Thursday, January 24, 2008

செவ்வாய் கிரகத்தில் பெண்ணா... (!?)

செவ்வாய் கிரகத்தில் பெண்ணா?-நாசா படத்தால் பரபரப்பு

வியாழக்கிழமை, ஜனவரி 24, 2008

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் (Mars) தரையிறங்கி அதை படம்பிடித்து வரும் ஸ்பிரிட் விண்கலம் (6 சக்கர ரோபோட்) அனுப்பியிருக்கும் ஒரு படம் உலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாஸாவின் ஆய்வுக் கலம் தான் ஸ்பிரிட். 2 அடி உயரமான இந்தக் கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து படம் பிடித்து அனுப்பிக் கொண்டுள்ளது. ஒரு சில மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்கும் என கருதப்பட்ட இந்தக் கலம் இத்தனை நாட்களாகியும் மிக வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை வலம் வந்து கொண்டுள்ளது.

சமீபத்தில் இந்தக் கலம் அனுப்பிய ஒரு படம் திகில் கலந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஒரு பாறையின் மீது பெண் அமர்ந்திருப்பதைப் போல உள்ளது இந்தப் படம். அவர் கையை நீட்டிக் கொண்டு போஸ் தந்து கொண்டுள்ளார்.

அது உண்மையிலேயே மனித உருவமா அல்லது பாறையின் உருவமா என்று தெரியாமல் உலகம் குழம்பி வருகிறது.

செவ்வாயில் ஜீவராசிகள் இருக்கலாம் என்றும் நம்பும் வானியல் ஆய்வாளர்களுக்கு இது நல்ல `தீனி' போட்டுள்ளது. அது பெண தான் என இவர்கள் அடித்துப் பேச.. இல்லையில்லை அது பாறையின் உருவம் என்கின்றனர் சீரியஸ் விஞ்ஞானிகள்.

Men Are From Mars, Women Are From Venus என்பார்கள். இங்கே மார்ஸ் கிரகத்தில் பெண் உருவம் கிடைத்துள்ளது.

நன்றிங்க



அட ஆமாங்க...

பக்கத்து கிராமத்தில் வாத்தியாரம்மாவா பணியாற்றும் அந்தப் பெண், காலையில் வேலைக்கு செல்ல டவுண் பஸ்ஸை எதிர் நோக்கி பேரூந்து நிலையத்தில் காத்திருக்கிறாள்.

நிழற்குடை இல்லாத, அது ஒரு கிராமத்து பேரூந்து நிலையம்.

Wednesday, January 23, 2008

04. புரி ஜெகநாதருக்கு "மனைவி' தேவை...!

04. புரி ஜெகநாதருக்கு "மனைவி' தேவை...! : இதுவரை யாரும் விண்ணப்பிக்கல

புரி : ஒரிசா மாநிலம் புரி கோவிலில் வீற்றிருக்கும் ஜெகநாத சாமிக்கு, மனைவியாக, ஒரு பெண்ணை நியமிக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை; இதுவரை, எந்த பெண்ணும் விண்ணப்பிக்கவில்லை.

புரி ஜெகநாதர் கோவிலில், தேவதாசி முறை, ஆயிரம் ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது. கடவுளின் மனைவியாக கருதப்படுபவர் தேவதாசி. கோவிலில் கடவுளுக்கு நடக்கும் எல்லா சடங்குகளிலும், தேவதாசியின் பங்கு முக்கியம். காலையில், கடவுளை எழுந்திருக்க செய்வதற்கும், இரவில் தூங்க வைப்பதற்கும் அவர் பாடுவது முக்கியம்.புரி கோவிலில், தேவதாசியாக இருந்து வருபவர் சசிமணி தேவி; வயது 85.

தினமும் காலையிலும்,இரவிலும் கோவிலில் இவர் பாடுவதை பார்க்க பலர் கூடுகின்றனர். புரி ஜெகநாதரின் கடைசி "மனிதகுல' மனைவியாக இருக்கும் இவருக்கு வயதாகி விட்ட நிலையில், புதிய தேவதாசியை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதற்காக, புரி மன்னரும், ஒரிசா அரசும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், தேவதாசியாக இருக்க எந்த பெண்ணும் இதுவரை முன்வரவில்லை. அதனால், புரி கோவிலில் ஆயிரம் ஆண்டாக இருந்த தேவதாசி நடைமுறை, முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

சசிமணி தேவி கூறுகையில்,"எனக்கு ஆறு வயதாக இருந்தபோது, என்னை ஜெகநாதரின் மனைவியாக்கி விட்டனர். என் அப்பா, அம்மா யார் என்று கூட எனக்கு தெரியாது. அந்த வயது முதல் கோவிலே கதியாக இருக்கிறேன். எனக்கு அம்மா, அப்பா, கணவன் எல்லாம் புரி ஜெகநாதர் தான். அவர் நிழலில் தான், வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தினமும் கோவிலில் வந்து என் "கணவன்' முன் பாடுவேன். நடனம் ஆட எனக்கு தெரியாது. அதனால், ஆடுவதில்லை ' என்று கூறினார். அவர் கைகளில் சிவப்பு வளையல்கள் குலுங்க, பட்டுப்படவை ஜொலிக்க ஜெகநாதர் சன்னிதிக்கு போய்க் கொண்டிருந்ததை பலரும் பார்த்து வியந்தனர்.

நன்றிங்க

''மணமகள் தேவை'' என்று எல்லா ஊடகங்களிலும் விளம்பரம் கொடுக்கலாம்!

Saturday, January 19, 2008

இதெல்லாம் என்ன விளையாட்டு?

வணிகன் புஷ்ஷின் வளைகுடாப் பயணம்

இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடியைச்'"சாவு வணிகன்"(மவுத்க சவுதாகர்) என அடைமொழியிட்டு அழைத்தார்.அது மெத்தப் பொருத்தமானதே! மோடி இந்தியாவின் சாவு வணிகன் என்றால் புஷ், "அனைத்துலகச் சாவு வணிகன்".

தம் முன்னோடிகள் வியட்னாம், லாவோஸ், கம்போடியா எனச் செய்த சாவு வணிகத்தை அடியொற்றி, புஷ் ஆப்கானிஸ்தான், இராக் எனத் தொடர்கிறார். தம் வணிகத்துக்குப் புதிய சந்தையைத் தேடப் புறப்பட்டு வந்ததே புஷ்ஷின் வளைகுடாப் பயணம்.

இம்மாதம் 11ஆம் நாள் குவைத்தில் துவங்கி, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகங்கள் வழி நேற்று ஸவூதி அரேபியாவில் முடிந்தது புஷ்ஷின் வளைகுடாப் பயணம்.

(முஸ்லிம்களுக்கு எதிரான) சிலுவைப்போர் என ஆர்ப்பரித்து ஆப்கானிஸ்தானை அலங்கோலப் படுத்தி, பேரழிவு ஆயுதம் என அச்சுறுத்தி இராக்கை அழித்த புஷ்ஷின், 'கழுகு'ப் பார்வையில் அடுத்த குறி ஈரான்.

தம்மையும் அமெரிக்காவையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நெஞ்சுயர்த்தி அறைகூவல் விடுக்கும் ஈரான் அரசையும் அதன் அதிபர் அஹ்மதி நிஜாத்தையும் தனிமைப் படுத்தி ஈரானையும் ஒழித்துக் கட்டி விட்டால், உலகில் எதிர்ப்புக் குரலே இல்லாமல் அமெரிக்கா ஆட்டம் போடலாம் என்பது புஷ்ஷின் திட்டமாக இருக்கலாம்.

ஈரான் அதிபராக அஹ்மதிநிஜாத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அமெரிக்காவுக்கு முள் தைத்ததுபோல் உறுத்தியது. அண்மையில் கத்தர் நாட்டில் நடந்து முடிந்த வளைகுடா ஒத்துழைப்பு (GCC) நாடுகளின் மாநாட்டில், [வரலாற்றில் முதன் முறையாக ஈரான் அதிபர்] அஹ்மதுநிஜாத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டது அமெரிக்காவின் உறுத்தலை அதிகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஸவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ்வின் அழைப்பை ஏற்று ஹஜ்ஜுக் கடமையை நிறைவு செய்ய ஒரு பெருங்குழுவுடன் அஹ்மதிநிஜாத் ஸவூதிக்குச் சென்று வந்தது, அரபு நாடுகளுடனான ஈரானின் நெருக்கத்தையும் ஷிய்யா-ஸுன்னி வேறுபாட்டையும் மீறிய நேசத்தையும் புலப்படுத்தியது. இதை அமெரிக்க அதிபராலும் அவரது குழுவாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த ஒற்றுமையை உடைத்தலே உபாயம் எனப் புறப்பட்டு வந்தார் புஷ்.

இராக்கைத் தாக்கி அழித்த பயங்கரவாதத்துக்கெதிரான போரில் ( socalled war on terrorism)வளைகுடா நாடுகளைத் தம் பாடி வீடுகளக மாற்றினார் புஷ்.

பஹ்ரைன் நாடு கடற்படைத் தளமானது; கத்தர் விமானப் படைத் தளமானது; குவைத் தரைப்படைத் தளமானது; ஐக்கிய அரபு அமீரகங்கள் எரிபொருள் நிரப்பும் தளமானது.அதே முறையில் இப்போது ஈரானைத் தாக்க இத்தளங்களின் பயன்பாட்டை உறுதிபடுத்தவே புஷ்ஷின் பயணம்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இராக்கில் சென்றிறங்கி முகம் கிழிக்கப்பட்டது போல இம்முறை நடந்து விடக் கூடாது என்பதில் புஷ்ஷும் அவரது அறிவுரைஞர்களும் மெத்தவே அக்கறைப்பட்டனர். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என அமெரிக்க உளவாளிகள் தந்த அறிக்கையால் வேறு வழி தேடிய அவர்கள், புஷ் பயணம் துவங்கும் முன் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.

ஈரானை ஒரு "பாதுகாப்பு அச்சுறுத்தல் நாடு"(threat to security) என உலக நாடுகளின் முன் வெளிப்படுத்த ஹோர்முஸ்ஸில் (HORMUZ) அமெரிக்கப் போர்க் கப்பல்களை ஈரானின் படகுகள் வழிமறித்துக் குண்டுகள் வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டியதாக அமெரிக்கா அழுது புலம்பியது.

சிறு நகரங்கள்போல் நகரும் வலிமையான பெரிய மூன்று அமெரிக்கப் போர்க்கப்பல்களை ஈரானின் சிறிய ஐந்து விரைவுப் படகுகள் வழிமறித்துக் குண்டுகள் வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டினவாம் :-) இதுதான் பாதுகாப்பு அச்சுறுத்தலாம்.

"எங்கள் கடல் எல்லையில் வழக்கமாக நடைபெறும் நிகழ்வு; நாங்கள் கப்பல்களின் அடையாளத்தை(IDENTITY)க் கேட்பதும் அவர்கள் தம் அடையாளத்தைச் சொல்வதும் சாதாரண நடைமுறைதான். அப்படித்தான் இப்போதும் நடந்ததே தவிர நாங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டவில்லை என்பதை எங்களின் நாடாப் பதிவுகள் உறுதிப் படுத்தும்" என ஈரான் தன் பக்கத்தைத் தெளிவாக்கியது.

தொடர்ந்து சொந்த மக்களையே பொய்கூறி ஏமாற்றுவதற்காக அவர்களிடம் புஷ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ஈரான் அறிக்கை விட்டிருக்கிறது.

ஈரானின் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் அமெரிக்காவின் கப்பற்படைப் பேச்சாளர் (Naval spokesman Rear Admiral Frank Throp IV), 'எங்கள் நாடாவில் பதிவான குண்டு மிரட்டல் வேறு புலத்திலிருந்தும் வந்திருக்க வாய்ப்புண்டு' என்று கூறிவிட்டார்.அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, உலகம் அமெரிக்காவின் அழுகுணி ஆட்டத்தைப் புறக்கணித்து விட்டது.

எனினும் திட்டமிட்டபடி புஷ் வந்தார். புஷ்ஷின் வளைகுடாப் பயணத்தின் நோக்கம்:-


ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்தால், அமெரிக்காவுக்கு வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பை யாசிப்பது.
ஈரானுக்கு அரபுலகம் அளித்து வரும் ஆதரவை முறிப்பது.
வளைகுடாப் பகுதியில் ஈரானின் செல்வாக்கை ஒழிப்பது.
வளைகுடா வட்டாரத்துக்கு அச்சுறுத்தலான( regional threat) ஈரான், ஹிஸ்புல்லாஹ், ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் ஆகிய இயக்கங்களுக்குக் கோடிக்கணக்கான பணம் தந்து வளர்ப்பதாகக் குற்றம் சாட்டிய புஷ், மக்களாட்சியையும் உண்மையான விடுதலையையும் வெறுக்கும் இத்தீவிரவாதிகள் இஸ்லாமின் உன்னதத்தை அச்சுறுத்திக் கடத்திவிட்டதாக(hijak)கூறினார்.

புஷ் தம் ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் அரபுகளின் ஆவலான, இராக் மறு சீரமைப்பு, பாலஸ்தீன முழு விடுதலை போன்றவற்றைப் பேசவில்லை.

ஈரானால் வளைகுடா வட்டாரத்துக்கு ஆபத்து எனில் நாங்கள் ஈரானுடன் பேசித் தீர்த்துக் கொள்வோம் எனத் தெளிவாக அறிவித்துவிட்ட வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் ஈரான் அழிப்புத் திட்டத்திற்கு ஒத்துழைக்கும் என்பது ஐயமே!

எனினும் புஷ் (அமெரிக்கா) இஸ்ரேலைத் தூண்டிவிட்டு ஈரானைத் தாக்கித் தன் சாவு வணிகத்தைத் தொடரும் வாய்ப்புண்டு.இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவின் மேல் சினமுறா; மாறாக இஸ்ரேலைக் கட்டுப்படுத்த அமெரிக்காவையே நாடும் என்பதும் ஓர் அரசியல் விளையாட்டே!

இராக், அடுத்து ஈரானையும் ஒழித்து விட்டால் வளைகுடா நாடுகளை எதிர்ப்பே இல்லாமல் எளிதில் வளைத்துவிடலாம் என்பது அமெரிக்காவின் தொலைநோக்குத் திட்டம். ஏனெனில் அவர்களின் குறி எண்ணெய்யே!

நன்றிங்க

இதெல்லாம் என்ன விளையாட்டு...?

இதெல்லாம் எண்ணை விளையாட்டு...!

Monday, January 14, 2008

மாணவர்களுக்கு பாஸ்போர்ட்.

மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க திட்டம்
திங்கள்கிழமை, ஜனவரி 14, 2008

மதுரை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மொத்தமாக பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் விரைவில் செயல்படுத்த உள்ளது.

ஏராளமான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி, பல ஆண்டு கோரிக்கைக்குப் பிறகு 2007 டிசம்பர் 17ம் தேதி மதுரையில் பாஸ்போர்ட் அலுவலகம் துவக்கப்பட்டது.

மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த அலுவலகம் துவங்கிய நாளில் இருந்து கூட்டம் அலைமோதுகிறது.

திருச்சி அலுவலகத்தைப் பிரித்தால் போதிய மக்கள் ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்ததால் தான் மதுரையில் புதிய அலுவலகத்தை துவக்குவதற்கு ஆரம்பம் முதல் மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. அந்த தயக்கம் தேவையற்றது என்று தற்போது வரும் கூட்டம் நிரூபித்து வருகிறது.

திருச்சி அலுவலகத்தை விட மதுரை அலுவலகத்தில் தினந்தோறும் கூட்டம் அதிகமாக வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு செல்வது தான் எனத் தெரிய வந்துள்ளது.

துவக்கப்பட்ட நாள் முதல் 15 வேலை நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல், இமிக்ரேசன் சான்றிதழ் பெறுதல் போன்ற வேலைகளுக்காக 7,000 பேர் மதுரை அலுவலகம் மூலம் பயன் பெற்றுள்ளனர்.

திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மொத்தமாக பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் மதுரை அலுவலகத்தில் இந்த திட்டம் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை. இதற்கு காரணம் மதுரை அலுவலகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது தான்.

தற்போது மதுரை அலுவலகத்தில் 22 பேர் பணியாற்றுகின்றனர். இப்போது வரும் கூட்டத்தையே இவர்களால் சமாளிக்க முடியவில்லை. இந்த அலுவலகம் முழுமை பெற வேண்டுமானால் மேலும் 35 ஊழியர்கள் தேவையாம். இது பற்றி மத்திய அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மொத்தமாக பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை மதுரை அலுவலகம் விரைவில் செயல்படுத்த உள்ளது. அதற்குள் போதிய ஊழியர்களை நியமிக்க மத்திய வெளியுறவு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள்.

நன்றிங்க

பொதுவானவை.

Friday, January 04, 2008

இதான் புது வருஷமா?

மும்பை : பெண்களை மானப்பங்கப்படுத்திய கும்பலில் 7 பேர் கைது







மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 3 ஜனவரி 2008 ( 18:30 IST )

ஒட்டு மொத்த மும்பையையும் உறைய வைக்கும்விதமாக நடந்தேறிய புத்தாண்டு தின இரவு கொடூரச் சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை ஜூஹூ கடற்கரையையொட்டி அமைந்திருக்கும் ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 2 பெண்கள், நள்ளிரவு 1.40 மணிக்கு பிறகு கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அவர்களில் ஒரு பெண்ணின் கணவரும், மற்றொரு பெண்ணின் ஆண் உறவினரும் உடன் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சுமார் 70 முதல் 80 பேர்கொண்ட கும்பல் அந்த பெண்களை சூழ்ந்துகொண்டு அவர்களது ஆடைகளை கிழித்தும், கைவைத்தும் மானப்பங்கப்படுத்தியது.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் புகைப்படக்காரர்கள் இச்சம்பவத்தை புகைப்படமாக எடுத்ததோடு, போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர்.

இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த பெண்களை அந்தக் கும்பலிடமிருந்து மீட்டனர்.இது தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியாகி, மும்பை வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக புகார் கொடுக்க அந்த (கலிஃபோர்னியாவில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்திய ) பெண்கள் விரும்பவில்லை என்ற போதிலும், போலீசார் இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை ஏதும் கொடுக்காமல் தட்டிக் கழித்தனர்.

மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மும்பை போலீஸ் கமிஷனர் ஜாதவ், சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்தான் என்றும், நீங்கள்தான் உங்கள் மனைவிமார்களை இதுபோன்று வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அலட்சியமாக கூறியிருந்தார்.

அவரது இந்த பேட்டி மும்பைவாசிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த புகைப்படக்காரர்கள் இருவரும் புகார் கொடுக்க சென்ற போதும் அதனை பதிவு செய்யாமல், சம்பவம் நடந்தது எங்கள் ஏரியாவில் இல்லை எனக் கூறி அவர்களை பல மணி நேரம் போலீசார் அலைக்கழித்தனர்.

பின்னர் உயரதிகாரிகள் தலையிட்டதைத் தொடர்ந்தே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து புகைப்படங்களில் காணப்பட்ட அடையாளத்தின் அடிப்படையில், முதல்கட்டமாக குற்றவாளிகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதர குற்றவாளிகளைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என மும்பை காவல் துறை அறிவித்துள்ளது.

இதனிடையே நடந்த அந்த பயங்கரமான சம்பவத்தை தாம் மறக்க விரும்புவதாகவும், அதே சமயம் தாம் கற்பழிக்கப்படவில்லை என்றும், ஆடைகள் ஏதும் கிழிக்கப்படவில்லை என்றும், ஊடகங்கள்தான் இச்சம்பவத்தை பெரிதுபடுத்திவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கூறியுள்ளார்.

அதே சமயம் சம்பவம் நடந்தபோது தம்மை காப்பாற்ற வராத மும்பைவாசிகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்த பெண், இனிமேல் தாம் ஒருபோதும் தன் வாழ்க்கையில் இந்தியாவில் பார்ட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)

நன்றிங்க

இதுதான் புத்தாண்டு கொண்டாட்டமா?

சுதந்திரம் வேண்டுமென நள்ளிரவில் நடமாடும் பெண்கள் இச்சம்பவத்தை சிந்திக்க வேண்டும்.
எழுபது பேர்களின் கழுகுப் பார்வைக்கு இரையாகிய இரு அப்பாவிப் பெண்களின் உள்ளம் எப்படி துடித்திருக்கும்.

நல்ல புத்தாண்டு தொடக்கம் அந்தப் பெண்களுக்கு (!?)

Thursday, January 03, 2008

முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து

10. முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து: குடும்ப நல கோர்ட் உத்தரவு

சென்னை: முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது.

தங்களை பிரித்து வைக்கும்படி கேட்டு சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் முஸ்லிம் தம்பதி மனு தாக்கல் செய்திருந்தனர். "இனிமேல் இருவரும் சேர்ந்து வாழ முடியாது' என்று இரு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு முதன்மை நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பிலும் விருப்பத்துடன் விவாகரத்து கேட்கும்போது அதை அனுமதிக்க இஸ்லாமிய சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று கோர்ட் விசாரணை நடத்தியது. இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது.

இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் 1954ன் படி திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பொருந்தக் கூடிய விவாகரத்து நடைமுறை முஸ்லிம்களுக்கும் பொருந்துமா என்றும் கேள்வி எழுப்பப் பட்டது.வாதங்களை கேட்டறிந்த நீதிபதி தேவதாஸ்,

"தலாக் நடைமுறை எந்த வகையில் இருந்தாலும் அல்லா ஏற்க மாட்டார். அல்லாவின் கட்டளைகளை நிறைவேற்ற முடியாத தம்பதிகள் பிரிவதற்கு நிச்சயம் அல்லா அனுமதிப்பார் . இந்த தம்பதிகளால் அல்லாவின் இல்லற கடமைகளை நிறைவேற்ற முடியாது. எனவே, தங்கள் முழு விருப்பத்துடன் பிரிவதற்கு அனுமதிக்கிறேன்' என்று உத்தரவிட்டார்.

நன்றிங்க, தினமலர் 03/01/08

அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவனுக்கு வெறுப்பானது தலாக் - விவாகரத்து.

ஆனாலும் தம்பதிகள் ஒன்றாக இணைந்து வாழவே முடியாது என்ற நிலையில் அல்லாஹ் தலாக்கை - விவாகரத்தை அனுமதிக்கிறான்.


இதைத்தான் ஜட்ஜய்யா சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.

கென்யாவில் கலவரம்.

கென்யாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தையடுத்து அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியனரின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர ம‌ோடி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் கென்யாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும். கென்யாவில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை கவனமுடன் கவனித்து வருவதாகவும், ‌இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கென்யா அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

நன்றிங்க, தினமலர் 03/01/08

கென்யாவில் வசிக்கும் இந்தியர்களின் நிலை பற்றிக் கவலைப்படும் நரஹத்தி மோடி குஜராத்தில் வாழ்ந்த குஜராத்தி(முஸ்லிம்)களைப் பற்றிக் கவலைப் படாதது ஏனோ...?