Sunday, December 30, 2007

ஹலோ புஷ்...



எதேச்சையாக மதுபானக் கூடத்தில் நுழைந்த அந்த இளைஞனுக்கு ஒரு எதிர்பாராத அதிர்ச்சி.
உற்சாக பானத்தில் மிதந்து கொண்டிருந்த அந்த இரு ஆசாமிகளும் அசப்பில் ஜார்ஜ் புஷ்ஷைப் போலவும்... அவரது பாதுகாப்பு அமைச்சரைப் போலவும் தெரிய வரவே... பரிமாறிக் கொண்டிருந்த ஆளை அழைத்து... அது அவர்கள்தானா? என்று விசாரிக்க...

‘‘அதுகளேதான்’’ என்றபடி நகர்ந்தார் பரிமாறுபவர்.

உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்த அந்த இளைஞன்........

‘‘ஹலோ புஷ்........நீங்கள் இரு வரும் எதைப்பற்றி இவ்வளவு சீரியசாக விவாதித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?’’ என்றான்.

‘‘நாங்கள் இருவரும் அடுத்து வரப்போகும் மூன்றாம் உலகப் போரைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றது புஷ்.

‘‘அட... அப்படியா? சரி, இந்த முறை அமெரிக்காவின் கைங்கர்யமாக என்ன செய்வதாக உத்தேசம்?’’ என்றான் இளைஞன்.

‘‘இந்த முறை நாங்கள் ஒரு கோடி ஈராக்கியர்களைக் கொல்வோம். அத்தோடு கூடவே அழகி ஒருத்தியையும் கொல்லப் போகிறோம்’’ என்றது புஷ்.

அதிர்ந்து போன அந்த இளைஞன்... ‘‘என்னது..? அழகி ஒருத்தியைக் கொல்லப் போகிறீர்களா? எதற்காக?’’ என்று ஆத்திரத்துடன் வினவ... புஷ் தனது பாதுகாப்பு அமைச்சரின் தோளில் கை போட்டபடி.. ‘‘மச்சான்... இவனுக எவளோ அந்த ஒரு பொம்பளையப் பத்தித்தான் கவலைப்படுவானுக........ஆனா அந்த ஒரு கோடி ஈராக்கியர்களைப் பற்றி கவலையே படமாட்டானுக....ன்னு நான் அப்பவே சொன்னேன் கேட்டியா..?’’ என்றது புஷ்.

அப்படித்தான் ஆயிற்று நமது நிலையும்.

ஈராக்கில் அமெரிக்கப்படைகள் நுழைந்தபோது

ஆர்ப்பாட்டம்........

தர்ணா........

கொடும்பாவி எரிப்பு........

உண்ணாவிரதம்........

மறியல்........

என்று ஆர்ப்பரித்ததோடு சரி.

இப்போது அவரவர் வழியில் அவரவர்.

ஆனால் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது ஈராக்கின் துயரம்.

மொத்த உலகமும் இவைகளுக்கு மௌன சாட்சியாய்........

நீச்சல் தெரியாதவர்களை துப்பாக்கி முனையில் ஆற்றில் குதிக்கச் சொல்லி துடிதுடித்துச் சாவதை ரசிப்பது........

கைகள் கட்டப்பட்ட ஈராக்கியர்களை மிக உயரமான மாடிகளின் மேல் இருந்து குதிக்கச் சொல்வது........

ஹெலிகாப்டரில் இருந்தபடியோ... ட்ரக்குகளில் ஊர்ந்தபடியோ... கண்ணில் பட்டவர்களை எல்லாம் சாவகாசமாக சுட்டுக் கொல்வது...

கொன்றதற்குப் பிற்பாடு அவர்களுக்கு...

கிரிமினல்கள்...

ஊடுருவல்காரர்கள்........

தீவிரவாதிகள்........

பயங்கரவாதிகள்........

எனப் பட்டம் சூட்டுவது........

(பேசாமல் சுருக்கமாக ‘அமெரிக்கர்கள்’ என்று சொல்லி இருக்கலாம்)

‘நோக்கம் எதுவுமில்லாமல் மனம் போன போக்கில் மனிதர்களைச் சுடுவது ஜாலியாக இருக்கிறது’ என்கிறான் ஒரு அமெரிக்க வீரன்.

நேற்றுவரை இப்படி ஜாலியாகக் கொல்லப்பட்ட ஈராக்கியர்கள் எண்ணிக்கை வெறும் பதினோறு லட்சத்து பதினெட்டாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி ஆறே பேர் மட்டுமே

இந்த இதழ் அச்சாகி உங்கள் கைகளில் தவழும்போது இன்னும் சில நூறு உயிர்கள் நம்மிடம் இருந்து விடை பெற்றிருக்கும். அவ்வளவே.

நாமோ, இந்த வார டாப் டென்னில் ‘பில்லாவா?’ அல்லது ‘மிருகமா?’ என்கிற கவலையில்.

இன்றல்ல என்றுமே மௌனம் தான் நமது எதிரி.

நன்றிங்க

//‘‘மச்சான்... இவனுக எவளோ அந்த ஒரு பொம்பளையப் பத்தித்தான் கவலைப்படுவானுக........ஆனா அந்த ஒரு கோடி ஈராக்கியர்களைப் பற்றி கவலையே படமாட்டானுக....ன்னு நான் அப்பவே சொன்னேன் கேட்டியா..?’’ என்றது புஷ்.//

:)))

Labels: ,

பெநஸீரை முஷாரப் அரசுதான் கொன்றது

பெனாசிரை நாங்கள் கொல்லவில்லை, முஷாரப் அரசுதான் கொன்றது: அல் கொய்தா

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 30, 2007

இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோவா அல் கொய்தா அமைப்பு கொல்லவில்லை. பாகிஸ்தான் அரசுதான் திட்டமிட்டுக் கொன்று விட்டு எங்கள் மீது பழி போட முயலுகிறது என்று அல் கொய்தா அமைப்பு அறிவித்துள்ளதால், பெனாசிர் சாவில் மர்மம் நீடிக்கிறது.

ராவல்பிண்டி அருகே 27ம் தேதி இரவு பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அடுத்த நாள் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சீமா செய்தியாளர்களிடம் பேசுகையில், பெனாசிர் பூட்டோவை நோக்கி ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டான். அப்போது மனித வெடிகுண்டும் வெடித்தது.

இந்த அதிர்ச்சி அலைகள் பெனாசிரைத் தாக்கியதால், உயிர் தப்புதவற்காக அவர் வேகமாக வேனுக்குள் குணிந்தார். அப்போது வேனின் மேற்கூரை கம்பி தலையில் பலமாக இடித்ததில் அவர் மரணமடைந்தார் என்று கூறினார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

மேலும் இந்த சம்பவத்திற்கு அல் கொய்தா அமைப்புதான் காரணம் என்றும் கூறிய சீமா அதுதொடர்பான அல் கொய்தா அமைப்பினரின் தொலைபேசி உரையாடலையும் வெளியிட்டார். இக்ரமுல்லா, பிலால் ஆகிய இருவரே பெனாசிரைக் கொன்றவர்கள் என்றும் கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் அல் கொய்தா அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான பைதுல்லா மசூத்துடன் அல் கொய்தா தீவிரவாதி ஒருவர் உரையாடியதும் அதில் இருந்தது.

முஷாரப் அரசே காரணம்:

இந்த நிலையில் நேற்று அல் கொய்தா அமைப்பு இந்த கூற்றை மறுத்தது. முஷாரப் அரசுதான் பெனாசிர் சாவுக்குக் காரணம் என்று அல் கொய்தா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மசூத்தின் உதவியாளரான மெளலவி மெளலானா உமர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாகிஸ்தான் தலைவர்கள் யார் மீதும் நாங்கள் தனிப்பட்ட முறையில் விரோதம் கொண்டிருக்கவில்லை. அவர்களை எதிரிகளாகவும் கருதியதில்லை.

எங்களது ஒரே எதிரி அமெரிக்கா மட்டுமே. பாகிஸ்தான் தலைவர்களைக் கொல்ல நாங்கள் ஒருபோதும் திட்டமிட்டதில்லை.

பெனாசிரை நாங்கள் கொல்லவில்லை. அதிலும் ஒரு பெண்ணை கொல்வதற்கு இஸ்லாமிய பழங்குடியின சமுதாயமும், பாரம்பரியமும், கலாச்சாரமும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

பெனாசிர் கொலை தொடர்பாக மெளலவி மசூத்துடன், அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பேசியதாகவும், அதை தாங்கள் ஒட்டுக் கேட்டதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது கட்டுக்கதையாகும்.

அவர்களது தவறை மறைக்க எங்கள் மீது குற்றம் சாட்டப் பார்க்கிறார்கள். இது முழுக்க முழுக்க பாகிஸ்தான் அரசு, முஷாரப் அரசு செய்த செயலாகும்.

பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் தலைவர் மட்டுமல்ல, சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு உலகத் தலைவர் ஆவார். அவரது பாதுகாப்பு வளையத்திற்குள் ஊடுறுவுவது என்பது சாதாரண விஷயமல்ல. எனவே இதில் அரசு மட்டுமே நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது.

பெனாசிர் மறைவுக்கு அல் கொய்தா சார்பில் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார் உமர்.

அல் கொய்தா அமைப்பின் இந்த திடீர் மறுப்பால் பெனாசிர் மரணம் எப்படி நடந்தது, யாரால் நிகழ்த்தப்பட்டது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சுட்டுத்தான் கொல்லப்பட்டார் - பெனாசிர் உதவியாளர்

இதற்கிடையே, பெனாசிர் பூட்டோ சுட்டுத் தான் கொல்லப்பட்டார். அவரது தலையின் பின்புறம் குண்டு பாய்ந்து, முன்புற வழியாக துளைத்துச் சென்ற அடையாளத்தை நான் பார்த்தேன் என்று பெனாசிர் பூட்டோவின் உதவியாளரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஷெர்ரி ரஹ்மான் கூறியுள்ளதால் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

பெனாசிருடன் எப்போதும் கூடவே இருப்பவர் ஷெர்ரி. சம்பவ நாளன்றும் அவர் பெனாசிரின் காரில்தான் இருந்தார். நடந்தது என்ன என்று அவர் கூறுகையில், சம்பவத்தின்போது நான் காரில்தான் இருந்தேன். அப்போது சில அடையாளம் தெரியாத நபர்கள் என்னை சுற்றி நின்று கொண்டனர். இதனால் காருக்குள் நின்றபடி மேலே தொண்டர்களை நோக்கி பெனாசிர் கையாட்டிக் கொண்டிருந்தபோது என்ன நடந்தது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. மேலும் கொலையாளியின் முகமும் எனக்குத் தெரியவில்லை.

துப்பாக்கியால்தான் முதலில் சுட்டனர். பிறகுதான் குண்டு வெடித்தது. அப்போது நான் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டேன். எனது காலில் காயம் ஏற்பட்டது. பிறகு எனது காரில்தான் பெனாசிரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

பெனாசிர் மரணத்திற்குப் பின்னர் அவரது உடல் மத வழக்கப்படி குளிப்பாட்டப்பட்டது. நானும் அப்போது உடன் இருந்து குளிப்பாட்டுவதற்கு உதவினேன்.

அவரது வயிற்றில் எந்தக் காயமும் இல்லை. ஆனால் தலையில் பெரிய குண்டுக்காயம் இருந்தது. அதாவது தலையின் பின்னால் பாய்ந்த கண்டு முன்புறம் வழியாக வெளியே பாய்ந்திருந்தது.

குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட ரத்தப் பெருக்கு நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அதிக ரத்தம் வெளியாகியதும் பெனாசிரின் மரணத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

உண்மை இப்படி இருக்க, பெனாசிர் கார் மேற் கூரைக் கம்பி இடித்து இறந்ததாக பாகிஸ்தான் அரசு கூறுவது மிகவும் மோசமான கற்பனை, கேலிக்கூத்தாகும். முட்டாள்தனமான இந்த கூற்றைப் பார்க்கும்போது அவர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரிகிறது என்று கூறினார் ஷெர்ரி.

இப்படி மாறி மாறி குழப்பங்கள் தொடர்வதால் பெனாசிர் உண்மையில் எப்படி இறந்தார் என்பதற்கு இன்னும் விடை கிடைக்காத நிலை உள்ளது.

நன்றிங்க

பெநஸீர் படுகொலை செய்யப்பட்ட மர்மம் நீடிக்கிறது!

Labels: , ,

Saturday, December 29, 2007

புது தகவல் (!?)

பெனாசிர் கார் மேற்கூரை கம்பி இடித்து இறந்ததாக புது தகவல்

சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மனித வெடிகுண்டினாலோ அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்ததாலோ மரணமடையவில்லை. மாறாக, தனது காரின் இரும்புக் கம்பி தலையில் பலமாக பட்டதால் படுகாயமடைந்தே அவர் இறந்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராவல்பிண்டி அருகே படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் உடல் நேற்று மாலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகே பெனாசிரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் பெனாசிர் கொல்லப்பட்டது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பெனாசிரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதனால்தான் அவர் மரணமடைந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த ராவல்பிண்டி அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவேத் சீமா கூறுகையில், சம்பவத்தன்று, பெனாசிர் பூட்டோ தனது காரின் மேல் பகுதியில் நின்றபடி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்ததால் அதைப் பயன்படுத்தி கொலைகாரன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். ஆனால் துப்பாக்கி குறி தவறியதால் பெனாசிர் உடலில் குண்டு பாயவில்லை. இதையடுத்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளான்.

இதனால் ஏற்பட்ட பெரும் அதிர்ச்சி அலைகள் பெனாசிரைத் தாக்கியது. அவர் தப்பிப்பதற்காக வேகமாக காருக்குள் புக முயன்றுள்ளார். அப்போது காரின் மேல் கூரை கம்பிகள், அவரது தலையில் பலமாக மோதியுள்ளன.

இதில் அவரது தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அந்தக் காயம் மூளையையும் தாக்கியது. இதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது என்றார்.

பெனாசிருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறுகையில், மனித வெடிகுண்டு வெடித்தபோது அதில் இருந்து வந்த வெடிகுண்டுச் சிதறல்கள், பெனாசிரின் தலையைத் தாக்கியுள்ளன. இதனால்தான் அவர் மரணமடைந்தார். அவரது உடலில் குண்டுகள் எதுவும் பாயவில்லை என்று கூறியுள்ளார்.

பெனாசிர் சுடப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. அதில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகளும், பெனாசிர் தப்பிக்க முயல்வதும் தெரிய வருகிறது.

ஆனால் அரசு மற்றும் டாக்டர்களின் கூற்றை பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் மறுக்கிறார்கள். பெனாசிர் துப்பாக்கியால் சுடப்பட்டுத்தான் இறந்தார் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இப்படி மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெனாசிர் மரணம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நன்றிங்க

இது என்னய்யா புது கதை... (!?)

Labels: , ,

Friday, December 28, 2007

பெனாசிர் 'இ-மெயில்'

நான் இறந்தால் முஷாரப்பே பொறுப்பு: பெனாசிர் 'இ-மெயில்'

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 28, 2007

வாஷிங்டன்: நான் ஒருவேளை கொல்லப்பட்டால் அதற்கு முஷாரப்தான் காரணமாக இருக்க முடியும். பாதுகாப்பற்ற நிலைக்கு என்னைத் தள்ளியுள்ளார் முஷாரப் என்று மரணத்திற்கு முன்பு பெனாசிர் பூட்டோ அனுப்பிய இமெயில் தகவல் வெளியாகியுள்ளது.

ரால்பிண்டியில் நேற்று நடந்த பயங்கர தாக்குதலில் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் திரும்பிய பின்னர் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு அக்டோபர் 26ம் தேதி பூட்டோ அனுப்பிய ஒரு இ மெயில் வெளியாகியுள்ளது.

இந்த இ மெயிலில் தான் ஒருவேளை பாகிஸ்தானில் கொல்லப்பட்டால் அதற்கு முஷாரப்தான் பொறுப்பாவார் என்று கூறியுள்ளார் பெனாசிர்.

இந்த இ மெயிலை தனது அமெரிக்க செய்தித் தொடர்பாளரும், ஆலோசகருமான மார்க் சீகலுக்கு அனுப்பியுள்ளார் பெனாசிர். அந்த மெயிலில் நான் பாகிஸ்தானில் ஒருவேளை கொல்லப்பட்டால் அதற்கு முஷாரப்தான் காரணம் என பெனாசிர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் தற்கொலைப்படைத் தாக்குதலுக்குப் பிறகு எனக்கு கூடுதல் பாதுகாப்பு தருமாறு நான் கோரியும் கூட முஷாரப் அரசு அதை ஏற்கவில்லை. இதுவரை எனது உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எது நடந்தாலும் கடவுள் விருப்பப்படியே நடக்கட்டும்.

எனக்கு எது நடந்தாலும் அதற்கு முஷாரப்தான் பொறுப்பாவார். அவரது ஆட்சியில் நான் மிகவும் பாதுகாப்பற்றவளாக ஆகியுள்ளேன். எப்போதும் பயத்துனேடேய வாழும் நிலைக்கு முஷாரப் ஆட்சியாளர்கள் தள்ளியுள்ளனர் என்று கூறியுள்ளார் பெனாசிர்.

பெனாசிரின் இந்த இமெயிலை சீகல், சிஎன்என் தொலைக்காட்சியின் உல்ப் பிளிட்சருக்கு அனுப்பி வைத்திருந்தார். பூட்டோ கொல்லப்பட்டால் மட்டுமே இந்த மெயிலை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர் விதித்திருந்தார்.

பாகிஸ்தானுக்கு திரும்புவதற்கு முன்பே தனக்கு கொலை மிரட்டல்கள் இருப்பதாக சிஎன்என்னுக்கு அளித்த பேட்டியில் பெனாசிர் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் அரசில் மிகவும் உயரிய பதவியில் இருக்கும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அப்போது பெனாசிர் கூறியிருந்தார். மேலும் தனது இந்த பயத்தை வெளிப்படுத்தி முஷாரப்புக்கும் கடிதம் எழுதியிருந்தார் பெனாசிர்.

தற்போது சீகலுக்கு அனுப்பிய மெயிலில், முஷாரப்தான் தனது கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என பெனாசிர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனக்கு பாகிஸ்தானில் உள்ள தலிபான், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான், அல் கொய்தா, கராச்சியைச் ேசர்ந்த ஒரு தற்கொலைப் படை தீவிரவாத அமைப்பு ஆகியவற்றால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பெனாசிர் முன்பே கூறியிருந்தார்.

அக்டோபர் தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பிறகு தனக்கு கவச பாதுகாப்பு வாகனங்கள், செல்போன் ஜாமர் கருவிகளுடன் கூடிய பாதுகாப்பு வாகனங்கள், தனியார் பாதுகாவலர்கள் ஆகியோரைக் கொண்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி முஷாரப்புக்கு பெனாசிர் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு ஆதரவாக அமெரிக்க எம்.பிக்கள் மூன்று பேரும் முஷாரப்புக்குக் கடிதம் எழுதியிருந்தனர் என்ர தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

பெனாசிருக்கு இருந்து வந்த மிரட்டல் குறித்து முஷாரப் அரசு கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததால்தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்று சீகல் கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், கராச்சிக்கு அவர் வந்தபோது ஏற்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலின் பின்னணி குறித்து முஷாரப் அரசு சரிவர விசாரணை நடத்தவில்லை.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு மற்றும் அமெரிக்காவின் எப்.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என பெனாசிர் கோரினார். அதையும் முஷாரப் ஏற்கவில்லை.

செல்போன் குண்டுகளை தடுக்கும் வகையில், தனக்கு செல்போன் ஜாமர் வாகனம் தரப்பட வேண்டும் என்று பெனாசிர் கோரியிருந்தார். அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரியுமும் இந்தக் கோரிக்கையை வைத்திருந்தார்.

முன்னாள் பிரதமர் ஒருவருக்குரிய பாதுகாப்பை முஷாரப் அரசு தரவில்ைல என்ற ஆதங்கமும் பெனாசிரிடம் இருந்தது. ஆனால் எந்தவித அடிப்படைப் பாதுகாப்பும் பெனாசிருக்குத் தரப்படவில்லை. சாதாரண போலீஸ் பாதுகாப்பே அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவே அவரது உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார் சீகல்.

சி.என்.என். தொலைக்காட்சியைச் சேர்ந்த டான் ரிவர்ஸ் கூறுகையில், பெனாசிர் கராச்சிக்குத் திரும்பியபோதுஅந்த செய்தியை நாங்கள் சேகரித்தபோது, பாதுகாப்பு குளறுபடிகளை நேரில் காண முடிந்தது. பெனாசிர் இருந்த வாகனத்திற்கு மிக அருகே நாங்கள் செல்ல முடிந்தது. எங்களை யாரும் தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

சீகல் தொடர்ந்து கூறுகையில், அக்டோபர் தாக்குதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரைப் பயன்படுத்திக் கொள்ள காவல்துறை பெனாசிருக்கு அனுமதி அளித்தது. ஆனால் அவர் அதை நிராகரித்து விட்டார். எப்போதும் மக்களுடனேயே இருப்பதை விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் பெனாசிர். மக்களிடைேய நெருக்கமாக இருக்கவே அவர் விரும்பினார். நடந்த குற்றத்திற்கு பெனாசிர் எந்த வகையிலும் காரணமில்லை.

பெனாசிரையும், தேர்தலில் போட்டியிடும் பிற வேட்பாளர்களையும் காக்க வேண்டியது முஷாரப் அரசின் கடமையாகும்.

பெனாசிர் எப்போதும் ஜன சமுத்திரத்தின் மத்தியில்தான் இருந்தார். அதை ஜனநாயகத்ைத விரும்பும் எந்த அரசியல் தலைவராலும் தவிர்க்க முடியாது என்றார் சீகல்.
பாக். தூதர் மறுப்பு

இதற்கிடையே, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது அலி துரானி இதை மறுத்துள்ளார். பெனாசிருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

முஷாரப்பையும் குறி வைத்துக் கொண்டிருக்கும் தீவிரவாதிகள்தான், பெனாசிரையும் குறி வைத்துள்ளனர். தீவிரவாதிகள்தான் பெனாசிர் படுகொலைக்குக் காரணம்.

பெனாசிருக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு தேவையோ அனைத்தும் அளிக்கப்பட்டிருந்தது. அவர் கராச்சிக்கு வந்தபோது பெருமளவிலான போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அப்போது நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது அவர் பாதுகாப்புப் படையினர் அதிகம் இருந்ததால் உயிர் தப்பினார். இல்லாவிட்டால் அப்போதே அவர் உயிரிழந்திருக்கக் கூடும்.

தனிப்பட்ட பாதுகாவலர்களை நியமிக்கவும் பெனாசிர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் கூடவே இருந்து வந்தனர்.

பெனாசிர் பாதுகாப்புக்காக 8000 பாதுகாவலர்கள் வரை நியமிக்கப்பட்ட அவருடேனேயே இருந்து வந்தனர். உலகில் யாருக்குமே இப்படி ஒரு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதில்லை.

அவர் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்க வேண்டும். வெடிகுண்டு வைத்தோ அல்லது வாகனத்தை தகர்த்தோ கொல்லப்படவில்லை. நேருக்கு நேர் சுட்டுக் கொன்றுள்ளனர். எனவே பாதுகாப்பு குறித்த புகார்கள் எல்லாம் சரியல்ல என்றார் அவர்.

நன்றிங்க

முஷ்ராப் ஒரு குள்ள நரி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அரசியலில் யாரையும் யாரும் நம்பி இருக்கக்கூடாது, சொந்தக் காலில் நிற்க வேண்டும். பாதுகாப்பும் தன்னைத்தானே பலமாகக் காத்துக்கொள்ள வேண்டும்.

Labels:

உலகை உலுக்கிய படுகொலைகள்.

உலகை உலுக்கிய மோசமான படுகொலைகள்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 28, 2007

டெல்லி: உலகை உலுக்கிய மோசமான படுகொலைச் சம்பவ வரிசையில் பெனாசிர் பூட்டோவின் கொலைச் சம்பவம் சேர்ந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் உலகம் சந்தித்த மிக மோசமான சில படுகொலைச் சம்பவங்களின் பட்டியல்.

1948, ஜனவரி, 30.

தேசத் தந்தை மகாத்மா காந்தியை, நாதுராம் கோட்சே, நேருக்கு நேர் சுட்டுப் படுகொலை செய்தார்.

1951, அக்டோபர், 16.

பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான், சுட்டுக் கொல்லப்பட்டார்.

1975, ஆகஸ்ட், 15.

வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டார்.

1981, மே, 30.

வங்கதேச அதிபர் ஜியா உர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டார்.

1981, அக்டோபர், 6.

எகிப்து அதிபர் அன்வர் அல் சதாத் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.

1984, அக்டோபர், 31.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தனது மெய்க்காவலர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

1986, பிப்ரவரி, 28.

ஸ்வீடன் பிரதமர் ஓல்ப் பால்மே, ஸ்டாக்ஹோமில் கொல்லப்பட்டார்.

1991, மே, 21.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டுத் தாக்குதலில் பலியானார்.

1991, நவம்பர், 4.


இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ரபீன் டெல் அவிவ் நகரில் யூத தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1993, மே, 1.

இலங்கை அதிபர் ரணசிங்கே பிரேமதாஸா, கொழும்பில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2001, ஜனவரி, 16.

காங்கோ அதிபர் லாரன்ட் கபிலா, மெய்க்காவலரால் படுகொலை செய்யப்பட்டார்.

2001, ஜூன், 1.

நேபாள மன்னர் பிரேந்திரா, ராணி ஐஸ்வர்யா, இளவரசர் நிரஞ்சன் ஆகியோர் பட்டத்து இளவரசர் தீபேந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2003, மார்ச், 12.

செர்பிய பிரதமர் ஸோரன் ஜின்ஜிடிக் பெல்கிரேடில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2003, செப்டம்பர், 10.

ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர் அன்னா லிண்ட், கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

2005, பிப்ரவரி, 14.

லெபனான் பிரதமர் ரபீக் ஹரிரி பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

இந்த வரிசையில் சதாம் உசேன் மரணத்தையும் கூட சேர்க்கலாம். காரணம், இந்த படுகொலைகள் எல்லாவற்றையும் விட ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கிய சம்பவம் அது.

நன்றிங்க

//எகிப்து அதிபர் அன்வர் அல் சதாத் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.//

//இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ரபீன் டெல் அவிவ் நகரில் யூத தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.//

//தேசத் தந்தை மகாத்மா காந்தியை, நாதுராம் கோட்சே, நேருக்கு நேர் சுட்டுப் படுகொலை செய்தார்.//

இந்துத்வ பயங்கரவாதிகளால் காந்தி படுகொலை செய்யப்பட்டார்னு சொல்ல வேண்டியதுதானே!

அது என்னய்யா ஒரு கண்ணுல வெண்ணையும், இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் தடவும் ஓரவஞ்சனை நல்லாவா இருக்கு?

Labels: ,

Thursday, December 27, 2007

பெனாசிர் பூட்டோ படுகொலை

மனித வெடிகுண்டு தாக்குதல்-பெனாசிர் பூட்டோ படுகொலை

வியாழக்கிழமை, டிசம்பர் 27, 2007

ராவல்பிண்டி: ராவல்பிண்டி நகரில் நடந்த மனித குண்டு தாக்குதலில் அந் நாட்டின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் புட்டோ கொல்லப்பட்டார்.

பர்வேஸ் முஷாரப் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தனது கணவர் ஆசிப் சர்தாரியுடன் லண்டனில் தஞ்சம் புகுந்தார் பெனாசிர். சமீப காலமாக பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்டு வரும் அதிவேக மாற்றங்களைத் தொடர்ந்து முஷாரப்பின் வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தான் திரும்பினார்.

ஆனால், முஷாரப்புக்கு எதிரான தனது அரசியல் நிலைப்பாட்டை அவர் கைவிடவில்லை. தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள், பேரணிகளை நடத்தி வந்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இன்று தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் ராவல்பிண்டியில் மாபெரும் பேரணியை பெனாசிர் நடத்தினார். மேடையில் பேசி முடித்துவிட்டு பெனாசிர் கிளம்பியபோது அவர் மீது துப்பாக்கச் சூடு நடந்தது. இதில் அவரது கழுத்தில் குண்டு பாய்ந்தது.

அதைத் தொடர்ந்து மிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
அதில் பெனாசிர் படுகாயமடைந்தார். மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்படும்போதே அவர் பலியானார். மனித வெடிகுண்டு மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாலை 6.15 மணியளவில் இச் சம்பவம் நடந்தது.

பெனாசிருக்கு பாகிஸ்தானின் பழமைவாதிகளும், அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவத்திலும் அவருக்கு எதிரிகள் அதிகம்.

இந்த குண்டுவெடிப்பில் மேலும் 20 பேர் பலியாகியுள்ளனர்.


thatstamil 27/12/07

இரங்கல்.

பயங்கரவாத செயலுக்கு கண்டனம்.

Labels: ,

Friday, December 21, 2007

விபரமறிந்த ஆண்டி!

மக்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை: ஜெ. தாக்கு

சனிக்கிழமை, டிசம்பர் 22, 2007

சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் மக்களுக்கு உதவி செய்யவில்லை. கேட்பாரற்றுக் கிடக்கிறது தமிழகம். இங்கு ஒரு அரசாங்கம் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக இளைஞரணி மாநாடு பயங்கர அராஜகத்தோடும், அதிகார துஷ்பிரயோகத்தோடும் எவ்வளவு தீமைகளை நடத்த முடியுமோ அவ்வளவு தீமைகளோடும் நடந்து முடிந்துள்ளது.

மாநாடு என்ற பெயரில் கருணாநிதி தனது மகனுக்கு முடிசூட்ட விரும்பி நடத்தப்பட்ட இந்த மாநாடு, பெரும் தோல்வியில் முடிந்துள்ளது. மு.க.ஸ்டாலின் தான் இனி முதல்வர் அல்லது துணை முதல்வர் என்று அறிவிக்க விரும்பியே திருப்புமுனை மாநாடு என்று கூவிக்கூவி அழைத்தார்கள்.

ஆனால் கருணாநிதி குடும்பத்து அண்ணன் 'செங்குட்டுவனால்' மாநாட்டின் முடிவு முறியடிக்கப்பட்டதால் எனக்கு பிறகு ஸ்டாலின் என்று அடையாளம் காட்டும் விழாவாக மட்டுமே நடந்து முடிந்திருக்கிறது.

பேரப் பிள்ளைகளை பெற்று தாத்தாவாகி விட்ட ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த இளைஞர் மாநாடு நடத்தப்பட்டிருப்பதாக மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாநாடு என்ற பெயரில் அறுவறுக்கத்தக்க அராஜக நிகழ்ச்சிகள்தான் நடந்துள்ளன. மாநாடு நடந்த இரண்டு நாட்களும் போக்குவரத்து வசதியின்றி மக்கள் அடைந்த துன்பங்கள், வீண் ஆடம்பரம், கலாச்சார சீர்கேடுகள் ஆகியவை தான் அரங்கேறியிருக்கின்றன.

தனியார் பஸ்கள் சேதம்:

மாநாட்டுக்காக தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகள் நெல்லைக்கு வரவழைக்கப்பட்டன. அரசு பேருந்துகளும் பெருமளவில் இயக்கப்பட்டன.

இவற்றில் 186 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயங்கரமாக நாசம் செய்யப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மேலும் பல பேருந்துகள் இதுபோல நாசம் செய்யப்பட்டுள்ளாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து எதிர்க்கட்சிகளுக்குத் தெரிய வந்து பேருந்து உரிமையாளர்களிடம் புகார் தருமாறு கூறியபோது, சேதமடைந்ததற்கான இழப்பீட்டுப் பணத்தைக் கொடுத்து விட்டனர். மீறி புகார் செய்தால், பேருந்துக்கான பெர்மிட்டையே ரத்து செய்து விடுவார்கள் என்று கூறி உண்மையை மறைத்து விட்டனர்.

ஜெனரேட்டர் போட்டுதான் மின்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பெயருக்குக் கூறி விட்டு, பெரும்பாலான இடங்களில் கொக்கி போட்டுத்தான் மின்சாரத்தை எடுத்துள்ளனர்.

திமுகவினரை தங்க வைக்க பல பகுதிகளில் உள்ள பள்ளிகளின் நிர்வாகிகள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். இதனால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்.

திமுகவினர் தங்க இடம் மறுத்த காரணத்திற்காக பல பள்ளிகள் பெரும் நாசத்திற்கு ஆளாகியுள்ளன.

மழையால் மக்கள் பாதிப்பு:

நாட்டில் இன்று யாத மழை, தொடர் வெள்ளப்பெருக்கு, சாவு எண்ணிக்கை 40க்கு மேல் உயர்ந்துவிட்டது. வீடுகளை இழந்த மக்கள் தங்கும் இடம், உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றிற்கு ஆலாய் பறக்கிறார்கள்.

வீடுகளில் கழிவுநீர், வெள்ள நீர் புகுந்து அவற்றை வெளியேற்ற முடியாமல் திணறுகின்றனர். சாலைகள் சேதமடைந்து வெள்ளத்தால் பாலங்கள் உடைபட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் மக்களுக்கு உதவி செய்யவில்லை.

கேட்பாரற்று தமிழகம் கிடக்கின்றது. தமிழகத்தில் ஒரு அரசாங்கம் நடைபெறுகிறதா என்று சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. என்னுடைய ஆட்சியாக இருந்தால் இந்நேரம் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருப்பேன்.

ஓய்வெடுக்கும் ஸ்டாலின்:

ஆனால் மாநாடு நடத்திய களைப்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.லின் கேரளாவில் சுற்றுலா தலமான குமரக்கோமில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். கருணாநிதியோ டெல்லிக்குப் பறந்திருக்கிறார்.

வெள்ளப் பகுதிகளை எந்த அமைச்சரும் எட்டிப் பார்க்கவில்லை. மக்களைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை? இவர்கள் செய்கின்ற அக்கிரமங்களை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. கூடிய விரைவில் மக்கள் இவர்களை தூக்கி எறிவார்கள் என்பது திண்ணம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நன்றிங்க

நேரந்தெரிஞ்சி சங்கூதுறவன் தான் வெவரந்தெரிஞ்ச ஆண்டின்னு சொல்லுவாங்க.

தத்துப் பிள்ளைக்கு கோலகலமாக கல்யாணம் நடத்தியதை ஜெ ஆன்ட்டி மறந்திட வேண்டாம்.

நீங்க எல்லாரும் ஒரு குட்டையில் ஊறின மட்டைகள் என்பதை அப்பாவி பொது மக்கள் மறக்கவில்லை!

Labels: ,

உங்கள் கருத்துக் கணிப்பில்...

சிறந்த முதல்வர் எம்.ஜி.ஆர். - கருணாநிதிக்கு 3வது இடம்!

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 21, 2007

சென்னை: தமிழகத்தில் இதுவரை இருந்த முதல்வர்களிலேயே மறைந்த எம்.ஜி.ஆர்தான் சிறந்தவர் என லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. கருணாநிதிக்கு 3வது இடமும், ஜெயலலிதாவுக்கு 4வது இடமும் கிடைத்துள்ளது.

சென்னை லயோலா கல்லூரியின் சார்பில் அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தப்படும். நடப்பு அரசியல், சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தக் ககருத்துக் கணிப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு கருத்துக் கணிப்பை லயோலா கல்லூரி நடத்தியுள்ளது. பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்தில் 350 இடங்களில் 3281 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இதன் முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் வெளியிட்டார். இதில் தமிழகத்தில் இதுவரை இருந்த முதல்வர்களிலேயே சிறந்தவர் எம்.ஜி.ஆர்.தான் என்று பெருவாரியான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தை பெருந்தலைவர் காமராஜர் பெறுகிறார். 3வது இடத்தில் முதல்வர் கருணாநிதி உள்ளார். 4வது இடத்தில் ஜெயலலிதா இருக்கிரார். பேரறிஞர் அண்ணாவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

திமுக ஆட்சி மீது திருப்தி:

கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சி நன்றாக உள்ளதாக 51.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக ஆட்சியின் பல்வேறு நலத் திட்டங்களுக்கும் மக்களிடையே நல்ல ஆதரவு இருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அதேசமயம் திமுகவுக்கு கடந்த கருத்துக் கணிப்பில் இருந்ததை விட இம்முறை கணிசமாக மக்கள் ஆதரவு குறைந்துள்ளதாகவும், அதிமுகவுக்கு கடந்த முறையை விட இந்த முறை கணிசமான ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்து அரவணைத்துச் சென்றால்தான் திமுக அரசு முழுமையாக பதவிக்காலத்ைதப் பூர்த்தி செய்ய முடியும் என 18.5 சதவீதம் பேர் கருத்து ெதரிவித்துள்ளனர்.

சாதிப்பார் விஜயகாந்த்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களிடையே நல்ல ஆதரவு காணப்பட்டது. எதிர்காலத்தில் அவர் பெரும் சாதனை படைப்பார் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுளாக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தேமுதிக செயல்படுவதாக 48.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசியலில் விஜயகாந்த் பெரும் சக்தியாக வருவார் என்று 47.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், சரத்குமாருக்கு மக்களிடையே ஆதரவு இல்லை. அவர் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார் என வெறும் 4.3 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். கார்த்திக்குக்கு 4.1 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. டி.ராஜேந்தருக்கு 1.3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த முதல்வர் ஜெயலலிதா:

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு 32.1 சதவீதம் பேர் ஜெயலலிதா என்று கூறியுள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கு 27.9 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. விஜயகாந்த் 24.3 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. தயாநிதி மாறனுக்கும் இதில் இடம் கிடைத்துள்ளது. அவருக்கு ஆதரவாக 6.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் டாக்டர் ராமதாஸுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.

ரஜினி வர மாட்டார்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர் சினிமாவிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும் என 45.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆன்மீகத்தில் ஈடுபடுவார் என 23.8 சதவீதம் பேரும், அரசியலுக்கு வர வேண்டும் என 11.3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அன்புமணிக்கு ஆதரவு:

கட்டாய கிராமப்புற சேவையை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டும் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த திட்டம் சரியானதே என்று 82.7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இது நிச்சயம் பாமக தரப்புக்கு சந்தோஷம் கொடுக்கும் செய்தியாகும்.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என 72.4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே ராமர் பாலம் தொடர்பான சர்ச்சையில், மக்கள் சேது சமுத்திரத் திட்டம் பக்கம் இருப்பது தெரிய வருகிறது.

அடுத்த பிரதமர் சோனியா:

சோனியா காந்திதான் அடுத்த பிரதமராக வருவார் என 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 10.6 சதவீதம் பேரும், அத்வானிக்கு 6.6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தல் வருவதை தைரியமாக ஆதரிக்கும் கட்சிகள் எதுவும் இல்லை என்று 53.8 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என 53.4 சதவீதம் பேர் கருதுகின்றனர். 19.3 சதவீதம் பேரின் ஆதரவே பாஜக கூட்டணிக்குக் கிடைத்துள்ளது.

நன்றிங்க

போட்டி பொறாமையை வளர்த்து வன்முறையில் இறங்கியாவது அடுத்தவனை வெற்றி கொள்ள வேண்டும் என்ற வெறியை வளர்ப்பது இந்த கருத்துக் கணிப்பு.

உங்கள் கருத்துக் கணிப்பில் தீயை வைக்க...!

Labels: , ,

ஒட்டகம் வெட்ட தடை இல்லை!

பக்ரீத்: ஒட்டகம் வெட்ட தடை இல்லை

வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007

சென்னை: பக்ரீத் பண்டிகையொயைட்டி ஒட்டகத்தை பலி கொடுக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகையின்போது, ஆடுகள், ஒட்டகங்களை பலியிடப்படுவது வழக்கம். குர்பானி என்று இதற்குப் பெயர்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டு குர்பானி கொடுக்கப்பட்டன. இதை எதிர்தது பிராணிகள் நலவாரியம், பல்வேறு அமைப்பினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒட்டகம் வெட்ட தடை விதித்தது. பின்னர் சில நிபந்தனைகளுடன் ஒட்டகத்தைப் பலி கொடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போதும் ஒட்டகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தவ்ஹீத் ஜமாத் கட்சி சார்பில் நான்கு ஒட்டகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன

இதையடுத்து கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்த வக்கீல் ராஜேந்திரன் ஏற்கனவே இந்த வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி இதுதொடர்பாக முறையிட்டார்.

அவர் கூறுகையில், இந்த ஆண்டு 80 ஒட்டகங்களை குர்பானி கொடுக்க கொண்டு வந்துள்ளனர். எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், இதை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் எனவும் கோரினார்.

ஆனால் ஒட்டகம் வெட்டி குர்பானி கொடுப்பது மத வழக்கம் என்பதால் இதற்குத் தடை விதிக்க முடியாது. மேலும் இதை அவசர வழக்காகவும் விசாரிக்க முடியாது என்று கூறி நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சசீதரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

நன்றிங்க

வளர்ப்பு பிராணிகளில் ஆடுகள், மாடுகள் போல் ஒட்டகமும் ஒரு வளர்ப்புப் பிராணி.

மதசார்பற்ற பாரத நாட்டில் அவரவர் மதத்தைப் பின்பற்ற எல்லா மதத்தினருக்கும் சுதந்திரம் உண்டு. பக்ரீத் பெருநாளில் ஆடு, மாடுகளைப் பலியிடுவது போல ஒட்டகத்தையும் பலியிடலாம் என்பது இஸ்லாமிய மதத்தின் வழிமுறை என்பது வழக்கு தொடுத்த வழக்குரைஞர் ராஜேந்திரனுக்குத் தெரியாமல் போய்விட்டது.

என்னவோ அவர் வீட்டு ஒட்டகத்தை அநியாயமாக அபகரித்து பலியிடுகிற மாதிரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

முஸ்லிம்கள் விலை கொடுத்து வாங்கிய பிராணிகளையே பலியிடுகிறார்கள் இதில் தலையிட்டு தடை செய்ய எவருக்கும் எந்த உரிமையும் இல்லை! இதை ராஜேந்திரன் போன்றவர்கள் உணர வேண்டும்.

Labels: , ,

Thursday, December 20, 2007

தண்ணீர் தேசம.

தண்ணீர் தேசமான தமிழகம் - மழைக்கு 33 பேர் பலி - இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007

சென்னை: தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கன மழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி விட்டன. மழைக்கு இதுவரை 33 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்கியது முதல் சரிவர மழை பெய்யாமல் இருந்து வந்தது. ஆங்காங்குதான் மழை பெய்து வந்தது. ஆனால் பருவ மழைக் காலம் முடியப் போகும் தருவாயில், வானம் உடைப்பெடுத்து, தமிழகத்தை தத்தளிக்க வைத்து வருகிறது.

கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தின் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை புரட்டி எடுத்து வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 4 நாட்களாக நிற்காமல் பெய்து வரும் பலத்த மழையால் தமிழகமே தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகரமே தண்ணீரில் மிதக்கிறது. பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது. புறநகர்ப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து தீவுகள் போல மாறியுள்ளன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான,பூண்டி நீர்த்தேகம் நிரம்பியுள்ளது. இதையடுத்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் தொடர்ந்து தாமதமாகவே வந்து கொண்டுள்ளன. இதேபோல, திருச்சி, மதுரை, நெல்லையிலும் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கண்ணீரில் மிதக்கும் காவிரி விவசாயிகள்:

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையும், சோகமும் அடைந்துள்ளனர். லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

சீர்காழி, நாகப்பட்டனம், பூம்புகார், தலைநகர், கோடியக்கரை ஆகிய பகுதிகளில் பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு தீவுகள் போல ஆகியுள்ளன.

பல கிராமங்களில் வீடுகள் இடிந்தும், சுவர்கள் இடிந்தும் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

வயர்கள் அனைத்தும் குளங்கள் போல மாறிக் கிடக்கின்றன. தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் மட்டும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன.

மிதக்கும் விருத்தாச்சலம் பஸ் நிலையம்:

காவிரி டெல்டா மாவட்டங்களுக்குப் பிறகு அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டம் கடலூர்தான்.

இங்கு பெரும்பாலன பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. நெய்வேலி அணல் மின் கழகத்தில், சுரங்கத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

விருத்தாச்சலத்தில் வெள்ளம் மக்களை பாதித்துள்ளது. அங்குள்ள பேருந்து நிலையம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மணிமுத்தாறில் வெள்ள் கரைபுரண்டோடுகிறது. இதனால் மணிமுத்தாறில் உள்ள தரைப்பாலம் மூடி விட்டது. இதன் காரணமாக கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 250 கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது நீர்மட்டம் 46 அடியாக உள்ளது. ஏரியின் கரைகள் பலவீனமாக இருப்பதால் கரை உடைந்து பெரும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரி நிரம்பி விட்டது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது அருகில் உள்ள 5 கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் வெள்ளம் மக்களைப் பாதித்துள்ளது. திருவண்ணாமலையில், உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குள் நீர் புகுந்தது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் மீட்பு நடவடிக்கைக்கு ஒரு அதிகாரியும் வராததால் அவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர்.

ரிஷிவந்தியம் பகுதியில் ஏரி, குளங்கள் மழையால் நிரம்பி வழிகின்றன. பகண்டையை அடுத்த எகால் கிராமத்தில் ஏரி உடைந்து, நூறு ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது.

கரையாம்பாளையம் கிராமத்தில் குளம் உடைந்ததால், தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. ஏழு வீடுகள் இடிந்து தரைமட்டமானது. அறுவடை செய்து அடிப்பதற்கு தயாராக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் கட்டுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

மரூர் பாப்பாந்தாங்கள் ஏரியில் இருந்து வழிந்த தண்ணீர் திருக்கோவிலூர் -சங்கராபுரம் சாலையில் கடம்பூர் அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பெருக்கெடுத்து ஓடியது. திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் சென்ற ஒரு அரசு பஸ் வெள்ளத்தில் சிக்கியதால், இப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

உடுமலைப்பேட்டையில் இருவர் பலி:

உடுமலைப்பேட்டையில் வீடு இடிந்து முறுக்கு வியாபாரிகளான நாகராஜன், பிரபு ஆகியோர் பலியானார்கள். தேனி மாவட்டம் அழகாபுரியில் மின்சாரம் தாக்கி தாயும், மகனும் உயிரிழந்தனர்.

சென்னை அருகே ஆ.முல்லைவாயில் என்ற இடத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோபி என்பவர் உயிரிழந்தார். திருவள்ளூர் மணலி புதி நகர் பகுதியில் மாடி வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலியானார்.

இதுவரை மழைக்கு 33 பேர் பலியாகியுள்ளனர். சென்னை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும், தஞ்சை, திருவண்ணாமலையில் தலா 3 பேரும், விழுப்புரம், மதுரை, திருவள்ளூர், சேலம், தேனி, கோவையில் தலா 2 பேரும், புதுக்கோட்டை, தர்மபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

இதற்கிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

இதற்கிடையே மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும், தரைக்காற்று பலமாக இருக்கும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

நன்றிங்க

Labels: ,

Wednesday, December 19, 2007

கதை சொல்லும் படம்.



நன்றிங்க



நன்றிங்க

Labels: