குர்ஆன் மனப்பாடப் போட்டி!
ஜூலை 19, 2007
திருச்சி: திருச்சியில் வருகிற 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் குர்ஆன் மனப்பாடப் போட்டி நடைபெறுகிறது.
திருச்சி மாநகர ஜமாஅத்தூல் உலமா சபையும், உறையூர் இஸ்லாமிய நலவாழ்வு சங்கமும் இணைந்து மாநில அளவிலான குர் ஆன் ஷரீஃப் மனப்பாடப் போட்டியை நடத்தவுள்ளன.
30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ரோஷன் மஹால் திருமண அரங்கம் மற்றும் ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தப் போட்டி நடைபெறும்.
முதல் பரிசாக ரூ. 15,000, 2வது பரிசாக ரூ. 10,000, 3வது பரிசாக ரூ. 8000 மற்றும் ஆறுதல் பரிசாக ரூ. 5000 அறிவிக்கப்பட்டுள்ளது. உற்சாக அன்பளிப்பாக 20 பேருக்கு தலா ரூ. 1000 அளிக்கப்படும்.
நன்றிங்க
2 comments:
அட, நல்லாருக்கே.
முடிஞ்சா, வீடியோ எடுத்டு, யூட்யூப்ல போட்டுப் பதியுங்க. :)
வாங்க surveysan, உங்க வரவுக்கு நன்றி
செய்தியை நாலுபேர் படிச்ச அக்கம் பக்கத்தில தெரிஞ்சவங்ககிட்டே சொல்லுவாங்கன்னு பதிவில போட்டேன்.
Post a Comment