Showing posts with label அவலம். Show all posts
Showing posts with label அவலம். Show all posts

Tuesday, April 29, 2008

நல்ல முன்னேற்றம் (!?)

தினமும் ஒரு கற்பழிப்பு: தலைகுனியும் தலைநகரம்

புதுடெல்லி (ஏஜென்சி), 29 ஏப்ரல் 2008 ( 16:29 IST )

நாளொன்றுக்கு ஒரு கற்பழிப்பு சம்பவம் நிகழ்வது, தலைநகர் புதுடெல்லியை தலைகுனியச் செய்ய வைத்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 330 கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.

மொத்தம் 121 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பாலியல் கொடுமைகள் தொடர்பான 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 8 சிறுமிகள் உள்பட 14 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது, டெல்லி போலீஸ் கமிஷ்னர் ஒய்.எஸ்.தத்வாலுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான பாராளுமன்றக் குழு நோட்டீஸ் அனுப்புவதற்கு தூண்டுகோலாய் அமைந்துள்ளது.

அதில், அண்மைக்காலமாக பதிவாகிவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று டெல்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக டெல்லியின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், '90 சதவிகித கற்பழிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளோம். அவர்களில் பெரும்பாலானோர், பாதிக்கப்பட்டோருக்கு முன்கூட்டியே தெரிந்த நபர்களாகவே இருக்கிறார்கள்' என்றார்.

கடந்த ஆண்டு பதிவாகியுள்ள 581 கற்பழிப்பு வழக்குகளில், பாதிக்கப்பட்டோருக்குத் தெரிந்த, அவர்களுடன் நன்றாக பழகியிருந்தவர்கள் 98.28 சதவிகிதத்தினராவர்.

டெல்லி நகரில் கடந்த 2005-ல் 658 கற்பழிப்பு வழக்குகள் பதிவாயின; அதே ஆண்டில் 762 பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகள் பதிவாயின. 2006-ல் 713 பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகள் பதிவாயின. மீண்டும் இக்குற்றங்கள் அதிகரித்து, கடந்த ஆண்டில் இவ்வழக்குகள் 835 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2007-ல் பதிவான கற்பழிப்பு வழக்குகளில், குற்றவாளிகளில் 68 சதவிகிதத்தினர் கல்வியறிவில்லாதவர்கள் என்பதும், 24 சதவிகிதத்தினர் பத்தாம் வகுப்பு வரை கற்றவர்கள் என்பதும் தெரியவருகிறது.

மேலும், 80 சதவிகிதத்தினர் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் என்பதும் போலீசாரின் ஆய்வறிக்கை மூலம் தெரியவருகிறது.

நன்றிங்க

நல்ல முன்னேற்றம் :(((

Sunday, April 27, 2008

மீள் பதிவு

அன்னிய நாடுகளில் அயல்நாட்டினரின் நிலை!

வாழ்வதற்காகவும், வாழ்வின் மேம்பாட்டுக்காவும் தாயகத்தை விட்டு அன்னிய நாட்டில் உழைத்துப் பிழைப்பதற்காக வரும் அயல் நாட்டினர் பலரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிடுகின்றது.

இது போன்ற துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையறிந்து மற்ற நாட்டின் தூதரகங்கள் ஓரளவுத் தட்டிக்கேட்கும். ஆனால், உழைக்க வரும் இந்தியர்களை நீ என்ன கொடுமையும் படுத்திக்கொள், சம்பளம் கொடுக்காமல் கஷ்டப்படுத்து, அவர்களுக்கு தங்கும் விடுதிகள் வழங்காதே என்றெல்லாம் ஏற்கெனவே இந்திய அரசு ரகசிய ஒப்பந்தம் ஏதேனும் செய்துள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்தியத் தூதரகம் மக்கள் குறைகளைக் கண்டுக்கொள்வதில்லை!

இந்தியர்களுக்கு என்ன அநீதிகள் இழைக்கப்பட்டும் அது பற்றியச் சான்றுகளுடன் புகார் கொடுத்தாலும் இந்தியத் தூதரகம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏனிந்த முதுகெலும்பற்ற நிலை?

தூதரகம் என்பது அந்நாட்டின் அரசுக்கு ஒப்பானது. உழைத்துப் பிழைக்க வரும் மக்கள் அநியாயமாக நசுக்கப்படுகிறார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டாத அயல் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதரகம் தேவைதானா?

(துன்பப்படுத்தும் மின்னஞ்சல் செய்தி, பகிர்ந்து கொள்கிறேன்)

அன்புடன்,
அபூ முஹை


*****

அனுப்புனர்:
சவூதி அரேபியாவில் பணிபுரியும் இந்திய பணியாளர்கள்.
ரியாத் சவூதி அரேபியா

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை

மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு!
உங்கள் மீது கடவுளின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!

நாங்கள் சவூதி அரேபியா ரியாத்தில் தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் குறிப்பாக பல நூறு இந்தியர்கள் அதில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள். AL-Wagaiah co, Ltd., AL-Omerini co, and AL-Faiq என்ற மூன்று பெயர்களில் செயல்படும் இந்த நிறுவனம் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரில் மோசடிகளை செய்து விட்டு வெவ்வேறு பெயர்களில் உருவாக்கிக்கொண்டதுதான் இந்த 3 நிறுவனங்களும்.

நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. நிறுவனம் மூடப்படும் மற்றும் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் எங்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கிகளை கொடுத்து எங்களது தாய் நாடடிற்கு அனுப்பி வையுங்கள் என்று பல முறை கேட்டு வந்தோம் நிர்வாகம் எங்களது எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பல மாதங்களாக உண்ண உணவின்றி இருக்க இடமின்றி சொல்லிலடங்கா துயரங்களை சந்தித்து வருகிறோம். இந் நிலையில் பாதிக்கப்பபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழுவாக கடந்த 24/01/2008 அன்று இந்திய தூதரகத்தில் எங்களது நிலைமையை விளக்கி மனுக் கொடுத்தோம் அதன் கோப்பு எண்: File No: riy/cw/235/6/2007(18)

அதற்கிடையில் நாங்கள் பல முறை நிறுவன நிர்வாகத்திடம் எங்களுக்கு சேரவேண்டிய எங்களது சம்பளத்தை கொடுத்து எங்களை தாயக்திற்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சி மன்றாடி வந்தோம் கடந்த வாரம் 27ம் தேதி நிர்வாகத்தின் பதிலை கேட்கச் சென்றோம். எங்கள் குழுவில் நிறுவன நிர்வாகத்திடம் நீதி கேட்டு எங்களை வழி நடத்தி வந்த 5 பேரை சவுதி குடியுரிமை காவலாளிகளை வைத்து கைது செய்து சிறைக் கொட்டடியில் அடைத்து விட்டார்கள்.

மீதி உள்ள எங்களை மிரட்டி உங்களுக்கும் இதே கதி தான் என்று உங்களது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சவுதி குடியுரிமை அமைச்சகத்தில் ஒப்படைத்து விட்டோம் என்று மிரட்டி அனுப்பி விட்டார்கள் வேறு வழியின்றி மீண்டும் நேற்று 30 03 2008 அன்று இந்தியத் தூதரகம் சென்று எங்களுக்கு உதவிட கையேந்தினோம். தூதரகத்தில் எங்களுக்கு 6மாதம் செல்லத்தக்க அனுமதி பேப்பர் மட்டும் வழங்கி இதை வைத்து நீங்கள் நடமாடிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்கள்.

எந்தக் குற்றமும் செய்யாத நீதி கேட்ட ஒரே காரணத்திற்காக சிறைவாசம் அனுபவித்து வரும் எங்கள் நண்பர்களை விடுவிக்கவும் உண்ண உணவின்றி வேறு வழி தெரியாமல் பரிதவிக்கும் எங்களுக்கு உதவிடவும் மாண்புமிகு முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலையிட்டு எங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைத்து தாயகம் திரும்பி வர இந்தியத் தூதரகக்தின் மூலம் துரித ஏற்பாடு செய்ய ஆவண செய்யும் படி உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Company Name & Address
AL-WAGAIAH CO, LTD.,
Sponsor Name: Osman Abdul Aziz Al-Omairini
CR No: - 66210, Post Box 91681, Riyadh 11643
Phone : +966 1 2415202, Fax +966 1 2422201
Sponsor Cell no: Mr. Ali Abdul Aziz 00966 504429661, Mr. Ashraf al jindi 00966 505848277

சிறைச்சாலையில் உள்ள நண்பர்களின் விபரம்.

காதர் மைதீன் பாஸ்போர்ட் நம்பர்: A 7844359
முஹம்மது ரைஸ் பாஸ்போர்ட் நம்பர்: E 5084212
அப்துல் ரஹ்மான் பாஸ்போர்ட் நம்பர்: B 3105343
சதீஸ் மலையில் பாஸ்போர்ட் நம்பர்: B 6853774
இக்பால் அஹ்மத் பாஸ்போர்ட் நம்பர்: F 2044105

எங்களை தொடர்பு கொள்ள:
கந்தசாமி +966 556282148, முகைதீன் +966 508623067, முஹம்மது மீரா 00966 557048978

இப்படிக்கு
உங்கள் உதவியை நாடி நிற்கும் பாதிக்கப்பட்ட இந்தியர்கள்.

Copy to: TMMK Head Quarters and all political parties' offices.
Kalainger Tv, Sun tv, Makkal tv, Wintv, and All Printed and Internet medias.
*Enclosed some of Prof Documents

குறிப்பு: இந்த நகல் பெறும் செய்தி ஊடகங்கள் தயவு செய்து பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உதவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றிங்க

அவலம் :(

Wednesday, March 26, 2008

ஆடையும் ஆயுதமாகும்!

சினிமா ஸ்டைலில் பெண் அதிரடி: போலீசுக்கு நிர்வாண போஸ்

புதன்கிழமை, மார்ச் 26, 2008

கரூர்: கரூரில் கள்ள லாட்டரி வியாபாரியை பிடிக்க சென்ற போலீசார் முன் ஆடையை அவிழ்த்துவிட்டு ஒரு பெண் நிர்வாண போஸ் கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு நடித்து வெளியான படத்தில் ஒரு காட்சி. அதில் போலீஸ் ஏட்டாக வரும் வடிவேலு, ஒரு வீட்டுக்குள் மறைந்து கொண்டிருக்கும் கள்ளச் சாரய பெண் வியாபாரியை கைது செய்யப் போவார்.

யாராவது கைது செய்ய வந்தால் அணிந்திருக்கும் சேலையைக் கழற்றிவிட்டு நிர்வாணமாகிவிடுவதாக அந்த பெண் மிரட்டுவார். மீறி வீட்டுக்குள் போன வடிவேலுவுக்கு நிர்வாண போஸ் கொடுத்து மிரட்டும் அந்த பெண், வடிவேலுவின் டிரஸ்ஸையும் கழற்றி அவமானப்படுத்துவார்.

கிட்டத்தட்ட இந்தக் காட்சி உண்மையிலேயே கரூரில் நடந்துவிட்டது.

கரூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்தனர். இதில் செல்வராஜ் என்ற வியாபாரி ஓடிச்சென்று தன் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்.

அவரை விரட்டிச்சென்ற போலீசார் வீட்டுக் கதவை தட்டினர். அப்போது வீட்டுக்குள் இருந்த செல்வராஜின் மனைவி நிர்மலா தனது ஆடையைக் களைந்துவிட்டு போலீசுக்கு எதிராக கூச்சலிட்டார்.

வேறு மாதிரியாக கதை கட்டிவிடுவார்கள் என மிரண்ட போலீசார்
ரெய்டை கைவிட்டு விட்டு பின்வாங்கினர்.

நன்றிங்க

சினிமா துறையே இப்படி எல்லாத்துக்கும் வழிகாட்டியாக விளங்குகிறது. காவல் துறையையே கதிகலங்க வைத்து விட்டதே!

ஆடையை ஆயுதமாக்கிய வீரப் பெண்மணி வால்க!

Monday, November 26, 2007

பணி முடிந்த விமானி!

பணி முடிந்த விமானி - பரிதவித்த பயணிகள்

திங்கள்கிழமை, நவம்பர் 26, 2007

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரிலிருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை செலுத்த வேண்டிய விமானி, தனது பணி முடிந்து விட்டதாக கூறி விமானத்தை எடுக்க மறுத்ததால், விமானம் ரத்தாகி பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலிருந்து நேற்றிரவு 8.15 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்லவேண்டிய பயணிகள் அனைவரும் தயாராக இருந்தனர். ஆனால் விமானம் புறப்படுவது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சுமார் 4 மணிநேரம் தாமதத்திற்கு பின்னர், நள்ளிரவு 12-30 மணிக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது எனகூறிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல்களில் தங்க வைத்தனர்.

என்ன என்று விசாரித்தபோது அந்த விமானத்தை செலுத்த வேண்டிய விமானி ஒருவரின் பணி நேரம் முடிந்து விட்டதாம். இதனால் விமானத்தை செலுத்த முடியாது என்று அவர் கூறி விட்டாராம். இதனால்தான் விமானத்தை எடுக்க முடியாமல் தாமதமாகியதாக தெரிய வந்தது.

நன்றிங்க

வானத்தில் விமானம் பறந்து கொண்டிருக்க எனக்கு பணி நேரம் முடிந்து விட்டது என்று எந்த விமானியும் சொல்லாமல் இருந்தால் சரிதான்.

Sunday, November 25, 2007

கூடுதல் கட்டணம் வசூல்...!

கூடுதல் கட்டணம் வசூல் - 33 பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 25, 2007

சென்னை: தமிழகத்தில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 33 பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டிருப்பதாக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த 33 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

எனவே, ஏஐசிடிஇ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை நாங்கள் ரத்து செய்ய முடியாது. பல்கலைக்கழக இணைப்பு அனுமதியை வேண்டுமானால் ரத்து செய்யலாம். அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏஐசிடிஇ தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்கள் மூலமாக புதிதாக 20 பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான பொது பல்கலைக்கழக சட்டம் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும். அதற்கான தொடக்கநிலை பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

நன்றிங்க

சீக்கிரம் நடவடிக்கை எடுங்கப்பா, இவனுங்க லொள்ளு தாங்க முடியல..!

Wednesday, November 21, 2007

'ஓயாத' கெளடா: 'நாடகம்' தொடர்கிறது!

'ஓயாத' கெளடா: 'நாடகம்' தொடர்கிறது

புதன்கிழமை, நவம்பர் 21, 2007

பெங்களூர்: காங்கிரஸை இரு முறையும், பாஜகவை இரு முறையும் ஏமாற்றி முடித்துவிட்ட மாஜி பிரதமர் தேவெ கெளடா மீண்டும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான தரம் சிங் அரசை கவிழ்த்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் கெளடாவின் மகன் குமாரசாமி முதல்வரானார்.

ஒத்துக் கொண்டபடி 20 மாதத்தில் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் காங்கிரசுடன் கைகோர்த்து குமாரசாமியை முதல்வர் பதவியில் அமர வைக்க முயன்றார்.

காங்கிரசுடன் பேச்சுவார்ததைகள் நடந்து கொண்டிருந்தபோதே மீண்டும் பாஜகவை ஆதரித்தார் கெளடா. இதையடுத்து பாஜக தலைவர் எதியூரப்பா முதல்வரானார்.

ஆனால், ஒரே வாரத்தில் அவரைக் கவிழ்த்தார்.

இந் நிலையில் கர்நாடக சட்டசபையை கலைக்க கவர்னர் ராமேஸ்வர் தாக்கூர் கொடுத்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றது. இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அவையைக் கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந் நிலையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவளிக்கத் தயார் என மதசார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் கூறியுள்ளார்.

டெல்லிக்குப் ேபான கெளடாவும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டு காத்துக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவளிக்கத் தயார் என்பதை சோனியாவிடம் தெரிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், ஏற்கனவே கெளடாவால் ஏமாற்றப்பட்டுள்ளதால் சோனியா இதுவரை அவரை சந்திக்க முன் வரவில்லை.

கர்நாடகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்களான தரம்சிங், மல்லிகார்ஜூன கார்கே, பாட்டீல் போன்றவர்களுக்கு கெளடாவுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடிக்க ஆசை தான். ஆனால், இரண்டாம் கட்டத் தலைவர்களான சித்தராமையா, சிவக்குமார் போன்ற தீவிர கெளடா எதிர்ப்பாளர்கள் இந்த முயற்சியை எதிர்த்துள்ளனர்.

தங்களது எதிர்ப்பை நேரடியாகவே டெல்லி தலைமையிடம் தெரிவித்துவிட்டனர்.

நன்றிங்க

வெட்கங்கெட்ட ஜென்மங்கள்!

Monday, November 19, 2007

ஏர்-இந்தியாவின் 'மெகா' குளறுபடி.

ஏர்-இந்தியாவின் 'மெகா' குளறுபடி- விமானம் ஒரு நாள் 'லேட்'!!

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2007

டெல்லி: துபாய் செல்லவிருந்த ஏர்-இந்தியா விமானம் 24 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாகியுள்ளது. இதனால் விமான நிலையத்துக்கு வந்து விமானத்திலும் ஏறி அமர்ந்துவிட்ட பயணிகள் மணிக்கணக்கில் பரிதவித்தனர்.

டெல்லியிலிருந்து நேற்று காலையில் துபாய் செல்லவிருந்த ஏர்-இந்தியாவின் ஏஐ-841 விமானம் தாமதமானதால், அதில் செல்லவிருந்த 150 பயணிகள் பிற்பகலுக்கு மேல் அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் அமர வைக்கப்பட்டனர்.

பின்னர் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு 2 மணி நேரத்திற்கு பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டனர். அனைவரும் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று காலை 6.30 மணிக்கு துபாய் செல்லவிருக்கும் விமானத்தில் பயணம் செய்வதற்காக அனைத்து பயணிகளையும் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விமானம் நிலையம் அழைத்து வந்து, சோதனைகளையும் முடித்து விமானத்திற்குள் அமர வைக்கப்பட்டனர்.

ஆனால் விமானம் 6.30 மணிக்கு கிளம்பவில்லை. பின்னர் 8.30 மணிக்கு விமானத்திற்குள் வந்த பைலட், எனது பணி நேரம் முடிந்து விட்டபடியால் தற்போது விமானம் செல்லாது என்று அறிவித்தார்.

இதைக் கேட்ட பயணிகள் அனைவரும் கொந்தளித்து விட்டனர். இதையடுத்து அனைத்து பயணிகளும் மீண்டும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

மூன்று முறை ரத்து செய்யப்பட்ட அந்த விமானத்தைக் கிளப்ப, விமானியின் பணி நேரத்தை அதிகரித்தாக வேண்டுமாம். இதற்காக விமானத்துறையின் டைரக்டர் ஜெனரலிடம் ஏர் இந்தியா அனுமதி கேட்டதாம். அனுமதி கிடைக்க ெபரும் காலதாமதம் ஏற்பட்டு, இப்போது தான் அந்த அனுமதி கிடைத்துள்ளதாம்.

இதனால் அந்த விமானம் எந்த நேரமும் கிளம்பலாம் எனத் தெரிகிறது.

இந்த விமானம் மட்டுமல்ல டொரன்டோ, நியூயார்க், மஸ்கட் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களும் ஏர் இந்தியாவின் உலகப் புகழ் குளறுபடியால் நேற்று நள்ளிரவில் இருந்து பல மணி நேரம் கால தாமதமாகியுள்ளன.

மேலும் டெல்லியில் உள்ள 22 ஏர் இந்தியாவின் கெளண்டர்களில் 20 கெளண்டர்களில் ஆளே இல்லாததால், யாரிடம் போய் கேள்வி கேட்பது என்று கூட தெரியாமல் பயணிகள் டெல்லி குளிரில் பரிதவித்துக் கொண்டுள்ளனர்.

ஏர்-இந்தியாவின் 'டாக்ஸி சர்வீஸ்':

இதற்கிடையே சனிக்கிழமை காலையில் துபாயிலிருந்து கோழிக்கோடு செல்லும் ஏர்-இந்தியாவின் ஏஐ-980 விமானம் திருவனந்தபுரம்
வந்திறங்கியது.

திருவனந்தபுரம் பயணிகள் இறங்கிவிட்ட நிலையில் மீதமிருந்த 20 பேர் கோழிக்கோடு செல்ல விமானத்திலேயே உட்கார்ந்திருந்தனர்.

ஆனால், இந்த விமானம் கோழிக்கோடு செல்லாது என திடீரென அறிவிக்கப்பட்டது. எரிச்சலான பயணிகள் இறங்க மறுத்தனர்.

ஆனால், ஏசியை ஆப் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக பயணிகளை இறக்கிய அதிகாரிகள்
அவர்களை டாக்ஸிகளில் கோழிக்கோடு அனுப்பி வைத்தனர்.

திருவனந்தபுரத்திலிருந்து விமானத்தில் 1.15 மணி நேரத்தில் கோழிக்கோடு செல்லும் பயணிகளுக்கு டாக்ஸிகளில்ல் கோழிக்கோடு செல்ல 14 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

எப்பத்தான் ஏர் இந்தியா நிர்வாகம் திருந்துமோ...?

Thursday, November 15, 2007

வரதட்சணையா! விவாகரத்தா!!

வரதட்சணையா வேண்டும்? இந்தா... மணவிலக்கு!

புதன், 14 நவம்பர் 2007

திருமணமான சில மணிநேரத்திலேயே அத்திருமணத்தை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு முஸ்லிம் மணமகள். பீஹார் மாநிலத்தின் ராஞ்ச்சி நகரத்திலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்பாத் பிரதேசத்தின் பத்துரியா எனும் கிராமத்தைச் சேர்ந்த Guddi என்ற பெயருள்ள இந்த மணமகளுக்கு, இம்தியாஸ் அன்ஸாரி என்பவருடன் கடந்த சனிக்கிழமை (10-11-2007) திருமணம் நடைபெற்றது.

திருமண ஒப்பந்தம் முடிவடைந்த சில மணிநேரத்தில் மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் பெற்றோரை அணுகி, வரதட்சணை தருமாறு கோரியுள்ளனர். மணமகனின் சகோதரி சில எலக்ட்ரானிக் பொருள்களையும் பணத்தையும் வரதட்சணையாகக் கொடுத்தாக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இத்தகைய வற்புறுத்தல்களின் மூலம் அதிர்ச்சி அடைந்த மணமகள், அதன் பின் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் மணமகனின் சகோதரியை ஓங்கி அறைந்த கையோடு நில்லாமல், மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்காமல் மணவிலக்கு அளிக்கும் துணிச்சலான முடிவுக்கு உடனடியாக வந்துள்ளார், மணமகளான "Guddi".

"தனது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு என்னை வற்புறுத்துவதைப் பார்த்தும் வாய் பொத்தி பேசாமல் நின்றிருக்கும் இவருடன் நான் எப்படி வாழ்நாள் முழுவதும் குடும்பம் நடத்த முடியும்?" என்று கேட்கும் "Guddi" மணமகனுடன் புகுந்த வீட்டிற்குச் செல்ல மறுத்துவிட்டார்.

ஆரம்பத்தில் மணவிலக்கு அளிக்க ஒத்துழைக்காத "Guddi" யின் பெற்றோர் அவரது உறுதியான இந்த வாதத்தில் கட்டுப்பட்டு அவர்களின் ஒப்புதலைத் தெரிவித்துள்ளனர். "திருமணமான சில மணி நேரத்துக்குள் மணமகனின் பெற்றோர் வரதட்சணை கேட்டு நச்சரித்த காரணத்தினால் எனது மகளின் குறுகிய காலத் திருமணத்தையும் அதன் பின் உடனடியாக நடந்த மணவிலக்கையும் பற்றி நான் கவலைப்படவில்லை. என் மகள் ஓர் அச்சமுள்ள பெண்ணாக இருந்து, இவர்கள் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டுச் சென்றிருந்தால் என்னென்ன கொடுமைகளைச் சந்தித்திருப்பாளோ என்று எண்ணினால் எனக்கு அச்சமே மேலிடுகிறது" என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார் மணமகளின் தந்தையான ரியாஸாத்.

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு படைத்தவனுக்கு மட்டுமே அஞ்சி வாழும் ஒரு முஸ்லிம், தன்னுடையத் திருமண வேளையில் மட்டும் படைத்தவனை மறந்து, தான் மணம் புரியப்போகும் பெண்ணிடம் அதற்காகக் கைக்கூலியை கௌரவப் பிச்சையாகப் பெறுவது அவமானமானது மட்டுமல்ல, படைத்தவனின் சட்டத்திற்கு எதிராக அவனுக்கே சவால் விடுவதற்கு ஒப்பானதாகும் என்பதை அத்தகைய கைக்கூலி மாப்பிள்ளைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வளர்ந்து வரும் தனது மகளை திருமணச் சந்தையில் போட்டியிட்டுக் கட்டிக்கொடுக்க இயலாத தனது வறுமையினைக் கண்டு பயந்து சிசுக்களிலேயே பெண் குழந்தைகளைக் கொன்று விடும் பெற்றோர்களின் அறிவீனச் செயல்களுக்கு இத்தகைய கௌரவப் பிச்சை பெறும் மாப்பிள்ளை மாடுகளும் ஒரு காரணமாவர் என்பதை இவர்கள் எப்பொழுதும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

மணம் புரிந்த அடுத்த கணத்திலேயே கௌரவப் பிச்சைக் கோரிய வீட்டுக்காரர்களின் முன் மௌனமாக நின்று அச்செயலுக்குத் துணைபோன இந்த மாப்பிள்ளை மாட்டிற்குச் சகோதரி "Guddi" கொடுத்த செருப்படி வரவேற்கத்தக்கதாகும். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, சகோதரி "Guddi" யின் முன்னுதாரணத்தைக் கையில் எடுக்கச் சகோதரிகளும் முன் வர வேண்டும்.

இஸ்லாம் வலியுறுத்தும் பெண்களின் திருமணக் கொடைகளை வாரி வழங்குவோம்!

வரதட்சணையை எதிர்ப்போம்! கௌரவப் பிச்சைக்காரர்களை ஒழிப்போம்!

நன்றிங்க

இப்படித்தான் இருக்கணும்!

Sunday, November 11, 2007

சமுதாய சீரழிவு.

பள்ளிவாசல் பூட்டை உடைத்து தொழுகை செய்ததால் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 11, 2007

கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில், பள்ளிவாசல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து தொழுகை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையநல்லூரில் 1994ம் ஆண்டு முபாரக் பள்ளிவாசல் துவங்கப்பட்டது. இந்த பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சேக் உதுமான் தலைவராகவும், அப்துல் ஜலீல் செயலாளராகவும் இருந்து வந்தனர்.

சைபுல்லா ஹாஜா உள்பட பலர் நிர்வாக குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தனர். செயலாளராக இருந்த அப்துல் ஜலீல் மறைவிற்கு பிறகு பள்ளிவாசலை நிர்வாகிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.

பள்ளிவாசல் தங்களுக்குதான் சொந்தம் என ஜாக் மற்றும் தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் உரிமை கொண்டாடினர். இதையடுத்து பிரச்சனை கோர்ட்டுக்கு சென்றது. தென்காசி உரிமையியல் நீதிமன்றத்தில் ஜாக் அமைப்பினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதைத் தொடர்ந்து ஜாக் அமைப்பினர் இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்தினர்.

தவ்ஹித் ஜமாத் அமைப்பினரும் இதே பள்ளிவாசலில் தொழுகை நடத்த முற்படவே பிரச்சனை ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகையின் போதும் அங்கு பதற்றம் ஏற்படவே நிரந்தரமாக பள்ளிவாசல் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதற்கிடையே தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் முபாரக் பள்ளிவாசல் நிர்வாக குழு சார்பாக தென்காசி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் தவ்ஹித் அமைப்புக்கு சார்பாக தீர்ப்பு வந்தது.

இதையடுத்து காலை இந்த அமைப்பினர் ஜாக் அமைப்பின் கட்டுபாட்டில் இருந்த பள்ளிவாசலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து தொழுகை நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இதுகுறித்து ஜாக் அமைப்பை சேர்ந்த முகமது சீராஜூதின் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். கடையநல்லூர் போலீசார் முபாரக் பள்ளிவாசல் பூட்டுக்களை உடைத்து உள்ளே நுழைந்ததாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில துணைத் தலைவர் சைபுல்லா ஹாஜா, பள்ளிவாசல் தலைவர் ஷேகனா மற்றும் நிர்வாகிகள் ரஹ்மதுல்லா, ஷேக் உதுமான், களந்தல் இப்ராஹீம் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நன்றிங்க


"பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன" (அல்குர்ஆன் 72:18)

பள்ளிவாசல் யாருக்கு சொந்தம் என்பதில் இஸ்லாத்தில் தீர்வு இல்லையா?

இவர்கள் ஏடுகளை சுமக்கும் கழுதைகள்!

Sunday, November 04, 2007

01.சூதாட்டத்தில் மனைவி இழப்பு.

01.சூதாட்டத்தில் மனைவி இழப்பு பீகாரில் விசித்திரம்

பாட்னா :சூதாட்டத்தில் பணம், நிலம், உடைமைகள் எல்லாவற்றையும் இழந்தவன், கடைசியில் மனைவியையும் இழந்தான்.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் போல, இப்போதும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த சாக்செட் கிராமத்தைச் சேர்ந்தவர் உமா சங்கர் சவுத்ரி. அதே கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் சிங் என்பவருடன் சூதாட்டம் ஆடினார்.விளையாட்டில், பணம் எல்லாம் போனதும், வீட்டில் இருந்த பொருட்களை இழந்தார்; அடுத்து, நிலத்தை இழந்தார். கடைசியில், விளையாட்டு வெறியில் மனைவியை "பகடையாக' வைத்து ஆடினார். மனைவியையும் இழந்தார்.

"இப்போதே உன் மனைவியை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று, வீட்டில் பழியாய் கிடந்தார், சூதாட்டத்தில் வெற்றி பெற்ற மனோஜ் சிங். நல்லவேளை, அன்றைய தினம், துர்கா பூஜைக்காக, பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்குச் சென்றிருந்தார் உமா சங்கரின் மனைவி சுனான்யா தேவி. மனைவியை இழப்பதில் உமா சங்கருக்கு விருப்பமில்லை. அதற்கு ஈடாக பணத்தை தந்து விடுவதாக கூறிப் பார்த்தார். ஆனால், மனோஜ் விடுவதாக இல்லை. விவகாரம், கிராம பஞ்சாயத்துக்கு போனது.

"இருவரும் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும். மனோஜ் சிங்குக்கு உமா சங்கர் ஐந்தாயிரம் ரூபாய் தர வேண்டும்' என்று பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டது.பீகார் மாநில கிராமங்களில் இப்படி நடப்பது சகஜம் தான் போலும். இன்னொரு கிராமத்தில், திருமணமான பெண், விளையாட்டாக தன்னையே "பகடை'யாக வைத்து, சூதாடினார். சூதாட்டத்தில் அவருக்கு எதிராக விளையாடிய கிராமத்து இளைஞர் வெற்றி பெற்றார். உடனே, அந்த பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார்.இரண்டு நாளில், பஞ்சாயத்தார் போய், அந்த பெண்ணை மீட்டு, அவரின் கணவனிடம் ஒப்படைத்தனர்.

நன்றிங்க, தினமலர் 04/11/2007

சூதாட்டத்தில் பணம், வீடு. நிலம், ஆடு. மாடுகளையும் வைத்து ஆடலாம். இவைகளெல்லாம் பேசத் தெரியா ஜடங்கள்.

மனைவி என்பவள் ஒரு மனுஷி, பேசத் தெரிந்த சுதந்திரமுள்ள ஜடம் என்பதை உமா சங்கர்கள் உணர்வார்களோ! மற்ற பொருள்களைப் போல மனைவியை விலை கொடுத்தா வாங்கினார்? தன் இஷ்டத்துக்கு சூதாட்டத்தில் வைத்து ஆட...!

Thursday, November 01, 2007

சென்னை நீதிபதியைத் தாக்கிய வக்கீல் கைது

சென்னை நீதிபதியைத் தாக்கிய வக்கீல் கைது

வெள்ளிக்கிழமை, நவம்பர் 2, 2007

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முருகானந்தத்தை தாக்கிய வழக்கறிஞர்களில் தங்கத்துரை என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாகி விட்ட இன்னொரு வழக்கறிஞரைத் தேடி வருகின்றனர்.

எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முருகானந்தம், திருட்டு வழக்கில் கைதான 4 பெண்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இளங்கோவன் மற்றும் தங்கத்துரை ஆகியோர் நீதிபதியை தாறுமாறாக திட்டினர்.

பின்னர் நீதிபதியின் அறைக்குச் சென்று அவரை சரமாரியாக அடித்தும், மிதித்தும், முகத்தில் எச்சிலை உமிழ்ந்தும், குடும்பத்தினர் குறித்து அசிங்கமாக பேசியும் அவமானப்படுத்தினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நீதிபதி முருகானந்தம், சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிபதி ராமராஜிடம் புகார் கொடுத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை சந்தித்து புகார் கொடுத்தனர்.

மேலும், எழும்பூர் காவல் நிலையத்தில் தங்கத்துரை, இளங்கோவன் உள்ளிட்ட 20 வக்கீல்கள் தன்னை தாக்கி அவமானப்படுத்தியதாக நீதிபதி முருகானந்தம் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் மின்னல் வேகத்தில் போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர்.

நேற்று இரவு தங்கத்துரையைக் கைது செய்தனர். சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்ட அவரை ரகசிய இடத்திற்குக் கூட்டிச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிறையில் கொண்டு போய் அடைத்தனர்.

உயர்நீதிமன்றம் நோட்டீஸ்:

இதற்கிடையே, நீதிபதி முருகானந்தம் தாக்கப்பட்ட விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்காக இதை எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ராமசுப்பிரமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை நேற்று விசாரித்தது.

பின்னர் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு இரு வக்கீல்களுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வருகிற 29ம் தேதி இரு வக்கீல்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேரில் சந்தித்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று கோரினர்.

மன்னிப்பு கேட்ட வக்கீல்கள்:

இதற்கிடையே, நீதிபதி முருகானந்தத்தை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று ஒன்றாக சென்று சந்தித்து நடந்த செயலுக்கு வருத்தமும், மன்னிப்பும் கேட்பதாக கூறினர். மேலும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கோரினர்.

ஆனால் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு விட்டது. போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. தலைமை நீதிபதிதான் இதில் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதி முருகானந்தம் கூறி விட்டார்.

நீதிபதிகள் ஆலோசனை:

இந்த நிலையில், சென்னையில் உள்ள எழும்பூர், ஜார்ஜ்டவுன், சைதாப்பேட்டை ஆகிய நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதனால் நேற்று முழுவதும் பெரும்பாலான நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணிக்கு வரவில்லை.

நன்றிங்க

எல்லா துறைகளிலும் அடிதடி வெட்டு குத்து அளவுக்கு போய் விட்டது. தொழிலாளி அதிகாரிகளை அடிப்பதும் அதிகாரிகள் தொழிலாளிகளை பழி வாங்கவதும், அரசியல்வாதிகள் தெர்ணடர்களை சாத்துவதும் தொண்டர்கள் அரசியல்வாதிகளை போட்டு தாக்குவதும் என எல்லா துறையிலும் அடிதடிகள் இயங்கி வருகின்றன.

நீதி துறையிலும் வாய் சண்டை மாறி அடிதடி நுழைந்திருப்பதால் பெரிசா ஒன்றும் குடி முழுகிவிடாது. நீதிபதியை வழக்குரைஞர்கள் அடித்த மாதிரி நாளை வழக்குரைஞர்களை நீதிபதிகளும் தாக்கலாம். இதெல்லாம் உள்துறை குழப்பம்.

பார்க்கலாம், இந்த வழக்காவது சீக்கிரமா முடிகியுமா? என்று.

ராஜபாளையம், ஆண்டிபட்டியிலும் கலவரம்.

ராஜபாளையம், ஆண்டிபட்டியிலும் கலவரம்

வியாழக்கிழமை, நவம்பர் 1, 2007

ராஜபாளையம்: முதுகுளத்தூரில் நடந்த கலவரத்தின் எதிரொலியாக ராஜபாளையம், ஆண்டிபட்டி பகுதியில் இன்று கலவரம் நடந்ததில் அப்பகுதியில் வந்த அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.

முதுகுளத்தூர் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை 50 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கியது. இதனையடுத்து இரு தரப்பினருக்கு இடையே நடந்த கலவரத்தில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் வின்சென்ட் தாம்சன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக நேற்றிரவு ராஜபாளையம்-தென்காசி சாலையில் சோலைச்சேரி விலக்கு அருகே ஒரு கும்பல் அந்த பக்கம் வந்த இரண்டு அரசு பேருந்து, ஒரு தனியார் பேருந்து, லாரி, ஆட்டோ ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, பேருந்துகளின் மீது தாக்குதல் நடத்திய் சீமான், சேவுகபாண்டி, ஜீவா மோகன், ராமமூர்த்தி, அழகுமலை ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இதேபோன்று கண்டமனூரில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக போலீசார் கலவரக்காரர்களை தேடி வருகிறார்கள்.

இந்த கல்வீச்சு சம்பவங்களால் அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றிங்க

ஹலோ பப்ளிக்,

உங்களுக்கு கட்சிப்பற்று மிக அதிகமாக இருந்தால் உங்கள் வீட்டு பொருட்களை போட்டு உடைத்து நொறுக்கலாம். ஏன் உங்கள் வீட்டையே இடித்து நொறுக்கி தரை மட்டமாக்கலாம். வீட்டில் தாய் தந்தை மனைவி மக்கள் என உறவினர்களை போட்டு நல்லா சாத்தலாம்.

இதையெல்லாம் விடுத்து பொது மக்களை தாக்கி பொது சொத்துக்களை ஏன் அழிக்கிறீர்கள் முட்டாள் பப்ளிக்!

Wednesday, October 31, 2007

01. "மலடி' பட்டம் சூட்டி விரட்டிய மாமியார்.

கணவரோடு சேரவிடாமல் தடுத்ததோடு "மலடி' பட்டம் சூட்டி விரட்டிய மாமியார்: போலீசில் பெண் புகார்

சென்னை: பன்னிரென்டு ஆண்டுகளாக முதலிரவே நடக்கவிடாமல் தடுத்ததோடு, "மலடி' என்று பட்டம் கொடுத்து கணவருக்கு வேறு திருமணம் செய்து வைத்த மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் மனைவி புகார் கொடுத்தார். சென்னை வியாசர்பாடி மூன்றாவது கீழத் தெருவில் வசிப்பவர் சாகுல் ஹமீது (35). இவரது மனைவி தமீம் நிஷா (31). இவர்களுக்கு 1995ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. மாமனார், மாமியார் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். தமீம் நிஷா நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார்.

அப்புகாரில் கூறியிருப்பதாவது: "பாஸ்ட் புட்' நடத்தும் என் கணவர் விடியற்காலையில் வேலைக்கு சென்று விட்டால் நள்ளிரவு தான் வீடு திரும்புவார். திருமணமான நாள் முதலே கணவரோடு பேசவும், தனியறையில் படுக்கவும் என் மாமியார் அனுமதிக்கவில்லை. திருமணத்தின் போது எனக்கு 45 சவரன் நகைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களை என் பெற்றோர் கொடுத்தனர். ஆனால், மாமியார் தினந்தோறும், "உனது வீட்டில் இருந்து பணம் வாங்கிவா? அப்போது தான் கணவரோடு சேர்த்து வைப்பேன்' என்று மிரட்டுவார். வாங்கி வரவில்லை என்றால் "மலடி' என்று பட்டம் சுமத்தி திட்டுவார்கள். இப்படியே என் வீட்டிலிருந்து பல லட்சம் வாங்கி கொடுத்து விட்டேன். அப்படி இருந்தும் கணவருடன் சேர அனுமதிக்கவே இல்லை. நான் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது என்று கேட்டால், "உனது கர்ப்பப் பையில் கோளாறு இருக்கிறது. உங்கள் வீட்டில் தான் மருத்துவம் பார்க்க வேண்டும்' என்று கூறினர். மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் எனக்கு எந்த குறையும் இல்லை.

கடந்த டிசம்பர் மாதம் அவரது குடும்பத்தினர் மலடி என்று திட்டி அடித்து உதைத்தனர். இவர்களின் தொல்லையால் மனமுடைந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். இந்நிலையில், எனது கணவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து விட்டனர்.கணவரோடு ஒன்று சேரவிடாமல் தடுத்துவிட்டு "மலடி' என்று பட்டம் சுமத்தி, துரத்திய மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வரதட்சணையாக நான் கொடுத்த நகைகளை மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிங்க, தினமலர் 31/10/07

எங்கும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி.

ஏன்...
கணவனுக்கு புத்தி எங்கே போச்சு என்கிறீர்களா...?

அதுவும் நியாயம் தான்!

Saturday, October 27, 2007

நாடி வைத்தியம்.

03.நாடி பிடித்து பார்த்து 10 ரூபாய் வைத்தியம் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் இந்த அவலம்

பெங்களூரு :பெங்களூரு நகரில், ஒரு பக்கம் சாப்ட்வேர் நிறுவனங்கள் தலைதுõக்கினாலும், இன்னொரு பக்கம், மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் போலி "டென்ட்' கிளினிக்குகள் அதிகரித்து வருகின்றன.

பெங்களூரு நகரில் முக்கிய சாலைகளில் இவர்களின் நடமாட்டம் இல்லை. ஆனால், ஹெப்பால், அடுகோடி உட்பட பகுதிகளில், சாலைகளில், கூடாரம் போட்டு, கிளினிக் நடத்துகின்றனர். இந்த கிளினிக்குகளில், டாக்டர் என்று சொல்லிக் கொள்ளாமல், ஒரு "வைத்தியர்' இருக்கிறார். அவரிடம் நோயாளி சென்றால், நாடியை பிடித்து பார்த்து, நோயை பற்றி சொல்கிறார். அதற்கு 10 ரூபாய் தான் கட்டணம்.பலவீனம், தலைசுற்றல், வாந்தி பேதி, வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்ற சாதாரண பாதிப்புகளுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கு, மாதவிடாய் தள்ளிப்போவது போன்ற பாதிப்புகளுக்கும் சர்வசாதாரணமாக மருந்துகளை தருகின்றனர்.

இந்த "டென்ட்' வைத்தியர்கள்."நீங்கள் டாக்டருக்கு படித்தவர்களா?' என்று கேட்டால், "நாங்கள் டாக்டர் அல்ல; இமயமலையில் இருந்து மூலிகைகளை திரட்டி வந்து எங்கள் குரு தருவார். அதைத்தான் உங்களுக்கு தருகிறோம். நம்பினால் வாங்குங்கள்; இல்லாவிட்டால் நடையை கட்டுங்கள்' என்று சொல்லி, பகிரங்கமாக தொழில் செய்கின்றனர்.இவர்களை போலீசார் கண்டுகொள்வதில்லை.

ஆனால், இப்படிப்பட்ட, "டென்ட்' போட்டு கிளினிக் நடத்தும் சிலர், ஆயுர்வேத மருத்துவம் என்று போர்டு போட்டு மருத்துவம் பார்க்கின்றனர். ஆனால், சிலர், பணத்தை குறிவைத்து, நோயாளிகளுக்கு இன்ஜெக்ஷன் கூட போடுகின்றனர்.சிக்பல்லபூர் பகுதியில், சில நாள் முன், இந்த போலி டாக்டர்களிடம் காட்டி சிகிச்சை பெற்ற இரு குழந்தைகள் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களுக்கு, போலி டாக்டர்கள் இன்ஜெக்ஷன் போட்டதால், உடல்நிலை மோசமானது கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும், அந்த குழந்தைகள் இறந்துவிட்டனர். இப்படிப்பட்ட போலி டாக்டர்கள் பற்றி, கர்நாடக மருத்துவ கவுன்சிலுக்கு பல புகார்கள் வந்துவிட்டன. நடவடிக்கை எடுக்க, சட்டமும் உள்ளது. ஆனால், அதில் ஓட்டைகள் இருப்பதால், பலரும் சிக்குவதில்லை. இதனால், புது சட்டம் கொண்டு வர கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.பதிவு செய்யப்படாத அலோபதி டாக்டர்கள், தனியாக மருத்துவம் பார்க்க தடை விதித்து, கடும் தண்டனை வழங்கும் வகையில், புதிய சட்டம் அமையும்.

நன்றிங்க, தினமல்ர் 28/10/2007

தினமலர்லே ராசி பலன் என்றொரு பகுதி உள்ளதே அதுவும் இதே அவலத்தை சேர்ந்தது தானே! இல்லையா பின்னே!!

பாஜகவுக்கு கெளடா திடீர் ஆதரவு!

பாஜகவுக்கு கெளடா திடீர் ஆதரவு-கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைகிறது

சனிக்கிழமை, அக்டோபர் 27, 2007

பெங்களூர்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தரப் போவதாக தேவெ கெளடா-குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் திடீரென அறிவித்துள்ளது.

20 மாதம் ஆட்சியில் இருந்த நிலையில் ஒப்பந்தத்தை மீறி பாஜகவிடம் ஆட்சியை வழங்க மறுத்தார் முதல்வராக இருந்த குமாரசாமி. பாஜக ஒரு மதவாதக் கட்சி என்று திடீரென குற்றம் சாட்டினார்.

இதையடுத்து காங்கிரஸ் உதவியோடு ஆட்சியில் தனது மகனை தொடர வைக்க தேவெ கெளடா முயன்றார். இதற்காக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொண்டார். ஆனால், அவரால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட சோனியா காந்தி அவரை சந்திக்கவே மறுத்துவிட்டார்.

மேலும் கெளடா-குமாரசாமி மீது அதிருப்தியில் உள்ள ஜனதா தள எம்எல்ஏக்களைக் கொண்டு கட்சியை உடைக்கவும், அவர்கள் உதவியோடு ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் முயன்றது.

இதற்காக ஜனதா தளத்தின் மூத்த தலைவரான பிரகாஷை டெல்லிக்கு அழைத்துப் பேசியது. அவருக்கு முதல்வர் பதவி தரப்படும் என்றும் கூறியது. இதையடுத்து அவர் கட்சியை உடைக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கினார்.

ஆனால், பிரகாஷை கெளடா மற்றும் குமாரசாமியால் தடுக்க முடியவில்லை. பாஜகவுக்கு ஆட்சியைத் தர மறுத்ததன் மூலம் தனது லிங்காயத் சமுதாயத்திற்கு (இவர்களது பெரும் ஆதரவு பாஜகவுக்கு உண்டு, பாஜக சார்பில் துணை முதல்வராக இருந்த எதியூரப்பாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் தான்) கெளடா மோசம் செய்துவிட்டதாக கோபத்தில் உள்ள பிரகாஷ் கட்சியை உடைப்பதில் தீவிரமானார்.

பலமுறை டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்த பிரகாஷ் இன்றும் டெல்லியில் தான் உள்ளார்.

இந் நிலையில் அரசியல் பல்டிகளுக்குப் பேர் போன தேவெ கெளடா மீண்டும் ஒரு பல்டி அடித்துள்ளார். பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தரத் தயார் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் தனது கட்சியை உடைக்க முயன்ற காங்கிரசுக்கு பாடம் புகட்டுவது என்ற முடிவுக்கு கெளடாவும் குமாரசாமியும் வந்துள்ளனர்.

இத் தகவலை குமாரசாமியே இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், நாங்கள் இன்றே கவர்னர் ராமஷ்வர் தாக்கூரை சந்தித்து பாஜக தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு கடிதம் தரவுள்ளோம்.

எங்கள் கட்சியை உடைக்க காங்கிரஸ் முயன்றதால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

முன்னதாக குமாரசாமி-கெளடாவின் சார்பில் அக் கட்சியின் மூத்த தலைவர் தத்தா பாஜக முதல்வர் பதவிக்கான 'கேன்டிடேட்' எதியூரப்பாவை சந்தித்து அவரை முதல்வராக்க கெளடா முடிவு செய்துள்ளது குறித்த தகவலைத் தெரிவித்தார்.

இதையடுத்து பாஜகவின் மூத்த தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். அதில் கெளடாவின் ஆதரவைப் பெறுவது என்றும் ஆட்சியமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் கெளடா தொலைபேசியில் பேசினார்.

அடுத்து கவர்னர் தாக்கூர் என்ன செய்யவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நன்றிங்க

என்னடா எலி அம்மணத்தோட ஓடுதேன்னு பாத்தா....

இதான் சங்கதியா?

தன் கட்சிக்கு ஆபத்துன்ன உடனே தேவே கெளடா என்னமா பல்டி அடித்து விட்டார். இதுக்கு ஏற்கெனவே ஒப்பந்தப்படி ஆட்சியை பாஜகா விடம் முதலிலேயே கொடுத்திருந்தால் நல்ல கெளரவமாக இருந்திருக்கும்.

ம்ஹும்... பட்ட பிறகுதானே தெரியுதே.

Wednesday, October 24, 2007

02.அண்ணனை திருமணம் செய்த தங்கை

02.அண்ணனை திருமணம் செய்த தங்கை பீகாரில் "கலி முத்திப்போச்சு'

ஆரா :சொந்த அண்ணனை திருமணம் செய்து கொண்டாள் தங்கை. பீகார் மாநிலத்தில், "கலி முத்திப்போன' இந்தசம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஆரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரீனா. சமீபத்தில், இவர் வீட்டை விட்டு வெளியேறி, காணாமல் போய்விட்டார்.போலீசில் புகார் செய்தனர் பெற்றோர். புகாரை விசாரித்த போலீசார், பக்கத்து கிராமத்தில், தகித் யாதவ் என்பவர் வீட்டில், ரீனாவை கண்டுபிடித்தனர்.

அவரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. போலீசில் தன் வாக்குமூலத்தை எழுதித் தந்தார் ரீனா." என்னை யாரும் கடத்தவில்லை. ஆறு மாதம் முன் , நான் என் அண்ணன் கிருஷ்ண ராமை திருமணம் செய்து கொண்டேன். அவர், குஜராத் மாநிலம் சூரத்தில் பிழைப்புக்காக போயிருக்கிறார். அதனால், தன் நண்பர் யாதவ் வீட்டில் என்னை பாதுகாப்பாக தங்க வைத்துச் சென்றுள்ளார்' என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

வாக்குமூலத்தை வாங்கிக் கொண்ட போலீசார், ரீனாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் முன், ரீனா வாக்குமூலம் தந்தார். ரீனா விவகாரம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.ரீனா மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யுமுன், அவர் பெற்றோரிடம் இருக்க அனுமதிக்கப்பட்டார். சூரத்தில் உள்ள அவரது அண்ணனை தேடிக் கொண்டு வரும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.பீகார் மாநிலத்தில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிங்க, DINAMALAR 24/10/2007

என்னத்த சொல்ல...!

Tuesday, October 23, 2007

சிரஞ்சீவிக்கு சந்திரபாபு நாயுடு ஆறுதல்!

சிரஞ்சீவிக்கு சந்திரபாபு நாயுடு ஆறுதல்

மகள் காதலருடன் கல்யாணம் செய்து கொண்ட சோகத்தில் இருக்கும் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியையும், அவரது மனைவியையும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்வரியுடன் சென்று ஆறுதல் கூறினார். அவரிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, தனது காதலர் சிரீஷ் பரத்வாஜுடன் ரகசியக் கல்யாணம் செய்து கொண்டு தலைமறைவாக இருக்கிறார். தனது தந்தையால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்தார். அதை ஏற்ற நீதிமன்றம், ஸ்ரீஜாவுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. சிரஞ்சீவிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனது மகளை மன்னித்து விட்டதாகவும், அவரது திருமணத்தை அங்கீரித்து விட்டதாகவும், எங்கிருந்தாலும் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வர வேண்டும் எனவும் ஆந்திர பத்திரிக்கைகள் மூலம் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும் இன்னும் கூட மகள் தந்த அதிர்ச்சியிலிருந்து சிரஞ்சீவ மீளவில்லை. எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். சிரஞ்சீவியின் குடும்பத்தினர் பெரும் சோகத்திலும், அவமானத்திலும் கூனிக் குறுகிப் போயுள்ளனர்.

பெரும் சோகத்தில் இருக்கும் சிரஞ்சீவி குடும்பத்தினரை திரையுலகினரும், அரசியல்வாதிகளும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், சிரஞ்சீவியை ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்வரியுடன் சென்று சந்தித்தார். என்.டி.ராமராவின் மகள்தான் புவனேஸ்வரி. அவரும் சிரஞ்சீவியின் மனைவி சுரேகவும் நீண்ட நாளைய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயுடுவையும், புவனேஸ்வரியையும் பார்த்த சிரஞ்சீவி தம்பதியினர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். அவர்களைத் தேற்றிய நாயுடுவும், சுரேகாவும் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனராம்.

நன்றிங்க

வெள்ளத் திரையில் ஏழையாக பரோபகாரியாக வரும் கதாநாயகன், பணக்கார வில்லனின் மகளைக் காதலிப்பார். அதற்காக வில்லனிடமிருந்து எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அவையனைத்தையும் முறியடித்து காதலியைக் கைபிடிப்பார் நாயகன். திரையரங்குகளில் இதைப் பார்த்து விட்டு வேளியேறும் ரசிகப் பெருமக்கள் ஆஹா...பிரமாதம் என்னதான் இருந்தாலும் காதலியைக் கைவிடவில்லை பாருங்கள் அங்குதான் நாயகன் நிற்கிறார் என்று காதலுக்கு சென்டிமெண்ட் வழங்குவார்கள்.

பணக்காரப் பெண்ணை சாதாரண ஏழையாகிய நாயகன் காதலித்து காதலியின் சம்மதத்தோடு கடத்திச் சென்றுத் திருமணம் செய்து குடும்பம் நடத்துவார் இது வெள்ளித் திரையில் காதல் தெய்வீகமானது என்று வர்ணிக்கப்டும் இந்தக் காதல் வர்ணனைகள் எல்லாம் வெள்ளித் திரையோடு சரி நிஜவாழ்க்கையில் அந்த நாயகனும் தன் மகள் காதல் விஷயத்தில் வில்லானாகி விடுகிறார் பாருங்கள்.

காதலித்தால் அது அவமானமில்லீங்க என்ற தத்தவ வசனங்கள் வெள்ளித்திரையோடு முடிந்து விடுகிறது.

வெள்ளத் திரை வாழ்க்கை வேறு, நிஜ வாழ்க்கை வேறுங்க.

Friday, October 19, 2007

மனைவி சித்ரவதை தாங்க முடியலை...

மனைவி சித்ரவதை தாங்க முடியலை போலீசில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி புகார்

மும்பை: சப்இன்ஸ்பெக்டராக உள்ள தன் மனைவி, தன்னை சித்ரவதை செய்வதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில மீன் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் அமிதாப் ஜோஷி; இவரது மனைவி வீணா சாவ்கர். இவர், மகாராஷ்டிர போலீசில் சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தன்னையும், தன்னுடைய தாயாரையும் வீணா சாவ்கர் அடித்து துன்புறுத்துகிறார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்தால், என் மனைவி அதிகாரியாக உள்ளதால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர், என்ற பரபரப்பான குற்றச்சாட்டை அமிதாப் ஜோஷி கூறியுள்ளார்.

அமிதாப் ஜோஷி இக்குற்றச்சாட்டை கூறிய சில மணி நேரங்களில் அவரது மனைவி வீணா சாவ்கர் பேட்டியளிக்கையில், என்னுடைய கணவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை கொடுமைப்படுத்துகிறார். எனவே, அவர் மீது வீட்டு வன்முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் செய்துள்ளேன். தன் மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரையடுத்து அமிதாப் ஜோஷிக்கு பாதுகாப்பு வழங்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நன்றிங்க, DINAMALAR 19/10/2007

கணவன், மனைவி இருவரும் நன்றாகப் படித்தவர்கள். படிப்பும் பணமும் பதவியும் சமூக அந்தஸ்தும் இவர்களைப் பண்படுத்தவில்லையே என்ன செய்வது?

Wednesday, October 17, 2007

பிறந்த குழந்தையைக் கொன்ற தந்தை!!

பிறந்த குழந்தையைக் கொன்ற தந்தை!!

புதன்கிழமை, அக்டோபர் 17, 2007

கடையநல்லூர்:

மனைவியுடன் அடிக்கடி சண்டை வருவதற்கும், ராசியில்லாததற்கும் பிறந்த குழந்தைதான் காரணம் என்று நினைத்ததால் ஆத்திரத்தில் குழந்தையை நானே கழுத்தை நெரித்துக் கொன்றேன் என்று குழந்தையின் தந்தை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்சாமி மகள் மகேஷ்வரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் சில நாட்கள் மட்டுமே இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன் பிறகு கணவன் மனைவி இடையே தேவையில்லாமல் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவசத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார். அவருக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஸ்ரீமதி என பெயரிட்டனர்.

குழந்தை பிறந்து 4 மாதமே ஆன நிலையில் மனைவியையும், குழந்தையையும் தனது வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக முத்துபாண்டி நேற்று முன்தினம் மாமனார் வீட்டிற்கு வந்தார். சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளதால் இன்னும் ஒரு சில மாதங்கள் கழித்து அவரை அழைத்து செல்லலாம் என்று மகேஷ்வரியின் உறவினர்கள் முத்துபாண்டியிடம் கூறினர்.

இந்நிலையில் நேற்று காலை மீண்டும் மனைவி வீட்டிற்கு சென்ற முத்துப்பாண்டி தனது வீட்டிற்கு வருமாறு மகேஷ்வரியை அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. உறவினர்கள் தலையிட்டு சமரசப்படுத்தினர்.

பின்னர் முத்துப்பாண்டி குழந்தையை மட்டும் தனது வீட்டிற்கு தூக்கி சென்றார். குழந்தையுடன் சென்ற கணவர் வெகுநேரமாகியும் வராததால் அதிர்ச்சியடைந்த மகேஷ்வரி உறவினர்களை அனுப்பி குழந்தையை தூக்கி வருமாறு கூறினார். இதையடுத்து முத்துபாண்டி வீட்டிற்கு உறவினர்கள் சென்றனர். அங்கு மூக்கில் ரத்தம் கசிந்த நிலையில் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உறவினர்கள் போலீசில் புகார் கூறியதால், கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துபாண்டியை கைது செய்தனர். விசாரணையில் போலீசாரிடம் முத்துப்பாண்டி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

மனைவி மகேஷ்வரி கருவுற்றிருக்கும் போதே குழந்தை ஜனித்த நேரம் சரியில்லை. கருவை கலைத்து விடுவோம் என்று கூறினேன். அதற்கு அவளும், அவளது குடும்பத்தாரும் சம்மதிக்கவில்லை. குழந்தை உருவானதில் இருந்தே எனக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குழந்தை பிறந்ததும் ஜாதகம் பார்த்ததில் ஜோசியர் குழந்தை பிறந்த நேரத்தால் உங்கள் இருவருக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.

இந்நிலையில் ஏற்கனவே கடந்த 15ம் தேதி மனைவியையும் குழந்தையையும் அழைக்க சென்றேன். இன்னும் சில மாதங்கள் ஆகட்டும் என்று மாமனாரும், மாமியாரும் கூறி விட்டனர்.

மீண்டும் நேற்று அழைக்க சென்றேன். ஏமாற்றமே மிஞ்சியது. ஜோசியர் கூறியபடி மனைவியையும் என்னையும் பிரிப்பது குழந்தைதான் என்று நினைத்து குழந்தை மீது ஆத்திரம் வந்தது.

இந்த குழந்தை இருந்தால் குடும்பத்திற்கு நல்லதல்ல என்று நினைத்ததால் குழந்தையை என்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்து கழுத்தை நெரித்து கொன்றேன் ஓன வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

நன்றிங்க

//குழந்தை பிறந்ததும் ஜாதகம் பார்த்ததில் ஜோசியர் குழந்தை பிறந்த நேரத்தால் உங்கள் இருவருக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.//

அடப் பாவிகளா...!

Tuesday, October 16, 2007

2. மாணவியை அடித்துக் கொன்ற ஆசிரியர்!

காதலிக்க மறுத்த மாணவியை அடித்துக் கொன்ற ஆசிரியர்

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2007

நகரி:

தன்னை காதலிக்க மறுத்த மாணவியை ஆசிரியர் அடித்தே கொன்றுள்ளார். ஆந்திர மாநிலத்தில் இச் சம்பவம் நடந்தது.

ஆந்திர மாநிலம் நகரி அருகே உள்ள நாகுலபாலேனி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு(29). இவர் பர்னூர் என்ற ஊரில் உள்ள ஜூனியர் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

தில்ஷாத் பேகம் (18) என்பவர் இதே ஜூனியர் கல்லூரியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். தில்ஷாத் பேகத்தை, ஆசிரியர் ஆஞ்சநேயலு ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார்.

இதனால் கல்லூரி வளாகத்தில் அந்த மாணவியிடம் எந்த மாணவராவது பேசினால் அவர்களை அழைத்து அடித்து உதைத்துள்ளார் ஆஞ்சநேயலு.

ஆனால், தில்ஷாத் நான் உங்களை காதலிக்கவில்லை. என்னை விட்டு விடுங்கள் என்று ஆஞ்சநேயலுவிடம் கூறியுள்ளார்.

இதனால் வெறுத்துப் போன ஆஞ்சநேயலு தில்ஷாத் பேகத்தை தனது வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்துள்ளார். அங்கு வந்த தில்ஷாத்திடம் கடைசியாக கேட்கிறேன், நீ என்னை காதலிக்கிறாயா, இல்லையா என்று மிரட்டியுள்ளார்.

தில்ஷாத் இல்லை என்று கூறவே அங்கிருந்த உருட்டுக் கட்டையால் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து அங்கேயே பலியானார் தில்ஷாத்.

இதையடுத்து ஆஞ்சநேயலுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்றிங்க

எதுவும் தானாக கனிய வேண்டும்.