Friday, April 25, 2008

குடியால் சீரழிந்த குடும்பம்.

குடும்பம் நடத்த மனைவி மறுப்பு: 'குடிகார' கணவர் தற்கொலை

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 25, 2008

தூத்துக்குடி: குடிப்பழக்கத்துக்கு அடிமையானவருடன் குடும்பம் நடத்த முடியாது என்று மனைவி மறுத்ததால் விரக்தி அடைந்த கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வல்லநாட்டை சேர்ந்த பரமசிவன் மகன் தம்புராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி முல்லை மலர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். தம்புராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் தினசரி குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புறுத்துவாராம்.

இதில் வெறுத்துப் போன முல்லை மலர் சில நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு நெல்லையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் தன் மாமனார் வீட்டுக்கு நேற்று சென்ற தம்புராஜ், தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு மனைவியிடம் கெஞ்சினார். ஆனால் அவரது குடிப்பழக்கத்துக்கு பயந்துகொண்டு முல்லை மலர் தம்புராஜுடன் செல்ல மறுத்துவிட்டார்.

இதனால் அவமானத்துடன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்த தம்புராஜ் விரக்தியில் விஷம் குடித்து விட்டார். அவரை பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலையில் தம்புராஜ் இறந்தார்.
இதுபற்றி பாளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நன்றிங்க

என்னத்த சொல்ல... :(

No comments: