Saturday, April 05, 2008

கருகிய தளிர்!

பள்ளியில் திருட்டுப் பட்டம் சுமத்தியதால் 4ம் வகுப்பு மாணவி தற்கொலை

சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2008

சென்னை: பள்ளியில் திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டதால் மனமுடைந்த 4ம் வகுப்பு மாணவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி-பரமேஸ்வரி தம்பதியின் மகள்கள் புவனேஸ்வரி (வயது 9), கீதா (8), லட்சுமி (5).

புவனேஸ்வரியும், கீதாவும் சின்னாண்டி மடத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இந்தப் பள்ளியில் ஒரு மாணவியின் நோட் புக், பென்சில் காணாமல் போய் விட்டது. இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியைகள் 4 பேர் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் மற்ற மாணவிகள் முன் புவனேஸ்வரிக்கு திருட்டு பட்டம் சுமத்தி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த புவனேஸ்வரி மாலையில் வீடு திரும்பியதும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

இதில் உடல் கருகிய புவனேஸ்வரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தாள்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மாணவியின் தாயார் பரமேஸ்வரி கூறுகையில்,

எனது மகள் மீது அநியாயமாக திருட்டு பட்டம் சுமத்தி அவளை அடித்து துன்புறுத்தியுள்ளனர். எனது 2வது மகள் கீதாவையும் ஆசிரியைகள் அடித்துள்ளனர். எனவே அந்த 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இச் சம்பவத்தால் அப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் சின்னாண்டி மடம் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நன்றிங்க

மாணவ, மாணவிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாடம்பெற வேண்டும்.

ஓர் உயிர் அநியாயமாக கருகி விட்டது. நெருப்பில் எப்படியெல்லாம் துடித்திருக்கும்...! பிள்ளையை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

No comments: