Thursday, January 24, 2008

செவ்வாய் கிரகத்தில் பெண்ணா... (!?)

செவ்வாய் கிரகத்தில் பெண்ணா?-நாசா படத்தால் பரபரப்பு

வியாழக்கிழமை, ஜனவரி 24, 2008

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் (Mars) தரையிறங்கி அதை படம்பிடித்து வரும் ஸ்பிரிட் விண்கலம் (6 சக்கர ரோபோட்) அனுப்பியிருக்கும் ஒரு படம் உலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாஸாவின் ஆய்வுக் கலம் தான் ஸ்பிரிட். 2 அடி உயரமான இந்தக் கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து படம் பிடித்து அனுப்பிக் கொண்டுள்ளது. ஒரு சில மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்கும் என கருதப்பட்ட இந்தக் கலம் இத்தனை நாட்களாகியும் மிக வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை வலம் வந்து கொண்டுள்ளது.

சமீபத்தில் இந்தக் கலம் அனுப்பிய ஒரு படம் திகில் கலந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஒரு பாறையின் மீது பெண் அமர்ந்திருப்பதைப் போல உள்ளது இந்தப் படம். அவர் கையை நீட்டிக் கொண்டு போஸ் தந்து கொண்டுள்ளார்.

அது உண்மையிலேயே மனித உருவமா அல்லது பாறையின் உருவமா என்று தெரியாமல் உலகம் குழம்பி வருகிறது.

செவ்வாயில் ஜீவராசிகள் இருக்கலாம் என்றும் நம்பும் வானியல் ஆய்வாளர்களுக்கு இது நல்ல `தீனி' போட்டுள்ளது. அது பெண தான் என இவர்கள் அடித்துப் பேச.. இல்லையில்லை அது பாறையின் உருவம் என்கின்றனர் சீரியஸ் விஞ்ஞானிகள்.

Men Are From Mars, Women Are From Venus என்பார்கள். இங்கே மார்ஸ் கிரகத்தில் பெண் உருவம் கிடைத்துள்ளது.

நன்றிங்க



அட ஆமாங்க...

பக்கத்து கிராமத்தில் வாத்தியாரம்மாவா பணியாற்றும் அந்தப் பெண், காலையில் வேலைக்கு செல்ல டவுண் பஸ்ஸை எதிர் நோக்கி பேரூந்து நிலையத்தில் காத்திருக்கிறாள்.

நிழற்குடை இல்லாத, அது ஒரு கிராமத்து பேரூந்து நிலையம்.

No comments: