் கிழித்தெறியப்பட்டிருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தெஹல்காவின் வீடியோ மூலம் பாஜகவின் மதவெறி அரசியல் மீண்டும் அம்பலத்திற்கு வந்துள்ளது. இதன்மூலம் பாஜகவின் சுயரூபம் தோலுரித்து காட்டப்பட்டுள்ளது. கடந்த 2002ல் நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை பயன்படுத்தி குஜராத் மாநிலம் முழுவதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

இதில் 2,000க்கும் மேற்பட்ட சிறுபான்மை இனத்தை சேர்ந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கோர சம்பவத்தை நிகழ்த்தியதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நேரடி பங்கு இருப்பது தெஹல்கா வீடியோ மூலம் இன்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோ சாட்சியங்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய படுகொலையை நிகழ்த்தியவர்களுக்கு ஆதரவு கொடுத்த நரேந்திர மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்.

மோடியின் மதவெறி காரணமாகத்தான் அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப் பயணம் செய்ய விசா கேட்டபோது அந்த நாடு அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.

இந்தியாவின் பெருமைக்கு உலகளவில் களங்கம் கற்பிக்கும் வகையில் மத வெறியுடன் செயல்பட்டு வரும் நரேந்திர மோடியின் அரசியல் முகமூடி தெஹல்கா மூலம் இன்றைக்கு கிழித்தெறியப்பட்டிருக்கிறது.

நரேந்திர மோடியின் அரசியலுக்கு முடிவு கட்டும் வகையில் அம்மாநில மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.

நன்றிங்க

//மோடியால் உலகளவில் நாட்டுக்கு களங்கம்-காங்கிரஸ்//

அடேங்கப்பா.. இப்பவாச்சும் கண்டுபிடிச்சாங்களே!

பாஜகவுக்கு கெளடா திடீர் ஆதரவு!

பாஜகவுக்கு கெளடா திடீர் ஆதரவு-கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைகிறது

சனிக்கிழமை, அக்டோபர் 27, 2007

பெங்களூர்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தரப் போவதாக தேவெ கெளடா-குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் திடீரென அறிவித்துள்ளது.

20 மாதம் ஆட்சியில் இருந்த நிலையில் ஒப்பந்தத்தை மீறி பாஜகவிடம் ஆட்சியை வழங்க மறுத்தார் முதல்வராக இருந்த குமாரசாமி. பாஜக ஒரு மதவாதக் கட்சி என்று திடீரென குற்றம் சாட்டினார்.

இதையடுத்து காங்கிரஸ் உதவியோடு ஆட்சியில் தனது மகனை தொடர வைக்க தேவெ கெளடா முயன்றார். இதற்காக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொண்டார். ஆனால், அவரால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட சோனியா காந்தி அவரை சந்திக்கவே மறுத்துவிட்டார்.

மேலும் கெளடா-குமாரசாமி மீது அதிருப்தியில் உள்ள ஜனதா தள எம்எல்ஏக்களைக் கொண்டு கட்சியை உடைக்கவும், அவர்கள் உதவியோடு ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் முயன்றது.

இதற்காக ஜனதா தளத்தின் மூத்த தலைவரான பிரகாஷை டெல்லிக்கு அழைத்துப் பேசியது. அவருக்கு முதல்வர் பதவி தரப்படும் என்றும் கூறியது. இதையடுத்து அவர் கட்சியை உடைக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கினார்.

ஆனால், பிரகாஷை கெளடா மற்றும் குமாரசாமியால் தடுக்க முடியவில்லை. பாஜகவுக்கு ஆட்சியைத் தர மறுத்ததன் மூலம் தனது லிங்காயத் சமுதாயத்திற்கு (இவர்களது பெரும் ஆதரவு பாஜகவுக்கு உண்டு, பாஜக சார்பில் துணை முதல்வராக இருந்த எதியூரப்பாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் தான்) கெளடா மோசம் செய்துவிட்டதாக கோபத்தில் உள்ள பிரகாஷ் கட்சியை உடைப்பதில் தீவிரமானார்.

பலமுறை டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்த பிரகாஷ் இன்றும் டெல்லியில் தான் உள்ளார்.

இந் நிலையில் அரசியல் பல்டிகளுக்குப் பேர் போன தேவெ கெளடா மீண்டும் ஒரு பல்டி அடித்துள்ளார். பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தரத் தயார் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் தனது கட்சியை உடைக்க முயன்ற காங்கிரசுக்கு பாடம் புகட்டுவது என்ற முடிவுக்கு கெளடாவும் குமாரசாமியும் வந்துள்ளனர்.

இத் தகவலை குமாரசாமியே இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், நாங்கள் இன்றே கவர்னர் ராமஷ்வர் தாக்கூரை சந்தித்து பாஜக தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு கடிதம் தரவுள்ளோம்.

எங்கள் கட்சியை உடைக்க காங்கிரஸ் முயன்றதால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

முன்னதாக குமாரசாமி-கெளடாவின் சார்பில் அக் கட்சியின் மூத்த தலைவர் தத்தா பாஜக முதல்வர் பதவிக்கான 'கேன்டிடேட்' எதியூரப்பாவை சந்தித்து அவரை முதல்வராக்க கெளடா முடிவு செய்துள்ளது குறித்த தகவலைத் தெரிவித்தார்.

இதையடுத்து பாஜகவின் மூத்த தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். அதில் கெளடாவின் ஆதரவைப் பெறுவது என்றும் ஆட்சியமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் கெளடா தொலைபேசியில் பேசினார்.

அடுத்து கவர்னர் தாக்கூர் என்ன செய்யவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நன்றிங்க

என்னடா எலி அம்மணத்தோட ஓடுதேன்னு பாத்தா....

இதான் சங்கதியா?

தன் கட்சிக்கு ஆபத்துன்ன உடனே தேவே கெளடா என்னமா பல்டி அடித்து விட்டார். இதுக்கு ஏற்கெனவே ஒப்பந்தப்படி ஆட்சியை பாஜகா விடம் முதலிலேயே கொடுத்திருந்தால் நல்ல கெளரவமாக இருந்திருக்கும்.

ம்ஹும்... பட்ட பிறகுதானே தெரியுதே.

Friday, October 26, 2007

03. இன்டர்நெட் பயன்படுத்துவோர் உஷார்.

03. இன்டர்நெட் பயன்படுத்துவோர் உஷார்: அடையாளம் திருடி பெரும் மோசடி

புதுடில்லி: இணையதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் அடையாளம் திருட்டுப் போவதால், பெரும் பொருள் இழப்புடன், மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது.

செய்யாத குற்றத்துக்கு சில சமயங்களில் அவர்களே பொறுப்பேற்க நேரிடுகிறது. வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும், இணையதளங்களில் அடையாள திருட்டு அதிகரித்து வருகிறது. அடையாள திருட்டு மூலம் மோசடி செய்வதாக, இணையதளம் பயன்படுத்துவோரில் 37 சதவீதம் பேர் புகார் செய்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, ஆர்குட், டக்கெட், எச்.ஐ., 5 போன்ற இணையதளங்களை சாட்டிங்குக்கு பயன்படுத்துவோர் மற்றும் இ-மெயில் பெறுவோரின் அடையாளங்கள் அதிகளவில் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இணைய தளங்களை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட ரகசியங்களை அறிந்து கொண்டு, அதன் மூலம் பெரும் மோசடிகள், குற்றங்கள் நடத்தப்படுகின்றன. அடையாளங்களை திருடியோர், அதன் பிறகு அந்த இணைய தளத்தையே முடக்கிவிடும் நிலையும் ஏற்படுகிறது. இது தொடர்பாக சமீப காலமாக அதிகளவில் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இணைய தள நண்பன் மூலம் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இது தொடர்பான விவகாரங்களில் சைபர் கிரைம் போலீசார் அதிக கவனம் செலுத்தத் துவங்கி உள்ளனர்.

ரொமான்ஸ்' செய்வதற்காக சிலர் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். சாட்டிங்கின் போது, செக்ஸ் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர். இதனால், அவர்கள் மோசடிக்கு ஆளாக நேரிடுகிறது. அத்துடன் மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது. இது போன்ற காரியங்களுக்காக இணையதளத்தை பயன்படுத்துவோர் மனநல நிபுணரிடம் செல்வதும் அதிகரித்துள்ளது. டில்லி ஷ்ரீகங்கா ராம் மருத்துவமனையை சேர்ந்த மனநல டாக்டர் ரமா குமார், `இணைய தளத்தில் செக்ஸ் தொடர்பாக மனநலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு நாளுக்கு 10 பேராவது இந்த பிரச்னையால், என்னிடம் ஆலோசனைக்கு வருகின்றனர்' என்கிறார்.

`இளைஞர்கள், குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது சொந்த விவரங்களை இணையதளத்தில் தெரிவிப்பதன் மூலம் காத்திருக்கும் அபாயத்தை அறியாதவர்களாக உள்ளனர். ஆரம்பத்தில் ஜாலிக்காக இது போன்ற தகவல்களை தெரிவித்து விட்டு, அதன் பின்னர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர்' என்கிறார் ரமா குமார். இதே போல, ஏராளமான பொருள் இழப்புக்கு ஆளாவோர், தங்களை மோசடி செய்து ஏமாற்றியது யார் என்பதை கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிறுவனங்களை நாடுவதும் அதிகரித்து வருகிறது.

சைபர் மோசடியில் அடையாள திருட்டு தொடர்பாக மாதத்துக்கு 10 முதல் 20 பேர் எங்களிடம் ஆலோசனைக்கு வருகின்றனர்' என்கிறார் இந்திய டிடெக்டிவ் ஏஜன்சி என்ற தனியார் துப்பறியும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சஞ்சய் சிங். அவர் மேலும் கூறியதாவது: அடையாளம் திருடப்படுவதை தடுப்பது எப்படி என்று ஆலோசனை கேட்டு ஏராளமானோர் எங்களை அணுகுகின்றனர். சமீபத்தில், ஒருவர் இணையதளத்தின் மூலம் ஏமாற்றப்பட்டார். இணையதளத்தில், தன்னை பாலிவுட் நடிகை என்று கூறிக்கொண்டு, போலியான படத்தை ஒருவர் அளித்துள்ளார். இதை உண்மை என்று நம்பினார் இணையதளத்தை பயன்படுத்தியவர். சில நாட்கள், இணையதளத்தில் சாட்டிங் செய்த பிறகு, நெருக்கமாகிவிட்டார். `எனக்கு இப்போது கடுமையான பண நெருக்கடி. எனக்கு பணம் தேவை. பணத்தை கொடுத்தால், உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன்' என்று ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதை நம்பிய அவர், குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் ஏராளமான பணத்தை செலுத்தி உள்ளார்.

அதன் பிறகு, சம்பந்தப்பட்ட நபர் இணையதளத்தில் வரவே இல்லை. அந்த வங்கிக் கணக்கு யாருடையது, இதில் சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை கேட்டு எங்களை அணுகினார் அந்த இளைஞர். அந்த இளைஞரிடம், இணையதளம் மூலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இன்னொருவர், டெலிகாம் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இணையதளம் மூலம் அவரது அடையாளம் திருடப்பட்டிருக்கிறது. அவரிடம் இல்லாத கிரெடிட் கார்டுக்கு ரூ.15 ஆயிரம் கட்டணம் வந்தது. இது குறித்து வங்கியிடம் கேட்ட போது, கிரெடிட் கார்டை அவரே கையெழுத்து போட்டு வாங்கியிருப்பதும், எல்லாம் முறைப்படி நடந்திருப்பதும் தெரியவந்தது. அவரது அடையாளத்தை பயன்படுத்தி போலி முகவரியில் கிரெடிட் கார்டு பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த கிரெடிட் கார்டு தற்போது முடக்கப்பட்டு விட்டாலும், அந்த 15 ஆயிரம் ரூபாயை இவர் செலுத்தித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை. இவ்வாறு சஞ்சய் சிங் கூறினார்.

இணையதளத்தை பயன்படுத்தும் போது, தங்களின் பிறந்த தேதி, முகவரி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு எண், மொபைல் போன் நம்பர், வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை எக்காரணம் கொண்டும் தெரிவிக்காமல் இருப்பதே நல்லது. அடையாள திருட்டு நான்கு வகைகளில் நடக்கிறது. மற்றவர்களின் தகவல்களை கொண்டு, அவரைப்போல தன்னை அடையாளம் காட்டி மோசடி செய்வது, `குளோனிங்' என்று அழைக்கப்படுகிறது.

மற்றவர்களின் வர்த்தக பெயர்களில் அல்லது வர்த்தக அடையாளங்களை கொண்டு கடன் பெறுவது போன்ற மோசடியில் ஈடுபடுவது, `பிசினஸ், கமர்ஷியல் ஐடென்டிட்டி தெப்ட்' என்று அழைக்கப்படுகிறது. இன்னொருவர் பெயரை துஷ்பிரயோகம் செய்து பணம் பெறுவது, `பைனான்சியல் தெப்ட்' என்று அழைக்கப்படுகிறது. எதாவது ஒரு கிரிமினல் குற்றத்தை செய்து விட்டு அதை இன்னொருவர் மீது சுமத்துவது, `கிரிமினல் ஐடென்டிட்டி தெப்ட்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2000ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் இது போன்ற குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான தண்டனைக்கு அதில் இடம் இல்லை. அடையாள திருட்டில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்குவது, இணையதள சேவை அளிப்போர் மூலம் அதை பயன்படுத்துவோர் பாதுகாப்பு பெறுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவற்றின் மூலமே இது போன்ற குற்றங்களை குறைக்க உதவும்.

அடையாள திருட்டு காரணமாக தனிப்பட்டவர் மட்டுமின்றி, இணையதள சேவை அளிப்போர் மற்றும் வங்கிகளும் பாதிக்கப்படுகின்றன. ஏராளமான முன்னணி நிறுவனங்கள், அடையாள திருட்டுக்கு ஆளாவோர் பாதிப்புக்கு, பெரும் தொகையை நஷ்ட ஈடாக தர வேண்டியுள்ளது. சில நிறுவனங்களின் அடையாளங்களும் கூட திருடப்பட்டு, அதனால், ஏராளமான இழப்புக்கு ஆளாக நேரிடுகிறது. குறிப்பாக இ-காமர்ஸ் என்று அழைக்கப்படும் எலக்டிரானிக் வர்த்தகம் தொடர்பான இணைய தளங்களில் தான் இது போன்ற அடையாள திருட்டுக்கள் மற்றும் மோசடிகள் நடக்கின்றன. ஆன்லைன் வர்த்தக சேவை இணைய தளங்கள், ஆன்லைன் ஏல விற்பனை இணைய தளங்களை குறிவைத்து, அடையாள திருட்டில் ஈடுபடுவோர் மோசடி செய்கின்றனர். இது போன்றவற்றால், கடந்த 2006ம் ஆண்டில் மட்டும் ரூ. 14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெரும் தொகைக்காக அடையாள திருட்டில் ஈடுபடுவோர், மோசடிக்கு பிறகு சம்பந்தப்பட்ட இணையதளத்தையே முடக்கி விடுகின்றனர். இதனால், இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களும் கடும் நிதி இழப்புக்கு ஆளாக நேரிடுகிறது.

நன்றிங்க, தினமலர். 26/10/2007

பொதுவானவை.

Thursday, October 25, 2007

01. இன்று "பெரிய நிலா' காணலாம்

01.வழக்கத்தை விட இன்று "பெரிய நிலா' காணலாம்

மும்பை: இந்தாண்டின் மிகப்பெரிய மற்றும் அதிகம் பிரகாசமான முழு நிலவை இன்றும், நாளையும் காணலாம்.

வானியல் மாற்றங்களை விரும்பிப் பார்க்கும் ஆர்வலர்களுக்கு இன்று விசேஷமான நாள். நிலவு பூமிக்கு வெகு அருகில் வருவதால் இன்று ஏற்படும் முழு நிலவு மிகப் பெரியதாகவும், மிகவும் பிரகாசமாகவும் இருக்கும் என்று "நாசா' விஞ்ஞானி ஒருவர் கூறினார். வழக்கமான பவுர்ணமி நாட்களில் காணப்படும் முழு நிலவைக் காட்டிலும், இன்று வரும் முழு நிலவின் குறுக்களவானது 14 சதவீதம் அதிகமாக இருக்கும். நிலவொளியின் பிரகாசம் வழக்கத்தை விட 30 ச தவீதம் அதிகமாக இருக்கும்.இன்று வரும் முழு நிலவை டெலஸ்கோப்பில் மட்டுமே பார்க்க வேண்டும். வெறும் கண்ணால் நேரடியாக பார்க்கக் கூடாது.

அது கண்களைப் பாதிக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த அதிசய காட்சியை இன்றும், நாளையும் பார்க்கலாம்.இந்நிலையில் சீனா நிலவுக்கு அனுப்பியுள்ள "சாங்கி1' செயற்கைகோள், நிலவொளியின் சுற்று வட்டப்பாதையில் பயணிக்கத் துவங்கியதும் நிலவின் முப்பரிமாண படங்களை அனுப்பும்."இந்தக் காலகட்டத்தில், அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரை சந்திரன் நீள்வட்டப்பாதையில் பயணிக்கும் போது, பூமிக்கு அருகே 48 ஆயிரம் கி.மீ., தொலைவில் வருவதால் அதிக நெருக்கம் இருக்கும். அதனால், நம் பார்வைக்கு சந்திரன் வழக்கத்தை விடப் பெரியதாகவும், அதிக ஒளியுடன் கூடியதாகவும் இருக்கும்' என்று வானியல் அறிஞர் பாரத் அடூர் தெரிவித்தார்.

நன்றிங்க, தினமலர், 25/10/2007

அட..

ஆமா இன்னிக்கு நிலவு பெரிசாகவும் பிரகாசமாகவும் இருக்கு

04.தமிழ் வகுப்புக்கு ஆங்கிலத்தில் தேர்வு!?

04.தமிழ் மீடியம் படிக்கலாம்; ஆனால், ஆங்கிலத்தில் தேர்வு எழுதணும்:

மும்பையில் இப்படி ஒரு விசித்திர உத்தரவு

மும்பை: பத்தாம் வகுப்பு வரை, தமிழ் "மீடியத்தில்' படிக்கலாம்; ஆனால், அந்த ஆண்டு நடக்கும் பொதுத்தேர்வில் ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும்! முதன் முறையாக, தமிழ் "மீடியம்' படிக்க, மூன்று செகண்டரி பள்ளிகளை ஆரம்பித்துள்ள மும்பை மாநகராட்சி கல்வித்துறை தான் இப்படி ஒரு விசித்திரமான உத்தரவை போட்டுள்ளது. தமிழ் மக்கள் கணிசமாக உள்ள மாதுங்கா, தாராவி, ஆரே காலனி ஆகிய பகுதிகளில், தமிழ் "மீடியம்' பள்ளி வேண்டும் என்று பல ஆண்டாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்ததற்கு இப்போது தான் விடிவு வந்துள்ளது. இந்த மூன்று பள்ளிகளிலும், 350 தமிழ் மாணவர்கள், தமிழ் "மீடியம்' எடுத்து படிக்கின்றனர்.

ஆனால், பள்ளிகள் திறந்தாலும், போதிய தமிழ் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பாட புத்தகங்களும் கூட சரிவர அளிக்கப்படவில்லை. இதுகுறித்து மாநகராட்சி துணை கமிஷனர் ஷிண்டே கூறுகையில், "ஏழை தமிழ் மாணவர்களுக்காக இந்த மூன்று பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு ,மாணவர்கள் தமிழ் "மீடியம்' படித்து வந்தாலும், பத்தாவது தேர்வில் அவர்கள் ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுதுவர்.

ஏழாவது வரை, தமிழ் மீடியம் படித்தாலும், எட்டாவதில் இருந்து அவர்கள் ஆங்கிலத்துக்கு மாறலாம். இல்லையெனில், பத்தாவது வகுப்புவரை தமிழ் மீடியத்தில் இருந்து விட்டு, தேர்வில் மட்டும் ஆங்கிலத்தில் எழுதவும் செய்யலாம்' என்றார். மும்பையில் இதுவரை, ஆரம்பப்பள்ளிகளில் மட்டும் தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. இப்போது தான் முதன் முறையாக, செகண்டரி பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு, தமிழ் "மீடியம்' வசதி செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, ஷெரான் உயர் நிலைப்பள்ளி உட்பட இரு பள்ளிகளில், தமிழ் மாணவர்கள், ஆங்கிலத்தில் பத்தாவது வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். எல்லாரும் தோல்வி அடைந்துவிட்டனர். ஆனால், மாநகராட்சியோ, இப்போது, பத்தாவது வரை தமிழில் படித்துவிட்டு, அந்தாண்டு பொதுத்தேர்வை ஆங்கிலத்தில் எழுதச் சொல்வது, தமிழ் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பைத் தான் ஏற்படுத்தும் என்று பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். "பத்தாவது வகுப்பு பொதுத்தேர்வையும் தமிழில் நடத்தும்படி கோரிக்கை வந்துள்ளது. ஆனால், அது செயல்படுத்த முடியாதது. அப்படி ஒரு திட்டத்தை மாநகராட்சி பரிசீலிக்கவில்லை' என்று மாநகராட்சி கல்வி துறை அதிகாரிகள் சிலர் கூறினர்.

நன்றிங்க, தினமலர், 25/10/2007

பாவம் மாணவர்கள்! :(

Wednesday, October 24, 2007

02.அண்ணனை திருமணம் செய்த தங்கை

02.அண்ணனை திருமணம் செய்த தங்கை பீகாரில் "கலி முத்திப்போச்சு'

ஆரா :சொந்த அண்ணனை திருமணம் செய்து கொண்டாள் தங்கை. பீகார் மாநிலத்தில், "கலி முத்திப்போன' இந்தசம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஆரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரீனா. சமீபத்தில், இவர் வீட்டை விட்டு வெளியேறி, காணாமல் போய்விட்டார்.போலீசில் புகார் செய்தனர் பெற்றோர். புகாரை விசாரித்த போலீசார், பக்கத்து கிராமத்தில், தகித் யாதவ் என்பவர் வீட்டில், ரீனாவை கண்டுபிடித்தனர்.

அவரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. போலீசில் தன் வாக்குமூலத்தை எழுதித் தந்தார் ரீனா." என்னை யாரும் கடத்தவில்லை. ஆறு மாதம் முன் , நான் என் அண்ணன் கிருஷ்ண ராமை திருமணம் செய்து கொண்டேன். அவர், குஜராத் மாநிலம் சூரத்தில் பிழைப்புக்காக போயிருக்கிறார். அதனால், தன் நண்பர் யாதவ் வீட்டில் என்னை பாதுகாப்பாக தங்க வைத்துச் சென்றுள்ளார்' என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

வாக்குமூலத்தை வாங்கிக் கொண்ட போலீசார், ரீனாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் முன், ரீனா வாக்குமூலம் தந்தார். ரீனா விவகாரம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.ரீனா மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யுமுன், அவர் பெற்றோரிடம் இருக்க அனுமதிக்கப்பட்டார். சூரத்தில் உள்ள அவரது அண்ணனை தேடிக் கொண்டு வரும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.பீகார் மாநிலத்தில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிங்க, DINAMALAR 24/10/2007

என்னத்த சொல்ல...!

Tuesday, October 23, 2007

சிரஞ்சீவிக்கு சந்திரபாபு நாயுடு ஆறுதல்!

சிரஞ்சீவிக்கு சந்திரபாபு நாயுடு ஆறுதல்

மகள் காதலருடன் கல்யாணம் செய்து கொண்ட சோகத்தில் இருக்கும் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியையும், அவரது மனைவியையும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்வரியுடன் சென்று ஆறுதல் கூறினார். அவரிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, தனது காதலர் சிரீஷ் பரத்வாஜுடன் ரகசியக் கல்யாணம் செய்து கொண்டு தலைமறைவாக இருக்கிறார். தனது தந்தையால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்தார். அதை ஏற்ற நீதிமன்றம், ஸ்ரீஜாவுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. சிரஞ்சீவிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனது மகளை மன்னித்து விட்டதாகவும், அவரது திருமணத்தை அங்கீரித்து விட்டதாகவும், எங்கிருந்தாலும் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வர வேண்டும் எனவும் ஆந்திர பத்திரிக்கைகள் மூலம் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும் இன்னும் கூட மகள் தந்த அதிர்ச்சியிலிருந்து சிரஞ்சீவ மீளவில்லை. எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். சிரஞ்சீவியின் குடும்பத்தினர் பெரும் சோகத்திலும், அவமானத்திலும் கூனிக் குறுகிப் போயுள்ளனர்.

பெரும் சோகத்தில் இருக்கும் சிரஞ்சீவி குடும்பத்தினரை திரையுலகினரும், அரசியல்வாதிகளும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், சிரஞ்சீவியை ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்வரியுடன் சென்று சந்தித்தார். என்.டி.ராமராவின் மகள்தான் புவனேஸ்வரி. அவரும் சிரஞ்சீவியின் மனைவி சுரேகவும் நீண்ட நாளைய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயுடுவையும், புவனேஸ்வரியையும் பார்த்த சிரஞ்சீவி தம்பதியினர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். அவர்களைத் தேற்றிய நாயுடுவும், சுரேகாவும் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனராம்.

நன்றிங்க

வெள்ளத் திரையில் ஏழையாக பரோபகாரியாக வரும் கதாநாயகன், பணக்கார வில்லனின் மகளைக் காதலிப்பார். அதற்காக வில்லனிடமிருந்து எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அவையனைத்தையும் முறியடித்து காதலியைக் கைபிடிப்பார் நாயகன். திரையரங்குகளில் இதைப் பார்த்து விட்டு வேளியேறும் ரசிகப் பெருமக்கள் ஆஹா...பிரமாதம் என்னதான் இருந்தாலும் காதலியைக் கைவிடவில்லை பாருங்கள் அங்குதான் நாயகன் நிற்கிறார் என்று காதலுக்கு சென்டிமெண்ட் வழங்குவார்கள்.

பணக்காரப் பெண்ணை சாதாரண ஏழையாகிய நாயகன் காதலித்து காதலியின் சம்மதத்தோடு கடத்திச் சென்றுத் திருமணம் செய்து குடும்பம் நடத்துவார் இது வெள்ளித் திரையில் காதல் தெய்வீகமானது என்று வர்ணிக்கப்டும் இந்தக் காதல் வர்ணனைகள் எல்லாம் வெள்ளித் திரையோடு சரி நிஜவாழ்க்கையில் அந்த நாயகனும் தன் மகள் காதல் விஷயத்தில் வில்லானாகி விடுகிறார் பாருங்கள்.

காதலித்தால் அது அவமானமில்லீங்க என்ற தத்தவ வசனங்கள் வெள்ளித்திரையோடு முடிந்து விடுகிறது.

வெள்ளத் திரை வாழ்க்கை வேறு, நிஜ வாழ்க்கை வேறுங்க.

Friday, October 19, 2007

மனைவி சித்ரவதை தாங்க முடியலை...

மனைவி சித்ரவதை தாங்க முடியலை போலீசில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி புகார்

மும்பை: சப்இன்ஸ்பெக்டராக உள்ள தன் மனைவி, தன்னை சித்ரவதை செய்வதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில மீன் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் அமிதாப் ஜோஷி; இவரது மனைவி வீணா சாவ்கர். இவர், மகாராஷ்டிர போலீசில் சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தன்னையும், தன்னுடைய தாயாரையும் வீணா சாவ்கர் அடித்து துன்புறுத்துகிறார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்தால், என் மனைவி அதிகாரியாக உள்ளதால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர், என்ற பரபரப்பான குற்றச்சாட்டை அமிதாப் ஜோஷி கூறியுள்ளார்.

அமிதாப் ஜோஷி இக்குற்றச்சாட்டை கூறிய சில மணி நேரங்களில் அவரது மனைவி வீணா சாவ்கர் பேட்டியளிக்கையில், என்னுடைய கணவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை கொடுமைப்படுத்துகிறார். எனவே, அவர் மீது வீட்டு வன்முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் செய்துள்ளேன். தன் மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரையடுத்து அமிதாப் ஜோஷிக்கு பாதுகாப்பு வழங்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நன்றிங்க, DINAMALAR 19/10/2007

கணவன், மனைவி இருவரும் நன்றாகப் படித்தவர்கள். படிப்பும் பணமும் பதவியும் சமூக அந்தஸ்தும் இவர்களைப் பண்படுத்தவில்லையே என்ன செய்வது?

Wednesday, October 17, 2007

பிறந்த குழந்தையைக் கொன்ற தந்தை!!

பிறந்த குழந்தையைக் கொன்ற தந்தை!!

புதன்கிழமை, அக்டோபர் 17, 2007

கடையநல்லூர்:

மனைவியுடன் அடிக்கடி சண்டை வருவதற்கும், ராசியில்லாததற்கும் பிறந்த குழந்தைதான் காரணம் என்று நினைத்ததால் ஆத்திரத்தில் குழந்தையை நானே கழுத்தை நெரித்துக் கொன்றேன் என்று குழந்தையின் தந்தை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்சாமி மகள் மகேஷ்வரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் சில நாட்கள் மட்டுமே இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன் பிறகு கணவன் மனைவி இடையே தேவையில்லாமல் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவசத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார். அவருக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஸ்ரீமதி என பெயரிட்டனர்.

குழந்தை பிறந்து 4 மாதமே ஆன நிலையில் மனைவியையும், குழந்தையையும் தனது வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக முத்துபாண்டி நேற்று முன்தினம் மாமனார் வீட்டிற்கு வந்தார். சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளதால் இன்னும் ஒரு சில மாதங்கள் கழித்து அவரை அழைத்து செல்லலாம் என்று மகேஷ்வரியின் உறவினர்கள் முத்துபாண்டியிடம் கூறினர்.

இந்நிலையில் நேற்று காலை மீண்டும் மனைவி வீட்டிற்கு சென்ற முத்துப்பாண்டி தனது வீட்டிற்கு வருமாறு மகேஷ்வரியை அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. உறவினர்கள் தலையிட்டு சமரசப்படுத்தினர்.

பின்னர் முத்துப்பாண்டி குழந்தையை மட்டும் தனது வீட்டிற்கு தூக்கி சென்றார். குழந்தையுடன் சென்ற கணவர் வெகுநேரமாகியும் வராததால் அதிர்ச்சியடைந்த மகேஷ்வரி உறவினர்களை அனுப்பி குழந்தையை தூக்கி வருமாறு கூறினார். இதையடுத்து முத்துபாண்டி வீட்டிற்கு உறவினர்கள் சென்றனர். அங்கு மூக்கில் ரத்தம் கசிந்த நிலையில் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உறவினர்கள் போலீசில் புகார் கூறியதால், கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துபாண்டியை கைது செய்தனர். விசாரணையில் போலீசாரிடம் முத்துப்பாண்டி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

மனைவி மகேஷ்வரி கருவுற்றிருக்கும் போதே குழந்தை ஜனித்த நேரம் சரியில்லை. கருவை கலைத்து விடுவோம் என்று கூறினேன். அதற்கு அவளும், அவளது குடும்பத்தாரும் சம்மதிக்கவில்லை. குழந்தை உருவானதில் இருந்தே எனக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குழந்தை பிறந்ததும் ஜாதகம் பார்த்ததில் ஜோசியர் குழந்தை பிறந்த நேரத்தால் உங்கள் இருவருக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.

இந்நிலையில் ஏற்கனவே கடந்த 15ம் தேதி மனைவியையும் குழந்தையையும் அழைக்க சென்றேன். இன்னும் சில மாதங்கள் ஆகட்டும் என்று மாமனாரும், மாமியாரும் கூறி விட்டனர்.

மீண்டும் நேற்று அழைக்க சென்றேன். ஏமாற்றமே மிஞ்சியது. ஜோசியர் கூறியபடி மனைவியையும் என்னையும் பிரிப்பது குழந்தைதான் என்று நினைத்து குழந்தை மீது ஆத்திரம் வந்தது.

இந்த குழந்தை இருந்தால் குடும்பத்திற்கு நல்லதல்ல என்று நினைத்ததால் குழந்தையை என்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்து கழுத்தை நெரித்து கொன்றேன் ஓன வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

நன்றிங்க

//குழந்தை பிறந்ததும் ஜாதகம் பார்த்ததில் ஜோசியர் குழந்தை பிறந்த நேரத்தால் உங்கள் இருவருக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.//

அடப் பாவிகளா...!

Tuesday, October 16, 2007

17.10.2007 இன்று ஏழ்மை ஒழிப்பு தினம்

இந்தியா

01. இன்று ஏழ்மை ஒழிப்பு தினம்


ஆண்டுதோறும் ஏழ்மை ஒழிப்பு தினம் அக். 17ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஏழ்மை ஒழிப்பு குறித்த திட்டங்கள் வகுக்கவும், ஏழ்மை காரணமாக மரணமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் ஐ.நா., சபை ஏழ்மை ஒழிப்பு தினத்தை அறிவித்துள்ளது. அடிப்படை வசதிகளும், கல்வியும் அனைவருக்கும் கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பசியும் ஏழ்மையுமே உலகில் ஒவ்வொரு மூன்று வினாடிக்கும் ஒரு குழந்தையின் மரணத்துக்கு காரணமாக அமைகிறது என்றால் நம்புவீர்களா? 2004ல் சுனாமியால் ஏற்பட்ட மரணங்களுக்கு இணையான எண்ணிக்கையில் ஒவ்வொரு வாரமும் குழந்தைகள் மரணமடைகின்றனர். இங்கு குழந்தைகள் என குறிப்பிடப்படுபவர்கள் 5 வயதுக்கு உட்பட்டவர்களே. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளையும், பெரியவர்களையும் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் கணிசமான அளவு உயரும்.

வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 12 கோடிக்கு மேல். உலக நாடுகள் ராணுவ தளவாடங்கள் வாங்கும் செலவில் ஒரு சதவீதத்தை ஒதுக்கினால் உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழி செய்து விடலாம் என திட்டமிடப்பட்டது. எனினும் அனைவருக்கும் கல்வி என்பது இன்று வரை கனவாகவே உள்ளது.

வசதிபடைத்தவர் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துக்கொண்டே வருகிறது. வளராத 48 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவு. உலக பணக்காரர்களில் 20 சதவீதம் பேர் உலகின் மொத்த வளங்களில் 86 சதவீதத்தை கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு கிடைப்பது வெறும் 14 சதவீதம் மட்டுமே.

ஏழ்மைக்கு முக்கிய காரணமாக ஊழல் உள்ளது. ஏழை நாடுகளின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள ஊழலை வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அதிகாரிகளை வளைக்கவும், ஒப்பந்தங்களை கைப்பற்றவும் முறைகேடான வழிகளில் பணத்தை செலவிடும் இந்த நிறுவனங்கள் ஏழை நாடுகளின் குடிமக்களின் வரிப்பணத்தை தெரிந்தே சுரண்டுகின்றன.குற்றங்கள் அதிகரிக்க ஏழ்மையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏழ்மையும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த சமூகத்தில், வன்முறையையும், குற்றங்களையும் தவிர்க்க முடியாது.

நன்றிங்க

பொதுவானவை

01. "ஹாய்... ஹாய்... குதிரை தான்!

01. பைக்... காரை உதறினார்; இப்போது, "ஹாய்... ஹாய்... குதிரை தான்!' : கேரள ரியல் எஸ்டேட் உரிமையாளரின் புரட்சி இது

திருவனந்தபுரம் : பல்லாங்குழி சாலைகளைக் கடந்து, ஆபீஸ் சேருவதற்குள், போதும் போதுமென்றாகி விடுகிறது என்று சலித்துப்போன, கேரளவாசி ஒருவர், பைக், காரை உதறி, இப்போது, குதிரைக்குத் தாவி விட்டார்.ஆம்!

திருவனந்தபுரம் எம்.ஜி.,ரோடில் தினமும் இவர், "பிரீப்கேஸ்' சகிதமாக, குதிரையில் சவாரி செய்து, ஆபீஸ் போவதை காணலாம்.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் நூருதீன் மத்தார். பைக்கில், தினமும், நான்கு கி.மீ., கடந்து, ஆபீசில் உட்காருவதற்குள் பெரும்பாடாகி விடுகிறது. எம்.ஜி., ரோடில், பல இடங்களில், வெட்டிப் போடப்பட்ட பள்ளங்களால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பைக்கை விட்டு, காருக்கு தாவினார்.

ஒரு நாள், பள்ளத்தில் கார் சிக்கி, பெரும்பாடாகி விட்டது. அதனால் காரையும் விட்டார். மீண்டும் சில நாள் பைக்கில் சென்று வந்தார். சமீப மழையில், சாலையில் ஆங்காங்கு அரிப்பு. குண்டு, குழிகளுக்கு பஞ்சமில்லை. பைக்கை ஓட்டிச்செல்வதே சிரமம். இந்த லட்சணத்தில், சாலையில் சேறு "அபிஷேகத்தையும்' சகிக்க வேண்டிய நிலை. பார்த்தார் நூருதீன்; ஒரு அதிரடி முடிவுக்கு வந்தார்.

ஏற்கனவே, குதிரை சவாரியில் விருப்பமுள்ள அவர், பெங்களூரு நகரில் 40 ஆயிரம் ரூபாய் தந்து, ஒரு குதிரையை வாங்கினார். ஒரு பயிற்சியாளரை அமர்த்தி, சாலையில் குதிரை சவாரி செய்ய, தேவையான பயிற்சியை பெற்றார். ஒரு வாரத்தில், அவர் குதிரை சவாரியில் தேறி விட்டார். இப்போது, தினமும், குதிரையில் ஆபீசுக்கு செல்கிறார் நூருதீன். "நான்கு சக்கர' வாகனத்தைவிட, "நான்கு கால்' வாகனம், செலவும் வைப்பதில்லை; குறித்த நேரத்திலும் போய்ச் சேருகிறது' என்று பெருமிதப்படுகிறார்.

"குதிரையில் சவாரி செய்து, ஆபீஸ் போகும் போது, முதல் நாள் மட்டும் தான் தயக்கமாக இருந்தது. சிலர் கேலியாக பார்த்தனர்; சிலர் என் துணிச்சலை பாராட்டினர். எனக்கோ, குறித்த நேரத்தில், ஆபீஸ் போக முடிகிறது. பெட்ரோல் செலவும் மிச்சம். பள்ளங்களில் விழுந்தெழ வேண்டியதும் இல்லை' என்றும் மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் நூருதீன்.

நன்றிங்க

இரு சக்கரம் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினால் தான் செலவு.

நான்கு கால் குதிரையை ஓட்டினாலும் ஓட்டாமல் நிறுத்தினாலும் தீனி போட்டாகனும்.

வாகனம் நிறுத்தமிடங்களில் எத்தனை நாள் வேண்டுமானலும் வாகனத்தை நிறுத்திவிட்டு பிறகு எடுத்துக்கொள்ளலாம். நான்கு கால் குதிரையை வாகன நிறுத்துமிடத்தில் அனுமதிப்பாங்களா? அப்படியே அனுமதிச்சாலும் அதற்கு சாப்பாடு வசதி செய்வது எப்படி? அது போடும் சாணத்தை சுத்தம் செய்வது யார்? என்ற சிக்கலெல்லாம் ஏற்படுமே.

எப்படியோ, வாகனம் நிறுத்துமிடம் மாதிரி, நாளை குதிரைகள் பெருகினால் ''குதிரைகள் நிறுத்திமிடம்'' என்று தோன்றாமலாப் போய்விடும்.

3. ஊட்டி மலை ரயில்!!

100 வயதைத் தொட்டது ஊட்டி மலை ரயில்!!



செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2007

ஊட்டி:

மேட்டுப்பாளையத்திற்கும், ஊட்டிக்கும் இடையிலான மலை ரயில் 100 வயதைத் தொட்டுள்ளது. இதையொட்டி ஊட்டி ரயில் நிலையத்தில் கேக் வெட்டி மலை ரயிலின் பிறந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியின் அழகுக்கு அழகூட்டும் ஒரு அம்சம் மலை ரயில். நீண்டு நெளிந்து கிடக்கும் மலைகளின் ஊடாக, ஜிகுஜிகுவென மெல்ல மெல்ல அசைந்து போகும் மலை ரயிலில் பயணம் செய்யாவிட்டால் ஊட்டி பயணம் நிச்சயமாக நிறைவு பெறாது.

100 வருடங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலை ரயில் பாதை அமைக்கப்பட்டது. பின்னர் இந்த ரயில் பாதை ஊட்டி வரை நீடிக்கப்பட்டது.

கடந்த 2005ம் வருடம் உலக பாரம்பரிய சின்னமாக ஊட்டி மலை ரயில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உலக சுற்றுலா வரைபடத்தில் ஊட்டி மலை ரயிலும் இடம் பெற்றது.

நீலகிரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் இந்த மலை ரயிலில் பயணம் செய்கிறார்கள். மலை ரயில் ஊட்டிக்கு இயக்கப்பட்டு 99 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. நேற்று 100வது ஆண்டு துவங்கியது.

இதையொட்டி நீலகிரி பாரம்பரிய மலை ரயில் அறக்கட்டளை சார்பில் ஊட்டி ரயில் நிலையத்தில் விழா நடைபெற்றது. விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் மிஸ்ரா கலந்து கொண்டார். இந்த விழாவில் கேக் வெட்டி அங்கு வந்த அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் கொடுக்கப்பட்டது.

நீலகிரி பாரம்பரிய ரயில் அறக்கட்டளை தலைவர் நடராஜ் பின்னர் கூறுகையில், தற்போது ஊட்டி-குன்னூர் இடையே டீசல் இன்ஜின் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சுற்றுலா பயணிகள் நீராவி இன்ஜினில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள்.

பழைய பாரம்பரியம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் மீண்டும் ஊட்டி-குன்னூர் இடையே நீராவி இன்ஜின்களை இயக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

நன்றிங்க

நீலகிரி மலையில் நீல நிறத்தில் ஊர்ந்து செல்லும் அந்த புகை வண்டியில் அமர்ந்து செல்லும் சுகமே தனி!

2. மாணவியை அடித்துக் கொன்ற ஆசிரியர்!

காதலிக்க மறுத்த மாணவியை அடித்துக் கொன்ற ஆசிரியர்

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2007

நகரி:

தன்னை காதலிக்க மறுத்த மாணவியை ஆசிரியர் அடித்தே கொன்றுள்ளார். ஆந்திர மாநிலத்தில் இச் சம்பவம் நடந்தது.

ஆந்திர மாநிலம் நகரி அருகே உள்ள நாகுலபாலேனி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு(29). இவர் பர்னூர் என்ற ஊரில் உள்ள ஜூனியர் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

தில்ஷாத் பேகம் (18) என்பவர் இதே ஜூனியர் கல்லூரியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். தில்ஷாத் பேகத்தை, ஆசிரியர் ஆஞ்சநேயலு ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார்.

இதனால் கல்லூரி வளாகத்தில் அந்த மாணவியிடம் எந்த மாணவராவது பேசினால் அவர்களை அழைத்து அடித்து உதைத்துள்ளார் ஆஞ்சநேயலு.

ஆனால், தில்ஷாத் நான் உங்களை காதலிக்கவில்லை. என்னை விட்டு விடுங்கள் என்று ஆஞ்சநேயலுவிடம் கூறியுள்ளார்.

இதனால் வெறுத்துப் போன ஆஞ்சநேயலு தில்ஷாத் பேகத்தை தனது வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்துள்ளார். அங்கு வந்த தில்ஷாத்திடம் கடைசியாக கேட்கிறேன், நீ என்னை காதலிக்கிறாயா, இல்லையா என்று மிரட்டியுள்ளார்.

தில்ஷாத் இல்லை என்று கூறவே அங்கிருந்த உருட்டுக் கட்டையால் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து அங்கேயே பலியானார் தில்ஷாத்.

இதையடுத்து ஆஞ்சநேயலுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்றிங்க

எதுவும் தானாக கனிய வேண்டும்.

இரு விமானங்கள் மோதல்.

லண்டன் விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2007

லண்டன்:

லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இரு விமானங்கள் ரன் வே அருகே மோதிக் கொண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

டாக்சி வே பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் இலங்கை நாட்டு விமானங்கள் மோதிக் கொண்டன.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 747 விமானம் சிங்கப்பூருக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தது. அதே போல இலங்கையின் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ340 விமானம் கொழும்புக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது.

டேக்-ஆப் செய்வதற்காக விமானங்கள் வரிசையாக ரன்வே நோக்கி சென்று கொண்டிருந்தன. அப்போது இந்த இரு விமானங்களின் இறக்கைகளும் மோதிக் கொண்டன. இலங்கை விமானத்தில் 286 பயணிகள் இருந்தனர். பிரிட்டிஷ் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்று தெரியவில்லை.

டாக்சிவேயில் நடந்த இந்த மோதலையடுத்து இரு விமானங்களும் பயங்கரமாக அதிர்ந்தன. அச்சத்தில் பயணிகள் கூச்சலிட்டனர்.

இச் சம்பவத்தையடுத்து இரு விமானங்களின் பயணிகளும் அவசர அவசரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர். இச் சம்பவத்தால் யாரும் காயமடையவில்லை.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் பின் பகுதியும் ஒரு பக்க இறக்கையும் சேதமடைந்துவிட்டது.

நன்றிங்க

வர வர கார் விபத்துகள் மாதிரி விமான விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது.

Saturday, October 13, 2007

ரம்ஜான் வாழ்த்துக்கள்!

தமிழகத்தில் நாளை ரம்ஜான்

சனிக்கிழமை, அக்டோபர் 13, 2007

சென்னை:

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமைக் காஜியார் அறிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் சில பகுதிகளிலும் நேற்றே ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமைக் காஜியார் முகம்மது சலாகுதீன் அயூப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷவ்வால் மாதப் பிறை நேற்று தென்படவில்லை. எனவே ரம்ஜான் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதேபோல டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் இதர பகுதிகளிலும் நாளை ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.

நன்றிங்க

ரம்ஜான் வாழ்த்துக்கள்!

Thursday, October 11, 2007

அஜ்மீர் தர்ஹாவில் குண்டுவெடிப்பு

அஜ்மீர் தர்ஹாவில் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 12, 2007

அஜ்மீர்:

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற சுஃபி வழிபாட்டுத் தலமான காஜா மொய்னுதீன் சிஷ்டி தர்ஹா வளாகத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 3 பேர் பலியானார்ள். 17 பேர் படுகாயமடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ரம்ஜான் மாதம் என்பதால் ஆஜ்மீர் தர்ஹாவில் தற்போது கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் நோண்பு முடிந்து, இப்தார் தரும் வேளையில் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது.

அதேபோல நேற்று மாலையும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் நோண்பு முடித்து இப்தாருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு 7.16 மணியளவில் தர்ஹா வளாகத்தில் பலத்த சப்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. பள்ளிக்கூட பையில் இருந்த டிபன் பாக்சில் அந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.

இதில் நோண்பு முடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டுக்களை தூக்கி வீசி விட்டு அனைவரும் உயிர் தப்பிக்க ஓடினர். அந்த இடமே பெரும் கூட்ட நெரிசலில் சிக்கியது.

இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் முகம்மது சோயீப் (45). மும்பையைச் சேர்ந்தவர். தர்ஹாவில் வழிபாடு செய்ய அவர் வந்திருந்தார் என்பது தெரிய வந்தது. மேலும் இருவரும் இதில் உயிரிழந்தனர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்ஹாவின் முக்கிய வழிபாட்டுப் பகுதிக்கு வெகு அருகே குண்டுவெடித்ததால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது ஒரு திட்டமிட்ட தீவிரவாதச் செயல் என போலீஸார் தெரிவித்துள்ளனர். தர்ஹா வளாகத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்திற்குக் கீழே வைக்கப்பட்டிருந்த பள்ளிக்கூட பையில்தான் குண்டு இருந்ததாகவும், போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இடம் முக்கிய வழிபாட்டுத் தலமான சுஃபி துறவி காஜா மொய்னுதீனின் சமாதிக்கு வெகு அருகே உள்ளது. ஆனால் குண்டுவெடிப்பில் சமாதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

அரசியல் கட்சிகள் கண்டனம்:

ஆஜ்மீர் தர்ஹாவில் நடந்த குண்டுவெடிப்பை பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மோகன் பிரகாஷ் கூறுகையில், இது மிகவும் சோகமானது, துரதிர்ஷ்டவசமானது. இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயலாகும் என்றார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.பி. சச்சின் பைலட் கூறுகையில், அனைத்து சமூகத்தினரும் அமைதி காக்க வேண்டும். இந்தியாவின் ஒற்றுமையை, ராஜஸ்தான் மாநிலத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க நடந்த சதி இது. இதை அனைவரும் ஒற்றுமையாக இருந்து தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் கூறுகையில், புனிதமான ரமலான் மாதத்தில் இதுபோல நடத்தப்பட்டிருப்பதை அனைவரும் கண்டிக்க வேண்டும். இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், இது கோழைத்தனமான தாக்குதல். மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக மிகவும் மென்மையாக நடந்து கொள்வதால்தான் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட தீவிரவாதிகள் துணிகிறார்கள். ஆஜ்மீர் தர்ஹா சம்பவம் இன்னும் ஒரு தீவிரவாத செயலுக்கு வித்திட்டுள்ளது என்றார்.

நன்றிங்க

பொதுவானவை

Tuesday, October 09, 2007

ரம்ஜான் வசூலுக்காக "மேக்கப்'



வரும் செய்தி கொஞ்சம் பழசுதான், படத்துக்கு பொருத்தமாகத் தோணுவதால் மீண்டும்...

ரம்ஜான் வசூலுக்காக "மேக்கப்' மாற்றம்"

பியூட்டி பார்லர்' செல்லும் பிச்சைக்காரர்கள்

இன்டர்நெட்டில் 1ம் வகுப்பு முதல் +2 பாடங்கள்

இன்டர்நெட்டில் 1ம் வகுப்பு முதல் +2 பாடங்கள்

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 9, 2007

சென்னை:

தமிழக அரசின் தமிழ்நாட்டுப் பாடல் நூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

பள்ளிப் பாடநூல்களை 1970 முதல் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டு வருகிறது. அரசு மற்றும் மானியம் பெறும் பள்ளிகளுக்கு மாநில மொழி பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட நூல்களை வழங்குகிறது.

இந்த நிலையில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தப் பாடநூல்களை காண செல்ல வேண்டிய இணையதளம்

www.textbooksonline.tn.nic.in

நன்றிங்க

பொதுவானவை

Sunday, October 07, 2007

3. ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்.

கர்நாடகத்தில் திடீர் திருப்பம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்.

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 7, 2007

பெங்களூர்:

கர்நாடக அரசியலில் புதிய திருப்பமாக, ஆட்சி அமைக்க உரிமை கோரி காங்கிரஸ் கட்சி, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளது.

குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதள அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ள பாஜக நேற்று தீர்மானித்தது. இதையடுத்து துணை முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக தலைவர்கள், இன்று காலை மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக அளித்தனர்.

இதையடுத்து குமாரசாமி அரசு சிறுபான்மை அரசாக மாறியது. ஆனால் மக்களை சந்திக்கத் தயாராக இருப்பதாக குமாரசாமி அறிவித்தார். ஆளுநரை சந்திக்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக குழுவினர் ஆளுநரை சந்தித்து விட்டுச் சென்ற சில மணி நேரங்களில் காங்கிரஸ் சட்டசபைக் கட்சி செயலாளர் ரமேஷ்குமார் தலைமையிலான குழு ஆளுநரை சந்தித்தது.

அப்போது, கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஆளுநரிடம் கடிதத்தைக் கொடுத்தார் ரமேஷ்குமார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளதால் கர்நாடக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு தரப் போகிறதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

நன்றிங்க

எப்படியோ இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துக்காவது தேர்தலை சந்திக்காம ஆட்சிய ஓட்டங்கப்பா!

2. கூட்டணி சதி - கூறுகிறார் வேதாந்தி!

தோரியத்தை 'திருடி' அமெரிக்காவுக்கு விற்க காங். கூட்டணி சதி - கூறுகிறார் வேதாந்தி!

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 7, 2007

கோண்டா (உ.பி.):

ராமர் பாலப் பகுதியில் நிறைந்து கிடக்கும் தோரியத்தை திருட்டுத்தனமாக எடுத்து விற்கவே ராமர் பாலத்தை இடிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முயல்கிறது என்று சர்ச்சை சாமியார் வேதாந்தி கூறியுள்ளார்.

ராமர் குறித்துக் கருத்துக் கூறிய முதல்வர் கருணாநிதியின் தலைக்கும், நாக்குக்கும் விலை வைத்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர் வி.எச்.பி.யைச் சேர்ந்தவரும், முன்னாள் பாஜக எம்.பியுமான ராம் விலாஸ் வேதாந்தி.

வேதாந்தி தலைமையில் உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா நகரில், ராமர் பால பாதுகாப்பு பாதயாத்திரை நடந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேதாந்தி பேசுகையில், ராமர் பாலம் உள்ள பகுதியில் பெருமளவில் தோரியம் கிடைக்கிறது. இந்த தோரியத்தை எடுத்து அமெரிக்காவுக்கு திருட்டுத்தனமாக விற்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ரகசிய சதித் திட்டம் தீட்டியுள்ளது. இதற்காகத்தான் ராமர் பாலத்தை உடைக்க துடிக்கிறார்கள்.

இந்தக் கூட்டுச் சதியில் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, அம்பிகா சோனி, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு தொடர்பு உள்ளது.

கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளோடு தொடர்புடையது ராமர் பாலம்.

டெல்லியில் ராமேஸ்வரம் யாத்திரை நடக்கவுள்ளது. அதில் நாங்கள் பெரும் திரளாக பங்கேற்போம் என்றார் அவர்.

நன்றிங்க

// தோரியத்தை எடுத்து அமெரிக்காவுக்கு திருட்டுத்தனமாக விற்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ரகசிய சதித் திட்டம் தீட்டியுள்ளது.//

ஆஹா...

இதுவரை உதிர்க்காத முத்துக்கள்.

இதுக்காக பேச்சு வார்த்தை நடத்தவே சோனியாவும் சமீபத்தில் அமெரிக்கா சென்றார் என்பதையும் சேர்த்து உதிர்க்கட்டும்.

அண்ணன் மகளை கற்பழித்த கொடூர தம்பி!

மனைவியின் துணையுடன் அண்ணன் மகளை கற்பழித்த கொடூர தம்பி!

திங்கள்கிழமை, அக்டோபர் 8, 2007

வேலூர்:

மகள் முறையாகும் தனது அண்ணன் மகளை, மனைவியுடன் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த காமக் கொடூர வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அரக்கோணத்தை அடுத்துள்ள உரியூரை சேர்ந்தவர் சூசைராஜ். இவரது மகள் வேளாங்கண்ணி (18). சூசைராஜின் தம்பி ஆரோக்கியசாமி. இவருக்கு திருமணமாகி மார்கரெட் என்ற மனைவியும் இருக்கிறார். இவர் சென்னையில் ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அண்ணன், தம்பி இருவரின் வீடும் அருகருகில் உள்ளது. சூசைராஜின் வீடு சமீபத்தில் பெய்த மழையின் இடிந்து விழுந்து விட்டதால், ஆரோக்கியசாமியின் வீட்டிற்கு அருகில் குடிசை போட்டு தங்கியிருந்தனர்.

இந் நிலையில் அண்ணன் மகள் வேளாங்கண்ணியின் மீது ஆரோக்கியசாமியின் காமக் கொடூர வக்கிரப் பார்வை விழுந்துள்ளது. இதை மனைவி மார்கரெட்டிடம் சொல்லியுள்ளார். கணவனின் கேடு கெட்ட எண்ணத்தைத் தட்டிக் கேட்கத் தவறிய மார்கரெட், வேளாங்கண்ணியை அடைய ஆரோக்கியசாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

வேளாங்கண்ணியிடம், உனது சித்தப்பா நைட் ஷிப்ட் வேலைக்கு போய்விட்டார். அதனால் துணைக்கு எங்கள் வீட்டில் வந்து படுத்து கொள் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். தூங்குவதற்கு முன்பாக வேளாங்கண்ணிக்கு மயக்க மருந்து கலந்த பாலை கொடுத்துள்ளார் மார்கரெட்.

சித்தியின் கொடூர சதியை அறியாத அந்த அப்பாவிப் பெண்ணும் பாலை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். நள்ளிரவில் அவருக்கு நினைவு வந்துள்ளது. அந்த சமயத்தில், சித்தப்பா ஆரோக்கியசாமி, மனைவியுடன் துணையுடன் தன்னை கற்பழித்தது தெரிய வந்து குரல் கொடுத்து சத்தம் போட்டுள்ளார்.

ஆனால் சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என ஆரோக்கியசாமியும், மார்கரெட்டும் மிரட்டியுள்ளனர். பயந்து போன வேளாங்கண்ணி பேசாமல் இருந்து விட்டார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆரோக்கியசாமி, பலமுறை தனது அண்ணன் மகளை மிரட்டியே சீரழித்து வந்துள்ளார். இதன் காரணமாக வேளாங்கண்ணி கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது.

மகள் யார் மூலமோ கர்ப்பமாகி விட்டதாக நினைத்திருந்த சூசைராஜுக்கு, தம்பிதான் இந்தக் கொடுமைக்குக் காரணம் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து ஆரோக்கியசாமி, மார்கரெட் ஆகியோர் மீது அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் மார்கரெட்டைக் கைது செய்தனர். ஆரோக்கியசாமி தப்பி விட்டார். அவரைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.

மனைவியுடன் துணையுடன், அண்ணன் மகளையே கற்பழித்த அராஜக சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிங்க

சித்தி சண்டாளியுமா இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறாள். இவள் எதற்கும் துணிந்தவள்!

பெண்ணுக்குப் பெண்ணே எதிரியா..?

Saturday, October 06, 2007

இடைத் தேர்தலை நோக்கி கர்நாடகம்!

ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக: இடைத் தேர்தலை நோக்கி கர்நாடகம்!

சனிக்கிழமை, அக்டோபர் 6, 2007

டெல்லி:

கர்நாடகத்தில் குமாரசாமி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை பாஜக இன்று திரும்பப் பெற்றது. ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைப்பதற்குப் பதில், மக்களை சந்திப்போம் என்று தேவெ கெளட கூறியுள்ளார். இதையடுத்து கர்நாடகத்தில் இடைத் தேர்தல் வரக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கர்நாடகத்தில் ஆளுக்கு 20 மாதங்கள் என்ற ஒப்பந்தத்தின் பேரில் மதச்சார்பற்ற ஜனதாதளமும், பாஜகவும் கூட்டணி ஆட்சியை அமைத்தன. ஆனால் ஒப்பந்தப்படி சில தினங்களுக்கு முன்பு பாஜகவிடம் ஆட்சியை மதச்சார்பற்ற ஜனதாதளம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

ஆனால் ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க முதல்வர் குமாரசாமியும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடாவும் மறுத்து வந்தனர். மேலும் பாஜக மீது சரமாரியாக புகார்கள் கூறி வந்தனர். புதிய நிபந்தனைகளையும் விதித்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை, டெல்லியில் தேவெ கெளடா சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சில் எந்த உடன்பாடும் இல்லை. இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் பாஜக இடையிலான கூட்டணி உடைவது உறுதியானது.

இந்த நிலையில் பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் இன்று காலை நடந்தது. இக்கூட்டத்தில் நேற்று கெளடாவுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து ராஜ்நாத் சிங் விவரித்தார்.

கூட்டத்திற்குப் பின்னர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் இதுவரை செய்யாத மிகப் பெரிய, மிக மோசமான துரோகத்தை மதச்சார்பற்ற ஜனதாதளம் செய்து விட்டது. மக்கள் மதச்சார்பற்ற ஜனதாதளத்தை மன்னிக்கவே மாட்டார்கள். தக்க பதிலடி கொடுப்பார்கள்.

குமாரசாமி அரசுக்கு பாஜக கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றார் வெங்கையா நாயுடு.

பஜாக தனது ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளதால், குமாரசாமி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சி தப்புவதும், கவிழ்வதும் தற்போது காங்கிரஸ் கட்சியின் கையில்தான் உள்ளது.

துணை முதல்வரும், பாஜக சட்டசபைக் கட்சித் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மற்றும் கர்நாடக பாஜக தலைவர் சதானந்த கெளடா ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தை வழங்குமாறு கட்சி மேலிடத்தால் பணிக்கப்பட்டுள்ளனர்.

மக்களை சந்திப்போம் - கெளடா

இதற்கிடையே, மக்களை சந்தித்து அவர்களின் தீர்ப்பை கோரப் போவதாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவெ கெளடா கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த மதச்சார்பற்ற ஜனதாதள அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் கெளடா செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய சூழ்நிலையில், நாங்கள் மக்களை சந்திக்கவே விரும்புகிறோம். காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ உறவு வைக்கப் போவதில்லை.

மதச்சார்பற்ற ஜனதாதளம் பதவி வெறி பிடித்து அலையவில்லை. இந்தக் குற்றச்சாட்டுத் தவறானது.

மதச்சார்பற்ர ஜனதாதள அரசுக்கு எதிராக பாஜக தொடர்ந்து பல அவதூறுகளை சுமத்தி வந்தது. முதல்வர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தொடர்ந்து அவதூறான புகார்களைக் கூறி வந்தது. பாஜக அமைச்சர் ஒருவர் கொலை முயற்சி புகாரும் கொடுத்தது இதில் உச்சகட்டமானது.

முதல்வருக்குக் கிடைத்து வந்த மக்கள் செல்வாக்கை பாஜகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இது உள்ளாட்சித் தேர்தலிலும் பிரதிபலித்ததை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார் கெளடா.

காங்கிரஸ் மெளனம்:

இதற்கிடையே, கர்நாடக அரசியல் சூழ்நிலை குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இன்று கூடி ஆலோசித்தனர். பின்னர் சட்டசபை காங்கிரஸ் தலைவர் தரம்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக முறைப்படி தனது ஆதரவை வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னர்தான் காங்கிரஸ் தனது நடவடிக்கைகளை முடிவு செய்யும்.

கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஓரிரு தினங்களில் பெங்களூர் வரவுள்ளார். அதன் பின்னர் கட்சி எம்.எல்.ஏக்களிடம் கருத்து கேட்கப்படும். இறுதி முடிவை கட்சி மேலிடம் எடுக்கும்.

எம்.எல்.ஏக்கள் யாரும் வெளியூர்களுக்குப் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரையும் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர் என்றார்.

குமாரசாமி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றுள்ள நிலையில், வருகிற 18ம் தேதி சட்டசபையைக் கூட்டியிருப்பது செல்லாது, சட்டவிரோதமானது என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அது ஆளுநரை கோரியுள்ளது.

நன்றிங்க

பதவி ஆசை யாரை விட்டது.

இந்த அரசியல்வாதிகளுக்கு நாட்டைப் பற்றி எந்த கவலையும் இல்லை. இடைத் தேர்தல் என்றால் சும்மாவா நடக்கும், அதற்கான செலவுகள், தேர்தல் பிரச்சார தொந்தரவுகள், மக்களின் நேர விரயம்.

என்னதான் இருந்தாலும் ஒப்பந்தத்தை மீறியது கொளடா கட்சி செய்த அநியாயம்!

02. ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

02.தாய், மகளை கொன்று நகை கொள்ளை ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள்

மதுரை: தாய், மகளை கொன்று பணம், நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை கே.புதுõர் கொடிகுளத்தைச் சேர்ந்தவர் எபிராயிம். இன்ஜினியர். குவைத்தில் பணியாற்றினார். இவரது மனைவி இன்பஜோதி. மகள் எவர்கிரீன் பெலிசிட்டி. தனியாக வசித்து வந்தனர்.

இவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் தாயையும் மகளையும் கொலை செய்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர். ஊமச்சிகுளம் போலீசார் விசாரித்து ஆட்டோ டிரைவர் வேலுச்சாமி உட்பட நான்கு பேரை கைது செய்தனர். மூன்று பேருக்கு ஏற்கனவே இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றொரு குற்றவாளி கதிரவன் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

நன்றிங்க தினமலர், 06/10/2007

இரட்டை ஆயுள் தண்டனை என்றால் எத்தனை வருஷங்க?

...வேஸ்ட்!

06. விதவை பெண் தற்கொலை முயற்சி!

06.கணவனின் தம்பிக்கு 2ம் தாரமானதால் விதவை பெண் தற்கொலை முயற்சி

உசிலம்பட்டி: ஆண் வாரிசு வேண்டும் என்று கணவரின் தம்பிக்கு மறுமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த பெண், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். ஒரு குழந்தை பரிதாபமாக இறந்தது.

உசிலம்பட்டி அடுத்த அம்பட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன். விபத்தில் பலியானார். இவரது மனைவி விஜயா(35). குழந்தைகள் ஜெயசூரியா, ஜெயசத்யாவுடன் வசித்து வந்தார். கணவரின் தம்பி பெயர் ராஜாராம். திருமணம் முடிந்து மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக மற்றொருப் பெண்ணை மணம் முடிக்க விரும்பினார். விதவையாக இருந்த அண்ணன் மனைவியையே வற்புறுத்தி திருமணம் செய்துள்ளார்.

மனமுடைந்த விஜயா நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர் ஓடிவந்தனர். தூக்கில் தொங்கியவரைக் காப்பாற்றினர். குழந்தைகளுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில் ஜெயசூரியா இறந்தான். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றிங்க, தினமலர் 06/10/2007

விருப்பமில்லாத போது பலவந்தமாக அடைய எண்ணுவது எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது!

ஆண் வாரிசு வேண்டும் என்ற விருப்பமுள்ளவர் இரண்டாந்தாரமாக சம்மதிக்கும் பெண்ணையல்லவா தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்!

இப்போ, உயிர் பலியை யார் மீட்டுவது?

04. விழிபிதுங்கும் 14 வயது சிறுமி!

04.75 வயது கணவரிடம் சிக்கி விழிபிதுங்கும் 14 வயது சிறுமி:தப்பிக்க உதவிய அண்ணனுக்கும் சிக்கல்

மால்டா: மேற்கு வங்கத்தில், 14 வயது சிறுமியை, கத்தி முனையில் மிரட்டி 75 முதியவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தனது அண்ணன் உதவியுடன் தப்பிவந்த அந்த சிறுமியை, அவரது பெற்றோரும், "கணவரும்' கடுமையாக துன்புறுத்தி வருகின்றனர். நியாயம் கிடைக்காமல், சிறுமியும் அவரது சகோதரரும் பீதியில் உள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் மால்டாவை சேர்ந்தவர் 14 வயது சிறுமி அனாரஸ் கடூன். இவளது பெற்றோர் சையது அலி, லேட்புன் பீவி; கூலித் தொழிலாளர்கள். ஏழ்மையில் இருந்த இவர்களுக்கு துõபம் போட்டார் 75 வயது சாந்த் முகமது. அவரது பணத்துக்கு, அனாரசின் பெற்றோர் மயங்கிப்போயினர்.செப்டம்பர் 26ம் தேதி நள்ளிரவில், அனாரசை எழுப்பிய பெற்றோர், கத்தி முனையில் மிரட்டி, முதியவர் சாந்த் முகமதுக்கு, "நிக்கா' செய்து வைத்தனர். முஸ்லிம் முறைப்படி காஸி உசேன் என்பவர் இந்த திருமணத்தை செய்து வைத்தார்.திருமணமான மறுநாளே, தனது அண்ணன் மஜேதுர் ரகுமானின் உதவியுடன், சாந்த் முகமது வீட்டில் இருந்து தப்பினாள் அனாரஸ். நேராக போலீஸ் நிலையம் சென்று, புகார் மனு அளித்தாள். அதன் பிறகு நிலைமை படுமோசமானது.

பெற்றோர் ஆத்திரமடைந்தனர். மஜேதுர் ரகுமானையும் சிறுமி அனாரசையும் வீட்டை விட்டு துரத்தினர். மஜேதுர் ரகுமானின் மனைவியும் துரத்தியடிக்கப்பட்டார். புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்தனர் போலீசார். மால்டா போலீஸ் எஸ்.பி., மோண்டல் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவின் படி, உள்ளூர் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.இதையடுத்து மால்டாவில் உள்ள உள்ளூர் கோர்ட்டில் சரண் அடைந்த சையது அலியும், லேட்புன் பீவியும் மறுநாளே ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். சிறுமி அனாரஸ் மீதும், அவரது அண்ணன் மஜேதுர் மீதும் போட்டி வழக்கு தொடர்ந்தனர். அனாரசின், "கணவர்' சாந்த் முகமதுவும் கோர்ட்டுக்கு போனார்.

அனாரசை அவரது அண்ணன் மஜேதுர் கடத்திச் சென்று விட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த விஷயம் வெளியில் தெரியவந்ததும், உள்ளூர் கம்யூனிஸ்ட் தலைவர்கள், மாவட்ட அரசு செயலாளர் முதல், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஜிபன் மைத்ரா வரை கடிதம் எழுதிவிட்டனர். ஆனால், சமுதாய பிரச்னை:"இது சமுதாய பிரச்னை. எனவே, சமுதாய விழிப்புணர்வு மூலம் தான் இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என்று அனைவருமே கைகழுவி விட்டனர்.இப்போது, தனது தங்கை அனாரசுடன், மற்றும் மனைவியுடன் மால்டாவின் புறநகரில் உள்ள குடிசைப்பகுதியில், ஒரு சின்னஞ்சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகிறார் மஜேதுர்.

ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவது தான் மஜேதுரின் தொழில். அதில் வரும் சம்பாத்தியம், வாய்க்கும், வயிற்றுக்குமே சரியாக போகிறது. ஒரு வக்கீல் வைத்துக் கொள்ளக் கூட மஜேதுருக்கு வசதி இல்லை. பணபலம் மிக்க சாந்த் முகமதுவுடன் எப்படி போராடுவது என்ற பீதியில் உள்ளனர். அண்ணன் தங்கை இருவரும். மஜேதுரை தனிமைப்படுத்தும் வகையில், அனாரசை கடத்திச் சென்றதாக மஜேதுரின் நண்பர்கள் பலர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார் முதியவர் சாந்த் முகமது.

"என்னை திருமணம் செய்து கொண்ட சாந்த் முகமதுவின் கடைசி குழந்தை கூட என்னை விட வயதில் மூத்தவர். அவருடன் எப்படி வாழ முடியும். நிறைய பணம் வைத்துள்ள அவர், பல வகைகளிலும் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வருகிறார். இதில் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம் என்பதே தெரியவில்லை,'' என்று கண்ணீர் விடுகிறார் அந்த அப்பாவிச் சிறுமி.

நன்றிங்க, தினமலர் 06/10/2007

திருமணத்திற்கு மணப் பெண்ணின் சம்மதம் மிகவும் அவசியம். மணப் பெண்ணின் சம்மதமில்லாமல் திருமணம் செய்தால் அத்திருமணம் செல்லாது.

இதையறியாத பெற்றேரும், திருமணத்தை நடத்திய காசி உசேன் என்பவரும் திருமணம் என்ற பெயரில் பலவந்தமாக ஒரு பெண்ணையடைய முயன்ற சந்து முகமதும் மூடர்கள் - குற்றவாளிகளே!

Friday, October 05, 2007

மேக்கப் மாற்றம் 'பியூட்டி பார்லர்'



படம்: நன்றிங்க, தினமலர் 05/10/2007

வரும் செய்தி கொஞ்சம் பழசுதான், படத்துக்கு பொருத்தமாகத் தோணுவதால்...

ரம்ஜான் வசூலுக்காக "மேக்கப்' மாற்றம்"பியூட்டி பார்லர்' செல்லும் பிச்சைக்காரர்கள்

குற்றிப்புரம்: கம்பளி அல்லது கறுப்பு போர்வை, கையில் திருவோடு, பரட்டை தலையுடன் கோவில் வாசல்களில் போய் நின்றால், திருவோட்டில் தானாக காசு விழும். எந்த மதக் கோவிலுக்கும் இது பொருந்தும்.

இதை நன்றாக அறிந்து வைத்துள்ள பிச்சைக்காரர்கள், பண்டிகைக்குத் தகுந்தாற்போல் "மதம் மாறி' பிச்சை எடுக்கும் பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். எப்படி மதம் மாறுவது?

ரொம்ப சிம்பிள்! "பியூட்டி பார்லர்'களுக்குச் சென்று "மேக்கப்' மாற்றிக் கொண்டால் ஆச்சு! கேரளா மலப்புரம் மாவட்டத்தில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமானது. இந்த சீசனில் முஸ்லிம் வேடத்தில் பிச்சை எடுத்தால் நல்ல வருமானம் கிடைக்கிறது என்பதை அறிந்த அவர்கள் "மேக்கப் மாற' முடிவு செய்தனர்.

குற்றிப்புரம், எடப்பாள், வளாஞ்சேரி, ஆதவ நாடு, பொன்னானி, சங்கரங்குளம், திருநாவாயா போன்ற பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களை தயார் செய்வதற்காகவே, குற்றிப்புரம் பழைய ரயில்வே கேட்டுக்கு அருகில் "பியூட்டி பார்லர்' இயங்குகிறது. தமிழகத்தில் சேலம், பொள்ளாச்சி, திருச்சி போன்ற இடங்களில் இருந்து ரயிலில் வந்திறங்கும் நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் நேராக இந்த அழகு நிலையத்துக்கு சென்று விடுகின்றனர்.

முஸ்லிம் வேடத்திற்காக தலைப் பாகை மாட்டுவதற்கு 12 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை ஆகிறது. பெண் களுக்கு பர்தா, மப்தா, மக்கனா போன்றவற்றை அணிவித்து முஸ்லிம் பெண்களை போல மாற்றும் பெண் அழகு நிபுணர்களும் இங்கு இருக்கின்றனர். பஸ் நிலையம் மற்றும் ரயில்வே நிலையங்களில் இந்த "முஸ்லிம்' பிச்சைக் காரர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். வேடம் மாற்றி பிச்சை எடுப்பதால், நாள் ஒன்றுக்கு 100 முதல் 800 ரூபாய் வரை இவர்களுக்கு கிடைக் கிறது.

நன்றிங்க, தினமலர் 26/09/2007

விமானத்தில் புகுந்த ''எலி'' !

விமானத்தில் புகுந்த 'எலி'!: போர்ட்பிளேர் விமானம் 4 மணி நேரம் 'லேட்'!

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5, 2007

சென்னை:

போர்ட்பிளேர் செல்லும் விமானத்திற்குள் புகுந்த எலியால், நான்கு மணி நேரம் தாமதமாக விமானம் போர்ட்பிளேர் புறப்பட்டுச் சென்றது.

சென்னையிலிருந்து போர்ட்பிளேர் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் இன்று காலை 6.15 மணிக்கு, 108 பயணிகளுடன் கிளம்பத் தயாராக இருந்தது.

அப்போது விமானத்திற்குள் ஒரு எலி சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து பயணிகள் பீதியடைந்து சத்தம் போட்டனர். இதையடுத்து விமானம் கிளம்புவது தடைபட்டது.

பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு எலியைப் பிடிக்கும் முயற்சியில் விமான ஊழியர்கள் இறங்கினர். விமானம் முழுவதையும் அலசிப் பார்த்தும் அந்த எலி சிக்கவில்லை.

இதையடுத்து எலியைல கொல்ல மருந்து அடிக்கப்பட்டது. இதில் அந்த எலி செத்து விழுந்தது. இதையடுத்து எலியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து எலியால் வயர்கள் ஏதேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்பதை ஊழியர்கள் சோதிட்டனர்.

அதன் பின்னர் நான்கு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் 10 மணிக்கு போர்ட் பிளேருக்கு அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

சமீபத்தில்தான் ஒரு எலியால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிச் செல்வது பாதிக்கப்பட்டு, எலி கண்டுபிடிக்கப்படாததால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு பயணிகள் வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒரு வேளை இந்த எலிதான் அந்த எலியோ என்னவோ?

நன்றிங்க

//ஒரு வேளை இந்த எலிதான் அந்த எலியோ என்னவோ?//

இருக்கும்.. இருக்கும், எப்படியோ அந்த எலிப் போல இருந்த இந்த எலியை கொன்று பயணிகளை காப்பாற்றி விட்டனர். :)

கருணாநிதிக்கு வேதாந்தி 'பதில் சவால்'

'ராமர்': கருணாநிதிக்கு வேதாந்தி 'பதில் சவால்'

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5, 2007

லக்னோ:

ராமர் பாலம் குறித்தும், ராமர் குறித்தும் விவாதிக்க தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பாஜக முன்னாள் எம்பி ராம்விலாஸ் வேதாந்தி இன்று திடீரென அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கருணாநிதிக்கு எதிராக பாத்வா விதித்ததில் தவறு கிடையாது. பகவத்கீதையில், யார் ஒருவர் உன்னுடைய கடவுளை பற்றி தவறாக பேசுகிறார்களோ அவரின் நாக்கை துண்டித்து விடு என்று கூறப்பட்டுள்ளது. அதன்படிதான் நான் பாத்வா விதித்தேன். நான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை.

ராமர் பற்றி தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகள் வரும் நவம்பர் 20ம் தேதி போராட்டம் நடத்த உள்ளன.

ராமர் குறித்து விவாதம் நடத்த கருணாநிதி தயார் என்கிறாரே. விவாதிக்க நான் தயார், அவர் தயாரா?.

இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை தான் அதிகம். அவர்களின் மனதை துன்புறுத்தினால், அவர்களின் ஆதரவு திமுக மற்றும் காங்கிரசுக்கு சுத்தமாக கிடைக்காது. மைனாரிட்டிகளின் ஓட்டை நம்பி தான் அவர்கள் காத்திருக்க வேண்டும்.

ராமரை, குடிகாரர் என்று வால்மீகி தனது ராமாயணத்தில் எழுதியுள்ளதாக கருணாநிதி சொல்லி இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். ராமர் தனது வாழ்நாளில் பழங்களைத் தான் உணவாக உட்கொண்டார்.

நான் பாத்வா விதித்ததற்கு என்மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். நான் பாத்வா விதித்தது போல் முன்னாள் மாநில அமைச்சர் ஹாஜி யாகூப் முஸ்லீம் மதத்தை பற்றி தவறாக சித்தரித்த தனிஷ் கார்டூனிஸ்ட் மீது பாத்வா விதித்திருந்தார்.

ஆனால் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் வேதாந்தி.

நன்றிங்க

என்னய்யா இது? முதலில் பத்வா கொடுத்துவிட்டு பிறகு இல்லை என்று பல்டி அடித்தார். இப்ப, ''நான் பத்வா விதித்ததில் தவறு கிடையாது'' என்று மீண்டும் மனுஷர் அந்தர் பல்டி அடித்திருக்கிறாரே...!?

வாழ்க, பத்வா!

இந்தியாவிலேயே மிகப்பெரிய புலி...

இந்தியாவிலேயே மிகப்பெரிய புலி களக்காடு மலையில் உள்ளது

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5, 2007

திருநெல்வேலி:

இந்தியாவிலேயே மிகப்பெரிய புலி களக்காடு மலையில்தான் உள்ளது என்று டேராடூன் வன உயிரின மைய ஆராய்ச்சியாளர் கே.சங்கர் தெரிவித்தார்.

களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியில் புலிகள் உள்ளதா இல்லையா என்று நீண்ட நாட்களாக சர்ச்சை நிலவி வந்தது. இதற்காக வனப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணித்ததில் தற்போது புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டேராடூனில் உள்ள வன உயிரின மைய ஆராய்ச்சியாளர் கே.சங்கர் நேற்று நெல்லை வந்தார். அவர் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததில் கூறியதாவது,

இந்தியா முழுவதும் புலிகள் வாழும் பகுதிகளில் கடந்த 2005ம் ஆண்டு முதல் புலிகளின் எண்ணிக்கை பற்றிய கணக்கெடுக்கும் பணியை தொடங்கினோம். இந்த கணக்கெடுப்பு பணியை 4 கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்பட்டது.

இந்த அடிப்படையில் தான் தமிழ்நாட்டில் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் மயிலாறு, கன்னிகட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 80 சதுர கிலோ மீட்டர் பரப்பரளவை தேர்ந்து எடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எங்கள் பணியை தொடங்கினோம்.

தற்போது 2ம் கட்ட பணிகள் முடிந்து 3ம் கட்ட பணியான காமிரா மூலம் கண்காணித்து புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகிறோம். இதற்காக நாங்கள் இப்பகுதியில் தேர்ந்தெடுத்துள்ள 80 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதியில் 40 அதிநவீன காமிரக்களை பொருத்தி உள்ளோம். புலிகள் நடமாட்டம் அதிகம் உள்ள சில பகுதிகளில் மேலும் 22 காமிரக்களை வைத்துள்ளோம்.

இவ்வாறு தொடர்ச்சியாக படம் எடுத்ததில் களக்காடு-முண்டன்துறையில் எங்களுடைய ஆராய்ச்சி பகுதியில் 8 வயது உள்ள ஆண் புலி ஒன்று நடமாடுவது கண்டறியப்பட்டு உள்ளது. இது எங்கள் போட்டோவில் பதிவாகி உள்ளது.

இந்த புலி மிகப் பெரிய அளவில் கம்பீரமாக உள்ளது. மிகவும் ஆரோக்கியமாக, ஆஜானபாகுவாக இருக்கிறது. நான் பார்த்த வகையில் இந்தியாவில் மிகப்பெரிய புலி இதுவாகத்தான் இருக்கும்.

இது தவிர 4 சிறுத்தை புலிகளும் கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 3 ஆண் சிறுத்தைகளும், 1 பெண் சிறுத்தையும் உள்ளன.

ஆய்வுப்பகுதி அல்லாத இடமான திருக்குறுக்குடி ஏரியா வீரப்புலி பீட் பகுதியில் ஒரு பெண் புலி இருப்பது தெரியவந்துள்ளது. அதுவும் காமிராவில் இடம் பெற்று உள்ளது.

இந்த புலியை தவிர 6 சிறுத்தை புலிகளும் இங்கு உள்ளது. அதில் 5 ஆண் சிறுத்தைகளும், 1 பெண் சிறுத்தையும் அடங்கும்.

2005ம் ஆண்டில் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் 29 புலிகள் இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை கூடி இருக்கிறதா என்பதை எங்களின் கணக்கெடுப்பு பணி முடிந்தபின்னர் தான் தெரியவரும்.

களக்காடு பகுதியில் இன்னும் 2 வாரங்களில் எங்கள் பணி முடிவடைந்து விடும். வருகிற டிசம்பர் மாதம் எங்களது அறிக்கையை கொடுக்க இருக்கிறோம்.

4 கட்ட பணி என்பது மிகப் பெரிய பொருட்செலவாகும். அந்த பணிக்கு களக்காடு-முண்டன்துறை பகுதி முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் இந்த கணக்கெடுப்பு பணிக்கு மத்திய அரசு ரூ. 4 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த பகுதியில் இருக்கும் மக்கள் விலங்குகளை அதிகம் நேசிக்கிறார்கள். தென்னிந்தியாவில் விலங்குகளை வேட்டையாடுவது இல்லை என்று அவர் கூறினார்.

நன்றிங்க

2005ம் ஆண்டில் இருந்த 29 புலிகளில், இப்போது 8 வயதிலொரு ஆண் புலி இருப்பதாகவும், வீரப்புலி பீட் பகுதியில் ஒரு பெண் புலியும் இருப்பதும் தெரியவந்துள்ளது என்று அறிவிக்கிறார்கள். பாக்கி புலிகள் எங்கே போச்சு? இந்த இரண்டு வருஷத்தில் அதுக போட்ட குட்டிகள் என்ன ஆச்சு?

//இந்த பகுதியில் இருக்கும் மக்கள் விலங்குகளை அதிகம் நேசிக்கிறார்கள்.//

ஆமா... பாய்ந்து கடிக்கும் வரை நேசிப்பார்கள்...!