Tuesday, April 29, 2008

நல்ல முன்னேற்றம் (!?)

தினமும் ஒரு கற்பழிப்பு: தலைகுனியும் தலைநகரம்

புதுடெல்லி (ஏஜென்சி), 29 ஏப்ரல் 2008 ( 16:29 IST )

நாளொன்றுக்கு ஒரு கற்பழிப்பு சம்பவம் நிகழ்வது, தலைநகர் புதுடெல்லியை தலைகுனியச் செய்ய வைத்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 330 கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.

மொத்தம் 121 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பாலியல் கொடுமைகள் தொடர்பான 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 8 சிறுமிகள் உள்பட 14 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது, டெல்லி போலீஸ் கமிஷ்னர் ஒய்.எஸ்.தத்வாலுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான பாராளுமன்றக் குழு நோட்டீஸ் அனுப்புவதற்கு தூண்டுகோலாய் அமைந்துள்ளது.

அதில், அண்மைக்காலமாக பதிவாகிவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று டெல்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக டெல்லியின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், '90 சதவிகித கற்பழிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளோம். அவர்களில் பெரும்பாலானோர், பாதிக்கப்பட்டோருக்கு முன்கூட்டியே தெரிந்த நபர்களாகவே இருக்கிறார்கள்' என்றார்.

கடந்த ஆண்டு பதிவாகியுள்ள 581 கற்பழிப்பு வழக்குகளில், பாதிக்கப்பட்டோருக்குத் தெரிந்த, அவர்களுடன் நன்றாக பழகியிருந்தவர்கள் 98.28 சதவிகிதத்தினராவர்.

டெல்லி நகரில் கடந்த 2005-ல் 658 கற்பழிப்பு வழக்குகள் பதிவாயின; அதே ஆண்டில் 762 பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகள் பதிவாயின. 2006-ல் 713 பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகள் பதிவாயின. மீண்டும் இக்குற்றங்கள் அதிகரித்து, கடந்த ஆண்டில் இவ்வழக்குகள் 835 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2007-ல் பதிவான கற்பழிப்பு வழக்குகளில், குற்றவாளிகளில் 68 சதவிகிதத்தினர் கல்வியறிவில்லாதவர்கள் என்பதும், 24 சதவிகிதத்தினர் பத்தாம் வகுப்பு வரை கற்றவர்கள் என்பதும் தெரியவருகிறது.

மேலும், 80 சதவிகிதத்தினர் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் என்பதும் போலீசாரின் ஆய்வறிக்கை மூலம் தெரியவருகிறது.

நன்றிங்க

நல்ல முன்னேற்றம் :(((

No comments: