Monday, November 26, 2007

பணி முடிந்த விமானி!

பணி முடிந்த விமானி - பரிதவித்த பயணிகள்

திங்கள்கிழமை, நவம்பர் 26, 2007

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரிலிருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை செலுத்த வேண்டிய விமானி, தனது பணி முடிந்து விட்டதாக கூறி விமானத்தை எடுக்க மறுத்ததால், விமானம் ரத்தாகி பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலிருந்து நேற்றிரவு 8.15 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்லவேண்டிய பயணிகள் அனைவரும் தயாராக இருந்தனர். ஆனால் விமானம் புறப்படுவது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சுமார் 4 மணிநேரம் தாமதத்திற்கு பின்னர், நள்ளிரவு 12-30 மணிக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது எனகூறிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல்களில் தங்க வைத்தனர்.

என்ன என்று விசாரித்தபோது அந்த விமானத்தை செலுத்த வேண்டிய விமானி ஒருவரின் பணி நேரம் முடிந்து விட்டதாம். இதனால் விமானத்தை செலுத்த முடியாது என்று அவர் கூறி விட்டாராம். இதனால்தான் விமானத்தை எடுக்க முடியாமல் தாமதமாகியதாக தெரிய வந்தது.

நன்றிங்க

வானத்தில் விமானம் பறந்து கொண்டிருக்க எனக்கு பணி நேரம் முடிந்து விட்டது என்று எந்த விமானியும் சொல்லாமல் இருந்தால் சரிதான்.

No comments: