பள்ளியில் திருட்டுப் பட்டம் சுமத்தியதால் 4ம் வகுப்பு மாணவி தற்கொலை
சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2008
சென்னை: பள்ளியில் திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டதால் மனமுடைந்த 4ம் வகுப்பு மாணவி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி-பரமேஸ்வரி தம்பதியின் மகள்கள் புவனேஸ்வரி (வயது 9), கீதா (8), லட்சுமி (5).
புவனேஸ்வரியும், கீதாவும் சின்னாண்டி மடத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இந்தப் பள்ளியில் ஒரு மாணவியின் நோட் புக், பென்சில் காணாமல் போய் விட்டது. இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியைகள் 4 பேர் புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் மற்ற மாணவிகள் முன் புவனேஸ்வரிக்கு திருட்டு பட்டம் சுமத்தி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த புவனேஸ்வரி மாலையில் வீடு திரும்பியதும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
இதில் உடல் கருகிய புவனேஸ்வரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தாள்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மாணவியின் தாயார் பரமேஸ்வரி கூறுகையில்,
எனது மகள் மீது அநியாயமாக திருட்டு பட்டம் சுமத்தி அவளை அடித்து துன்புறுத்தியுள்ளனர். எனது 2வது மகள் கீதாவையும் ஆசிரியைகள் அடித்துள்ளனர். எனவே அந்த 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இச் சம்பவத்தால் அப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் சின்னாண்டி மடம் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நன்றிங்க
மாணவ, மாணவிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ள ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாடம்பெற வேண்டும்.
ஓர் உயிர் அநியாயமாக கருகி விட்டது. நெருப்பில் எப்படியெல்லாம் துடித்திருக்கும்...! பிள்ளையை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''
Showing posts with label ஆசிரியை. Show all posts
Showing posts with label ஆசிரியை. Show all posts
Saturday, April 05, 2008
Thursday, August 30, 2007
மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய ஆசிரியை!
மாணவிகளை ஆபாச படம் எடுத்து விபச்சாரத்தில் தள்ளிய ஆசிரியை!
ஆகஸ்ட் 30, 2007
டெல்லி: டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகளை விபச்சாரத்துக்கு தூண்டியதுடன், ஆபாச படம் எடுத்த வக்கிர ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மத்திய டெல்லியில் உள்ளது சர்வோதயா கன்யா வித்யாலயா. இப்பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியை அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு டியூசன் சொல்லித் தருவதாக வீட்டுக்கு அழைத்து, போதை மருந்து கொடுத்து அவர்களை மயக்கப்படுத்தி, நிர்வாணமாக்கி ஆண்களுடன் பலான போஸ்களில் இருக்க வைத்து வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அதைக் காட்டி மாணவிகளை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளியுள்ளார். அதையும் படம் எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
இந்த ஆசிரியையின் செயல்பாடுகளை ரகசியமாக வீடியோ படம் எடுத்த தனியார் சேனல் அதை ஒளிபரப்பியது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆசிப் அலி ரோட்டில் இருக்கும் அப்பள்ளி முன்பாக போராட்டத்தில் குதித்ததுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கிருந்த ஒரு வாகனத்தை எரித்தனர்.
நிலைமை மோசமடைவதை பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டீச்சரை கைது செய்தனர். பள்ளியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நன்றிங்க
அடி சண்டாளி!
ஆகஸ்ட் 30, 2007
டெல்லி: டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகளை விபச்சாரத்துக்கு தூண்டியதுடன், ஆபாச படம் எடுத்த வக்கிர ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மத்திய டெல்லியில் உள்ளது சர்வோதயா கன்யா வித்யாலயா. இப்பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியை அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு டியூசன் சொல்லித் தருவதாக வீட்டுக்கு அழைத்து, போதை மருந்து கொடுத்து அவர்களை மயக்கப்படுத்தி, நிர்வாணமாக்கி ஆண்களுடன் பலான போஸ்களில் இருக்க வைத்து வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அதைக் காட்டி மாணவிகளை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளியுள்ளார். அதையும் படம் எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
இந்த ஆசிரியையின் செயல்பாடுகளை ரகசியமாக வீடியோ படம் எடுத்த தனியார் சேனல் அதை ஒளிபரப்பியது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆசிப் அலி ரோட்டில் இருக்கும் அப்பள்ளி முன்பாக போராட்டத்தில் குதித்ததுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கிருந்த ஒரு வாகனத்தை எரித்தனர்.
நிலைமை மோசமடைவதை பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டீச்சரை கைது செய்தனர். பள்ளியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நன்றிங்க
அடி சண்டாளி!
Subscribe to:
Posts (Atom)