Saturday, October 06, 2007

02. ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

02.தாய், மகளை கொன்று நகை கொள்ளை ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள்

மதுரை: தாய், மகளை கொன்று பணம், நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை கே.புதுõர் கொடிகுளத்தைச் சேர்ந்தவர் எபிராயிம். இன்ஜினியர். குவைத்தில் பணியாற்றினார். இவரது மனைவி இன்பஜோதி. மகள் எவர்கிரீன் பெலிசிட்டி. தனியாக வசித்து வந்தனர்.

இவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் தாயையும் மகளையும் கொலை செய்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர். ஊமச்சிகுளம் போலீசார் விசாரித்து ஆட்டோ டிரைவர் வேலுச்சாமி உட்பட நான்கு பேரை கைது செய்தனர். மூன்று பேருக்கு ஏற்கனவே இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றொரு குற்றவாளி கதிரவன் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

நன்றிங்க தினமலர், 06/10/2007

இரட்டை ஆயுள் தண்டனை என்றால் எத்தனை வருஷங்க?

...வேஸ்ட்!

No comments: