Monday, July 16, 2007

அதென்னமோ தெரியலீங்க!

கள்ள உறவு வைத்திருக்கும்

19.07.07 மற்றவை

முன்பு மேலப்பாளையம் மும்தாஜ்... கடந்த 6_ம் தேதி கோவை ஆமீனா.. இந்தப் பட்டியலில் இப்போது புதிதாக ஓர் இஸ்லாமியப் பெண்ணின் பெயர் இடம் பெற்றுவிட்டது. கள்ள உறவு வைத்திருக்கும், விபசாரம் செய்யும் முஸ்லிம் பெண்களின் கதை இதுதான் என்று, அவர்களைத் தேடித் தேடித் தீர்த்துக் கட்டும் முஸ்லிம் தீவிரவாதிகளின் முயற்சிக்கு மேலும் ஒரு பெண் பலியாகி விட்டார். அந்த பரிதாபத்துக்குரிய பெண்ணின் பெயர் பஷீரா கனி.

கடந்த 26_ம் தேதி! பெரம்பலூர் மாவட்டம் பெரிய நெசிலூர் காட்டுப்பகுதியில் அறைநிர்வாணப் பெண் பிணம் ஒன்று கிடப்பதாகத் தகவல் வந்ததும், ஆடிப்போனது வேப்பூர் காவல்நிலையம். அந்தப் பெண்ணுக்கு சுமார் இருபத்திரண்டு வயது இருக்கலாம். அவளது அருகில் கிடந்த துப்பட்டா அவரை ஒரு முஸ்லிம் பெண் என்று அடையாளம் காட்டி விட்டது. கட்டியிருந்த சேலை, கால் கொலுசு, கையில் அணிந்திருந்த வாட்ச் ஆகியவை அவரை பணக்காரப் பெண்ணாகக் காட்டியது. முகம் ஒரு பாறாங்கல்லால் பலமுறை அடித்து சிதைக்கப்பட்டிருந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை.

அந்தப் பெண் மேலாடையின்றி, அரை நிர்வாணமாகக் கிடந்ததால், இது கற்பழிப்பு அல்லது நகைக்காக நடந்த கொலையாக இருக்கலாம் என்று வேப்பூர் போலீஸார் வழக்கம் போல் யோசித்தனர். அந்தப் பெண்ணின் புகைப்படத்தை துண்டுப் பிரசுரங்களாக்கி பெரம்பலூர் முழுவதும் தூவினர்.

அதன்பின் நடந்ததை வேப்பூர் இன்ஸ்பெக்டர் இசையழகன் நம்மிடம் விவரிக்கிறார்.

''இறந்த பெண் யார் என்று நாங்கள் தோண்டித் துருவிக் கொண்டிருந்த போது, பெரம்பலூர் மாவட்டம் கல்லக்குடியைச் சேர்ந்த ஷேக்தாவூத் என்பவர் வந்தார். கொலையுண்ட பெண்ணின் உடைகளை வாங்கிப் பார்த்தவர் 'இது என் தங்கை பஷீராகனியின் உடை' என்று கதறினார். இறந்த பெண் அவரது தங்கைதான் என்பது உறுதியாகி விட்டது.

யார் மீது சந்தேகம் என்று ஷேக்தாவூத்திடம் கேட்டபோது, அவர் சுட்டிக்காட்டிய நபர் துரைமங்கலம் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த அகமது பாஷா. த.மு.மு.க.வின் செய்தித் தொடர்பாளரான அவரை உடனே அள்ளிக் கொண்டு வந்தோம். எடுத்த எடுப்பிலேயே நான்தான் கொலையாளி' என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்து அகமது பாஷா எங்களை அதிர்ச்சியடைய வைத்து விட்டார்'' என்றவர், கொலைக்கான காரணத்தைப் பற்றி நம்மிடம் விவரித்தார்.

''அரியலூர் அருகேயுள்ள கல்லக்குடியைச் சேர்ந்தவர்தான் பஷீராகனி. கணவர் அப்துல்லா, அரபு நாட்டில் வேலை செய்கிறார். பஷீராகனிக்கு பாத்திமாகனி, ஆஸியா என்று இரண்டு சின்ன வயது மகள்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அகமது பாஷாவை, பஷீரா கனிக்குத் தெரியாது. ஊரில் உள்ள அவரது கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டுவதில் பஷீரா கனிக்கும் பக்கத்து நிலத்துக்காரர் பெரியசாமி என்பவருக்கும் பிரச்னை ஏற்பட, கணவர் வெளிநாட்டில் இருப்பதால் இந்த பிரச்னைக்காக த.மு.மு.க.வின் மாவட்டச் செயலாளர் மீரா மைதீனின் உதவியை நாடினார், பஷீரா கனி. அவர் மூலம் அறிமுகமானவர்தான் அகமது பாஷா. இவர் அந்த இயக்கத்தின் மாவட்ட செய்தித் தொடர்பாளர்.

அகமது பாஷா தலையிட்டதும் அதிசயம் நடந்தது போல கரும்பு வெட்டு பிரச்னை தீர்ந்தது. இதனால் அகமது பாஷாவின் மீது பஷீரா வைத்திருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. அதையே சாக்காக வைத்து பஷீரா கனியின் குடும்ப நண்பராக மாறினார் பாஷா. கொடுக்கல் வாங்கல், அவசரத்துக்கு நகையைக் கழற்றித் தருவது என்ற அளவுக்கு அவர்களது நட்பு வளர்ந்தது'' என்றார் இசையழகன்.

அதன்பின் நடந்தது என்ன? கொலையாளி அகமது பாஷா கொடுத்த வாக்கு மூலத்தின் படி அதைப் பார்ப்போம்.

''பஷீரா கனியிடம் நான் பழக ஆரம்பித்த போது அவள் பலபேருடன் கள்ள உறவு வைத்திருக்கும் தகவலை, என்னிடம் சொன்னாள். அதுமட்டுமல்ல! 'உன் மீதும் எனக்கு ஆசையாக இருக்கிறது. உல்லாசமாக இருக்கலாம் வா!' என்று அடிக்கடி வற்புறுத்த ஆரம்பித்தாள். 'கணவன் இருக்கும்போது அந்நிய ஆடவனுடன் ஓர் இஸ்லாமியப் பெண் உறவு கொள்வது தவறு. இது மார்க்கத்துக்கு எதிரானது' என்று நான் அறிவுறுத்தி வந்தேன். இதனால் பஷீராகனி என்மேல் எரிச்சலானாள்.

அவளிடம் அவசரத் தேவைக்காக நான் பத்தரை பவுன் தங்க நகைகளை வாங்கியிருந்தேன். அதை அவசரமாகக் கேட்டு அவளது உறவினர் ஒருவருடன் என் வீட்டுக்கே வந்து தகராறு செய்தாள். அவளிடம் உடனே நகையைக் கொடுத்து அனுப்பி விட்டேன். நன்றி கெட்டவள். நாம் செய்த உதவியை மறந்து இப்படி நடந்து கொள்கிறாளே!? என்று நானும் எரிச்சலானேன்.

இந்த நிலையில், பஷீராகனி மீண்டும் என்னிடம் ஓர் உதவி கேட்டு வந்தாள். சென்னையில் உள்ள த.மு.மு.க. நிர்வாகிகளை நேரில் போய் பார்த்தால்தான் வேலை நடக்கும் என்று அவளிடம் சொல்லி வைத்தேன். கடந்த மாதம் 25_ம் தேதி காது குத்து விழாவுக்காக அவளது அண்ணன் வீட்டுக்கு பஷீராகனி வந்திருந்தாள். அங்கிருந்து அவளை சென்னைக்கு அழைத்துப் போவதாகக் கூறினேன். சம்மதித்தாள். பெரம்பலூரில் இருவரும் பஸ் ஏறினோம். தொழுதூர் வந்தபோது 'மகள்கள் என்னைத் தேடுவார்கள். இன்னொரு நாள் நாம் சென்னைக்குப் புறப்படலாம்' என்று பஷீராகனி நச்சரிக்க ஆரம்பித்தாள். இருவரும் வேப்பூரில் இறங்கிக் கொண்டோம்''.

'நள்ளிரவு நேரம் என்பதால் இனி ஊருக்குப் போக பஸ் கிடையாது. இங்கே பக்கத்தில் என் நண்பர் வீட்டில் தங்கிவிட்டு காலையில் வீட்டுக்குப் போகலாம்' என்றேன். அவள் சம்மதித்தாள். அதன்பிறகு ஓர் ஆட்டோ பிடித்து பெரிய நெசலூர் கைகாட்டி அருகே இறங்கி வயல் வழியாக நடந்து சென்றோம்.

அப்போது நான் 'நீ என்மீது அடிக்கடி ஆசைப்பட்டாயே! இப்போது பார். தனிமையாக நல்ல சந்தர்ப்பம் அமைந்து விட்டது. வா இருவரும் உல்லாசமாக இருக்கலாம்' என்றேன். பஷீராகனி உடனே சம்மதித்தாள். ஒதுக்குப்புறமாக அவளை அழைத்துச் சென்றேன். அவள் மேலாடையைக் களைந்தாள். நான் உல்லாசத்துக்கு முயல்வது போல நடித்து அவள் கழுத்தைத் துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்தேன். முகத்தில் பாறாங்கல்லால் மூன்று முறை அடித்து அடையாளம் தெரியாமல் உருக்குலைத்தேன். 'நகைக்காகத்தானே என்னை வீடு தேடி வந்து அசிங்கப்படுத்தினாய்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, அவள் அணிந்திருந்த பத்தரை பவுன் நகைகளைக் கழற்றிக் கொண்டு ஊருக்குத் திரும்பி விட்டேன்.

பஷீராகனி போன்ற வேலிதாண்டும் வெள்ளாடுகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. கணவன் இருக்கும்போதே அந்நிய ஆடவர்களை இச்சிக்கும் அவளைக் கொல்வதில் தவறு இல்லை என்றுதான் கொலை செய்தேன். தவறு செய்யும் மற்ற இஸ்லாமிய சமூகப் பெண்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்.'' இப்படித்தான் வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறான் அகமது பாஷா.

இந்த அகமது பாஷாவின் சொந்த ஊர் மதுரை. இவர் இஸ்லாமியராகப் பிறந்தவர் இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பு சவூதியில் வேலை பார்த்து விட்டு வந்த பிறகுதான் இவர் முஸ்லிமாக மாறியிருக்கிறார். அகமது பாஷாவின் இயற்பெயர் நீதி மன்னன். இவர் மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த நண்பரின் தங்கை நர்கீசை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பஷீரா கனிக்கு இருப்பதைப் போல இவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள்.

மதம் மாறியது பெற்றோருக்குப் பிடிக்காததால் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக் குடிக்கு வந்து விட்ட அகமது பாஷா அங்குள்ள இஸ்லாமிய இளைஞர்களிடம் தீவிர மதப் பிரசாரமும் செய்து வந்திருக்கிறார்.

நன்றிங்க: kumudam reporter 19.07.07

அதென்னமோ தெரியலீங்க, இந்த மாதிரி விஷயத்தில மட்டும் முஸ்லிம்கள் பொசுக்கு, பொசுக்குன்னு மாட்டிகிறங்கன்னு செய்தி வருதுங்க! இதுக்குன்னே முஸலிம் ஆவுறதும் அதிசயமா இருக்குங்க என்னத்த சொல்ல!?

No comments: