Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, April 03, 2009

நான் குதிருக்குள் இல்லை!


ஜனநாயகம், மதச்சார்பின்மை இவ்விரண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரு பெரும் தூண்களாகும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அனைவருக்கும் அவரவர்களின் மத நம்பிக்கைகளின்படி செயல்பட்டுக் கொள்வது நமது ஜனநாயகம் வழங்கும் அடிப்படை உரிமையாகும்" - உலக அளவில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்புடன் வைக்கும் சட்டத்தின் மிக முக்கிய நிபந்தனைகளான இவை இரண்டும் துரதிஷ்டவசத்தால் பெரும்பாலான சமயங்களில் வெறும் ஏட்டில் மட்டும் வைத்து அழகு பார்க்கும் வரிகளாக மாறிப்போகின்றன.

அனைவருக்கும் சமமான நீதி நடைமுறை உறுதிப் படுத்தப்படுவதே ஜனநாயகம் தழைப்பதற்கும் மக்கள் அமைதியாக வாழ்வதற்குமான அடிப்படை காரணிகளாகும். ஆனால், நம் நாட்டைப் பொருத்தவரை நீதி என்பது பணம், பதவியுடையவர்களுக்கு ஒரு விதமாகவும் ஏழைகளுக்கு வேறு விதமாகவுமே உள்ளது. அதனாலேயே காஞ்சி காம கோடி, அத்வானி, மோடி, ஜெயலலிதா, ஹர்ஷத் மேத்தா போன்ற இன்னபிற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அராஜகம், மோசடி போன்றவற்றில் ஊறிப்போனவர்கள் உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமாக எவ்வித பயமும் இன்றி வலம்வருகின்றனர். அதேவேளை, சின்னஞ்சிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சாதாரணமானவர்கள் மீது மட்டும் சட்டம் தனது முழுவலிமையைப் பிரயோகிக்கின்றது.

சமநீதி விஷயத்தில் வலியவன், எளியவன் என்ற பாரபட்சம் பார்க்கும் நீதி, முஸ்லிம்கள் என்று வரும் பொழுது அத்தகைய கருணை வாசலையும்கூட அடைத்து விடுகின்றது.
அநியாயம் செய்திருந்தாலும் வலியவனுக்குச் சாதகமாகவும் அநீதி இழைக்கப் பட்டிருந்தாலும் எளியவனுக்குப் பாதகமாகவும் வளைந்து கொடுக்கும் இத்தகையச் செயலைகளை "நீதி தேவன் மயக்கம்" என்ற பெயரில் அறிஞர் அண்ணா ஒரு நாடகம் எழுதினார். 1954ஆம் ஆண்டு மேடையில் அரங்கேறிய அவரது நாடகம் இப்போது(ம்) அரங்கேறிக் கொண்டிருப்பது நமது நீதிமன்றங்களில்!

இந்திய விமானப்படை ஊழியர் அன்ஸாரீ அஃப்தாப் அஹ்மது என்பவர் சீக்கிய ஊழியர்களுக்கு வழங்கப் பட்டு நடைமுறையிலிருக்கும் தாடி வளர்த்துக் கொள்ளும் மத உரிமையைத் தனக்கும் அளிக்க வேண்டும் எனக் கேட்டுத் தொடர்ந்த வழக்கில், இந்திய விமானப்படை வழிகாட்டு நெறிமுறைகள் 2003இன்படி "சீக்கியர்களுக்கு வழங்கும் உரிமையை 2002ஆம் ஆண்டுக்குப்பிறகு விமானப்படைக்குத் தேர்வு செய்யப் பட்ட முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது" என்று கடந்த ஆண்டு பஞ்சாப்/ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்றவர்க்கு வளைந்தும் முஸ்லிம் என்றால் நிமிர்ந்தும் நிற்கும் சட்டம் இந்திய விமானப்படைக்கு மட்டும் சொந்தமானதன்று.

மத்தியப்பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்திலுள்ள சிரஞ்ச் நகரில் இயங்கி வரும் 'நிர்மலா கான்வெண்ட்' என்ற பள்ளியில் தொடக்கம் முதல் பத்தாம் வகுப்புவரை முஹம்மது ஸலீம் என்ற முஸ்லிம் மாணவர் கல்வி பயின்று வந்தார். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது அவருக்குத் தாடி வளர்ந்து விட்டது. "தாடியை மழிக்காமல் பள்ளிக்கு வருவதாக"க் கூறிப் பள்ளியின் நிர்வாகி ப்ரின்ஸிபால் தெரஸா மார்ட்டின், மாணவர் ஸலிமைப் பள்ளியிலிருந்து நீக்கினார். அதை எதிர்த்து, தன்னைத் "தாடி வளர்த்துக் கொள்ளப் பள்ளி அனுமதிக்க வேண்டும்" எனக் கோரி முதலில் பள்ளிக்கு முறைப்படி விண்ணப்பித்தார். பள்ளி நிர்வாகம் மறுதலித்துவிடவே, உயர்நீதி மன்றத்தில் மாணவர் ஸலீம் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

"முழுமையாக மழித்துக் கொண்டு வரவேண்டும்" என்ற பள்ளிச் சட்ட - திட்டத்தினைத் தளர்த்தக் கோரி ஸலீம் சமர்ப்பித்த மனு உயர்நீதி மன்றத்தில் கடந்த 30.12.2008இல் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடாப் பிடியாக, "தாடி வளர்ப்பது என்னுடைய மத உரிமை. மதசார்பற்ற இந்தியாவில் வாழும் குடிமகனுக்கு (சட்டப் பிரிவு 25இன்படி) தன் மத நம்பிக்கைப்படி வாழ்வதற்கான உரிமையை மறுக்கக் கூடாது. எனவே தாடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும்" எனக் கோரி, உச்சநீதி மன்றத்துக்கு வழக்கைக் கொண்டு சென்றார்.

ஸலீம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி இரவீந்திரன் தலைமையிலான அமர்வு நீதிமன்றம் விசாரித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாணவர் ஸலிமுடைய கோரிக்கையை, அவர் பயிலும் பள்ளியின் சட்ட-திட்டங்களை மட்டும் காரணம் காட்டி மறுதலித்திருந்தால் பிரச்சினை பெரிதாகி இருக்காது.

ஆனால், சட்டம் கற்றுத் தேர்ந்ததாகச் சொல்லப் படும் ஒரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு என்பவர், "தாடி வைப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்" என்ற காரணம் கூறி கடந்த திங்கட்கிழமை (30.3.2009) வழக்கைத் தள்ளுபடி செய்து, தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் வெறும் 30 ஆண்டுகால வரலாறுடைய தாலிபானுக்கும் என்ன சம்பந்தம்? நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கே வெளிச்சம்!

தாலிபான் என்ற பெயரே அறியப் படாத ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் முஸ்லிம் ஆண்கள் தாடி வளர்த்தும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தும் வருகின்றனர். தாடி இல்லாத ஆண் சீக்கியர் இல்லை என்னும் அளவுக்கு சீக்கிய ஆண்கள் தாடியோடுதான் இருப்பர். தாடி வளர்த்திருப்பவரெல்லாம் தாலிபான் அமைப்பின் உறுப்பினரா? நம் பிரதமரை நீதிபதி கட்ஜு ரொம்பத்தான் தாக்குகிறார்!

"தாலிபான்களை நம் நாட்டில் அனுமதிக்க முடியாது" என்று கூறியதோடு, "நாளைக்கு ஒரு (முஸ்லிம்) மாணவி, பர்தா அணிந்து கொண்டு பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கலாம். நாம் அதை அனுமதிக்க முடியுமா?" என்று நீதிபதி கட்ஜு அறிவு(?)ப்பூர்வமான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

"நாட்டின் மதசார்பற்ற நிலைபாட்டைப் பயன் படுத்திக் கொண்டு இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது" எனவும் நீதிமன்றத்துக்குள்ளேயே நீதிபதி ஜோக்கடித்திருக்கிறார்.

"சீக்கியர்களுக்குத் தாடி வளர்த்துக் கொள்ளவும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும்போது, என்னை மட்டும் தாடியை மழிக்க நிர்பந்திப்பது பள்ளி நிர்வாகத்தின் தெளிவான இரட்டை நிலைபாடு" என ஸலீம் வாதித்தார்.

ஆனால் பயனில்லை. "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30ஆம் பிரிவின்படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், தனியாக சட்டம் உருவாக்கிக் கொள்வதற்கு அனுமதியுள்ளது. அவற்றைப் பின்பற்றுவதற்கு இயலாது எனில், ஸலீம் வேறு ஒரு பள்ளியைத் தேர்வு செய்து கொள்ளட்டும்" எனவும் நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.

இந்நாட்டில் ஒரு சமுதாயத்திற்கு அனுமதிக்கப்படும் நீதி, அதே வடிவில் பின்பற்றுவதற்கு முஸ்லிம்கள் எனில் மறுக்கப்படுகிறது. இது "இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் மத அடிப்படைகளைப் பின்பற்றுவதற்கான உரிமைகளுக்கு" முரணான நிலைபாடு எனில், வழக்கிற்குத் தொடர்பில்லாத வகையில் இஸ்லாமிய அடிப்படைகளைச் சம்பந்தமில்லாத தனிப்பட்ட குழுக்களோடு தொடர்பு படுத்தி இழிவுபடுத்துவது இந்திய நீதித்துறைக்கு அவமானத்தைப் பெற்றுத்தரும் செயலாகும். அனைவரையும் சமமான கண்ணோட்டத்தோடு அணுகவேண்டிய, நாட்டின் உன்னத பீடத்தில் அமர்ந்திருக்கும் பொறுப்பான அதிகாரியின் சட்டமீறலுமாகும்.

"தாடி வளர்ப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்; இந்தியாவில் தாலிபானிஸம் வளர்வதை அனுமதிக்கமுடியாது" என்று உண்மையைப் பொய்களுடன் கலந்து உண்மையைப் பொய்யாக்குவதையும் பொய்யை உண்மையாக்குவதையும் அதனை வைத்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதையும் தங்களது பாணியாகக் கொண்டுள்ள ஹிந்துத்துவத்தின் ஒரு மோடி, அத்வானி வகையறாக்களின் வாயிலிருந்து இத்தகைய சொற்கள் உதிர்ந்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், அதுவே நாட்டின் உன்னத பீடத்தை அலங்கரிக்கும் ஒரு நீதிபதியின் வாயிலிருந்து வருவதென்றால்.....?

நீதிபதி கட்ஜுவின் அறியாமைக் கருத்துகளுக்கு எதிராகவும் நீதியின் இரட்டைமுக நிலைபாட்டிற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்திய நீதித்துறையின் மீது இப்பொழுதும் நம்பிக்கை இழக்காத முஸ்லிம்கள் என்ன செய்யலாம்? என்று சிந்தித்தோமெனில், நமக்குக் கிடைக்கும் விடை, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் 'தாலிபான்' பேச்சை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பதே.

"நான் ஒரு மதசார்பற்றவன்" என்று நீதிபதி கட்ஜு கூறிய தன்னிலை விளக்கத்தில் ஓர் உண்மை பொதிந்திருக்கிறது.

தலைப்பை இன்னொரு முறை படித்துக் கொள்ளவும்!

நன்றிங்க

Tuesday, March 17, 2009

காவிப் பித்துத் தலைக்கேறிய காந்தி(?)

முன் குறிப்பு:

"காந்தியிடம் இருந்த மரியாதையால் தன் மகள் இந்திராவை 'காந்தி' ஆக்கினார் நேரு. சரி, ஒத்துக்கலாம்; அந்தம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டு ஃபார்ஸி ஃபெரோஸும் 'காந்தி' ஆனாரு. சரின்னு அதையும் ஒத்துக்கிட்டோம். ரெண்டு பேருக்கும் ரெண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். பேரு ராஜீவ் 'காந்தி'; சஞ்சய் 'காந்தி'. அதையும் ஒத்துக்கிட்டோம். இத்தாலிக்கார சோனியா ... எப்படிய்யா 'காந்தி' ஆனா(ரு)? சொல்லு..."

நீண்டகாலம் திமுகவின் பிரச்சார பீரங்கியாகத் திகழ்ந்த 'தீப்பொறி' ஆறுமுகம், ஒருகாலத்தில் திமுக-பாஜக கூட்டணியின்போது காங்கிரசைத் தாக்குவதற்காகப் பயன்படுத்திய மேற்காணும் கேள்விகள்தாம் நினைவுக்கு வருகின்றன - "சீக்கிய மேனகா ... எப்படி காந்தி ஆனாரு? சொல்லு; அந்தம்மாவுக்குப் பொறந்த வருண் எப்படி காந்தி ஆனாரு? சொல்லு ..." என்ற நீட்சியுடன்.

எனவே, சஞ்சய்-மேனகாவுக்குப் பிறந்த வருணோடு, 'காந்தி' என்ற பெயரைச் சேர்த்து காந்திஜியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்பதால் வருணை இங்கு வெறும் 'வருண்' என்றே குறிப்பிடுவோம்.

********

ஜனநாயகக் கேலிக்கூத்தின் உச்சபட்ச கோமாளித்தனமான மற்றொரு தேர்தல் திருவிழா ஆரம்பமாகி விட்டது. மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் இன்னொருமுறை மக்கள் முன்னிலையில் கோமாளி வித்தைக் காட்ட தயாராகி விட்டனர்.

மக்களின் அடிப்படை வாழ்வு, பொருளாதார மேம்பாடு, தொழில் வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற மக்களையும் நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குத் தாங்கள் என்னென்ன செய்யப்போகிறோம் என்றும் என்னென்ன செய்துள்ளோம் என்பதையும் பட்டியலிட்டு மக்களைக் கவர்வதே உண்மையான ஜனநாயத்தின் அடையாளங்களாகும்.

ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக ஏட்டளவில் பீற்றிக் கொள்ளும் இந்தியாவில் மட்டும் இதற்கு நேர் முரணான காட்சிகளே எப்போதும் அரங்கேறுகின்றன. இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. அதிலும் பிரிவினைவாதத்தையும் அடக்குமுறையையும் அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாகக் கொண்ட பாரதீய ஜனதா கட்சியைப் பொருத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்.

மக்களிடையே வெறுப்பையும் காவிச் சிந்தனையையும் விதைத்து, நாட்டில் வாழும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத அனைவரையும் "இந்துக்கள்" என்ற மாய்மாலத்தில் ஒருங்கிணைக்க தொடர் முயற்சி செய்து வருகிறது பாஜக. அதற்கான ஆரம்ப ஆயுதமாக அது கையில் எடுத்துக் கொண்டதுதான் பாபர் மசூதி!

அரசியலில் அன்றிலிருந்து ஆரம்பித்த காவி வக்கிரச் சிந்தனைகள், இன்று வேர் விட்டு விருட்சமாகப் பரவி நிற்கிறது. நாட்டின் குடிமக்களில் ஒரு சாராரைக் கொன்றொழிப்பதையும் அதற்காக அறைகூவல் விடுவதையும் சிறுபான்மையினரையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் அடித்தட்டிலிருந்து மேலெழும்ப விடாமல் அழித்தொழிப்பதையும் மட்டுமே இலட்சியங்களாகக் கொண்டு ஒரு நாட்டில் ஒரு கட்சி வெளிப்படையாக இயங்க முடியுமா?.




இந்தியாவில் மட்டும் அது முடியும்! ஒன்றல்ல, ஆர்.எஸ்.எஸ் என்ற விஷ விருட்சத்தின் விழுதுகளாகவும் எச்சங்களாகவும் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பல பிரிவுகளாகப் பிரிந்து விரிந்த உபவிஷங்களாக! ஆர்.எஸ்.எஸ்ஸின் கூடாரத்தில் ஐக்கியமாகி விட்டால் அடுத்த விநாடியே 'அகோரி'ப் பித்துத் தலைக்கு ஏறிவிடும் என்பது அதன் அரசியல் பிரிவான பிஜேபி மூலம் இன்னொரு முறை தெளிவாகி இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் பிஜேபியின் நாடாளுமன்ற வேட்பாளாராகப் போட்டியிடும் வருண், கடந்த 6.3.2009இல் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது,




"இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்".

"இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்".

"ஓர் இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது சத்தியமாக அவனது கையை இந்த வருண் வெட்டுவான்"


என்றெல்லாம் முழங்கித் தள்ளியிருக்கிறார். யாருக்காவது காவிப் பித்துத் தலைக்கேறி விட்டால் அவர், பைத்தியங்கள் உளறுவதை விடக் கீழ்த்தரமாக அர்த்தமின்றி உளறுவார் என்பதற்கு வருண் நல்ல உதாரணம்!

"இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்" என்றால், முதலில் இந்துக்கள் என்றால் யாவர் என்பதை ஆர்.எஸ்.எஸின் கண்ணோட்டத்தில் தெளிவாக்கினால், "முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், தாழ்த்தப்பட்டோர், பகுத்தறிவுவாதிகள் என 2.5% பார்ப்பனர்களைத் தவிர அனைவருமே பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும். பாகிஸ்தான் தாங்குமா? பாகிஸ்தானில் இவர்களுக்கெல்லாம் இடம் கிடைக்குமா?" என்ற கேள்வியை ஆர்.எஸ்.எஸ், தன் சகாவான ஐ.எஸ்.ஐயுடன் கலந்துபேசி இந்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

"தாமரையின் சக்தி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும்" என்றும் "இந்துக்களைத் தவிர மற்ற அனைவரும் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்" எனவும் இவ்வளவு வெளிப்படையாக ஒருவர் பேசுகிறாரே?. இது சட்ட விரோதம் இல்லையா?. இவர் மீது சட்டம் பாயாதா? என்று வெகுளித்தனமாக யாராவது கேள்வி கேட்கக் கூடும்.

ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாக ஏற்றுக் கொள்வதற்கு அடிப்படைத் தகுதியே சட்டத்தை மதிக்கக் கூடாது என்பதுதான். அப்படியே தேர்தல் கமிஷனோ, உணர்வில்லாத ஏதோ ஒரு கமிஷனோ, பத்து நாட்கள் கழித்து, கேட்க வேண்டுமே என்பதற்கு ஈனஸ்வரத்தில் முனகினால், "நான் பேசியதைத் திரித்து விட்டார்கள்" என்ற காவி சாணக்கியத்தனம். அத்தகைய பயிற்சிகளைக் கொடுத்தல்லவா ஆர்.எஸ்.எஸ் அகோரிகளைத் தயாராக்குகின்றது!

அதுதான் நடந்திருக்கிறது. வருணின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்குப் பாதுகாப்பு அளித்து அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த உத்தரப்பிரதேசக் காவல்துறை, பத்து நாட்களுக்குப் பிறகு வருணுக்கு எதிராகக் குற்றவியல் பிரிவு 153ஏயின்படி (by words, either spoken or written or by signs or by visible representations or otherwise promotes or attempts to promote on ground of religion, race, place of birth, residence, language, caste or community or any other ground whatsoever disharmony or feelings of enmity, hatred or illwill between different religious, racial, language or regional groups or castes or communities shall be punished with imprisonment) முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது.

"இந்திய இறையாண்மைக்குச் சவால் விடுவதாகவும் மதவிரோதத்தை விதைத்து வன்முறையைத் தூண்டி விடுவதாகவும்" வருணுக்கு எதிராகப் பிணையில் வரமுடியாத குற்றவியல் சட்டப்படியும் மக்கள் பிரதிநிதுத்துவப் பிரிவுச் சட்டப்படியும் ஒரு வழக்கை நேற்றுத் தேர்தல் கமிஷன் தொடுத்திருப்பதாக PTI செய்திக் குறிப்புக் கூறுகின்றது.
ஆனால், "நாளைக்கு நான் தெளிவாக்கி விடுவேன். ஒன்றும் ஆகாது, கவலையில்லை" என்று வருண் பேட்டி கொடுக்கிறார்.

மேலும், "வருண் பேசியதில் தவறொன்றுமில்லை" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் தருண் விஜய் விளக்கம் சொல்லி விட்டார்.

"வருண் புயல் மாதிரி; அடுத்த சஞ்சய் வருண்தான்" என்று தாய் மேனகா பெருமை பேசுகிறார்.

நியாயந்தான்! அவசரநிலை காலகட்டத்தில் முஸ்லிம்களின் டெல்லிக் குடியிருப்புகளை மட்டும் குறிவைத்து புல்டோசரால் அழித்தொழித்து, புகழ்பெற்ற டெல்லி ஜாமியா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு நடத்தி, டெல்லி முஸ்லிம்களின் மனங்களில் அழியா வடுவை ஏற்படுத்திய பழம்புயல் சஞ்சயின் மகனல்லவா வருண்?

நம் நாட்டில் பேசுவதற்கு ஒரு மேடையும் கேட்பதற்கு சிலநூறு தலையாட்டிக் கூட்டமும் ஒரு மைக்கும் கிடைத்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முறைச் சித்தாந்தத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டது.

"நம்நாடு ஒரு ஜனநாயக நாடு; நமது அரசு ஜனநாயக அரசு" எனப் பெருமையாகக் கூறிக் கொண்டிருப்பதில் மட்டும் அர்த்தம் இல்லை. நாட்டின் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்துவதற்கும் அனைவரும் பாதுகாப்பாக வாழ்வதற்கு உத்தரவாதம் வழங்க வேண்டியதும் ஜனநாயக அரசின் தலையாய கடமைகளாகும்

வெறும் கண்துடைப்பு விளக்க நோட்டீஸ்களும் கமிஷன்களும் அமைப்பதை விடுத்து, வன்முறை வித்துகளை விதைக்கும் பேச்சுகளைப் பேசுவோர் எவராக இருப்பினும் உடனே கைது செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும். "வருணுக்குத் இந்தத் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லை" என்ற குறைந்தபட்ச அறிவிப்பையாவது தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும்.

இல்லையெனில் இதேமாதிரிப் பேச்சுகள் நீளுவதைத் தடுக்க முடியாது - எதிர்ப் பேச்சையும்தான்!

நன்றிங்க

Friday, August 22, 2008

காலத்தின் சுழற்ச்சி...

நாடகம் இனிதே முடிந்திருக்கிறது. சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் அணிந்து கொண்ட வேடத்தை அவரே கலைக்கத் தொடங்கினார். தற்போது முற்றிலுமாகக் கலைத்திருக்கிறார் பர்வேஸ் முஷரஃப். ஆம். கடந்த திங்கள்கிழமை தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் உள்ளிட்ட அத்தனை தேசங்களையும் தன்னை நோக்கித் திருப்பியிருக்கிறார்.

பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை அதிரடியாக நகர்த்திவிட்டு ஆட்சிக்கு வந்த முஷரஃப், தற்போது திடீரென பதவி விலகியதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் காலச் சக்கரத்தைக் கொஞ்சம் பின்னோக்கிச் சுழற்றவேண்டும். ஆகஸ்டு 11, 1943. பழைய டெல்லியில் ஒரு சாதாரண மத்தியதர முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் முஷரஃப். பிரிவினையின்போது, பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுள் அவருடையதும் ஒன்று. சாதாரண ஜவானாகத் தன்னை பாகிஸ்தான் ராணுவத்தில் இணைத்துக்கொண்ட முஷரஃப் பிறகு கமாண்டராக, மேஜராக, மேஜர் ஜெனரலாக, லெஃப்டினண்ட் ஜெனரலாக என்று படிப்படியாக ராணுவப் பதவிப் படிக்கட்டுகளில் மேலேறி வந்து, ராணுவத் தளபதி ஆனார்.

உள்நாடு மற்றும் அக்கம்பக்கத்து நாடுகளில் மாத்திரமே பெயரளவில் அறிமுகம் ஆகியிருந்த முஷரஃப், அக்டோபர் 12, 1999 அன்று பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை அதிரடியாகக் கைப்பற்றிய நாளில்தான் உலகம் முழுவதும் பிரபலமானார். அனைத்து ஊடகங்களும் அவருடைய பெயரை உச்சரிக்கத் தொடங்கின.

மூன்று ராணுவ உயரதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு ஒத்தாசையாக சுமார் நூறு ஜவான்கள் கும்பலாக பிரதமர் நவாஸ் ஷெரீபின் அலுவலகத்துக்குள் ஒருநாள் நுழைந்தனர். `என்ன விஷயம்?' என்று கேட்டார் பிரதமர். `மன்னிக்க வேண்டும். உங்களைக் கைது செய்கிறோம்'. ராணுவப் புரட்சி நடந்திருப்பதை ஷெரீப்பால் உணர்ந்துகொள்ளமுடிந்தது. இப்படித்தான் அதிரடியாகத் தனது கணக்கைத் தொடங்கினார் முஷரஃப்.

இந்தியா தொடங்கி அத்தனை தேசங்களும் ராணுவப் புரட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. சிலர் மெல்லிய குரலில். வேறு சிலர் உரத்த குரலில். ஆனாலும் அடுத்த இரண்டாண்டுகளுக்கு பாகிஸ்தானில் ராணுவ ராஜாங்கம்தான் நடந்துகொண்டிருந்தது. சட்டாம்பிள்ளையான முஷரஃப் நினைத்ததுதான் சட்டம். போட்டதுதான் கையெழுத்து. சகலம் முஷரஃப் மயம். சாவகாசமாக இரண்டாண்டுகள் ஆட்சி செய்து முடித்தவர் 2001-ல் `பாகிஸ்தானுக்கு புதிய அதிபரை நியமித்திருக்கிறேன். பெயர், பர்வேஸ் முஷரஃப்' என்ற ரீதியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆம். அவரே அதிபராகவும் ஆனார்.

என்னதான் பாகிஸ்தானுக்கு அதிபர் என்றாலும்கூட அமெரிக்காவுக்கு செல்லப்பிள்ளையாக மாறுவது முக்கியம் என்பதால் அதற்கான வாய்ப்புகள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து, `அல்காயிதாவை அழிக்கிறேன், பின்லேடனைப் பிடிக்கிறேன்' என்று ஆப்கனுக்குள் அமெரிக்கப் படைகள் நுழைய, இதுதான் சமயம் என்று தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கு என்னுடைய பரிபூரண ஆதரவு என்று அறிவித்தார். பாகிஸ்தான் அதிபரா இப்படிப் பேசுகிறார் என்று எல்லோருமே வாய் பிளந்தனர். இதன்மூலம் அமெரிக்காவிடம் அவருக்கு நல்ல பிள்ளை என்ற அந்தஸ்து கிடைத்தது.

கிடைத்த இமேஜைப் பயன்படுத்தி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தன்னுடைய அதிபர் பதவியை நீட்டிக்கொள்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர முயற்சி செய்தார் முஷரஃப். எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவிட்டன. இது கடைந்தெடுத்த மோசடி என்று சீறின. ஆனாலும் சாம, பேத, தான, தண்ட முறைகளைப் பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்றிவிட்டார் முஷரஃப்.

இது பலத்த சர்ச்சைகளைக் கிளப்பவே, `முறைகேடுகள் நடந்தது வாஸ்தவம்தான். அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்' என்றார் முஷரஃப். இதன்மூலம், தான் எத்தனை தேர்ந்த அரசியல்வாதி என்பதை எல்லோருக்கும் நிரூபித்தார்.

அதிபராக இருந்துவிட்டுப் போங்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்துங்கள் என்று உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். அதற்கேற்ப 2002-ல் தேர்தல் நடந்தது. அவருடைய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (காயிதே அஜம்) கட்சி களத்தில் இறங்கியது. ஆனால் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தபோதும் தன்னுடைய அதிபர் பதவியைத் தக்கவைக்க முடிந்தது. அந்த சமயத்தில் தான் விரைவில் ராணுவப் பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார். வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே அதை நினைத்தாரே தவிர அதை அந்த நிமிடமே மறந்துவிட்டார்.
இடையிடையே முஷரஃப் மீது இரண்டு கொலை முயற்சிகள் நடத்தப்பட்டன.

தப்பித்துவிட்டார். ஆண்டுகள் கடந்தன. 2007-ல் மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடத் தயாரானார் முஷரஃப். திடுதிப்பென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி தன்னுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்றுகூறி அவருக்கு சஸ்பென்ஷன் உத்தரவைப் பிறப்பித்தார் முஷரஃப். இது எதற்கான முயற்சி என்ற சந்தேகம் பாகிஸ்தான் முழுக்கப் பரவியது.

இதற்கிடையே லால் மசூதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப்படை தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது மிகப்பெரிய கலவரமாக உருமாறி பாகிஸ்தானைத் திக்குமுக்காடச் செய்தது. இந்த வெப்பம் அடங்குவதற்குள் முஷரஃப் கொடுத்த சஸ்பென்ஷனை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எமர்ஜென்ஸி அமலாகலாம் என்று வதந்தி பரவத் தொடங்கியது. ஆனால் அப்படியொரு விபரீத முடிவை முஷரஃப் எடுக்கவில்லை.

இதன்பிறகு நடந்த அதிபர் தேர்தலில் முஷரஃப் வெற்றி பெற்றார். ஆனால் அந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைக்க, ஆத்திரமடைந்த முஷரஃப் மீண்டும் எமர்ஜென்ஸியை அமல்படுத்தினார். நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பிறகு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட முஷரஃப், தான் இத்தனை நாளும் வகித்துவந்த ராணுவப் பொறுப்பை ஜெனரல் கயானியிடம் ஒப்படைத்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார்.

அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வெளிநாடுகளில் இருந்த பெனாசிர் பூட்டோவுக்கும் நவாஸ் ஷெரீப்புக்கும் அனுமதி வழங்கப்பட்டன. அவர்களும் களத்தில் குதித்தனர். ஜனநாயகம் மலரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பெனாசிர் பூட்டோ ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்படவே, பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது.

எல்லாவற்றையும் கடந்து ஒருவழியாக பிப்ரவரி 2008-ல் தேர்தல் நடந்தது. தேர்தலில் முஷரஃப் கட்சி தோல்வியைச் சந்தித்தது. பெனாசிர் கட்சியைச் சேர்ந்த யூசுஃப் ராஸா கிலானி என்பவர் பிரதமரானார். அவருக்குப் பல கட்சிகளும் ஆதரவளித்து வருகின்றன. இந்நிலையில் அதிபர் முஷரஃப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற சூழல் உருவானது. இதன்மூலம் அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படவே, தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் விதமாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார், அதுவும் உருக்கமான உரையோடு.

`நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பாகிஸ்தானுக்கு தேவைகள் ஏற்பட்டபோதெல்லாம் உதவி செய்து இருக்கிறேன். என் மீது எந்த குற்றச்சாட் டும் கூற முடியாது. என் மீது ஒரு குற்றச்சாட்டைக் கூட அவர்களால் நிரூபிக்க முடியாது. ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது சரியான நடைமுறைதானா? ஈகோ காரணமாக இதைச் செய்கிறார்கள். ஜனாதிபதி பதவியை விட பாகிஸ்தான்தான் எனக்குப் பெரிது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் நான் நீக்கப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு பெரிய இழப்பாக இருக்கும். நான் யாரிடமும் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. எனவே ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன். இந்த முடிவை எனது ஆதரவாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைப்பேன். அடுத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை மக்களிடமே விட்டு விடுகிறேன்.

நன்றிங்க

காலச் சக்கரம் என்ன வேகமாக சுழல்கிறது!

நவாப் ஷெரிஃபை நாடு கடத்திய முஷ்ரப்பு நாடு கடத்தப்படுவரா...?

அமெரிக்கவுக்கா? சவூதிக்கா? பொறுத்திருங்கள், விரைவில்...

Friday, August 01, 2008

பெண்மைக்குப் பெண்ணே எதிரி!

சென்னை. பரபரப்பான நந்தனம் சிக்னல். பச்சை விளக்குக்காகக் காத்திருக்கிறேன். விர்ர்ரூம்ம்ம் விர்ர்ரூம்ம்ம் சத்தத்துடன் என் காரை உரசிவிடுவது மாதிரி பக்கத்தில் வந்து நின்றது அந்த பைக். ஓட்டி வந்த இளைஞனின் பின் இருக்கையில் ஒரு பெண். இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். காற்றைக் கிழிக்கும் கூந்தல். ஸ்லீவ்லெஸ் லோகட் டாப்ஸ் - ஜீன்ஸில் இருந்தாள். முதுகுப்பக்கம் டாப்சுக்கும் ஜீன்சுக்கும் இடைவெளியில் பளீர் எனத் தேகம் தெரிய, கூடவே அவள் அணிந்திருந்த பேன்ட்டீஸின் லேபிளும் எட்டிப் பார்த்தது. தோள்பட்டையிலும் இடுப்பிலும் டாட்டூஸ் மின்னல்கள். சிக்னலில் நின்ற வாகனங்களின் கண்கள் அந்தப் பெண்ணையே மொய்த்தன. பச்சை சிக்னல் விழுந்து சில விநாடிகள் கழித்துத்தான் சக்கரங்கள் சுழலவே ஆரம்பித்தன. இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.
 
இன்னொரு சம்பவம். 'தனது அப்பா மீது ரொம்பப் பாசமுடையவன் சதீஷ். அவனின் திருமணத்துக்குப் பிறகு அப்பா ஏனோ மகனிடம் அதிகம் பேசுவதில்லை. மருமகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வீட்டைவிட வெளியில் இருப்பதையே விரும்பினார். சதீசுக்கு அப்பாவின் மனநிலை குறித்து சந்தேகம். தனியாக விசாரித்தபோது, அப்பா சொன்னார்: ''எப்படிச் சொல்றதுன்னு தெரியலைப்பா. உன் அம்மா செத்து இருபது வருஷமாச்சுப்பா. நான் ரொம்ப யோக்கியமாவே வாழ்ந்துட்டேன். உன் வொய்ஃப் எப்பப் பார்த்தாலும் நைட்டியிலயே திரியுது. அது ரொம்ப ஸ்டைலா வளர்ந்த பொண்ணு போல. எனக்குத்தான் மனசுக்கு ரொம்பக் கூச்சமா இருக்குப்பா!'' என்றார். அப்பா இப்போது இருப்பது முதியோர் இல்லத்தில்.

'இந்தியா சுதந்திர நாடு. நாங்கள் சுதந்திரப் பிரஜைகள். நாங்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்துவோம்' என்பது சரிதான். ஆனால், அதற்கு ஓர் எல்லை உண்டு. எங்களுக்கு இது வசதியாக இருக்கிறது என்று உடுத்துவது எதையும் யாரும் மறுக்க மாட்டார்கள். கட்டுப்பாடு, கலாசாரம் என்றிருந்த நம் வீடுகளுக்குள் நம் வீட்டுப் பெண்களின் விருப்ப உடைகளான சுடி தார், நைட்டி, ஜீன்ஸ் என எல்லாம் உள்ளே அனுமதித்தோமே... அதுதான் மனப் பக்குவம்.
ஆனால், நாகரிகம் என்ற பெயரில் ஒரு சிலர் இப்படி அரைகுறையாக ஆபாசமாக ஆடை உடுத்துவது, மற்றவர்களின் கவனம் ஈர்ப்பதற்காக. இந்த மனநிலைக்கு 'attention drawing behaviour'என்று பெயர். பத்து பேரின் கவனத்தை ஈர்த்தேன் என்று கர்வம்கொள்ளும் அதே நேரத்தில், பத்து பேரின் தவறான அபிப்ராயத்தையும் சம்பாதிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். எதைக் கொடுக்கிறோமோ,அது தான் திரும்பக் கிடைக்கும். யாரும் அரை குறை உடையுடன் கோயிலுக்குப் போவது இல்லையே. நேர்முகத் தேர்வு என்றால், ஃபார்மல் டிரெஸ். திருமணம் என்றால் பட்டுப்புடவை என எல்லாவற்றுக்கும் முறை ஒன்று இருக்கிறது. பொது இடங்களுக்கு வரும்போது மட்டும் ஏன் அரைகுறையாக உடுத்த வேண்டும்?
நாகரிகம் என்கிற பெயரில் இப்படியெல்லாம் பெண்கள் ஆடை உடுத்துவதற்கு மனப் பக்குவம் இல்லாததே காரணம். மனப் பக்குவம் இருக்கிற எவரும் இப்படி உடுத்த மாட்டார்கள்!

நன்றிங்க - இந்தவார ஆனந்த விகடனில் டாக்டர் டி. நாராயண ரெட்டி

முன்னேற்றம் என்ற போர்வையில் பண்பாட்டுக் கலாச்சாரத்துக்கு வேட்டு வைத்து, முன்னோர்கள் பின்பற்றியொழுகிய நற்பண்புகளும் நடமுறைப் பழக்கவழக்கங்களும் பின்பற்றத் தகுதியற்றவையாக புறக்கணிப்பட்டு ''சுதந்திரம்'' எனும் பெயரில் மறைக்கப்பட வேண்டிய பெண்கள் எதற்கெடுத்தாலும் சமநிலை முழக்கத்தோடு உடை சுதந்திரத்தைக் கையிலெடுத்துள்ளனர். புதியவை நல்லவையென்றும் பழையவை காலங்கடந்தவையென்றும் நிர்வாண நாகரீகத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றனர் பெண்கள்.

முன்னேற்றம் எல்லாக் காலங்களிலும் ஏற்படுவது தான். அதில் நடுநிலையைக் கைவிடும் போதுதான் குழப்பங்களும் சர்ச்சைகளும் ஏற்படுகின்றன. சதீஷின் அப்பா ஒழுக்கமுள்ளவர் அதனால் அரை குறை உடையில் காட்சி தரும் மருமகளிடமிருந்து ஒதுங்கிக்கொண்டார். ஒழுக்கமுடன் இருந்தாலும் அரை குறை ஆபாச உடையால் கவனத்தை ஈர்த்து சபலத்தை ஏற்படுத்துவதால் சில குடும்பங்களில் மருமகள் மாமனாரால் பலவந்தப்படுத்தும் அவலமும் அங்காங்கே நிகழ்கிறது.

நம்மைச் சுற்றி எல்லாரும் நம்மையே கவனிக்க வேண்டும் என்று மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கவர்ச்சியாக உடை உடுத்தும் பெண்கள் - நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். அரை குறை ஆபாச உடைகளால் அபாயம் பெண்களுக்குத்தான். பெண்மைக்கு பெண்களே எதிரியாக இருக்கின்றனர் இதை கவனத்தில் வைத்து உங்கள் ஆடை சுதந்திரத்தைப் பேணிக்கொள்ளுங்கள்!

ஜனநாயக நாடகம்.


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், "இந்திய அமைதிப் படையினரால் ஈழத்தில் கொல்லப் பட்டதாக" தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை அவரே படித்தார். அவர் மரணமடைந்த செய்தியை அவரே படித்துக் கொண்டிருப்பதை நக்கீரன் இதழ் அட்டைப் படத்தில் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

தம்மைக் "காவல் துறை வலைவீசித் தேடி" வருவதாக அன்று காலைச் செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழை அதே மாலையில் சென்னை மண்ணடியில் மாநகரக் காவல் துறை ஆணையரது அனுமதி பெற்று, நூற்றுக் கணக்கான காவலர்களின் பாதுகாப்போடு நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பழனி பாபா படித்துக் காட்டினார்.

இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களது பெயர், முகவரி, புகைப்படம் அனைத்தும் அச்சு ஊடகங்களிலும் தொலைக் காட்சியிலும், "தீவிரவாதி கைது!" என்ற தலைப்புச் செய்தியோடு வெளிவந்தால் நீங்கள் சிரிப்பீர்களா? அழுவீர்களா?

கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த இஸ்மாயீலுக்கு அதுதான் நடந்தது.

கடந்த 29 ஜூலை 2008 செவ்வாய்க்கிழமை "பெங்களூர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி காவல்துறையின் பிடியில்" என்ற கைரளி மக்கள் தொலைக் காட்சிச் செய்தியை அதே இஸ்மாயீல் தன் குடும்ப சகிதம் தன் வீட்டில் அமர்ந்து தன் வீட்டிலுள்ள தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறார்.

அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?

மறுநாள் 30 ஜூலை 2008 புதன்கிழமை அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் செய்தியனுப்பி, தன் மனைவி, குழந்தைகள் சகிதம், "நிம்மதியாக வாழ முடியவில்லை; வீட்டில் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியவில்லை. நிம்மதியான வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்" என்ற கோரிக்கையோடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்சியளித்தார்.

இவ்வாறு அவர் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் கூட்டி அறிவித்ததற்கு அடிப்படைக் காரணம் உண்டு.

கைரளி மக்கள் தொலைக் காட்சியின் "கைது"ச் செய்தியை உண்மையா பொய்யா என்று விசாரிக்காமல் அச்செய்திக்குக் கண்ணும் காதும் வைத்துத் தன்னை தீவிரவாதியாகவே சித்தரித்து விட்ட, ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான நாளிதழ்கள் - கேரளத்தை ஆளும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஊதுகுழலான 'தேசாபிமானி' உட்பட அனைத்து நாளிதழ்கள் - மீதும் தன் உள்ளக் குமுறலை அவர் கொட்ட வேண்டியிருந்தது.

எர்ணாகுளம் பத்திரிகையாளர் மன்றத்தில், காவல்துறை தன்னைத் தீவிரவாதியாக்கியக் கதையையும் பத்திரிகைகள் பொய் செய்திகளைப் பரப்பித் தன்னை அவமானப் படுத்தியதையும் அவர் விவரித்தார்.

"கடந்த செவ்வாய்கிழமை இரவு வீட்டில் இருக்கும்போது கைரளி பீப்பிள்ஸ் தொலைக் காட்சியில் என்னை பெங்களூர் காவல்துறை கைது செய்து, கஸ்டடியில் எடுத்திருப்பதாகச் சொன்ன செய்தியினைப் பார்த்தேன். அதைத் தொடர்ந்து மறுநாள் புதன்கிழமை ஜென்மபூமி உட்பட பல முக்கிய பத்திரிகைகளும் நான் பெங்களூர் காவல்துறையில் பிடியில் உள்ளதாகச் செய்தி வெளியிட்டன. அவர்களைத் தொடர்பு கொண்டு, அச்செய்தி பொய் என நான் தெரிவித்த பின்னரும் எந்தப் பத்திரிகையும் என்னைப் பற்றிய அவதூறுச் செய்தியைத் திருத்தவோ வருத்தம் தெரிவிக்கவோ முன்வரவில்லை. எனவே உண்மையை வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்ட முயன்றேன்" எனக் கூறும் பொழுது இஸ்மாயீலின் முகத்தில் அநியாயமாகப் பாதிக்கப்பட்டவனின் வேதனை தெரிந்தது.

1990இல் கேரள மாநிலக் காவல்துறையில் இணைந்த பெரும்பாவூரைச் சேர்ந்த இஸ்மாயீல், காவல்துறையில் சிறப்புக் கமாண்டோ பயிற்சி பெற்றவர்.

அப்துல் நாசர் மஅதனியைக் கொலை செய்யும் நோக்கோடு அவர் மீது சங் பரிவாரத்தினரால் வீசப் பட்ட வெடி குண்டு வெடித்து, அவர் ஒரு காலை இழந்த பின்னர், 1992இல் மஅதனியின் சுய பாதுகாப்புக்காக அவர் உருவாக்கிய 'பூனப் படை'யினருக்கு இஸ்மாயீல் பயிற்சி அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததுதான் அவர் எதிர் கொள்ளும் தொல்லைகளின் தொடக்கம். தம் மீது தனிப்பட்ட முறையில் விரோதம் கொண்டிருந்த சகப்பணியாளர்களில் சிலரே இத்தகையப் பொய்க் குற்றச்சாட்டுகளைத் தொடங்கி வைத்தவர்கள் என அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இவர் மீது விசாரணை நடத்திய பொழுது அக்குற்றச்சாட்டு பொய்யானது எனத் தெளிவானது.

அதன் பின்னரும் அவர் காவல்துறை பணியில் இருந்து கொண்டே தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாகப் பல பொய்க் குற்றச்சாட்டுகள் எழும்பியிருந்தன. இதனால் எதிர்கொள்ள வேண்டி வந்த பல விசாரணைகளில் மனம் வெறுத்துப் பணிக்குத் தொடர்ச்சியாகச் செல்ல இயலாமல் இருந்தார். அதைக் காரணம் காட்டி, 1996இல் இஸ்மாயீல் காவல்துறை பணியிலிருந்து நீக்கம் செய்யப் பட்டார்.

"காவல்துறை பணியிலிருந்து மனரீதியாகத் என்னைக் கொடுமைப் படுத்தி வெளியேற்றியவர்கள்தான் இப்பொழுதும் எங்காவது எந்தக் குற்றச் செயல் நடந்தாலும் அதற்கும் எனக்கும் எந்தவித முகாந்திரமோ தொடர்பு ஆதாரமோ இல்லா விட்டாலும் அதனுடன் என்னைத் தொடர்பு படுத்தி, மேன்மேலும் கொடுமைப் படுத்த முயல்கின்றனர்" என்று காவல்துறையின் 'லின்க்' கொடுக்கும் தந்திரத்தை அம்பலப் படுத்தி குற்றம் சுமத்துகிறார் இஸ்மாயீல்.

காவல்துறை பணியிலிருந்து வெளியேறிய பின்னர் கேரளத்தில் என்ன சம்பவம் நடைபெற்றாலும் காவல்துறை தம்மைத் தேடி வருவது வழக்கமாகவே ஆகி இருந்தது என்று இஸ்மாயீல் நினைவு கூர்ந்தார். காலடி என்ற ஊரில் மக்கள் ஜனநாயக் கட்சி அணிவகுப்பில் நடைபெற்றத் தாக்குதலில் தம்மைக் காவல்துறை அநியாயமாக எதிரியாகச் சேர்த்து வழக்குத் தொடுத்து, தற்பொழுது அவ்வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

புல்வெளி என்ற ஊரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேருந்துகளைத் தீயிட்ட வழக்கிலும் இஸ்மாயீல் எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். வீட்டில் இருந்த தம்மை அநியாயமாகப் பிடித்துக் கொண்டு போய் இவ்வழக்கில் சேர்த்தக் காவல்துறை, வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமது மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று பஸ் எரிக்கப்பட்ட புல்வெளியில் கொண்டு போய் போட்டு, பொய் ஆதாரங்களை உருவாக்கியது என்றும் பின்னர் இவ்வழக்குப் புனையப் பட்டது என நீதிமன்றம் தீர்ப்பளித்துத் தம்மை விடுவித்ததையும் விளக்கினார்.

இதே போன்று களமச்சேரி என்ற ஊரிலும் தமிழ்நாட்டுப் பேருந்து ஒன்றைத் தீயிட்ட வழக்கிலும் ஈ.கே.நாயனாரைக் கொல்ல முயன்றதாகப் புனையப் பட்ட வழக்கிலும் தம்மைக் காவல்துறை இணைக்க முயன்றதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த நாட்களில், "பெங்களூர் குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக ஊடகங்களில் செய்தி வந்த பின்னர் என்னைக் காவல்துறை தொடர்ந்து தொலைபேசியிலும் நேரிலும் தொந்தரவு செய்து வருகின்றது. பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி பொய்ச் செய்தி; நான் வீட்டில்தான் இருக்கின்றேன் என்ற விவரத்தை அறிவித்தப் பின்னரும் எந்த ஊடகமும் அதனை வெளியிட்டு நடந்த தவறில் திருத்தம் வெளியிட முன்வரவில்லை. காவல்துறையும் ஊடகங்களில் சிலவும் என்னைக் குறி வைத்துத் தொடர்ந்து செய்யும் இத்தகைய தொந்தரவுகளால் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ இயலா நிலை ஏற்பட்டுள்ளது. தயவு செய்து என்னையும் என் குடும்பத்தையும் நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டும்" என அவர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வேதனையுடன் கோரிக்கை வைத்தார்.

ஜனநாயகத் தூண்கள் இரண்டும் சேர்ந்து இஸ்மாயீலுடைய வேதனையைப் போக்குமா?

அதிரடிப்படை வீரராகப் பணியாற்றிய கமாண்டோ இஸ்மாயீலுக்கே இந்த கதி என்றால், "தீவிரவாதிகள் உருவாகக் காரண கர்த்தாக்கள் காவல் துறையும் ஊடகங்களும்தாம்" என்ற பரவலான குற்றச் சாட்டில் உண்மை இருப்பதாகவே கருத வேண்டியதுள்ளது.

ஜனநாயகத் தூண்கள் இரண்டும் தம் மீது படிந்துள்ள கறைகளை நீக்குமா?

காத்திருப்போம்!

நன்றிங்க

Friday, April 25, 2008

இது என்ன புதுசா?

கொட நாடு: சட்டசபையில் காங்-அதிமுக கடும் மோதல், கைகலப்பு தவிர்ப்பு!

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 25, 2008

சென்னை: சட்டசபையில் இன்று அதிமுக-காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடித்துக் கொள்ளும் நிலை உருவானது. நல்லவேளையாக கைகலப்பு ஏதும் நடக்கவில்லை.

தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கோவை தங்கம், வால்பாறை டீ எஸ்டேட் தொழிலாளர்களின நிலைமை குறித்துப் பேசினார். அப்போது ஜெயலலிதா-சசிகலாவுக்கு சொந்தமாகக் கூறப்படும் எஸ்டேட் அமைந்துள்ள கொட நாடு குறித்தும் பேசினார்.

அவர் கூறுகையில், வால்பாறை டீ எஸ்டேட் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக குறைந்தது ரூ. 100 கோரி அதிமுக போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இது நல்ல அறிவிப்பு. அதை நான் வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் கொட நாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் இதே அளவுக்கு ஊதியம் கோருவீர்களா என்றார்.

இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தங்கம் பேசியவை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கத்தினர்.

பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் திமுகவினரும் குரல் தந்தனர். இதனால் யார் என்ன பேசுகிறார்களே என்பது புரியாத அளவுக்கு குழப்பம் நிலவியது.

இரு தரப்பினரையும் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் விடுத்த வேண்டுகோள்கள் பலனளிக்கவில்லை.

அதிமுகவினரும்-காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒருவரை நோக்கி ஒருவர் விரல்களை நீட்டியடி கோபத்துடன் பேசினர். இரு தரப்பினரையும் பாமக எம்எல்ஏக்கள் அமைதிப்படுத்த முயன்றனர்.

அதே போல காங்கிரஸ் மூத்த எம்எல்ஏக்களான பீட்டர் அல்போன்ஸ், சுந்தரம் ஆகியோர் தங்கள் தரப்பினரை அமைதிப்படுத்தினர்.

அப்போது பின் வரிசையில் அமர்ந்திருந்த அதிமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமனும், சேகர் பாபுவும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை நோக்கி அடிக்கப் பாய்வது போல வேகமாக வந்தனர். பதிலுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அவர்களை நோக்கி முன்னேற நிலைமை மோசமானது.

இந் நிலையில் எழுந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் உறுப்பினர் என்ன சொன்னார். கொட நாடு எஸ்டேட் தொழிலாளர்களுக்கும் ரூ. 100 ஊதியம் தரப்படுமா என்று தானே கேட்டார் என்றார்.

இதற்கு பதிலளித்த அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், கொட நாடு என்ற வார்த்தையை வேண்டுமென்றே அவர் பயன்படுத்தியுள்ளார். அதன் பி்ன்னணியில் வேறு அர்த்தம் உள்ளது. எனவே அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்றார்.

அப்போது இடைமறித்த சபாநாயகர் ஆவுடையப்பன், கொட நாடு என்று சொல்வது மரபு தவறிய வார்த்தை அல்ல. இதனால் அதை நீக்க முடியாது என்றார்.

இதையடுத்து மீண்டும் கூச்சலிட்ட அதிமுகவினர் சிறிது நேரத்தில் அமைதியாயினர். இதைத் தொடர்ந்து கோவைத் தங்கம் தொடர்ந்து பேசிவிட்டே அமர்ந்தார்.

நன்றிங்க

//அதே நேரத்தில் கொட நாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் இதே அளவுக்கு ஊதியம் கோருவீர்களா என்றார்.//

ஒரு வாசகம் என்றாலும் திரு வாசகம் அல்லவா!

ஜெயாக்காவிடம் தங்கம் கேட்டது நியாயந்தானே, என்ன நாஞ்சொல்றது?

Tuesday, April 08, 2008

வந்தார்! சென்றார்!!

சட்டசபைக்கு வந்தார் ஜெ.-வெளிநடப்பு

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 8, 2008

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று சட்டசபைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, சிறப்பு கவன ஈர்ப்புதீர்மானம் ஒன்றை விவாதிக்க அனுமதி கோரினார். அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்து வெளியேறினார்.

இன்று காலை சட்டசபை கூடியதும் சட்டசபைக்கு ஜெயலலிதா வருகை தந்தார். அவரை ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் திரளாக கூடி வரவேற்று அழைத்துச் சென்றனர்.

உள்ளே சென்றும் ஜெயலலிதா ஒரு சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எழுப்பினார். அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

இதையடுத்து அதிமுக வெளிநடப்பு செய்வதாக தெரிவித்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசினார். அப்போது கூறுகையில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தமிழக மக்களின் 40 ஆண்டு கால கனவுத் திட்டமாகும். காமராஜர் ஆட்சிக்காலத்திலும், பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலும், பிறகு எனது ஆட்சிக்காலத்திலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது.

கடந்த 27ம் தேதி சட்டசபையில் இதுதொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல்வர் கருணாநிதி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இந்த நிலையில் அமைச்சரவையைக் கூட்டாமலேயே, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தையும் கூட்டாமல், தன்னிச்சையாக இத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். இது கண்டனத்துக்குரியது.

கர்நாடக தேர்தலுக்கும், ஓகனேக்கலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இப்படிப்பட்ட முடிவை எடுத்ததற்காக முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா.

அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

நன்றிங்க

//ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தமிழக மக்களின் 40 ஆண்டு கால கனவுத் திட்டமாகும். காமராஜர் ஆட்சிக்காலத்திலும், பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலும், பிறகு எனது ஆட்சிக்காலத்திலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது.//

எல்லாருடைய ஆட்சிக்காலத்திலும் ''முயற்சி'' மட்டுந்தாங்க எடுக்கப்படும்.

ஜெயாக்காவே மறுபடியும் ஆட்சிக்கு வந்தாலும் ''முயற்சி'' தான் எடுப்பாங்க...!

அமல்படுத்துவது... ம்ஹும்,

Saturday, April 05, 2008

என்ன ஒரு தைரியம்...!

திமுகவுக்கு அதிமுக எம்எல்ஏ பாராட்டு!-'ஆப்பு' எப்போது?

சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2008

மானாமதுரை: திமுக அரசை அதிமுக எம்எல்ஏ புகழ்ந்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை (தனி) அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் குணசேகரன். இவர் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அப்போது திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் அந்த விழாவிற்கு வந்திருந்தனர்.

விழாவில் குணசேகரன் பேசுகையில் இன்றைய அரசு மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு செயல்படுகிறது. மாணவர்களை உயர் கல்விக்கு அனுப்பும் செயலில் வேகமாக உள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வர வேண்டும் என்பதற்காக சைக்கிள் வழங்கியுள்ளது. அதே போன்று இன்றைய முதல்வர் மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கல்விக்கு ஒரு அமைச்சரை தான் நியமித்தனர். ஆனால் இன்றைய தமிழக முதலவர் கல்வி துறையை இரண்டாக பிரித்து இரு அமைச்சரை நியமித்துள்ளார்.

இதன் மூலம் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை நினைவாக்கியுள்ளார் தமிழக முதல்வர் என்று பேசினார்.

இந்த பேச்சை கேட்ட அதிமுக வினர் அதிர்ச்சி அடைந்து எம்எல்ஏவின் இந்த பேச்சு குறித்து தங்களது தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர். விரைவில் அவர் அதிமுகவில் கட்டம் கட்டப்படுவார் என்று தெரிகிறது.

இப்படித்தான் மறைந்த மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ எஸ்.வி.சண்முகம் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார். பின்னர் கட்சியை விட்டு அவர் ஓரம் கட்டப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

நன்றிங்க

அதிமுகவில் யாருக்கும் அட்டாக் வரலயா...?

Saturday, March 29, 2008

உண்மை பேசத் தெரியாத அத்வானி!

அத்வானி சொல்வது உண்மையில்லை-பெர்னான்டஸ்

சனிக்கிழமை, மார்ச் 29, 2008

டெல்லி: காந்தஹார் விமானக் கடத்தலின்போது தீவிரவாதிகளுடன் ஜஸ்வந்த் சிங் ஆப்கானிஸ்தான் சென்றது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு அதுகுறித்து தெரிவிக்கப்படவில்லை என்று அத்வானி கூறியுள்ளது தவறு. அனைத்து அமைச்சர்களும் கூடித்தான் அதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது என்று அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

மை கன்ட்ரி, மை லைப் என்ற பெயரில் அத்வானி புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் அத்வானி பல்வேறு முக்கிய சம்பவங்களை வர்ணித்துள்ளார். இது பல்வேறு சர்ச்சைசகளை எழுப்பி வருகிறது. பாஜகவுக்குள்ளும் இது புயலைக் கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் காந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பாக அத்வானி கூறியுள்ள கருத்துக்களுக்கு அப்போதைய வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

காந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பாக அத்வானி கூறியுள்ள கருத்து இதுதான்: ஐ.சி.814 விமானத்தில் கடத்தப்பட்ட 189 பயணிகளை மீட்பதற்கு, இந்திய சிறையில் உள்ள பயங்கரவாதிகளை ஒப்படைக்க எடுக்கப்பட்ட முடிவின் படி, பயங்கரவாதிகளுடன் ஜஸ்வந்த் சிங் செல்வார் என்பது எனக்கு தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் ஜஸ்வந்த் சிங்கை அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் அத்வானி.

பெர்னாண்டஸ் மறுப்பு:

இதை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து பெர்னாண்டஸ் கூறுகையில்,

பயங்கரவாதிகளை விடுவிப்பது, காந்தகாருக்கு தனி விமானம் அனுப்புவது, அதில் ஜஸ்வந்த் சிங் செல்வது ஆகிய அனைத்தும், அனைத்து அமைச்சர்களும் இடம் பெற்ற கூட்டத்தில் தான் முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் அத்வானியும் இடம் பெற்றிருந்தார்.

பயங்கரவாதிகளை ஏற்றிச் சென்ற விமானம், முதலில் அமிர்தசரஸ் சென்று, அதன் பின், காந்தகாருக்கு சென்றது. இந்த முடிவு, ஒட்டு மொத்த அமைச்சரவையின் ஒருமித்த முடிவு தான் என்று அவர் கூறியுள்ளார்.

பி.சி.கந்தூரியும் மறுப்பு:

இதே போல, வாஜ்பாய் அமைச்சரவையில் சாலை போக்குவரத்து மற்றும்
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய உத்தரகண்ட் முதல்வருமான பி.சி.கந்தூரியும், அத்வானியின் கருத்தை மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், பயங்கரவாதிகளை விடுவிக்கும் ஆலோசனைக்கு தான் சம்மதிக்காததாக அத்வானி கூறியிருப்பது தவறு. அப்போதைய சிக்கலான சூழ்நிலையில், பல்வேறு சாதக, பாதகங்களை முழுமையாக ஆராய்ந்து தான், அமைச்சரவை கூட்டத்தில், பயங்கரவாதிகளை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதில், எவை தவறு என்றும், எவை சரியானவை என்றும் பாகுபடுத்தி பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

நன்றிங்க

என்னிக்குத்தான் அத்வானி உண்மை பேசுவாரோ...?

Thursday, February 14, 2008

சத்தியம் இது சத்தியம் (!?)

எம்ஜிஆர் என்னிடம் சத்தியம் வாங்கினார்-ஜெ திடீர் தகவல்

வியாழக்கிழமை, பிப்ரவரி 14, 2008

சென்னை:எம்.ஜி.ஆர். மறைவதற்கு முன் தன்னிடம் அதிமுகவையும் தொண்டர்களையும் நீ காப்பாற்ற வேண்டும் என்றும், எந்த சோதனை வந்தாலும், அவர்களுக்கு நீ துணையாக இருக்க வேண்டும் என்றும் சத்தியம் வாங்கியதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதாவது:

அதிமுகவின் செல்வாக்கு இம்மியளவு கூட குறையவில்லை. இன்று நிதர்சனமான உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டில் அதிமுக என்ற பெயரைச் சொல்லாமல், ஜெயலலிதா என்ற பெயரைச் சொல்லாமல் யாராலும் அரசியல் நடத்த முடியாது. அது பழைய கட்சியாக இருந்தாலும் சரி, காளான்கள் போல் முளைக்கும் சிறிய புதிய கட்சிகளாக இருந்தாலும் சரி, ஜெயலலிதா என்ற பெயரைச் சொல்லாமல் அரசியல் நடத்தச் சொல்லுங்கள் பார்ப்போம்.

அண்மையில் நடந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 9 தீர்மானங்கள் என்னை பற்றிதான். அவர்கள் ஆட்சியில் இருக்கலாம். நாம் ஆட்சியில் இல்லாத நம்மை கண்டு அவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.

எதிர்காலம் உள்ள ஒரே அரசியல் கட்சி அதிமுக தான். மகத்தான ஒளிமயமான எதிர்காலம் உள்ள ஒரே கட்சி அதிமுக தான். இன்னும் சில காலத்தில் பழைய கட்சிகள் எல்லாம் சுக்கு நூறாகி விடும். காளான் போன்று முளைத்த புதிய கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

ஒவ்வொரு கலாசாரத்துக்கும் ஒரு புராணம் உண்டு. கதைகள் வேறாக இருந்தாலும் அடிப்படை கருத்து ஒன்று தான். நன்மையும், தீமையும் மோதும்போது நன்மை வெற்றி பெறும் என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கும். ராமாயணத்தில் ராமபிரான், ராவணன் என்ற ராட்சதனை வென்றதாக சொல்லப்பட்டிருக்கிறது.

ராமனும்.. ராவணனும்..:

வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமன் 14 ஆண்டுகள் காட்டில் இருந்தான். ஆனால் புதிய ராமாயணத்தில் எம்.ஜி.ஆர். என்ற ராமன், ராவணனை (கருணாநிதி) 13 ஆண்டுகள் வனவாசம் அனுப்பினார்.

ஏதோ விதியின் விளையாட்டு என்றும் சொல்லலாம். அரசியல் விபத்து என்றும் சொல்லலாம். நம்முடைய ராமர் பிரான் சென்ற பிறகு எப்படியோ அதே ராவணன் மீண்டும் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டார்.

ராமபிரானின் சீடர்களாகிய நாம் தொடர்ந்து அதே ராவணனை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறோம். மிக விரைவில் நமக்கு வெற்றி கிடைக்கும். தீய சக்திகள் வீழ்த்தப்படும். 3 முறை முதலமைச்சர் ஆகி இருக்கிறேன். 3 முறை எனது தலைமையில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதுவெல்லாம் மகத்தான சாதனை.

நான் ஆடம்பரங்களை விரும்புவதில்லை!!!!:

நமது வரலாறு முடியவில்லை. நீண்ட அற்புதமான எதிர்காலம் காத்திருக்கிறது. பிரம்மாண்டமான வெற்றி பெறப் போகிறோம். சுய நலம் இல்லாமல் அதிமுக மட்டும் தான் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.

எனது 60வது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னார்கள். இதற்கு நன்றி கூறுகிறேன். எனது பிறந்த நாளை எப்போதுமே நான் கொண்டாட விரும்புவதில்லை. தொண்டர்களின் மகிழ்ச்சிக்காக கொண்டாடுகிறார்கள். எனது பிறந்த நாளை எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டாட வேண்டும். வீண் ஆடம்பரம் கூடாது.

சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு ஒரு விழா கொண்டாடப்பட்டது. அதற்கு ஆடம்பரமாக மின் விளக்கு போட்டு மின்சாரத்தை வீணாக செலவு செய்தார்கள். இதைப் பற்றி நான் அறிக்கை வெளியிட்டவுடன் கருணாநிதி ஆடம்பரம் வேண்டாம் என்று அறிக்கை விடுகிறார்.

இது காலம் கடந்த ஞானோதயம், எல்லா ஆடம்பரங்களையும் செய்து விட்டு இப்போது ஆடம்பரம் வேண்டாம் என்று சொல்வதை கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். இந்த ஆட்சியை கண்டு மக்கள் வெறுத்து விட்டார்கள். தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுகவுக்கு சாதகமாக ஓட்டுப் போட தயாராகி விட்டார்கள்.

எம்ஜிஆர் வாங்கிய சத்தியம்!!!:

புரட்சித் தலைவர் மறையும் முன்பு என்னிடம் கூறினார். எனக்கு நீ ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். என்ன என்று கேட்டேன். என் மறைவுக்கு பிறகு எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த காரணத்தை முன்னிட்டும் எவ்வளவு சோதனை வந்தாலும் எவ்வளவு துன்பம் வந்தாலும் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், நீ என்னுடைய கழக தொண்டர்களை விட்டு போகக்கூடாது. எனது கழகத் தொண்டர்களுக்கு நீ துணையாக இருக்க வேண்டும். அவர்கள் உனக்குத் துணையாக இருப்பார்கள் என்று கூறினார்.

இன்று வரை புரட்சித் தலைவருக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் இங்கே நின்று கொண்டு இருக்கிறேன். உங்களுடைய பொதுச் செயலாளராக நான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

அவருக்கு செய்த சத்தியத்தின்படி தான் நான் இந்த கழகத்தை காத்து வருகிறேன்.

எனக்கு சுய நல நோக்கம் கிடையாது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு என்னென்ன நன்மை செய்ய முடியுமோ அவற்றை செய்துவிட்டுப் போகலாம் என்ற சிந்தனையோடு செயல்பட்டுக்கொண்டு இருக்கின்ற ஒரே தலைவர் நான்தான். மக்கள் அதை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டார்கள்.

தாயைப் போல....:

அதிமுக ஆட்சி நடந்தபோது ஒரு தாயைப் போல் இந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு அவற்றை நிறைவேற்றினேன். ஏதோ ஒரு விபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. மக்களுக்கு இப்போது உண்மை புரிந்து விட்டது. மக்கள் நம்மை ஆதரிக்க தயாராகி விட்டார்கள்.

இந்தியாவை ஆள்வோம்..:

எனவே நிச்சயம் மீண்டும் மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வருவோம். தமிழ்நாட்டை ஆளுவோம். அதுமட்டும் அல்ல இந்தியாவையும் ஆளுவோம்.

தமிழுக்காக பாடுபட்ட ஜெயலலிதா!!

பொதுக் குழுவில் அன்னை தமிழ் காக்க ஜெயலலிதா பல முயற்சிகளை எடுத்துள்ளார் என்றும் அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக் குழுவில் பங்கேற்க வந்த ஜெயலலிதாவை அலங்கரிக்கப்பட்ட குதிரைகள்,யானைகளில் தொண்டர்கள் அதிமுக கொடியேந்தி அணிவகுத்து வரவேற்றனர். தாரை தப்பட்டை, பொய்க்கால் குதிரை, கிராமிய நடனங்களுடன் வானகரம் மெயின் ரோட்டில் இருந்து மண்டபம் வரை ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

போயஸ் தோட்டத்தில் ஆரம்பித்து வழியெங்கும் அதிமுக கொடி, தோரணங்கள், வரவேற்பு பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.

ஆனால், ஜெயலலிதா ஆடம்பரங்களை சுத்தமாகவே விரும்புவதில்லை!

நன்றிங்க

//எம்ஜிஆர் வாங்கிய சத்தியம்!!!://

மரணித்தவர் மீது என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஏன்னா செத்தவர் எழுந்து வந்து மறுக்கவா போகிறார்!

//போயஸ் தோட்டத்தில் ஆரம்பித்து வழியெங்கும் அதிமுக கொடி, தோரணங்கள், வரவேற்பு பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.//

//ஆனால், ஜெயலலிதா ஆடம்பரங்களை சுத்தமாகவே விரும்புவதில்லை!//

அடடா....!

Friday, December 28, 2007

பெனாசிர் 'இ-மெயில்'

நான் இறந்தால் முஷாரப்பே பொறுப்பு: பெனாசிர் 'இ-மெயில்'

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 28, 2007

வாஷிங்டன்: நான் ஒருவேளை கொல்லப்பட்டால் அதற்கு முஷாரப்தான் காரணமாக இருக்க முடியும். பாதுகாப்பற்ற நிலைக்கு என்னைத் தள்ளியுள்ளார் முஷாரப் என்று மரணத்திற்கு முன்பு பெனாசிர் பூட்டோ அனுப்பிய இமெயில் தகவல் வெளியாகியுள்ளது.

ரால்பிண்டியில் நேற்று நடந்த பயங்கர தாக்குதலில் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் திரும்பிய பின்னர் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு அக்டோபர் 26ம் தேதி பூட்டோ அனுப்பிய ஒரு இ மெயில் வெளியாகியுள்ளது.

இந்த இ மெயிலில் தான் ஒருவேளை பாகிஸ்தானில் கொல்லப்பட்டால் அதற்கு முஷாரப்தான் பொறுப்பாவார் என்று கூறியுள்ளார் பெனாசிர்.

இந்த இ மெயிலை தனது அமெரிக்க செய்தித் தொடர்பாளரும், ஆலோசகருமான மார்க் சீகலுக்கு அனுப்பியுள்ளார் பெனாசிர். அந்த மெயிலில் நான் பாகிஸ்தானில் ஒருவேளை கொல்லப்பட்டால் அதற்கு முஷாரப்தான் காரணம் என பெனாசிர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் தற்கொலைப்படைத் தாக்குதலுக்குப் பிறகு எனக்கு கூடுதல் பாதுகாப்பு தருமாறு நான் கோரியும் கூட முஷாரப் அரசு அதை ஏற்கவில்லை. இதுவரை எனது உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எது நடந்தாலும் கடவுள் விருப்பப்படியே நடக்கட்டும்.

எனக்கு எது நடந்தாலும் அதற்கு முஷாரப்தான் பொறுப்பாவார். அவரது ஆட்சியில் நான் மிகவும் பாதுகாப்பற்றவளாக ஆகியுள்ளேன். எப்போதும் பயத்துனேடேய வாழும் நிலைக்கு முஷாரப் ஆட்சியாளர்கள் தள்ளியுள்ளனர் என்று கூறியுள்ளார் பெனாசிர்.

பெனாசிரின் இந்த இமெயிலை சீகல், சிஎன்என் தொலைக்காட்சியின் உல்ப் பிளிட்சருக்கு அனுப்பி வைத்திருந்தார். பூட்டோ கொல்லப்பட்டால் மட்டுமே இந்த மெயிலை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர் விதித்திருந்தார்.

பாகிஸ்தானுக்கு திரும்புவதற்கு முன்பே தனக்கு கொலை மிரட்டல்கள் இருப்பதாக சிஎன்என்னுக்கு அளித்த பேட்டியில் பெனாசிர் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் அரசில் மிகவும் உயரிய பதவியில் இருக்கும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அப்போது பெனாசிர் கூறியிருந்தார். மேலும் தனது இந்த பயத்தை வெளிப்படுத்தி முஷாரப்புக்கும் கடிதம் எழுதியிருந்தார் பெனாசிர்.

தற்போது சீகலுக்கு அனுப்பிய மெயிலில், முஷாரப்தான் தனது கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என பெனாசிர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனக்கு பாகிஸ்தானில் உள்ள தலிபான், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான், அல் கொய்தா, கராச்சியைச் ேசர்ந்த ஒரு தற்கொலைப் படை தீவிரவாத அமைப்பு ஆகியவற்றால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பெனாசிர் முன்பே கூறியிருந்தார்.

அக்டோபர் தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பிறகு தனக்கு கவச பாதுகாப்பு வாகனங்கள், செல்போன் ஜாமர் கருவிகளுடன் கூடிய பாதுகாப்பு வாகனங்கள், தனியார் பாதுகாவலர்கள் ஆகியோரைக் கொண்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி முஷாரப்புக்கு பெனாசிர் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு ஆதரவாக அமெரிக்க எம்.பிக்கள் மூன்று பேரும் முஷாரப்புக்குக் கடிதம் எழுதியிருந்தனர் என்ர தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

பெனாசிருக்கு இருந்து வந்த மிரட்டல் குறித்து முஷாரப் அரசு கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததால்தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்று சீகல் கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், கராச்சிக்கு அவர் வந்தபோது ஏற்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலின் பின்னணி குறித்து முஷாரப் அரசு சரிவர விசாரணை நடத்தவில்லை.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு மற்றும் அமெரிக்காவின் எப்.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என பெனாசிர் கோரினார். அதையும் முஷாரப் ஏற்கவில்லை.

செல்போன் குண்டுகளை தடுக்கும் வகையில், தனக்கு செல்போன் ஜாமர் வாகனம் தரப்பட வேண்டும் என்று பெனாசிர் கோரியிருந்தார். அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரியுமும் இந்தக் கோரிக்கையை வைத்திருந்தார்.

முன்னாள் பிரதமர் ஒருவருக்குரிய பாதுகாப்பை முஷாரப் அரசு தரவில்ைல என்ற ஆதங்கமும் பெனாசிரிடம் இருந்தது. ஆனால் எந்தவித அடிப்படைப் பாதுகாப்பும் பெனாசிருக்குத் தரப்படவில்லை. சாதாரண போலீஸ் பாதுகாப்பே அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவே அவரது உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார் சீகல்.

சி.என்.என். தொலைக்காட்சியைச் சேர்ந்த டான் ரிவர்ஸ் கூறுகையில், பெனாசிர் கராச்சிக்குத் திரும்பியபோதுஅந்த செய்தியை நாங்கள் சேகரித்தபோது, பாதுகாப்பு குளறுபடிகளை நேரில் காண முடிந்தது. பெனாசிர் இருந்த வாகனத்திற்கு மிக அருகே நாங்கள் செல்ல முடிந்தது. எங்களை யாரும் தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

சீகல் தொடர்ந்து கூறுகையில், அக்டோபர் தாக்குதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரைப் பயன்படுத்திக் கொள்ள காவல்துறை பெனாசிருக்கு அனுமதி அளித்தது. ஆனால் அவர் அதை நிராகரித்து விட்டார். எப்போதும் மக்களுடனேயே இருப்பதை விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் பெனாசிர். மக்களிடைேய நெருக்கமாக இருக்கவே அவர் விரும்பினார். நடந்த குற்றத்திற்கு பெனாசிர் எந்த வகையிலும் காரணமில்லை.

பெனாசிரையும், தேர்தலில் போட்டியிடும் பிற வேட்பாளர்களையும் காக்க வேண்டியது முஷாரப் அரசின் கடமையாகும்.

பெனாசிர் எப்போதும் ஜன சமுத்திரத்தின் மத்தியில்தான் இருந்தார். அதை ஜனநாயகத்ைத விரும்பும் எந்த அரசியல் தலைவராலும் தவிர்க்க முடியாது என்றார் சீகல்.
பாக். தூதர் மறுப்பு

இதற்கிடையே, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது அலி துரானி இதை மறுத்துள்ளார். பெனாசிருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

முஷாரப்பையும் குறி வைத்துக் கொண்டிருக்கும் தீவிரவாதிகள்தான், பெனாசிரையும் குறி வைத்துள்ளனர். தீவிரவாதிகள்தான் பெனாசிர் படுகொலைக்குக் காரணம்.

பெனாசிருக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு தேவையோ அனைத்தும் அளிக்கப்பட்டிருந்தது. அவர் கராச்சிக்கு வந்தபோது பெருமளவிலான போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அப்போது நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது அவர் பாதுகாப்புப் படையினர் அதிகம் இருந்ததால் உயிர் தப்பினார். இல்லாவிட்டால் அப்போதே அவர் உயிரிழந்திருக்கக் கூடும்.

தனிப்பட்ட பாதுகாவலர்களை நியமிக்கவும் பெனாசிர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் கூடவே இருந்து வந்தனர்.

பெனாசிர் பாதுகாப்புக்காக 8000 பாதுகாவலர்கள் வரை நியமிக்கப்பட்ட அவருடேனேயே இருந்து வந்தனர். உலகில் யாருக்குமே இப்படி ஒரு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதில்லை.

அவர் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்க வேண்டும். வெடிகுண்டு வைத்தோ அல்லது வாகனத்தை தகர்த்தோ கொல்லப்படவில்லை. நேருக்கு நேர் சுட்டுக் கொன்றுள்ளனர். எனவே பாதுகாப்பு குறித்த புகார்கள் எல்லாம் சரியல்ல என்றார் அவர்.

நன்றிங்க

முஷ்ராப் ஒரு குள்ள நரி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அரசியலில் யாரையும் யாரும் நம்பி இருக்கக்கூடாது, சொந்தக் காலில் நிற்க வேண்டும். பாதுகாப்பும் தன்னைத்தானே பலமாகக் காத்துக்கொள்ள வேண்டும்.

Friday, December 21, 2007

விபரமறிந்த ஆண்டி!

மக்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை: ஜெ. தாக்கு

சனிக்கிழமை, டிசம்பர் 22, 2007

சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் மக்களுக்கு உதவி செய்யவில்லை. கேட்பாரற்றுக் கிடக்கிறது தமிழகம். இங்கு ஒரு அரசாங்கம் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக இளைஞரணி மாநாடு பயங்கர அராஜகத்தோடும், அதிகார துஷ்பிரயோகத்தோடும் எவ்வளவு தீமைகளை நடத்த முடியுமோ அவ்வளவு தீமைகளோடும் நடந்து முடிந்துள்ளது.

மாநாடு என்ற பெயரில் கருணாநிதி தனது மகனுக்கு முடிசூட்ட விரும்பி நடத்தப்பட்ட இந்த மாநாடு, பெரும் தோல்வியில் முடிந்துள்ளது. மு.க.ஸ்டாலின் தான் இனி முதல்வர் அல்லது துணை முதல்வர் என்று அறிவிக்க விரும்பியே திருப்புமுனை மாநாடு என்று கூவிக்கூவி அழைத்தார்கள்.

ஆனால் கருணாநிதி குடும்பத்து அண்ணன் 'செங்குட்டுவனால்' மாநாட்டின் முடிவு முறியடிக்கப்பட்டதால் எனக்கு பிறகு ஸ்டாலின் என்று அடையாளம் காட்டும் விழாவாக மட்டுமே நடந்து முடிந்திருக்கிறது.

பேரப் பிள்ளைகளை பெற்று தாத்தாவாகி விட்ட ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த இளைஞர் மாநாடு நடத்தப்பட்டிருப்பதாக மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாநாடு என்ற பெயரில் அறுவறுக்கத்தக்க அராஜக நிகழ்ச்சிகள்தான் நடந்துள்ளன. மாநாடு நடந்த இரண்டு நாட்களும் போக்குவரத்து வசதியின்றி மக்கள் அடைந்த துன்பங்கள், வீண் ஆடம்பரம், கலாச்சார சீர்கேடுகள் ஆகியவை தான் அரங்கேறியிருக்கின்றன.

தனியார் பஸ்கள் சேதம்:

மாநாட்டுக்காக தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகள் நெல்லைக்கு வரவழைக்கப்பட்டன. அரசு பேருந்துகளும் பெருமளவில் இயக்கப்பட்டன.

இவற்றில் 186 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயங்கரமாக நாசம் செய்யப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மேலும் பல பேருந்துகள் இதுபோல நாசம் செய்யப்பட்டுள்ளாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து எதிர்க்கட்சிகளுக்குத் தெரிய வந்து பேருந்து உரிமையாளர்களிடம் புகார் தருமாறு கூறியபோது, சேதமடைந்ததற்கான இழப்பீட்டுப் பணத்தைக் கொடுத்து விட்டனர். மீறி புகார் செய்தால், பேருந்துக்கான பெர்மிட்டையே ரத்து செய்து விடுவார்கள் என்று கூறி உண்மையை மறைத்து விட்டனர்.

ஜெனரேட்டர் போட்டுதான் மின்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பெயருக்குக் கூறி விட்டு, பெரும்பாலான இடங்களில் கொக்கி போட்டுத்தான் மின்சாரத்தை எடுத்துள்ளனர்.

திமுகவினரை தங்க வைக்க பல பகுதிகளில் உள்ள பள்ளிகளின் நிர்வாகிகள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். இதனால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்.

திமுகவினர் தங்க இடம் மறுத்த காரணத்திற்காக பல பள்ளிகள் பெரும் நாசத்திற்கு ஆளாகியுள்ளன.

மழையால் மக்கள் பாதிப்பு:

நாட்டில் இன்று யாத மழை, தொடர் வெள்ளப்பெருக்கு, சாவு எண்ணிக்கை 40க்கு மேல் உயர்ந்துவிட்டது. வீடுகளை இழந்த மக்கள் தங்கும் இடம், உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றிற்கு ஆலாய் பறக்கிறார்கள்.

வீடுகளில் கழிவுநீர், வெள்ள நீர் புகுந்து அவற்றை வெளியேற்ற முடியாமல் திணறுகின்றனர். சாலைகள் சேதமடைந்து வெள்ளத்தால் பாலங்கள் உடைபட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் மக்களுக்கு உதவி செய்யவில்லை.

கேட்பாரற்று தமிழகம் கிடக்கின்றது. தமிழகத்தில் ஒரு அரசாங்கம் நடைபெறுகிறதா என்று சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. என்னுடைய ஆட்சியாக இருந்தால் இந்நேரம் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருப்பேன்.

ஓய்வெடுக்கும் ஸ்டாலின்:

ஆனால் மாநாடு நடத்திய களைப்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.லின் கேரளாவில் சுற்றுலா தலமான குமரக்கோமில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். கருணாநிதியோ டெல்லிக்குப் பறந்திருக்கிறார்.

வெள்ளப் பகுதிகளை எந்த அமைச்சரும் எட்டிப் பார்க்கவில்லை. மக்களைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை? இவர்கள் செய்கின்ற அக்கிரமங்களை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. கூடிய விரைவில் மக்கள் இவர்களை தூக்கி எறிவார்கள் என்பது திண்ணம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நன்றிங்க

நேரந்தெரிஞ்சி சங்கூதுறவன் தான் வெவரந்தெரிஞ்ச ஆண்டின்னு சொல்லுவாங்க.

தத்துப் பிள்ளைக்கு கோலகலமாக கல்யாணம் நடத்தியதை ஜெ ஆன்ட்டி மறந்திட வேண்டாம்.

நீங்க எல்லாரும் ஒரு குட்டையில் ஊறின மட்டைகள் என்பதை அப்பாவி பொது மக்கள் மறக்கவில்லை!

Wednesday, November 21, 2007

'ஓயாத' கெளடா: 'நாடகம்' தொடர்கிறது!

'ஓயாத' கெளடா: 'நாடகம்' தொடர்கிறது

புதன்கிழமை, நவம்பர் 21, 2007

பெங்களூர்: காங்கிரஸை இரு முறையும், பாஜகவை இரு முறையும் ஏமாற்றி முடித்துவிட்ட மாஜி பிரதமர் தேவெ கெளடா மீண்டும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான தரம் சிங் அரசை கவிழ்த்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் கெளடாவின் மகன் குமாரசாமி முதல்வரானார்.

ஒத்துக் கொண்டபடி 20 மாதத்தில் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் காங்கிரசுடன் கைகோர்த்து குமாரசாமியை முதல்வர் பதவியில் அமர வைக்க முயன்றார்.

காங்கிரசுடன் பேச்சுவார்ததைகள் நடந்து கொண்டிருந்தபோதே மீண்டும் பாஜகவை ஆதரித்தார் கெளடா. இதையடுத்து பாஜக தலைவர் எதியூரப்பா முதல்வரானார்.

ஆனால், ஒரே வாரத்தில் அவரைக் கவிழ்த்தார்.

இந் நிலையில் கர்நாடக சட்டசபையை கலைக்க கவர்னர் ராமேஸ்வர் தாக்கூர் கொடுத்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றது. இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அவையைக் கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந் நிலையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவளிக்கத் தயார் என மதசார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் கூறியுள்ளார்.

டெல்லிக்குப் ேபான கெளடாவும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டு காத்துக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவளிக்கத் தயார் என்பதை சோனியாவிடம் தெரிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், ஏற்கனவே கெளடாவால் ஏமாற்றப்பட்டுள்ளதால் சோனியா இதுவரை அவரை சந்திக்க முன் வரவில்லை.

கர்நாடகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்களான தரம்சிங், மல்லிகார்ஜூன கார்கே, பாட்டீல் போன்றவர்களுக்கு கெளடாவுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடிக்க ஆசை தான். ஆனால், இரண்டாம் கட்டத் தலைவர்களான சித்தராமையா, சிவக்குமார் போன்ற தீவிர கெளடா எதிர்ப்பாளர்கள் இந்த முயற்சியை எதிர்த்துள்ளனர்.

தங்களது எதிர்ப்பை நேரடியாகவே டெல்லி தலைமையிடம் தெரிவித்துவிட்டனர்.

நன்றிங்க

வெட்கங்கெட்ட ஜென்மங்கள்!

Sunday, November 18, 2007

பாஜக ஆட்சி தப்புமா?

நாளை வாக்கெடுப்பு: பாஜக ஆட்சி தப்புமா? -கெளடாவின் நிபந்தனையால் புது
சிக்கல்


ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2007

பெங்களூர்: நாளை கர்நாடக முதல்வர் எதியூரப்பா சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ள நிலையில் பாஜகவுக்கு புதிய நெருக்கடியை தந்துள்ளது மதசார்பற்ற ஜனதா தளம். இதனால் பாஜக ஆட்சி தப்புமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

ஆட்சியை நடத்துவதற்கான 12 விதிமுறைகளை வகுத்துள்ள மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவே கெளடா, அது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தையும் உருவாக்கி அதில் பாஜக கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

மேலும் பெங்களூர் நகர மேம்பாட்டுத்துறையையும் கனிம வளத்துறையையும் தனது கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என கோரி வருகிறார். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் பாஜக கையெழுத்திடாமல் இருந்து வருகிறது. இதையடுத்து இன்று வரை (ஞாயிற்றுக்கிழமை) பாஜகவுக்கு கெடு விதித்தார் கெளடா. ஆனால், அதையும் பாஜக கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்தெல்லாம் போட முடியாது என எதியூரப்பா கூறினார். அப்படியென்றால் ஆதரவு வாபஸ் என கெளடா அறிவித்தார்.

இதையடுத்து சட்டமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக எதியூரப்பா கூறி வருகிறார். ஆனால், இதை ஏற்க கெளடா தயாராக இல்லை.

இந் நிலையில் தனது கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கெளடா இன்று அவசரமாகக் கூட்டியுள்ளார். இதையடுத்து கெளடாவை ஒதுக்கிவிட்டு அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியை சந்திக்க எதியூரப்பா திட்டமிட்டுள்ளார்.

ஆனால், இதை கெளடா விரும்பவில்லை. இதனால் நாளை (19ம் தேதி) சட்டமன்றத்தில் நடக்கவுள்ள ஓட்டெடுப்பில் பாஜக கூட்டணி அரசு தப்புமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஒப்பந்த விஷயத்தில் பாஜக இன்றைக்குள் வளைந்து கொடுக்காவிட்டால் நாளைய ஓட்டெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தளம் காலை வாரி விடும் சூழல் எழுந்துள்ளது.

இதையடுத்து நிலைமை குறித்து விவாதிக்க இன்று பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தை எதியூரப்பா கூட்டியுள்ளார். மேலும் கெளடாவின் மிரட்டல் குறித்துப் பேச மூத்த கர்நாடக பாஜக தலைவர்கள் சிலர் டெல்லி விரைந்துள்ளனர்.

சிக்கல் மோசமாகியுள்ளதையடுத்து மூத்த பாஜக தலைவரான யஸ்வந்த் சின்ஹா இன்று பெங்களூர் வருகிறார். அவர் கெளடா-குமாரசாமி தரப்புடன் பேசி நிலைமையை சரி செய்துவிட்டால் பாஜக ஆட்சி தப்பும்.

நன்றிங்க

மதில் மேல் பூனைகள்...!

Thursday, November 01, 2007

6. நிருபரை எம்.எல்.ஏ. தாக்கிய விவகாரம்.

6. நிருபரை எம்.எல்.ஏ. தாக்கிய விவகாரம்: பீகாரில் இன்று பந்த்

பாட்னா : பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ., ஆனந்த் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் குழுவினர் தாக்கப்பட்டனர். இதையடுத்து எம்.எல்.ஏ., ஆனந்த் சிங் ‌கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ.,வின் இந்த அராஜக தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் இன்று ஒருநாள் முழு அடைப்பு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து அங்கு பந்த் நடந்து வருகிறது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்காததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எம்.எல்.ஏ., மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும்‌ என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கோரிக்கை வைத்துள்ளார்.

நன்றிங்க. தினமலர் 02/11/2007

அதான் நிருபரை அடிச்ச எம்.எல்.ஏவை கைது செஞ்சு சிறையடைச்சாசில்ல அப்பறம் எதுக்கய்யா பந்த்..?

எப்படியெல்லாம் அரசியல் பண்றாங்கப்பா!

ராஜபாளையம், ஆண்டிபட்டியிலும் கலவரம்.

ராஜபாளையம், ஆண்டிபட்டியிலும் கலவரம்

வியாழக்கிழமை, நவம்பர் 1, 2007

ராஜபாளையம்: முதுகுளத்தூரில் நடந்த கலவரத்தின் எதிரொலியாக ராஜபாளையம், ஆண்டிபட்டி பகுதியில் இன்று கலவரம் நடந்ததில் அப்பகுதியில் வந்த அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.

முதுகுளத்தூர் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை 50 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கியது. இதனையடுத்து இரு தரப்பினருக்கு இடையே நடந்த கலவரத்தில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் வின்சென்ட் தாம்சன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக நேற்றிரவு ராஜபாளையம்-தென்காசி சாலையில் சோலைச்சேரி விலக்கு அருகே ஒரு கும்பல் அந்த பக்கம் வந்த இரண்டு அரசு பேருந்து, ஒரு தனியார் பேருந்து, லாரி, ஆட்டோ ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, பேருந்துகளின் மீது தாக்குதல் நடத்திய் சீமான், சேவுகபாண்டி, ஜீவா மோகன், ராமமூர்த்தி, அழகுமலை ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இதேபோன்று கண்டமனூரில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக போலீசார் கலவரக்காரர்களை தேடி வருகிறார்கள்.

இந்த கல்வீச்சு சம்பவங்களால் அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றிங்க

ஹலோ பப்ளிக்,

உங்களுக்கு கட்சிப்பற்று மிக அதிகமாக இருந்தால் உங்கள் வீட்டு பொருட்களை போட்டு உடைத்து நொறுக்கலாம். ஏன் உங்கள் வீட்டையே இடித்து நொறுக்கி தரை மட்டமாக்கலாம். வீட்டில் தாய் தந்தை மனைவி மக்கள் என உறவினர்களை போட்டு நல்லா சாத்தலாம்.

இதையெல்லாம் விடுத்து பொது மக்களை தாக்கி பொது சொத்துக்களை ஏன் அழிக்கிறீர்கள் முட்டாள் பப்ளிக்!

Wednesday, October 31, 2007

தூண்டிவிட்ட மோடி.

04.11.07 மற்றவை

சி.என்.என்._ஐ.பி.என்., தொலைக்காட்சியில் ஓர் அரசியல் நேர்காணல். நடத்தியவர் பிரபல அரசியல் பேட்டியாளர் கரன் தாப்பர். கிடுக்கிப்பிடி கேள்விகளால் எதிரே இருப்பவரை சிக்கவைப்பதில் சமர்த்தர். நம்மூர் ஜெயலலிதா, வைகோ முதல் பல தேசியத் தலைவர்களை திக்குமுக்காட வைத்தவர். இந்தமுறை அவருக்கு எதிரே அமர்ந்திருந்தார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

ஒவ்வொரு கேள்வியும் தீப்பந்தாகப் பாய்ந்து வந்து மோதின. எல்லாவற்றையும் தனக்கேயுரிய பாணியில் சாமர்த்தியமாக எதிர்கொண்டார் மோடி. திடீரென ஒரு கேள்வி. அவ்வளவுதான். நெருப்பில் பட்ட ரப்பர் பலூன் போல சுருங்கியது மோடியின் முகம். என்னென்னவோ பேசினார். 'தாகமாக இருக்கிறது, தண்ணீர் வேண்டும்' என்றார். பதில் சொல்லாமல் தப்பிக்கும் எல்லாவித முயற்சியிலும் ஈடுபட்டார். விளைவு, பேட்டி பாதியிலேயே முடிக்கப்பட்டது. அவசர அவசரமாக வெளியேறினார் நரேந்திர மோடி.

அப்படியே 'முதல்வன்' படத்தில் ரகுவரன், அர்ஜுன் நடித்த காட்சி போலவே இருந்தது. விஷயம் என்னவென்றால், கரன் தாப்பர் கேட்டது கோத்ரா மற்றும் குஜராத் கலவரம் பற்றிய கேள்விதான். மோடி பதிலளிக்கத் தடுமாறியது அப்படியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தக் காட்சிகள் குஜராத் அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்தது.

மோடியின் தடுமாற்றத்துக்கு இதுவரை பா.ஜ.க. தரப்பில் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், அதற்கு பதிலளிக்கும் விதமாக தெஹல்கா இணையதளம் சென்ற வாரம் வீடியோகாட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோத்ரா தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான ஹரேஷ் பட் உள்ளிட்ட சிலருடைய பேட்டிகள் ஒளிபரப்பாகின. அவர்கள் அத்தனை பேருமே கோத்ரா மற்றும் குஜராத் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம்.

ரகசிய கேமரா மூலம் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிப்பது தெஹல்காவுக்கு வழக்கமான விஷயம்தான். இந்தமுறை அவர்கள் குறிவைத்தது நரேந்திர மோடியை. இதற்காக கோத்ரா சட்டமன்ற உறுப்பினர், குஜராத் கலவரத்தில் களத்தில் இறங்கி 'செயல்பட்ட' ஏழு பேர், மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அரசு வழக்கறிஞர் ஒருவர் மற்றும் ஐந்து குஜராத் 'கரசேவகர்கள்' ஆகியோருக்கு வலை விரிப்பது என முடிவு செய்தது தெஹல்கா நிருபர் குழு. இவர்களுக்குத் தலைமை, ஆஷிஷ் கெய்தான் என்கிற நிருபர். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேசிக்கொண்டே இருந்தனர்.

'அய்யா, நாங்கள் இந்துத்வாவைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறோம். புத்தகத்தின் பெயர் ''வி.ஹெச்.பி.யும் இந்துத்வாவும்.' அதற்கு உங்களுடைய கருத்துக்கள் அவசியமாகின்றன. புத்தகத்துக்காக நாடு முழுக்கத் தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கிறோம். நிறையப் பேர் பேசியிருக்கிறார்கள். நீங்களும் பேசினால் புத்தகம் மிகச்சிறப்பாக வரும். குறிப்பாக, கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேச வேண்டும். இந்துத்வத்தின் பெருமை எல்லோர் மத்தியிலும் பரவும்.'

இதுதான் அந்த நிருபர் ஆஷிஷ் கெய்தான் விரித்த வலை. 'இந்துத்வா பரவும்' என்கிற வார்த்தைகள் அவர்களைச் சுண்டி இழுத்துவிட்டன. மளமளவென நடந்த சம்பவங்களை வார்த்தை விடாமல் ஒப்பித்துவிட்டனர்.

அப்படி என்ன சொல்லிவிட்டார்கள் அவர்கள்?

ஒவ்வொரு நபராகப் பார்க்கலாம்.

சட்டமன்ற உறுப்பினர் ஹரேஷ் பட்:

'கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பா.ஜ.க. பிரமுகர்கள், பஜ்ரங் தள், வி.ஹெ.ச்பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மோடி, 'நான் உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், மூன்று நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும்' என்றார். அதன்பிறகு பெரிய அளவில் கொலைச்சம்பவங்கள் நடந்த பிறகு எங்களை அழைத்த மோடி, எல்லோரையும் பாராட்டினார்.'

மதன் சாவல் பா.ஜ.க. தொண்டர்:

'முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஓடினோம். அவர்களை எல்லாம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே நாங்கள் ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டோம். உடனே அவர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து எங்களையெல்லாம் கலைந்து போகச் சொன்னார். நாங்களும் சரி என்றோம். அவர் பணத்தைத் தருவதற்காகக் கதவைத் திறந்ததும் விருட்டென வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். உடனடியாக இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, அவருடைய கையை நான் வெட்டினேன். அவருடைய ஆண்குறியையும் வெட்டினேன். பிறகு அவரைத் துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். மோடியின் முயற்சியால்தான் எங்களால் சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. நீதிபதிகளை இடமாற்றம் செய்து, வசதியான நீதிபதிகளை பணியிலமர்த்தியதால் எங்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைத்தது.'

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி:

'வழியில் தென்பட்ட கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என்று தெரிந்ததும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தினேன். உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து வீசி எறிந்தேன்.'

அனில் படேல் மற்றும் தாபல் ஜெயந்தி படேல்:

'எனக்குச் சொந்தமான தொழிற்சாலையில்தான் கலவரத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. அந்தப் பணியில் வி.ஹெச்.பி. தொண்டர்கள் ஈடுபட்டனர். எல்லா விஷயமும் போலீஸாருக்குத் தெரியும். ஆனால், அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், விஷயம் வெளியே கசியாதவாறு அவர்கள்தான் பார்த்துக்கொண்டனர். அந்தக் குண்டுகளை வைத்துத்தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.'

பிரகாஷ் ரத்தோட்:

'பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயா பென் தெருத்தெருவாகச் சென்று தொண்டர்களைக் கலவரம் செய்வதற்கு ஊக்கப்படுத்தினார். 'முஸ்லிம்கள் ஒருவரைக் கூட விடக்கூடாது. வேகமாகக் கொன்று குவியுங்கள்' என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டே நடந்தார்.'

சுரேஷ் ரிச்சர்ட்:

'முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் நாங்கள் திணறியபோது போலீஸாரே சில இடங்களைச் சுட்டிக் காட்டினர். நாங்கள் அங்கு சென்று கதவுகளை மூடிவிட்டு, அவர்களை உள்ளேயே வைத்து எரித்துவிட்டோம்.'

அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா:

'கலவரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு எதிரான வழக்குகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மோடி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். காவல்துறை அதிகாரிகள் இந்துக்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கோத்ரா சம்பவம் மோடியை ரொம்பவே வருத்தப்பட வைத்திருந்தது. அகமதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால், முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட தினத்தை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட வேண்டும் என்றார் மோடி.'

வி.ஹெச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி:

'மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்குச் சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சாதகமாக அவர்கள் வாதாடினர்!'

மேலே இருக்கும் கருத்துகள் அத்தனையும் குஜராத் கலவரத்துக்கு மோடியின் பங்களிப்பை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளன.

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ராமர் பால விவகாரம் தங்களுக்குத் தேனை வார்க்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், தேளை வார்த்திருக்கிறது தெஹல்கா வீடியோ.

விரைவில் நடைபெற இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இந்த வீடியோ பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். என்ன செய்யப் போகிறார் மோடி?

நன்றிங்க, KUMUDAM REPPORTER

"அரசியல் அரக்கர்கள்"

Saturday, October 27, 2007

பாஜகவுக்கு கெளடா திடீர் ஆதரவு!

பாஜகவுக்கு கெளடா திடீர் ஆதரவு-கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைகிறது

சனிக்கிழமை, அக்டோபர் 27, 2007

பெங்களூர்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தரப் போவதாக தேவெ கெளடா-குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் திடீரென அறிவித்துள்ளது.

20 மாதம் ஆட்சியில் இருந்த நிலையில் ஒப்பந்தத்தை மீறி பாஜகவிடம் ஆட்சியை வழங்க மறுத்தார் முதல்வராக இருந்த குமாரசாமி. பாஜக ஒரு மதவாதக் கட்சி என்று திடீரென குற்றம் சாட்டினார்.

இதையடுத்து காங்கிரஸ் உதவியோடு ஆட்சியில் தனது மகனை தொடர வைக்க தேவெ கெளடா முயன்றார். இதற்காக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொண்டார். ஆனால், அவரால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட சோனியா காந்தி அவரை சந்திக்கவே மறுத்துவிட்டார்.

மேலும் கெளடா-குமாரசாமி மீது அதிருப்தியில் உள்ள ஜனதா தள எம்எல்ஏக்களைக் கொண்டு கட்சியை உடைக்கவும், அவர்கள் உதவியோடு ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் முயன்றது.

இதற்காக ஜனதா தளத்தின் மூத்த தலைவரான பிரகாஷை டெல்லிக்கு அழைத்துப் பேசியது. அவருக்கு முதல்வர் பதவி தரப்படும் என்றும் கூறியது. இதையடுத்து அவர் கட்சியை உடைக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கினார்.

ஆனால், பிரகாஷை கெளடா மற்றும் குமாரசாமியால் தடுக்க முடியவில்லை. பாஜகவுக்கு ஆட்சியைத் தர மறுத்ததன் மூலம் தனது லிங்காயத் சமுதாயத்திற்கு (இவர்களது பெரும் ஆதரவு பாஜகவுக்கு உண்டு, பாஜக சார்பில் துணை முதல்வராக இருந்த எதியூரப்பாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் தான்) கெளடா மோசம் செய்துவிட்டதாக கோபத்தில் உள்ள பிரகாஷ் கட்சியை உடைப்பதில் தீவிரமானார்.

பலமுறை டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்த பிரகாஷ் இன்றும் டெல்லியில் தான் உள்ளார்.

இந் நிலையில் அரசியல் பல்டிகளுக்குப் பேர் போன தேவெ கெளடா மீண்டும் ஒரு பல்டி அடித்துள்ளார். பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தரத் தயார் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் தனது கட்சியை உடைக்க முயன்ற காங்கிரசுக்கு பாடம் புகட்டுவது என்ற முடிவுக்கு கெளடாவும் குமாரசாமியும் வந்துள்ளனர்.

இத் தகவலை குமாரசாமியே இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், நாங்கள் இன்றே கவர்னர் ராமஷ்வர் தாக்கூரை சந்தித்து பாஜக தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு கடிதம் தரவுள்ளோம்.

எங்கள் கட்சியை உடைக்க காங்கிரஸ் முயன்றதால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

முன்னதாக குமாரசாமி-கெளடாவின் சார்பில் அக் கட்சியின் மூத்த தலைவர் தத்தா பாஜக முதல்வர் பதவிக்கான 'கேன்டிடேட்' எதியூரப்பாவை சந்தித்து அவரை முதல்வராக்க கெளடா முடிவு செய்துள்ளது குறித்த தகவலைத் தெரிவித்தார்.

இதையடுத்து பாஜகவின் மூத்த தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். அதில் கெளடாவின் ஆதரவைப் பெறுவது என்றும் ஆட்சியமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் கெளடா தொலைபேசியில் பேசினார்.

அடுத்து கவர்னர் தாக்கூர் என்ன செய்யவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நன்றிங்க

என்னடா எலி அம்மணத்தோட ஓடுதேன்னு பாத்தா....

இதான் சங்கதியா?

தன் கட்சிக்கு ஆபத்துன்ன உடனே தேவே கெளடா என்னமா பல்டி அடித்து விட்டார். இதுக்கு ஏற்கெனவே ஒப்பந்தப்படி ஆட்சியை பாஜகா விடம் முதலிலேயே கொடுத்திருந்தால் நல்ல கெளரவமாக இருந்திருக்கும்.

ம்ஹும்... பட்ட பிறகுதானே தெரியுதே.

Sunday, October 07, 2007

3. ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்.

கர்நாடகத்தில் திடீர் திருப்பம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்.

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 7, 2007

பெங்களூர்:

கர்நாடக அரசியலில் புதிய திருப்பமாக, ஆட்சி அமைக்க உரிமை கோரி காங்கிரஸ் கட்சி, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளது.

குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதள அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ள பாஜக நேற்று தீர்மானித்தது. இதையடுத்து துணை முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக தலைவர்கள், இன்று காலை மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக அளித்தனர்.

இதையடுத்து குமாரசாமி அரசு சிறுபான்மை அரசாக மாறியது. ஆனால் மக்களை சந்திக்கத் தயாராக இருப்பதாக குமாரசாமி அறிவித்தார். ஆளுநரை சந்திக்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக குழுவினர் ஆளுநரை சந்தித்து விட்டுச் சென்ற சில மணி நேரங்களில் காங்கிரஸ் சட்டசபைக் கட்சி செயலாளர் ரமேஷ்குமார் தலைமையிலான குழு ஆளுநரை சந்தித்தது.

அப்போது, கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஆளுநரிடம் கடிதத்தைக் கொடுத்தார் ரமேஷ்குமார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளதால் கர்நாடக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு தரப் போகிறதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

நன்றிங்க

எப்படியோ இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துக்காவது தேர்தலை சந்திக்காம ஆட்சிய ஓட்டங்கப்பா!

Saturday, October 06, 2007

இடைத் தேர்தலை நோக்கி கர்நாடகம்!

ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக: இடைத் தேர்தலை நோக்கி கர்நாடகம்!

சனிக்கிழமை, அக்டோபர் 6, 2007

டெல்லி:

கர்நாடகத்தில் குமாரசாமி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை பாஜக இன்று திரும்பப் பெற்றது. ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைப்பதற்குப் பதில், மக்களை சந்திப்போம் என்று தேவெ கெளட கூறியுள்ளார். இதையடுத்து கர்நாடகத்தில் இடைத் தேர்தல் வரக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கர்நாடகத்தில் ஆளுக்கு 20 மாதங்கள் என்ற ஒப்பந்தத்தின் பேரில் மதச்சார்பற்ற ஜனதாதளமும், பாஜகவும் கூட்டணி ஆட்சியை அமைத்தன. ஆனால் ஒப்பந்தப்படி சில தினங்களுக்கு முன்பு பாஜகவிடம் ஆட்சியை மதச்சார்பற்ற ஜனதாதளம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

ஆனால் ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க முதல்வர் குமாரசாமியும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடாவும் மறுத்து வந்தனர். மேலும் பாஜக மீது சரமாரியாக புகார்கள் கூறி வந்தனர். புதிய நிபந்தனைகளையும் விதித்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை, டெல்லியில் தேவெ கெளடா சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சில் எந்த உடன்பாடும் இல்லை. இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் பாஜக இடையிலான கூட்டணி உடைவது உறுதியானது.

இந்த நிலையில் பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் இன்று காலை நடந்தது. இக்கூட்டத்தில் நேற்று கெளடாவுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து ராஜ்நாத் சிங் விவரித்தார்.

கூட்டத்திற்குப் பின்னர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் இதுவரை செய்யாத மிகப் பெரிய, மிக மோசமான துரோகத்தை மதச்சார்பற்ற ஜனதாதளம் செய்து விட்டது. மக்கள் மதச்சார்பற்ற ஜனதாதளத்தை மன்னிக்கவே மாட்டார்கள். தக்க பதிலடி கொடுப்பார்கள்.

குமாரசாமி அரசுக்கு பாஜக கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றார் வெங்கையா நாயுடு.

பஜாக தனது ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளதால், குமாரசாமி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சி தப்புவதும், கவிழ்வதும் தற்போது காங்கிரஸ் கட்சியின் கையில்தான் உள்ளது.

துணை முதல்வரும், பாஜக சட்டசபைக் கட்சித் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மற்றும் கர்நாடக பாஜக தலைவர் சதானந்த கெளடா ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தை வழங்குமாறு கட்சி மேலிடத்தால் பணிக்கப்பட்டுள்ளனர்.

மக்களை சந்திப்போம் - கெளடா

இதற்கிடையே, மக்களை சந்தித்து அவர்களின் தீர்ப்பை கோரப் போவதாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவெ கெளடா கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த மதச்சார்பற்ற ஜனதாதள அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் கெளடா செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய சூழ்நிலையில், நாங்கள் மக்களை சந்திக்கவே விரும்புகிறோம். காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ உறவு வைக்கப் போவதில்லை.

மதச்சார்பற்ற ஜனதாதளம் பதவி வெறி பிடித்து அலையவில்லை. இந்தக் குற்றச்சாட்டுத் தவறானது.

மதச்சார்பற்ர ஜனதாதள அரசுக்கு எதிராக பாஜக தொடர்ந்து பல அவதூறுகளை சுமத்தி வந்தது. முதல்வர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தொடர்ந்து அவதூறான புகார்களைக் கூறி வந்தது. பாஜக அமைச்சர் ஒருவர் கொலை முயற்சி புகாரும் கொடுத்தது இதில் உச்சகட்டமானது.

முதல்வருக்குக் கிடைத்து வந்த மக்கள் செல்வாக்கை பாஜகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இது உள்ளாட்சித் தேர்தலிலும் பிரதிபலித்ததை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார் கெளடா.

காங்கிரஸ் மெளனம்:

இதற்கிடையே, கர்நாடக அரசியல் சூழ்நிலை குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இன்று கூடி ஆலோசித்தனர். பின்னர் சட்டசபை காங்கிரஸ் தலைவர் தரம்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக முறைப்படி தனது ஆதரவை வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னர்தான் காங்கிரஸ் தனது நடவடிக்கைகளை முடிவு செய்யும்.

கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஓரிரு தினங்களில் பெங்களூர் வரவுள்ளார். அதன் பின்னர் கட்சி எம்.எல்.ஏக்களிடம் கருத்து கேட்கப்படும். இறுதி முடிவை கட்சி மேலிடம் எடுக்கும்.

எம்.எல்.ஏக்கள் யாரும் வெளியூர்களுக்குப் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரையும் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர் என்றார்.

குமாரசாமி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றுள்ள நிலையில், வருகிற 18ம் தேதி சட்டசபையைக் கூட்டியிருப்பது செல்லாது, சட்டவிரோதமானது என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அது ஆளுநரை கோரியுள்ளது.

நன்றிங்க

பதவி ஆசை யாரை விட்டது.

இந்த அரசியல்வாதிகளுக்கு நாட்டைப் பற்றி எந்த கவலையும் இல்லை. இடைத் தேர்தல் என்றால் சும்மாவா நடக்கும், அதற்கான செலவுகள், தேர்தல் பிரச்சார தொந்தரவுகள், மக்களின் நேர விரயம்.

என்னதான் இருந்தாலும் ஒப்பந்தத்தை மீறியது கொளடா கட்சி செய்த அநியாயம்!