பள்ளியில் திருட்டுப் பட்டம் சுமத்தியதால் 4ம் வகுப்பு மாணவி தற்கொலை
சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2008
சென்னை: பள்ளியில் திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டதால் மனமுடைந்த 4ம் வகுப்பு மாணவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி-பரமேஸ்வரி தம்பதியின் மகள்கள் புவனேஸ்வரி (வயது 9), கீதா (8), லட்சுமி (5).
புவனேஸ்வரியும், கீதாவும் சின்னாண்டி மடத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இந்தப் பள்ளியில் ஒரு மாணவியின் நோட் புக், பென்சில் காணாமல் போய் விட்டது. இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியைகள் 4 பேர் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் மற்ற மாணவிகள் முன் புவனேஸ்வரிக்கு திருட்டு பட்டம் சுமத்தி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த புவனேஸ்வரி மாலையில் வீடு திரும்பியதும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
இதில் உடல் கருகிய புவனேஸ்வரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தாள்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மாணவியின் தாயார் பரமேஸ்வரி கூறுகையில்,
எனது மகள் மீது அநியாயமாக திருட்டு பட்டம் சுமத்தி அவளை அடித்து துன்புறுத்தியுள்ளனர். எனது 2வது மகள் கீதாவையும் ஆசிரியைகள் அடித்துள்ளனர். எனவே அந்த 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இச் சம்பவத்தால் அப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் சின்னாண்டி மடம் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நன்றிங்க
மாணவ, மாணவிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாடம்பெற வேண்டும்.
ஓர் உயிர் அநியாயமாக கருகி விட்டது. நெருப்பில் எப்படியெல்லாம் துடித்திருக்கும்...! பிள்ளையை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''
Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts
Saturday, April 05, 2008
Sunday, September 30, 2007
மாணவி தனியறையில் அடைப்பு!
9.மாணவி தனியறையில் அடைப்பு : அரசு பள்ளி ஆசிரியர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை காரையூர் மறவாமதுரையைச் சேர்ந்த மாணவி உஷா (வயது15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படிக்கிறார். செப்., 26ல் சக மாணவியருடன் பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்புக்கு சென்றார். அன்று மாலை பள்ளி முடிந்தும், உஷா வீடு திரும்பவில்லை. அவரை தேடி பெற்றோர் பள்ளிக்கு சென்றனர். சிறப்பு வகுப்பு நடத்திய ஆசிரியர் முத்து (36)விடம் விசாரித்தனர். சக மாணவியுடன் உஷா, மங்கனூர் கிராமத்துக்கு சென்றதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், பெற்றோர், வகுப்பறைகளை திறந்து பார்த்தனர். ஆசிரியர் தங்கும் அறையில் உஷா மட்டும் தனியாக இருந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். ஆசிரியர் முத்து தவறான எண்ணத்துடன் தன்னை அழைத்தார். பாலியல் பலாத்காரம் செய்வதற்காக தனியாக அடைத்து வைத்திருந்தார் என உஷா தெரிவித்தார். ஆசிரியர் முத்து, ஏற்கனவே திருமணம் ஆனவர். இரு குழந்தைகளும் உள்ளனர். ஏற்கனவே இத்தகைய புகார்களுக்கு ஆளானவர்.
பெற்றோர், பொதுமக்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். போலீசார் சமாதானம் செய்தனர். பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பும் தடைபட்டது. ஆசிரியர் முத்துவை காப்பாற்ற கல்வித்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். முதன்மைக்கல்வி அலுவலர் செல்லம் தலைமையில், சமாதானக்குழு அமைத்து, பெற்றோருடன் பேச்சு நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாததால், ஆசிரியர் முத்து மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். வேறுவழியில்லாத முதன்மைக்கல்வி அலுவலர் செல்லம், ஆசிரியர் முத்துவை சஸ்பெண்ட் செய்தார்.
நன்றிங்க, தினமலர் 30.09.2007
மாணவியின் மீது பாலியல் பலாத்காரம் தாக்குதலுக்கு தயாரான அயோக்கினுக்காக என்ன பரிந்து பேச வேண்டியிருக்கு? சட்டப்படி தண்டிக்க வேண்டியதுதானே முறை!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை காரையூர் மறவாமதுரையைச் சேர்ந்த மாணவி உஷா (வயது15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படிக்கிறார். செப்., 26ல் சக மாணவியருடன் பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்புக்கு சென்றார். அன்று மாலை பள்ளி முடிந்தும், உஷா வீடு திரும்பவில்லை. அவரை தேடி பெற்றோர் பள்ளிக்கு சென்றனர். சிறப்பு வகுப்பு நடத்திய ஆசிரியர் முத்து (36)விடம் விசாரித்தனர். சக மாணவியுடன் உஷா, மங்கனூர் கிராமத்துக்கு சென்றதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், பெற்றோர், வகுப்பறைகளை திறந்து பார்த்தனர். ஆசிரியர் தங்கும் அறையில் உஷா மட்டும் தனியாக இருந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். ஆசிரியர் முத்து தவறான எண்ணத்துடன் தன்னை அழைத்தார். பாலியல் பலாத்காரம் செய்வதற்காக தனியாக அடைத்து வைத்திருந்தார் என உஷா தெரிவித்தார். ஆசிரியர் முத்து, ஏற்கனவே திருமணம் ஆனவர். இரு குழந்தைகளும் உள்ளனர். ஏற்கனவே இத்தகைய புகார்களுக்கு ஆளானவர்.
பெற்றோர், பொதுமக்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். போலீசார் சமாதானம் செய்தனர். பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பும் தடைபட்டது. ஆசிரியர் முத்துவை காப்பாற்ற கல்வித்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். முதன்மைக்கல்வி அலுவலர் செல்லம் தலைமையில், சமாதானக்குழு அமைத்து, பெற்றோருடன் பேச்சு நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாததால், ஆசிரியர் முத்து மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். வேறுவழியில்லாத முதன்மைக்கல்வி அலுவலர் செல்லம், ஆசிரியர் முத்துவை சஸ்பெண்ட் செய்தார்.
நன்றிங்க, தினமலர் 30.09.2007
மாணவியின் மீது பாலியல் பலாத்காரம் தாக்குதலுக்கு தயாரான அயோக்கினுக்காக என்ன பரிந்து பேச வேண்டியிருக்கு? சட்டப்படி தண்டிக்க வேண்டியதுதானே முறை!
Tuesday, August 21, 2007
வகுப்பறையில் செக்ஸ் டார்ச்சர் அதிகரிப்பு.
வகுப்பறையில் செக்ஸ் டார்ச்சர் அதிகரிப்பு பள்ளியை விட்டு வெளியேறிய மாணவியால் பரபரப்பு
ஈரோடு: "பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அடிக்கக் கூடாது' என்று முதல்வர் அறிவித்த உத்தரவை, பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் வாசித்த, மாணவியை செக்ஸ் டார்ச்சர் செய்ததாக, ஆசிரியர்கள் மீது கடும் புகார் கூறப்பட்டுள்ளது. ஈரோடு, மொடக்குறிச்சி அடுத்த கல்யாணிபுரம் பி.கே.பி., மெட்ரிக்., பள்ளி கணக்கு ஆசிரியர் இளையராஜா. பாடம் நடத்தும் போது மாணவிகளிடம் சில்மிஷம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மாணவிகளின் புகாரை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. தொல்லை தாங்க முடியாமல் இந்தப் பள்ளி பிளஸ் 2 மாணவி ரேவதி, கடந்த 16ம் தேதி பள்ளி விடுதியில் இருந்து தப்பி காட்டுக்குள் ஓடி மூன்று நாட்களுக்குப்பின் உறவினருடன் ஈரோடு வந்தார். போலீசார் மாணவியை மீட்டு, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கொடுமுடி மாஜிஸ்திரேட் முன் மாணவியை ஆஜர்படுத்த ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாணவிக்கும் பாதுகாப்பு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ரேவதி கூறியதாவது: நான் சிறந்த சாரணருக்கான விருதை கவர்னரிடம் பெற்றுள்ளேன். பல்வேறு கலைகளில் 117 விருதுகள் எனக்கு கிடைத்துள்ளன. சிறப்பாக படிப்பேன். பள்ளியில் கணக்கு ஆசிரியர் இளையராஜா. அனைத்து மாணவிகளுக்கும் செக்ஸ் தொல்லை கொடுத்தார். மாணவிகள் அருகே உரசிக் கொண்டு நிற்பார். தள்ளி அமர்ந்தால், "ஏன் தள்ளி தள்ளி போற?' எனக் கன்னத்தைக் கிள்ளி இழுப்பார். "பின்னால் தட்டுவது, இடுப்பை கிள்ளுவது,' என தொல்லை கொடுப்பார். இவரது தொல்லையால் பல மாணவிகள் வெளியேறியுள்ளனர். நிர்வாகத்திடம் புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தினமும் பத்திரிகையில் வெளியாகும் ஓரு செய்தியை வழிபாட்டுக் கூட்டத்தின் போது வாசிக்க வேண்டும். "மாணவர்களை அடித்து துன்புறுத்தக் கூடாது என்று முதல்வர் அறிவித்த உத்தரவு செய்தியை நான் வாசித்தேன். இந்த செய்தியை ஏன் வாசித்தாய் என்று மிரட்டினர். அன்றிலிருந்து தொல்லை அதிகமானது. எனது அப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். எனது அப்பா 16 ம் தேதி ஏ.ஓ., லட்சுமணனிடம் கடிதத்தை காட்டி பேசினார். அதன் பிறகு லட்சுமணன், இளையராஜா இருவரும் என்னை மிகவும் கேவலமாக பேசி அடித்தனர். இதனால் தான் பள்ளியை விட்டு வெளியேறினேன். இவ்வாறு ரேவதி கூறினார்.
நன்றிங்க, DINAMALAR 21/08/07
வேலியே பயிர்களை மேயப் பார்க்கிறதா...?
ஈரோடு: "பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அடிக்கக் கூடாது' என்று முதல்வர் அறிவித்த உத்தரவை, பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் வாசித்த, மாணவியை செக்ஸ் டார்ச்சர் செய்ததாக, ஆசிரியர்கள் மீது கடும் புகார் கூறப்பட்டுள்ளது. ஈரோடு, மொடக்குறிச்சி அடுத்த கல்யாணிபுரம் பி.கே.பி., மெட்ரிக்., பள்ளி கணக்கு ஆசிரியர் இளையராஜா. பாடம் நடத்தும் போது மாணவிகளிடம் சில்மிஷம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மாணவிகளின் புகாரை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. தொல்லை தாங்க முடியாமல் இந்தப் பள்ளி பிளஸ் 2 மாணவி ரேவதி, கடந்த 16ம் தேதி பள்ளி விடுதியில் இருந்து தப்பி காட்டுக்குள் ஓடி மூன்று நாட்களுக்குப்பின் உறவினருடன் ஈரோடு வந்தார். போலீசார் மாணவியை மீட்டு, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கொடுமுடி மாஜிஸ்திரேட் முன் மாணவியை ஆஜர்படுத்த ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாணவிக்கும் பாதுகாப்பு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ரேவதி கூறியதாவது: நான் சிறந்த சாரணருக்கான விருதை கவர்னரிடம் பெற்றுள்ளேன். பல்வேறு கலைகளில் 117 விருதுகள் எனக்கு கிடைத்துள்ளன. சிறப்பாக படிப்பேன். பள்ளியில் கணக்கு ஆசிரியர் இளையராஜா. அனைத்து மாணவிகளுக்கும் செக்ஸ் தொல்லை கொடுத்தார். மாணவிகள் அருகே உரசிக் கொண்டு நிற்பார். தள்ளி அமர்ந்தால், "ஏன் தள்ளி தள்ளி போற?' எனக் கன்னத்தைக் கிள்ளி இழுப்பார். "பின்னால் தட்டுவது, இடுப்பை கிள்ளுவது,' என தொல்லை கொடுப்பார். இவரது தொல்லையால் பல மாணவிகள் வெளியேறியுள்ளனர். நிர்வாகத்திடம் புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தினமும் பத்திரிகையில் வெளியாகும் ஓரு செய்தியை வழிபாட்டுக் கூட்டத்தின் போது வாசிக்க வேண்டும். "மாணவர்களை அடித்து துன்புறுத்தக் கூடாது என்று முதல்வர் அறிவித்த உத்தரவு செய்தியை நான் வாசித்தேன். இந்த செய்தியை ஏன் வாசித்தாய் என்று மிரட்டினர். அன்றிலிருந்து தொல்லை அதிகமானது. எனது அப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். எனது அப்பா 16 ம் தேதி ஏ.ஓ., லட்சுமணனிடம் கடிதத்தை காட்டி பேசினார். அதன் பிறகு லட்சுமணன், இளையராஜா இருவரும் என்னை மிகவும் கேவலமாக பேசி அடித்தனர். இதனால் தான் பள்ளியை விட்டு வெளியேறினேன். இவ்வாறு ரேவதி கூறினார்.
நன்றிங்க, DINAMALAR 21/08/07
வேலியே பயிர்களை மேயப் பார்க்கிறதா...?
Wednesday, July 25, 2007
ஆசானும், சிறுவனும்.
சமூக அவலம்
பிளாட்பாரத்தில் இரவில் பெண்ணிடம் சில்மிஷம்-தடுத்தவரை கொன்ற சிறுவன்
ஜூலை 25, 2007
சென்னை: பிளாட்பாரத்தில் வசிக்கும் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சிறுவனை தட்டிக் கேட்டவர், அந்த சிறுவனாலேயே கொல்லப்பட்டார்.
சமீப காலமாக சென்னையில் சிறுவர்கள் செய்யும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் வேலு (19). ஸ்டீல் பட்டறையில் கூலி வேலை பார்த்து வந்த இவர் தனது நண்பர் வெங்கடேசனுடன் சேர்ந்து சினிமா பார்த்து விட்டு இரவு 2 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அதே பகுதியை சேர்ந்தவன் மோகன்(15). இவன் இரவு நேரத்தில் கொருக்குப்பேட்டை பகுதியில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களோடு கூட்டத்தோடு கூட்டமாக படுப்பதை வழக்கமாக கொண்டவன்.
நேற்று முன் தினம் இரவு பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த வசந்தா என்ற பெண்ணின் பக்கத்தில் போய் படுத்து மோகன் சில்மிஷம் செய்துள்ளான்.
இதையடுத்து வசந்தா அவனை தாறுமாறாக திட்டியுள்ளனர். இவர்கள் இரவில் சண்டை போடுவதை பார்த்த வேலுவும், வெங்கடேசனும் விசாரித்து சிறுவன் மோகனை கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் பக்கத்தில் இருக்கும் தனது வீட்டிலிருந்து கத்தியை எடுத்து வேலுவையும், வெங்கடேசனையும் விரட்டியுள்ளான். அவர்கள் இருவரும் பயந்து ஓடியுள்ளனர்.
இதில் வேலு ஓடும்போது தவறி விழுந்துவிட்டார். இதையடுத்து வேலுவின் மீது ஏறி அமர்ந்து அவரது தொண்டையில் கத்தியால் பலமுறை குத்தினான்.
இதில் வேலு அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதையடுத்து மோகன் அங்கிருந்து தப்பி ஓடினான். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.கே நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி, கத்தியுடன் ஓடிக் கொண்டிருந்த மோகன் மீது சந்தேகப்பட்டு அவனை விரட்டிச் சென்று பிடித்தார்.
சிறுவன் மோகனுக்கு போதை பழக்கங்களும், பெண்களிடம் தகாத உறவும் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நன்றிங்க
------------------------------------

நன்றிங்க
சிறுவனிலிருந்து, விரிவுரையாளர்வரை, அதுவும் கல்வியை போதிக்கும் ஆசிரியர் பயிற்சிக்கான வகுப்பு எடுக்கும் ஆசானாகிய விரிவுரையாளர்வரை பெண்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்,
காமம்!
அதற்குத் தடையாக குறுக்கே எவர் வந்தாலும் அவரைக் கொலை செய்ய சிறுவனும் தயங்க மாட்டான்.
கல்வியை போதிக்கும் ஆசிரியராக இருந்தாலும் காமத்திற்காக பண்பாட்டை இழக்கவும் தயாராகி விட்டார்.
நாகரீகம், கட்டுப்பாடற்ற இந்த செயல்களுக்கு, விஞ்ஞானத்தில் முன்னேறியிருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும், சினிமா உட்பட அனைத்து ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும்.
பிளாட்பாரத்தில் இரவில் பெண்ணிடம் சில்மிஷம்-தடுத்தவரை கொன்ற சிறுவன்
ஜூலை 25, 2007
சென்னை: பிளாட்பாரத்தில் வசிக்கும் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சிறுவனை தட்டிக் கேட்டவர், அந்த சிறுவனாலேயே கொல்லப்பட்டார்.
சமீப காலமாக சென்னையில் சிறுவர்கள் செய்யும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் வேலு (19). ஸ்டீல் பட்டறையில் கூலி வேலை பார்த்து வந்த இவர் தனது நண்பர் வெங்கடேசனுடன் சேர்ந்து சினிமா பார்த்து விட்டு இரவு 2 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அதே பகுதியை சேர்ந்தவன் மோகன்(15). இவன் இரவு நேரத்தில் கொருக்குப்பேட்டை பகுதியில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களோடு கூட்டத்தோடு கூட்டமாக படுப்பதை வழக்கமாக கொண்டவன்.
நேற்று முன் தினம் இரவு பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த வசந்தா என்ற பெண்ணின் பக்கத்தில் போய் படுத்து மோகன் சில்மிஷம் செய்துள்ளான்.
இதையடுத்து வசந்தா அவனை தாறுமாறாக திட்டியுள்ளனர். இவர்கள் இரவில் சண்டை போடுவதை பார்த்த வேலுவும், வெங்கடேசனும் விசாரித்து சிறுவன் மோகனை கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் பக்கத்தில் இருக்கும் தனது வீட்டிலிருந்து கத்தியை எடுத்து வேலுவையும், வெங்கடேசனையும் விரட்டியுள்ளான். அவர்கள் இருவரும் பயந்து ஓடியுள்ளனர்.
இதில் வேலு ஓடும்போது தவறி விழுந்துவிட்டார். இதையடுத்து வேலுவின் மீது ஏறி அமர்ந்து அவரது தொண்டையில் கத்தியால் பலமுறை குத்தினான்.
இதில் வேலு அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதையடுத்து மோகன் அங்கிருந்து தப்பி ஓடினான். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.கே நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி, கத்தியுடன் ஓடிக் கொண்டிருந்த மோகன் மீது சந்தேகப்பட்டு அவனை விரட்டிச் சென்று பிடித்தார்.
சிறுவன் மோகனுக்கு போதை பழக்கங்களும், பெண்களிடம் தகாத உறவும் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நன்றிங்க
------------------------------------

நன்றிங்க
சிறுவனிலிருந்து, விரிவுரையாளர்வரை, அதுவும் கல்வியை போதிக்கும் ஆசிரியர் பயிற்சிக்கான வகுப்பு எடுக்கும் ஆசானாகிய விரிவுரையாளர்வரை பெண்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்,
காமம்!
அதற்குத் தடையாக குறுக்கே எவர் வந்தாலும் அவரைக் கொலை செய்ய சிறுவனும் தயங்க மாட்டான்.
கல்வியை போதிக்கும் ஆசிரியராக இருந்தாலும் காமத்திற்காக பண்பாட்டை இழக்கவும் தயாராகி விட்டார்.
நாகரீகம், கட்டுப்பாடற்ற இந்த செயல்களுக்கு, விஞ்ஞானத்தில் முன்னேறியிருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும், சினிமா உட்பட அனைத்து ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)