Sunday, February 17, 2008

அடப் பாவிங்களா!

பெண்ணை ஆண் பயணியுடன் தூங்க சொன்ன பஸ் டிரைவர்

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2008

ஹைதராபாத்: ஹைதாராபாத்திலிருந்து நாக்பூருக்குச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில், ஆண் பயனியுடன் படுத்துக் கொண்டு பயணிக்குமாறு பெண் பயணியை வற்புறுத்திய டிரைவரை போலீஸார் கைது செய்து, பஸ்சையும் பறிமுதல் செய்தனர்.

ஹைதராபாத்தில் இருந்து நாக்பூருக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. இது படுக்கை வசதி கொண்ட பஸ் ஆகும்.

இந்த பஸ்சில் 20 பேர்தான் பயணிக்க முடியும். ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு 40 பேருக்கு டிக்கெட் கொடுத்திருந்தனர். அதாவது ஒரு இருக்கைக்கு இரு பயணிகள் என டிக்கெட் கொடுத்திருந்தனர்.

பஸ் கிளம்பிவிட்ட நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மகிமா என்ற பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில், ஆண் பயணி இருந்தார். அவருடன் எப்படி பயணிக்க முடியும் என்று மகிமா கேட்டபோது, அவருடன் படுத்துக் கொண்டு பயணிக்குமாறு கூறியுள்ளார் டிரைவர்.

அதிர்ச்சி அடைந்த மகிமா செல்போன் மூலம் தனது உறவினர்களுக்கு தகவல் தந்தார். அவர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீஸாருடன் விரைந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், துஸ்ரான் என்ற இடத்தில் பேருந்தை மடக்கினர்.

அராஜகமாக நடந்து கொண்ட டிரைவரைக் கைது செய்த அவர்கள், பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.

நன்றிங்க

காலத்தின் கோலமய்யா!

No comments: