Thursday, June 26, 2008

தீவிரவாதத்ததைச் சொல்லி...

தீவிரவாதத்தை எதிர்த்து போரிட
பாகிஸ்தானுக்கு ரூ.24ஆயிரம் கோடி அமெரிக்கா கொடுத்தது
மிகக்குறைவான தொகையே செலவிடப்பட்டது கண்டுபிடிப்பு



வாஷிங்டன், ஜுன்.26-

தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்காக பாகிஸ்தானுக்கு ரூ.24 ஆயிரம் கோடியை அமெரிக்கா கொடுத்தது. ஆனால் மிகக்குறைவான தொகையே அதற்காக செலவிடப்பட்டதை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு

அமெரிக்காவில் உள்ள நிïயார்க் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான போரை அமெரிக்கா தொடங்கியது. இந்த போரில் அமெரிக்காவின் பங்காளியாக இருக்கும் பாகிஸ்தானும் தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்காக அந்த நாட்டுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்தது. 2001-ம் ஆண்டு முதல் அந்த நாட்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் உதவி அளிக்கப்பட்டது. இந்த நிதியை பாகிஸ்தான் எவ்வாறு செலவிட்டது என்பதை கண்டுஅறிவதற்காக அமெரிக்க அதிகாரிகள் அந்த நாட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். அமெரிக்க அரசாங்க அக்கவுண்டபிளிட்டி அலுவலக அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். ஆய்வுக்கு பிறகு அவர்கள் அறிக்கை கொடுத்தனர். அந்த அறிக்கையில் எந்த நோக்கத்துக்காக நிதி உதவி அளிக்கப்பட்டதோ அந்த நோக்கத்துக்கு மிக குறைந்த அளவு தொகையே செலவிடப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்க எம்.பி.க்கள் ஆத்திரம்

இநத அறிக்கையை பார்த்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆத்திரம் அடைந்தனர். வெளிநாட்டு விவகாரங்களுக்கான குழு தலைவரும் ஜனநாயக கட்சி உறுப்பினருமான ஹோவர்டு பெர்மன் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட உதவித்தொகை தீவிரவாதிகளை எதிர்த்து போரிட பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக மரபுரீதியான ராணுவ வசதிகளை பெருக்கி கொள்வதற்காக அந்த தொகை செலவிடப்பட்டு உள்ளது. அல்கொய்தாவிடம் விமானப்படையே கிடையாது. விமானங்களில் அவர்கள் பயணம் செய்வதும் கிடையாது. ஆனால் விமானப்பாதுகாப்பு ராடார் பராமரிப்புக்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறி, அந்த தொகையை பாகிஸ்தானுக்கு திரும்ப செலுத்தவேண்டும் என்றும் அமெரிக்காவை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றிங்க

அல்கொய்தாவின் பெயரைச் சொல்லி...

No comments: