Thursday, November 08, 2007

பெண் தோழியைக் கொன்று 'தின்ற' நபர்!

கேர்ள் பிரண்டை கொன்று 'தின்ற' நபர்!

வெள்ளிக்கிழமை, நவம்பர் 9, 2007

அலிகேன்ட் (ஸ்பெயின்): பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது பெண் தோழியைக் கொலை செய்து அவரது உடல் உறுப்புகளை தின்றதாக பரபரப்பான வாக்குமூலம் தந்துள்ளார்.

பால் டியூரன்ட் என்ற அந்த நபரின் கேர்ள் பிரண்டான கேரன் டியூரெல் கடந்த 2004ம் ஆண்டு ஸ்ெபயினில் காணாமல் போனார்.

இது தொடர்பாக டியூரன்டின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது ரத்தக் கறையுடன் கூடிய கத்திகள் கிடைத்தன. இதையடுத்து டியூரன்ட் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ேகரனின் உடல் சிதைந்து போன நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார் டியூரன்ட். இந் நிலையில் ஒரு பத்திரிக்கைக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தனது கேர்ள் பிரண்டை வெட்டிக் கொன்ற பின் அவரது உடல் உறுப்புகளில் பலவற்றை தான் தின்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.

நன்றிங்க

ஆமா, நர மாமிசத்தை சாப்பிட்டவனுக்கு ஆபத்து ஏற்படும் என்பார்களே அது நிஜமில்லையா?

No comments: