Saturday, May 05, 2007

எம்மதமும் சம்மதங்க!

திருமண வரன் விளம்பரங்களில் "மதம் ஓர் தடையில்லை!" "எம்மதமும் சம்மதம்" என்று சிலர் குறிப்பிடுவார்கள். இந்த பாலிசியைக் கடைபிடித்து சீனிவாசன் என்ற இந்து மதத்தைச் சார்ந்த ஒரு ஏமாற்றுக்காரன் பற்றிய செய்தியப் பாருங்க!



முஸ்லீம் பெண்ணை மணந்த இந்து வாலிபர்
கிறிஸ்தவ பெண்ணை ஏமாற்றி திருமணம்!!


மே 04, 2007

சென்னை: முஸ்லீம் பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட இந்து வாலிபர், அதை மறைத்து விட்டு கிறிஸ்தவப் பெண் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசன். செல்போன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் ரஸியா பேகம் என்ற முஸ்லீம் பெண்ணுக்கும் கடந்த 2001ம் ஆண்டு காதல் மலர்ந்தது. ரஸியா பேகம் ஆசிரியையாக உள்ளார்.

இருவரும் வேறு வேறு மதம் என்பதால் இருவரது வீடுகளிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்து முறைப்படி ரஸியா பேகத்தை கல்யாணம் செய்து கொண்டார் சீனிவாசன். அதன் பின்னர் இருவரும் தனி குடித்தனத்தை ஆரம்பித்தனர்.

இருவரது குடும்பத்தினரும் இவர்களை ஏற்றுக் ரொள்ளவில்லை. இருந்தாலும் அதுகுறித்துக் கவலைப்படாமல் இருவரும் வசித்து வந்தனர். ஆரம்பத்தில் சிறப்பாக போய்க் கொண்டிருந்த குடும்ப வாழ்க்கை நாளாக நாளாக கசக்க ஆரம்பித்தது.

அடிக்கடி தனது மனைவியிடம் பணம் கேட்டார் சீனிவாசன். ரஸியா பேகமும் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில்தான் தனது செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த மைதிலி என்ற பெண் மீது காதல் கொண்டார் சீனிவாசன். மைதிலியிடம் தனக்கு திருமணம் ஆன விவகாரத்தை மறைத்து அவரைக் காதலிக்க ஆரம்பித்தார் சீனிவாசன்.

மைதிலியின் காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டனர். மைதிலி கிறிஸ்தவப் பெண் என்பதால் அவரது கல்யாணம் பிராட்வேயில் உள்ள கிறிஸ்தவ பேராலாயத்தில் நடந்தது.

இந்த நிலையில் இதுகுறித்துக் கேள்விப்பட்டார் ரஸியா பேகம். அதிர்ச்சி அடைந்த அவர் தேவாலயத்திற்கு விரைந்தார். ஆனால் அதற்குள் கல்யாணம் ஆகி விட்டது. மண்ணடியில் உள்ள கல்யாண மண்டபத்தில் வரவேற்பு நடப்பதாக தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார் ரஸியா பேகம். பின்னர் அங்கு விைரந்தார். போலீஸாரும் மண்டபத்திற்கு விரைந்து வந்தனர். நடந்ததை அறிந்து மைதிலி குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

இதையடுத்து மைதிலியின் தந்தையும் ஒரு புகார் கொடுத்தார்.

ரஸியா பேகம் மற்றும் மைதிலியின் தந்தை கொடுத்த புகார்களின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனைக் கைது செய்தனர்.

இந்து வாலிபர் இரு மதத்தைச் சேர்ந்த பெண்களை மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிங்க

முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்கிறார்கள் என்று ஒப்பாரி வைப்பவர்கள் அனேகமாக தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் இனி சொல்ல வேண்டும். அதிக பட்சம் நான்கு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மார்க்க அனுமதி இருந்தாலும் முஸ்லிம்களில் 99% ஒருவனுக்கு ஒருத்தி என்றே வாழ்கிறார்கள் .

ஐயா,
இது போன்ற ஏமாற்றுக்காரர்கள் எல்லா மதங்களிலும் உண்டு. ஏமாற்றியவர் இந்துவாக இருந்தாலும் கைது செய்யப் பட்டுள்ளாரே! ஆகவே இதை பெரியமனசு பண்ணி பெரிசு படுத்தாமல் விட்டுவிடுங்கள் என்று நடுநிலையாளர்கள் சொல்லலாம்.

விபச்சாரம் + ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களாகக் கருதப்பட்டு பொதுவில் வைத்து தண்டிப்பதன் மூலம் இதுபோன்ற ஏமாற்றுக்காரர்கள் உருவாகாமால் இருக்க ஒரு சமூகக் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது இஸ்லாம்.

ஆனால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சீனிவாசன் எப்படியும் பதினைந்து நாட்களுக்குள் வெளிவந்து மீண்டும் தன் கைவரிசையைக் காட்டுவார். அப்போதும் நமது பத்திரிக்கைகள் மூன்று பெண்களை ஏமாற்றியவன் XXXX ஆவது பெண்ணை ஏமாற்றும்போது கைது! என்று ஏமாற்றுபவர்களுக்கு புகழாரங்களுடன் ஊடக முக்கியத்துவம் கொடுத்து இன்னும் பல ஏமாற்றுக்காரர்களை உருவாக்குவார்கள்!

ஏமாற்றுக்காரர்களை நம் நாட்டு சட்டத்தால் தண்டிக்க முடியாது!

ஏன் தெரியுமா?

அவர்கள் சட்டத்தையும் ஏமாற்றத் தெரிந்தவர்கள்!

**************************************
இதே மாதிரி ஒரு செய்தியை (இதில் மோசடி இருப்பதாக தெரியல) வைத்து காவி பரிவாரக் கும்பல்கள் கும்மியடிப்பதை இங்கே பாருங்க.

இந்துத்துவாக்களுக்கு 'அரசியல்' பண்ண ஒரு காரணம் கிடைத்து விட்டது.

2 comments:

நல்லடியார் said...

//ஏமாற்றுக்காரர்களை நம் நாட்டு சட்டத்தால் தண்டிக்க முடியாது!

ஏன் தெரியுமா?

அவர்கள் சட்டத்தையும் ஏமாற்றத் தெரிந்தவர்கள்!//

இவர்களைத்தான் ஏமாறாதவன் என்று சொல்வாங்களோ? :-)))

முஸ்லிம் said...

நல்லடியார் உங்கள் வரவுக்கு நன்றி

//இவர்களைத்தான் ஏமாறாதவன் என்று சொல்வாங்களோ? :-)))//

ஏமாற்றுபவன் எந்த கொம்பனாக இருந்தாலும் ஒரு நாளைக்கு மாட்டுவான் :-)