Friday, December 28, 2007

உலகை உலுக்கிய படுகொலைகள்.

உலகை உலுக்கிய மோசமான படுகொலைகள்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 28, 2007

டெல்லி: உலகை உலுக்கிய மோசமான படுகொலைச் சம்பவ வரிசையில் பெனாசிர் பூட்டோவின் கொலைச் சம்பவம் சேர்ந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் உலகம் சந்தித்த மிக மோசமான சில படுகொலைச் சம்பவங்களின் பட்டியல்.

1948, ஜனவரி, 30.

தேசத் தந்தை மகாத்மா காந்தியை, நாதுராம் கோட்சே, நேருக்கு நேர் சுட்டுப் படுகொலை செய்தார்.

1951, அக்டோபர், 16.

பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான், சுட்டுக் கொல்லப்பட்டார்.

1975, ஆகஸ்ட், 15.

வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டார்.

1981, மே, 30.

வங்கதேச அதிபர் ஜியா உர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டார்.

1981, அக்டோபர், 6.

எகிப்து அதிபர் அன்வர் அல் சதாத் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.

1984, அக்டோபர், 31.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தனது மெய்க்காவலர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

1986, பிப்ரவரி, 28.

ஸ்வீடன் பிரதமர் ஓல்ப் பால்மே, ஸ்டாக்ஹோமில் கொல்லப்பட்டார்.

1991, மே, 21.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டுத் தாக்குதலில் பலியானார்.

1991, நவம்பர், 4.


இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ரபீன் டெல் அவிவ் நகரில் யூத தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1993, மே, 1.

இலங்கை அதிபர் ரணசிங்கே பிரேமதாஸா, கொழும்பில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2001, ஜனவரி, 16.

காங்கோ அதிபர் லாரன்ட் கபிலா, மெய்க்காவலரால் படுகொலை செய்யப்பட்டார்.

2001, ஜூன், 1.

நேபாள மன்னர் பிரேந்திரா, ராணி ஐஸ்வர்யா, இளவரசர் நிரஞ்சன் ஆகியோர் பட்டத்து இளவரசர் தீபேந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2003, மார்ச், 12.

செர்பிய பிரதமர் ஸோரன் ஜின்ஜிடிக் பெல்கிரேடில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2003, செப்டம்பர், 10.

ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர் அன்னா லிண்ட், கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

2005, பிப்ரவரி, 14.

லெபனான் பிரதமர் ரபீக் ஹரிரி பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

இந்த வரிசையில் சதாம் உசேன் மரணத்தையும் கூட சேர்க்கலாம். காரணம், இந்த படுகொலைகள் எல்லாவற்றையும் விட ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கிய சம்பவம் அது.

நன்றிங்க

//எகிப்து அதிபர் அன்வர் அல் சதாத் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.//

//இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ரபீன் டெல் அவிவ் நகரில் யூத தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.//

//தேசத் தந்தை மகாத்மா காந்தியை, நாதுராம் கோட்சே, நேருக்கு நேர் சுட்டுப் படுகொலை செய்தார்.//

இந்துத்வ பயங்கரவாதிகளால் காந்தி படுகொலை செய்யப்பட்டார்னு சொல்ல வேண்டியதுதானே!

அது என்னய்யா ஒரு கண்ணுல வெண்ணையும், இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் தடவும் ஓரவஞ்சனை நல்லாவா இருக்கு?

No comments: