வரதட்சணையா வேண்டும்? இந்தா... மணவிலக்கு!
புதன், 14 நவம்பர் 2007
திருமணமான சில மணிநேரத்திலேயே அத்திருமணத்தை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு முஸ்லிம் மணமகள். பீஹார் மாநிலத்தின் ராஞ்ச்சி நகரத்திலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்பாத் பிரதேசத்தின் பத்துரியா எனும் கிராமத்தைச் சேர்ந்த Guddi என்ற பெயருள்ள இந்த மணமகளுக்கு, இம்தியாஸ் அன்ஸாரி என்பவருடன் கடந்த சனிக்கிழமை (10-11-2007) திருமணம் நடைபெற்றது.
திருமண ஒப்பந்தம் முடிவடைந்த சில மணிநேரத்தில் மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் பெற்றோரை அணுகி, வரதட்சணை தருமாறு கோரியுள்ளனர். மணமகனின் சகோதரி சில எலக்ட்ரானிக் பொருள்களையும் பணத்தையும் வரதட்சணையாகக் கொடுத்தாக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
இத்தகைய வற்புறுத்தல்களின் மூலம் அதிர்ச்சி அடைந்த மணமகள், அதன் பின் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் மணமகனின் சகோதரியை ஓங்கி அறைந்த கையோடு நில்லாமல், மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்காமல் மணவிலக்கு அளிக்கும் துணிச்சலான முடிவுக்கு உடனடியாக வந்துள்ளார், மணமகளான "Guddi".
"தனது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு என்னை வற்புறுத்துவதைப் பார்த்தும் வாய் பொத்தி பேசாமல் நின்றிருக்கும் இவருடன் நான் எப்படி வாழ்நாள் முழுவதும் குடும்பம் நடத்த முடியும்?" என்று கேட்கும் "Guddi" மணமகனுடன் புகுந்த வீட்டிற்குச் செல்ல மறுத்துவிட்டார்.
ஆரம்பத்தில் மணவிலக்கு அளிக்க ஒத்துழைக்காத "Guddi" யின் பெற்றோர் அவரது உறுதியான இந்த வாதத்தில் கட்டுப்பட்டு அவர்களின் ஒப்புதலைத் தெரிவித்துள்ளனர். "திருமணமான சில மணி நேரத்துக்குள் மணமகனின் பெற்றோர் வரதட்சணை கேட்டு நச்சரித்த காரணத்தினால் எனது மகளின் குறுகிய காலத் திருமணத்தையும் அதன் பின் உடனடியாக நடந்த மணவிலக்கையும் பற்றி நான் கவலைப்படவில்லை. என் மகள் ஓர் அச்சமுள்ள பெண்ணாக இருந்து, இவர்கள் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டுச் சென்றிருந்தால் என்னென்ன கொடுமைகளைச் சந்தித்திருப்பாளோ என்று எண்ணினால் எனக்கு அச்சமே மேலிடுகிறது" என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார் மணமகளின் தந்தையான ரியாஸாத்.
இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு படைத்தவனுக்கு மட்டுமே அஞ்சி வாழும் ஒரு முஸ்லிம், தன்னுடையத் திருமண வேளையில் மட்டும் படைத்தவனை மறந்து, தான் மணம் புரியப்போகும் பெண்ணிடம் அதற்காகக் கைக்கூலியை கௌரவப் பிச்சையாகப் பெறுவது அவமானமானது மட்டுமல்ல, படைத்தவனின் சட்டத்திற்கு எதிராக அவனுக்கே சவால் விடுவதற்கு ஒப்பானதாகும் என்பதை அத்தகைய கைக்கூலி மாப்பிள்ளைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வளர்ந்து வரும் தனது மகளை திருமணச் சந்தையில் போட்டியிட்டுக் கட்டிக்கொடுக்க இயலாத தனது வறுமையினைக் கண்டு பயந்து சிசுக்களிலேயே பெண் குழந்தைகளைக் கொன்று விடும் பெற்றோர்களின் அறிவீனச் செயல்களுக்கு இத்தகைய கௌரவப் பிச்சை பெறும் மாப்பிள்ளை மாடுகளும் ஒரு காரணமாவர் என்பதை இவர்கள் எப்பொழுதும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
மணம் புரிந்த அடுத்த கணத்திலேயே கௌரவப் பிச்சைக் கோரிய வீட்டுக்காரர்களின் முன் மௌனமாக நின்று அச்செயலுக்குத் துணைபோன இந்த மாப்பிள்ளை மாட்டிற்குச் சகோதரி "Guddi" கொடுத்த செருப்படி வரவேற்கத்தக்கதாகும். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, சகோதரி "Guddi" யின் முன்னுதாரணத்தைக் கையில் எடுக்கச் சகோதரிகளும் முன் வர வேண்டும்.
இஸ்லாம் வலியுறுத்தும் பெண்களின் திருமணக் கொடைகளை வாரி வழங்குவோம்!
வரதட்சணையை எதிர்ப்போம்! கௌரவப் பிச்சைக்காரர்களை ஒழிப்போம்!
நன்றிங்க
இப்படித்தான் இருக்கணும்!
"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''
Showing posts with label வரதட்சணை. Show all posts
Showing posts with label வரதட்சணை. Show all posts
Thursday, November 15, 2007
Wednesday, October 31, 2007
01. "மலடி' பட்டம் சூட்டி விரட்டிய மாமியார்.
கணவரோடு சேரவிடாமல் தடுத்ததோடு "மலடி' பட்டம் சூட்டி விரட்டிய மாமியார்: போலீசில் பெண் புகார்
சென்னை: பன்னிரென்டு ஆண்டுகளாக முதலிரவே நடக்கவிடாமல் தடுத்ததோடு, "மலடி' என்று பட்டம் கொடுத்து கணவருக்கு வேறு திருமணம் செய்து வைத்த மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் மனைவி புகார் கொடுத்தார். சென்னை வியாசர்பாடி மூன்றாவது கீழத் தெருவில் வசிப்பவர் சாகுல் ஹமீது (35). இவரது மனைவி தமீம் நிஷா (31). இவர்களுக்கு 1995ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. மாமனார், மாமியார் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். தமீம் நிஷா நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார்.
அப்புகாரில் கூறியிருப்பதாவது: "பாஸ்ட் புட்' நடத்தும் என் கணவர் விடியற்காலையில் வேலைக்கு சென்று விட்டால் நள்ளிரவு தான் வீடு திரும்புவார். திருமணமான நாள் முதலே கணவரோடு பேசவும், தனியறையில் படுக்கவும் என் மாமியார் அனுமதிக்கவில்லை. திருமணத்தின் போது எனக்கு 45 சவரன் நகைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களை என் பெற்றோர் கொடுத்தனர். ஆனால், மாமியார் தினந்தோறும், "உனது வீட்டில் இருந்து பணம் வாங்கிவா? அப்போது தான் கணவரோடு சேர்த்து வைப்பேன்' என்று மிரட்டுவார். வாங்கி வரவில்லை என்றால் "மலடி' என்று பட்டம் சுமத்தி திட்டுவார்கள். இப்படியே என் வீட்டிலிருந்து பல லட்சம் வாங்கி கொடுத்து விட்டேன். அப்படி இருந்தும் கணவருடன் சேர அனுமதிக்கவே இல்லை. நான் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது என்று கேட்டால், "உனது கர்ப்பப் பையில் கோளாறு இருக்கிறது. உங்கள் வீட்டில் தான் மருத்துவம் பார்க்க வேண்டும்' என்று கூறினர். மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் எனக்கு எந்த குறையும் இல்லை.
கடந்த டிசம்பர் மாதம் அவரது குடும்பத்தினர் மலடி என்று திட்டி அடித்து உதைத்தனர். இவர்களின் தொல்லையால் மனமுடைந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். இந்நிலையில், எனது கணவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து விட்டனர்.கணவரோடு ஒன்று சேரவிடாமல் தடுத்துவிட்டு "மலடி' என்று பட்டம் சுமத்தி, துரத்திய மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வரதட்சணையாக நான் கொடுத்த நகைகளை மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றிங்க, தினமலர் 31/10/07
எங்கும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி.
ஏன்...
கணவனுக்கு புத்தி எங்கே போச்சு என்கிறீர்களா...?
அதுவும் நியாயம் தான்!
சென்னை: பன்னிரென்டு ஆண்டுகளாக முதலிரவே நடக்கவிடாமல் தடுத்ததோடு, "மலடி' என்று பட்டம் கொடுத்து கணவருக்கு வேறு திருமணம் செய்து வைத்த மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் மனைவி புகார் கொடுத்தார். சென்னை வியாசர்பாடி மூன்றாவது கீழத் தெருவில் வசிப்பவர் சாகுல் ஹமீது (35). இவரது மனைவி தமீம் நிஷா (31). இவர்களுக்கு 1995ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. மாமனார், மாமியார் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். தமீம் நிஷா நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார்.
அப்புகாரில் கூறியிருப்பதாவது: "பாஸ்ட் புட்' நடத்தும் என் கணவர் விடியற்காலையில் வேலைக்கு சென்று விட்டால் நள்ளிரவு தான் வீடு திரும்புவார். திருமணமான நாள் முதலே கணவரோடு பேசவும், தனியறையில் படுக்கவும் என் மாமியார் அனுமதிக்கவில்லை. திருமணத்தின் போது எனக்கு 45 சவரன் நகைகள், வீட்டிற்கு தேவையான பொருட்களை என் பெற்றோர் கொடுத்தனர். ஆனால், மாமியார் தினந்தோறும், "உனது வீட்டில் இருந்து பணம் வாங்கிவா? அப்போது தான் கணவரோடு சேர்த்து வைப்பேன்' என்று மிரட்டுவார். வாங்கி வரவில்லை என்றால் "மலடி' என்று பட்டம் சுமத்தி திட்டுவார்கள். இப்படியே என் வீட்டிலிருந்து பல லட்சம் வாங்கி கொடுத்து விட்டேன். அப்படி இருந்தும் கணவருடன் சேர அனுமதிக்கவே இல்லை. நான் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது என்று கேட்டால், "உனது கர்ப்பப் பையில் கோளாறு இருக்கிறது. உங்கள் வீட்டில் தான் மருத்துவம் பார்க்க வேண்டும்' என்று கூறினர். மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் எனக்கு எந்த குறையும் இல்லை.
கடந்த டிசம்பர் மாதம் அவரது குடும்பத்தினர் மலடி என்று திட்டி அடித்து உதைத்தனர். இவர்களின் தொல்லையால் மனமுடைந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். இந்நிலையில், எனது கணவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து விட்டனர்.கணவரோடு ஒன்று சேரவிடாமல் தடுத்துவிட்டு "மலடி' என்று பட்டம் சுமத்தி, துரத்திய மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வரதட்சணையாக நான் கொடுத்த நகைகளை மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றிங்க, தினமலர் 31/10/07
எங்கும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி.
ஏன்...
கணவனுக்கு புத்தி எங்கே போச்சு என்கிறீர்களா...?
அதுவும் நியாயம் தான்!
Friday, September 28, 2007
01. ஆஸ்திரேலியா பெண் சுமையாவை கைது செய்ய போலீசார் தீவிரம்!
01. ஆஸ்திரேலியா பெண் வரதட்சணை கொடுமை வழக்கில் புதிய திருப்பம் * சுமையாவை கைது செய்ய போலீசார் தீவிரம்
ராமநாதபுரம் : ஆஸ்திரேலியா பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய துபாய் கணவர் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் வெளிபட்டிணத்தை சேர்ந்தவர் கரீம்கனி(67). இவரது பேத்தி சுமையா(21) பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். சுமையாவுக்கும் பெரியபட்டிணத்தை சேர்ந்த மொகைதீன்ஹாருனுக்கும் திருமணம் நடந்தது
கணவருக்கு ஆஸ்திரேலியாவில் விசா வாங்கியிருந்த சுமையா, 2007 மார்ச் 13ல் தனக்கும் தனது கணவருக்கும் இடையே உள்ள உறவு, கருத்து வேறுபாடால் முறிந்துவிட்டது என ஆஸ்திரேலியா ஹைகமிஷனில் முறையிட்டு, கணவரின் விசாவை ரத்து செய்யும்படி மனு செய்தார். ஆஸ்திரேலியா ஹைகமிஷன் 2007 ஏப்.2ல் மொகைதீன் ஹாருனின் விசாவை ரத்து செய்தது. அதன் பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், மொகைதீன் ஹாருன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக ராமநாதபுரம் மகளிர் போலீசில் சுமையா புகார் கொடுத்தார். மொகைதீன் ஹாருனின் வீட்டிற்கு சென்ற பெண் போலீசார், மொகைதீனின் தாயார் முகபத்பீவியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். மொகைதீனின் தாய்மாமன் மெக்தர்அலி, சுமையாவின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அவரையும் வழக்கில் சேர்த்து கைது செய்தனர்.
மறுநாள், சுமையா மற்றும் அவரது உறவினர்கள், பெரியபட்டிணத்தில் மொகைதீன் ஹாருன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக திருப்புல்லாணி போலீசார், சுமையா
உள்ளிட்ட ஆறுபேரை தேடி வருகின்றனர்.
நன்றிங்க
பெண்கள் பயன்படுத்தும் ''வரதட்சணை கொடுமை'' என்ற விஷம ஆயுதத்தால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்பட்டு பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது.
ராமநாதபுரம் : ஆஸ்திரேலியா பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய துபாய் கணவர் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் வெளிபட்டிணத்தை சேர்ந்தவர் கரீம்கனி(67). இவரது பேத்தி சுமையா(21) பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். சுமையாவுக்கும் பெரியபட்டிணத்தை சேர்ந்த மொகைதீன்ஹாருனுக்கும் திருமணம் நடந்தது
கணவருக்கு ஆஸ்திரேலியாவில் விசா வாங்கியிருந்த சுமையா, 2007 மார்ச் 13ல் தனக்கும் தனது கணவருக்கும் இடையே உள்ள உறவு, கருத்து வேறுபாடால் முறிந்துவிட்டது என ஆஸ்திரேலியா ஹைகமிஷனில் முறையிட்டு, கணவரின் விசாவை ரத்து செய்யும்படி மனு செய்தார். ஆஸ்திரேலியா ஹைகமிஷன் 2007 ஏப்.2ல் மொகைதீன் ஹாருனின் விசாவை ரத்து செய்தது. அதன் பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், மொகைதீன் ஹாருன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக ராமநாதபுரம் மகளிர் போலீசில் சுமையா புகார் கொடுத்தார். மொகைதீன் ஹாருனின் வீட்டிற்கு சென்ற பெண் போலீசார், மொகைதீனின் தாயார் முகபத்பீவியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். மொகைதீனின் தாய்மாமன் மெக்தர்அலி, சுமையாவின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அவரையும் வழக்கில் சேர்த்து கைது செய்தனர்.
மறுநாள், சுமையா மற்றும் அவரது உறவினர்கள், பெரியபட்டிணத்தில் மொகைதீன் ஹாருன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக திருப்புல்லாணி போலீசார், சுமையா
உள்ளிட்ட ஆறுபேரை தேடி வருகின்றனர்.
நன்றிங்க
பெண்கள் பயன்படுத்தும் ''வரதட்சணை கொடுமை'' என்ற விஷம ஆயுதத்தால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்பட்டு பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது.
Monday, September 24, 2007
2. அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை?
அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை?- கோமாவில் திருச்சி பெண்
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007
திருச்சி:
வரதட்சணை கொடுக்காததால், தனது மகளை கொடுமைப்படுத்தி கோமா நிலைக்குத் தள்ளி விட்டதாக, அமெரிக்க மாப்பிள்ளை மீது அந்தப் பெண்ணின் தந்தை திருச்சி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் செபாஸ்டின். இவரின் மகள் ஸ்மாலின் ஜெனிட்டா (23). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், காட்டூர் ஸ்ரீராம் நகரில் வசித்து வரும் சேவியர் மகன் கிறிஸ்டி டேனியல் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.
திருமணத்தின்ேபாது, மகளுக்கு 50 பவுன் நகையும், மணமகன் கிறிஸ்டிக்கு 10 பவுன் நகை போட்டும் திருமணத்தை தனது செலவில் நடத்தியுள்ளார் செபாஸ்டின்.
மணமகன் கிறிஸ்டி டேனியல் அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கிறிஸ்டி தனது திருமணத்திற்கு பிறகு மனைவி ஜெனிட்டாவையும், தனது பெற்றோரையும் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அமெரிக்காவில் தனது குடும்பத்தோடு காரில் போகும் போது விபத்துக்குள்ளாகி அனைவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஜெனிட்டா பல அடி தூரம் தூக்கியெறியப்பட்டு எலும்புகள் உடைந்த நிலையில் தற்போது அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமா நிலையில் உள்ளார்.
இந்த விபத்து குறித்து ஜெனிட்டா வீட்டாருக்கு கிறிஸ்டி எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லையாம். தனது மகள் கோமாவில் இருப்பது, அமெரிக்காவில் இருக்கும் குடும்ப நண்பர் மூலமாகத்தான் தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியுற்ற செபாஸ்டின் இதுகுறித்து விசாரிக்க கிறிஸ்டி டேனியல் குடும்பத்தாரிடம் விசாரிக்க தொடர்பு கொள்ள முயன்று விரக்தியடைந்து விட்டார்.
இதனால் தனது மகள் வரதட்சணை கொடுமை காரணமாக சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணி, செபாஸ்டின் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது அவர்கள் 75 பவுன் நகையும், மாப்பிள்ளை திருமணத்துக்கு பிறகு வெளிநாடு சென்று விடுவதால் சீர்சாமான்களுக்கு பதிலாக 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கேட்டனர்.
ஆனால் நான் 50 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு 10 பவுனும் போடுகிறேன் என்று சொன்னதற்கு சரியென்று ஒத்துக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதே இடையில் திடீரென்று பணமும், நகையும் கேட்டார்கள்.
என்னால் கொடுக்க முடியவில்லை. திருமணத்தை என் செலவில் தான் நடத்தினேன். திருமணம் நடந்த நாளில் இருந்து என் பெண்ணிடம், கிறிஸ்டி சந்தோஷமாகவே பேசுவதில்லை.
இந்த விபத்திற்கு முன்னர் எனக்கு மெயில் அனுப்பிய ஜெனிட்டா, வரதட்சணை கேட்டு மாமியார், மாமனார், கணவர் கொடுமைப்படுத்துவதாக சொல்லியிருந்தார்.
பணத்துக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
விபத்துக்குள்ளான தனது மகளை பார்க்க அமெரிக்கா செல்ல செபாஸ்டின் முயன்று வருகிறார். இது தொடர்பாக அமெரிக்க போலீசுடன் தொடர்பு கொண்டு உரிய விசாரணை நடத்துமாறு தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளார் செபாஸ்டின்.
நன்றிங்க
யாரைத்தான் நம்புவதோ...
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007
திருச்சி:
வரதட்சணை கொடுக்காததால், தனது மகளை கொடுமைப்படுத்தி கோமா நிலைக்குத் தள்ளி விட்டதாக, அமெரிக்க மாப்பிள்ளை மீது அந்தப் பெண்ணின் தந்தை திருச்சி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் செபாஸ்டின். இவரின் மகள் ஸ்மாலின் ஜெனிட்டா (23). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், காட்டூர் ஸ்ரீராம் நகரில் வசித்து வரும் சேவியர் மகன் கிறிஸ்டி டேனியல் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.
திருமணத்தின்ேபாது, மகளுக்கு 50 பவுன் நகையும், மணமகன் கிறிஸ்டிக்கு 10 பவுன் நகை போட்டும் திருமணத்தை தனது செலவில் நடத்தியுள்ளார் செபாஸ்டின்.
மணமகன் கிறிஸ்டி டேனியல் அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கிறிஸ்டி தனது திருமணத்திற்கு பிறகு மனைவி ஜெனிட்டாவையும், தனது பெற்றோரையும் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அமெரிக்காவில் தனது குடும்பத்தோடு காரில் போகும் போது விபத்துக்குள்ளாகி அனைவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஜெனிட்டா பல அடி தூரம் தூக்கியெறியப்பட்டு எலும்புகள் உடைந்த நிலையில் தற்போது அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமா நிலையில் உள்ளார்.
இந்த விபத்து குறித்து ஜெனிட்டா வீட்டாருக்கு கிறிஸ்டி எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லையாம். தனது மகள் கோமாவில் இருப்பது, அமெரிக்காவில் இருக்கும் குடும்ப நண்பர் மூலமாகத்தான் தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியுற்ற செபாஸ்டின் இதுகுறித்து விசாரிக்க கிறிஸ்டி டேனியல் குடும்பத்தாரிடம் விசாரிக்க தொடர்பு கொள்ள முயன்று விரக்தியடைந்து விட்டார்.
இதனால் தனது மகள் வரதட்சணை கொடுமை காரணமாக சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணி, செபாஸ்டின் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது அவர்கள் 75 பவுன் நகையும், மாப்பிள்ளை திருமணத்துக்கு பிறகு வெளிநாடு சென்று விடுவதால் சீர்சாமான்களுக்கு பதிலாக 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கேட்டனர்.
ஆனால் நான் 50 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு 10 பவுனும் போடுகிறேன் என்று சொன்னதற்கு சரியென்று ஒத்துக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதே இடையில் திடீரென்று பணமும், நகையும் கேட்டார்கள்.
என்னால் கொடுக்க முடியவில்லை. திருமணத்தை என் செலவில் தான் நடத்தினேன். திருமணம் நடந்த நாளில் இருந்து என் பெண்ணிடம், கிறிஸ்டி சந்தோஷமாகவே பேசுவதில்லை.
இந்த விபத்திற்கு முன்னர் எனக்கு மெயில் அனுப்பிய ஜெனிட்டா, வரதட்சணை கேட்டு மாமியார், மாமனார், கணவர் கொடுமைப்படுத்துவதாக சொல்லியிருந்தார்.
பணத்துக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
விபத்துக்குள்ளான தனது மகளை பார்க்க அமெரிக்கா செல்ல செபாஸ்டின் முயன்று வருகிறார். இது தொடர்பாக அமெரிக்க போலீசுடன் தொடர்பு கொண்டு உரிய விசாரணை நடத்துமாறு தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளார் செபாஸ்டின்.
நன்றிங்க
யாரைத்தான் நம்புவதோ...
01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.
01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை * துபாய் கணவர் தலைமறைவு
ராமநாதபுரம் : ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய துபாயில் பணியாற்றும் இன்ஜினியரை, ராமநாதபுரம் மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் வெளிபட்டினத்தைச் சேர்ந்தவர் கரீம் கனி(67). இவரது பேத்தி சுமையா(21), பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்திய கலாசாரத்தில் வாழ விரும்பிய சுமையாவுக்கு, ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்த மொகைதீன் ஹாருனை திருமணம் செய்து வைத்தனர். இவர், துபாயில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு கிலோ தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. தேனிலவுக்கு ஹாங்காங் நாட்டிற்கு பெண் வீட்டு செலவில் தம்பதியர் அனுப்பி வைக்கப்பட்டனர். கிரெடிட் கார்டை கையோடு எடுத்து வரவில்லை என்பதற்காக, மனைவியை ஹாங்காங்கில் மொகைதீன்கான் அடித்து துன்புறுத்தினார். மீண்டும் பெரியபட்டினம் வந்தவுடன் கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம், நூறு சவரன் நகை, நிலம், வீடு வேண்டும் என்று கேட்டு மொகைதீன் ஹாருன் குடும்பத்தினர் சுமைதாவை கொடுமைப்படுத்தினர்.
விசாரணை நடத்திய ராமநாதபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் வசந்தா, வரதட்சணை கேட்ட மொகைதீன் ஹாருனின் தாயார் முகபத் பீவி(50), தாய்மாமன் மெக்தார் அலி(55) ஆகியோரை கைது செய்தார். தலைமறைவான மொகைதீன் ஹாருன், அவரது பெரியப்பா அகநத் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
நன்றிங்க
இந்திய கலச்சாரத்தில் மாப்பிள்ளை வேண்டுமென்றால் மாப்பிள்ளை வீட்டாரின் வரதட்சணைக் கொடுமையையும் சகித்தாக வேண்டும்.
என்றைக்கோ வரதட்சணை இந்திய கலாச்சாரத்தோடு ஒன்றாக கலந்து விட்டது! :(
ராமநாதபுரம் : ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய துபாயில் பணியாற்றும் இன்ஜினியரை, ராமநாதபுரம் மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் வெளிபட்டினத்தைச் சேர்ந்தவர் கரீம் கனி(67). இவரது பேத்தி சுமையா(21), பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்திய கலாசாரத்தில் வாழ விரும்பிய சுமையாவுக்கு, ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்த மொகைதீன் ஹாருனை திருமணம் செய்து வைத்தனர். இவர், துபாயில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு கிலோ தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. தேனிலவுக்கு ஹாங்காங் நாட்டிற்கு பெண் வீட்டு செலவில் தம்பதியர் அனுப்பி வைக்கப்பட்டனர். கிரெடிட் கார்டை கையோடு எடுத்து வரவில்லை என்பதற்காக, மனைவியை ஹாங்காங்கில் மொகைதீன்கான் அடித்து துன்புறுத்தினார். மீண்டும் பெரியபட்டினம் வந்தவுடன் கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம், நூறு சவரன் நகை, நிலம், வீடு வேண்டும் என்று கேட்டு மொகைதீன் ஹாருன் குடும்பத்தினர் சுமைதாவை கொடுமைப்படுத்தினர்.
விசாரணை நடத்திய ராமநாதபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் வசந்தா, வரதட்சணை கேட்ட மொகைதீன் ஹாருனின் தாயார் முகபத் பீவி(50), தாய்மாமன் மெக்தார் அலி(55) ஆகியோரை கைது செய்தார். தலைமறைவான மொகைதீன் ஹாருன், அவரது பெரியப்பா அகநத் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
நன்றிங்க
இந்திய கலச்சாரத்தில் மாப்பிள்ளை வேண்டுமென்றால் மாப்பிள்ளை வீட்டாரின் வரதட்சணைக் கொடுமையையும் சகித்தாக வேண்டும்.
என்றைக்கோ வரதட்சணை இந்திய கலாச்சாரத்தோடு ஒன்றாக கலந்து விட்டது! :(
Subscribe to:
Posts (Atom)