ஆண்களுக்கு இருப்பது போல்
முஸ்லிம் பெண்களுக்கும் கணவரை பிரியும் உரிமை உண்டு
அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அறிவிப்பு
லக்னோ, மார்ச்.17-
"ஆண்களைப்போல், முஸ்லிம் பெண்களுக்கும் கணவரை பிரியும் உரிமை'' உண்டு என்று, அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி நபர் சட்ட வாரியம் அறிவித்து உள்ளது.
முஸ்லிம் சமூகத்தில், மூன்று முறை
`தலாக்' என்ற வார்த்தையை சொல்லி மனைவியை பிரியும் பாரம்பரிய உரிமை இதுவரை ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
பெண்களுக்கும் அங்கீகாரம்
இப்போது முதன் முறையாக, முஸ்லிம் பெண்களுக்கும் கணவரை பிரியும் உரிமை உண்டு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஷரியத் சட்டப்படி
`திருமண விதிமுறைகளை' அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி நபர் சட்ட வாரிய தலைவர் ஷெய்ஸ்டா அம்பர் நேற்று வெளியிட்டார்.
"ஷரியத் சட்ட விதிமுறைகளின்படி, பெண்களுக்கு தங்கள் கணவரை பிரிவதற்கு (குலா) முழு அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. ஷரியத் சட்டத்தில் ஏற்கனவே இந்த விதிமுறை இடம் பெற்று இருந்தாலும், ஆணாதிக்க சமுதாயத்தில் இதுவரை இந்த விதிமுறை அறிமுகப் படுத்தப்படவில்லை'' என்று அப்போது அவர் கூறினார்.
கணவர் முன்வராவிட்டாலும்
4 ஆண்டுகளாக கணவர் காணாமல் போய்விட்டாலோ, வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்திருந்தாலோ, திருமணத்துக்கு முன்போ அல்லது பின்போ எய்ட்ஸ் போன்ற நோய் இருந்து அதை மறைத்து இருந்தாலோ, அல்லது உணவு, உடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட அந்த பெண், கணவரை பிரிவதற்கு இந்த விதிமுறை அனுமதி அளிக்கிறது.
அதே நேரத்தில் மனைவியை பிரிவதற்கு சம்பந்தப்பட்ட கணவர் முன்வர வில்லை என்றால், திருமணத்தின்போது கணவர் கொடுத்த `மெகர்' பணத்தை திருப்பிக்கொடுத்து விட்டு கணவரை பிரிவதற்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தலாக் முறையில் பிரிவதற்கு முன்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கணவன்-மனைவி இருவரும் 3 மாதங்கள் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
3 படிவங்கள்
முதன் முறையாக திருமணத்தின்போது 3 படிவங்களை நிரப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி, திருமணத்தை நடத்தும் அமைப்பு (பீரோ), மணமகன்-மணமகள், மற்றும் திருமணத்தை நடத்தும் காஜி ஆகியோருக்கு இந்த படிவங்கள் வழங்கப்படவேண்டும். இதன்மூலம் திருமணம் தொடர்பாக எந்த சர்ச்சைக்கும் இடமளிக்காமல் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் சட்டபூர்வமான ஆவணங்கள் (படிவங்கள்) இருக்கும்.
திருமணத்தை அலுவலகத்தில் பதிவு செய்வது, திருமண ஒப்பந்தத்தில் மணமகன்-மணமகள் இருவருடைய போட்டோக்களையும் ஒட்டுவதன்மூலம் ஆண், பெண் இருவருக்கும் புதிய விதிமுறைகளின்படி சம உரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது.
சம உரிமை
முஸ்லிம் திருமணம் தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டபின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரிய தலைவர் ஷெய்ஸ்டா அம்பர், "முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின திருமண விதிமுறைகளுக்கும் புதிய விதிமுறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக'' தெரிவித்தார்.
முந்தைய சட்டத்தில் குரானில் குறிப்பிட்டுள்ளதைப்போல் பெண் உரிமைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் புதிய விதிமுறைகளில் இரு தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
நன்றிங்க
விவாக ஒப்பந்தத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இஸ்லாம் சம உரிமை வழங்கியிருக்கிறது. விவாகத்தில் இருவரும் சம்மதம் தெரிவித்து வாழ்க்கையில் இணையும் ஆண். பெண் இருவரும் பின்னர் பிரியும் நிலை ஏற்பட்டால் விவாகரத்துக்கோருவதிலும் இருவருக்கும் சம உரிமை இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த உரிமைகள் இன்று, நேற்று வழங்கியதல்ல 1400 ஆண்டுகளுக்கு முன்பே சட்டபூர்வமாக எழுத்து வடிவத்தில் இவ்வுரிமைகளை இஸ்லாம் வடித்துள்ளது.
எனினும், அறியாமையின் காரணமாக பெண்களுக்கான உரிமை மறைக்கப்பட்டு, இன்று சீர் திருத்தம் செய்வது வரவேற்கத்தக்கது.
"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''
Showing posts with label விவாகரத்து. Show all posts
Showing posts with label விவாகரத்து. Show all posts
Monday, March 17, 2008
Thursday, January 03, 2008
முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து
10. முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து: குடும்ப நல கோர்ட் உத்தரவு
சென்னை: முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது.
தங்களை பிரித்து வைக்கும்படி கேட்டு சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் முஸ்லிம் தம்பதி மனு தாக்கல் செய்திருந்தனர். "இனிமேல் இருவரும் சேர்ந்து வாழ முடியாது' என்று இரு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு முதன்மை நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பிலும் விருப்பத்துடன் விவாகரத்து கேட்கும்போது அதை அனுமதிக்க இஸ்லாமிய சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று கோர்ட் விசாரணை நடத்தியது. இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் 1954ன் படி திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பொருந்தக் கூடிய விவாகரத்து நடைமுறை முஸ்லிம்களுக்கும் பொருந்துமா என்றும் கேள்வி எழுப்பப் பட்டது.வாதங்களை கேட்டறிந்த நீதிபதி தேவதாஸ்,
"தலாக் நடைமுறை எந்த வகையில் இருந்தாலும் அல்லா ஏற்க மாட்டார். அல்லாவின் கட்டளைகளை நிறைவேற்ற முடியாத தம்பதிகள் பிரிவதற்கு நிச்சயம் அல்லா அனுமதிப்பார் . இந்த தம்பதிகளால் அல்லாவின் இல்லற கடமைகளை நிறைவேற்ற முடியாது. எனவே, தங்கள் முழு விருப்பத்துடன் பிரிவதற்கு அனுமதிக்கிறேன்' என்று உத்தரவிட்டார்.
நன்றிங்க, தினமலர் 03/01/08
அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவனுக்கு வெறுப்பானது தலாக் - விவாகரத்து.
ஆனாலும் தம்பதிகள் ஒன்றாக இணைந்து வாழவே முடியாது என்ற நிலையில் அல்லாஹ் தலாக்கை - விவாகரத்தை அனுமதிக்கிறான்.
இதைத்தான் ஜட்ஜய்யா சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.
சென்னை: முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது.
தங்களை பிரித்து வைக்கும்படி கேட்டு சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் முஸ்லிம் தம்பதி மனு தாக்கல் செய்திருந்தனர். "இனிமேல் இருவரும் சேர்ந்து வாழ முடியாது' என்று இரு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு முதன்மை நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பிலும் விருப்பத்துடன் விவாகரத்து கேட்கும்போது அதை அனுமதிக்க இஸ்லாமிய சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று கோர்ட் விசாரணை நடத்தியது. இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் 1954ன் படி திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பொருந்தக் கூடிய விவாகரத்து நடைமுறை முஸ்லிம்களுக்கும் பொருந்துமா என்றும் கேள்வி எழுப்பப் பட்டது.வாதங்களை கேட்டறிந்த நீதிபதி தேவதாஸ்,
"தலாக் நடைமுறை எந்த வகையில் இருந்தாலும் அல்லா ஏற்க மாட்டார். அல்லாவின் கட்டளைகளை நிறைவேற்ற முடியாத தம்பதிகள் பிரிவதற்கு நிச்சயம் அல்லா அனுமதிப்பார் . இந்த தம்பதிகளால் அல்லாவின் இல்லற கடமைகளை நிறைவேற்ற முடியாது. எனவே, தங்கள் முழு விருப்பத்துடன் பிரிவதற்கு அனுமதிக்கிறேன்' என்று உத்தரவிட்டார்.
நன்றிங்க, தினமலர் 03/01/08
அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவனுக்கு வெறுப்பானது தலாக் - விவாகரத்து.
ஆனாலும் தம்பதிகள் ஒன்றாக இணைந்து வாழவே முடியாது என்ற நிலையில் அல்லாஹ் தலாக்கை - விவாகரத்தை அனுமதிக்கிறான்.
இதைத்தான் ஜட்ஜய்யா சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.
Monday, July 09, 2007
விவாகரத்து சர்ச்சை.
05. தபால் மூலம் "தலாக்' முஸ்லிம் பெண் சர்ச்சை
டாங்க் (ராஜஸ்தான்): முஸ்லிம் மதத்தினரில் பெண்கள் விவாகரத்து கோருவது மிக அரிது. அதிலும் தபால் மூலம் "தலாக்' அனுப்பி, விவாகரத்து பெறுவது அரிதிலும் அரிது. அப்படி தபாலில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ராஜஸ்தான் பெண் ஒருவர்.
ராஜஸ்தானில் உள்ள டாங்க் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஹசீனா. இவரது கணவர் முகமது ஷரீப். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்த கணவரை சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். கேட்டபோதெல்லாம் பிறந்த வீட்டில் இருந்து பணம் பெற்று தந்தார். மீண்டும் ஒரு லட்ச ரூபாய் வாங்கி வரும்படி, ஹசீனாவை அடித்து உதைத்துள்ளார் ஷரீப். ஆவேசமடைந்த ஹசீனா, தனது பிறந்த
வீட்டில் இருந்து, தபால் மூலம் கணவருக்கு "தலாக்' நோட்டீஸ் அனுப்பிவிட்டார். ஆனால், இந்த விவாகரத்தை ஏற்க மறுக்கிறார் ஷரீப். "தவறு செய்வது மனித இயல்பு தான். நான் தவறை திருத்திக் கொள்கிறேன். ஏழு குழந்தைகளுடன் நான் தனியே வசிப்பது முடியாத காரியம். எனக்கு இன்னொரு வாய்ப்பு வேண்டும்' என்று வாதிடுகிறார்.
ஷரீப்புக்கு முஸ்லிம் மத குருக்களும் ஆதரவாக உள்ளனர். முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் மஞ்சூர் அலாம், ""தபால் மூலம் தலாக் நோட்டீஸ் அனுப்பியது சரியானது அல்ல,'' என்று கூறுகிறார். டாங்க், காந்தெனா அமேரியா மசூதியின் மதகுரு உமர் நத்வி, ""ஆண்கள் மட்டுமே இது போன்ற முறையில் "தலாக்' நோட்டீஸ் அனுப்பி விவாகரத்து செய்ய முடியும். பெண்களுக்கு முஸ்லிம் சட்டத்தில் இதுபோன்ற செயல்களுக்கு இடம் இல்லை,'' என்கிறார்.
இது தொடர்பாக இஸ்லாமிய பண்டிதர்களிடம் கேட்ட போது, "பெண்கள் விவாகரத்து கோரும் போது, அதற்கு முஸ்லிம் மதத்தில் சில நிபந்தனைகளும், விதிமுறைகளும் உள்ளன. ஹசீனா விஷயத்தில், அவர் செய்தது சரியானது தானா என்பதை முஸ்லிம் சட்டப்புத்தகத்தை அலசி ஆராய்ந்து தான் முடிவு சொல்ல முடியும்' என்றனர். ஹசீனாவுக்கு
ஆதரவாக அவரது தந்தை உறுதியுடன் உள்ளார். ஹசீனாவும், யார் என்ன சொன்னாலும், இனி ஷரீப்புடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
நன்றிங்க 08.07.07 தினமலர்.
தலாக் எனும் விவாகரத்து செய்து கொள்ளும் சட்டம் கணவன், மனைவி இருவருக்குமே பொதுவானதாக இருக்கிறது. விவாகரத்து செய்து கொள்ளும் முறைகளில் வேண்டுமானால் சற்று வித்தியாசம் இருக்கிறது. மற்றபடி கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பொருந்திப் போகவில்லையென்றால் இருவருக்குமே பிரிந்து கொள்ளும் உரிமையை இஸ்லாம் வழங்கி இருக்கிறது.
எழுத்து மூலம் விவாகரத்து செய்யக்கூடாது என்று இஸ்லாத்தில் எந்த சட்டமும் இல்லை. ஆனால் எழுத்து மூலம் விவாகரத்தைத் தெரிவிக்கும் முறைக்கு ஒரு நிபந்தனை உண்டு. திருமணத்துக்கு எவ்வாறு இரு சாட்சிகளை ஏற்படுத்திக்கொள்கிறோமோ அதே முறையில் எழுத்து மூலம் தெரிவிக்கும் விவாகரத்துக்கும் இரண்டு சாட்சிகளை ஏற்படுத்தி உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், தன் கணவரிடமிருந்து பிரிந்து விட வேண்டும் என்பதில் ஹஸீனா உறுதியாக இருக்கும் நிலையில், அதை மறுக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. அவருடைய கணவருடன் சேர்ந்து வாழ வற்புறுத்தும் உரிமையும் எவருக்கும் இல்லை. இஸ்லாம் இதில் தலையிடுவதில்லை.
பெண்கள் குலா முறையில் விவாகரத்து பெற முன் வரும்போது அதை புறக்கணித்து கண்டிப்பாக உன் கணவருடன் நீ வாழ்ந்தாக வேண்டும் என்று சொல்லவும் இஸ்லாமிய மத பண்டிதர்களுக்கும் உரிமை இல்லை. அப்படி உரிமை உள்ளது என்று சொல்ல வருபவர்கள் தமது தரப்பு வாதத்திற்கான ஆதாரங்களை இஸ்லாத்திலிருந்து எடுத்தெழுதலாம்.
தன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய படவா முகமது ஷரீபை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
டாங்க் (ராஜஸ்தான்): முஸ்லிம் மதத்தினரில் பெண்கள் விவாகரத்து கோருவது மிக அரிது. அதிலும் தபால் மூலம் "தலாக்' அனுப்பி, விவாகரத்து பெறுவது அரிதிலும் அரிது. அப்படி தபாலில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ராஜஸ்தான் பெண் ஒருவர்.
ராஜஸ்தானில் உள்ள டாங்க் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஹசீனா. இவரது கணவர் முகமது ஷரீப். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்த கணவரை சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். கேட்டபோதெல்லாம் பிறந்த வீட்டில் இருந்து பணம் பெற்று தந்தார். மீண்டும் ஒரு லட்ச ரூபாய் வாங்கி வரும்படி, ஹசீனாவை அடித்து உதைத்துள்ளார் ஷரீப். ஆவேசமடைந்த ஹசீனா, தனது பிறந்த
வீட்டில் இருந்து, தபால் மூலம் கணவருக்கு "தலாக்' நோட்டீஸ் அனுப்பிவிட்டார். ஆனால், இந்த விவாகரத்தை ஏற்க மறுக்கிறார் ஷரீப். "தவறு செய்வது மனித இயல்பு தான். நான் தவறை திருத்திக் கொள்கிறேன். ஏழு குழந்தைகளுடன் நான் தனியே வசிப்பது முடியாத காரியம். எனக்கு இன்னொரு வாய்ப்பு வேண்டும்' என்று வாதிடுகிறார்.
ஷரீப்புக்கு முஸ்லிம் மத குருக்களும் ஆதரவாக உள்ளனர். முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் மஞ்சூர் அலாம், ""தபால் மூலம் தலாக் நோட்டீஸ் அனுப்பியது சரியானது அல்ல,'' என்று கூறுகிறார். டாங்க், காந்தெனா அமேரியா மசூதியின் மதகுரு உமர் நத்வி, ""ஆண்கள் மட்டுமே இது போன்ற முறையில் "தலாக்' நோட்டீஸ் அனுப்பி விவாகரத்து செய்ய முடியும். பெண்களுக்கு முஸ்லிம் சட்டத்தில் இதுபோன்ற செயல்களுக்கு இடம் இல்லை,'' என்கிறார்.
இது தொடர்பாக இஸ்லாமிய பண்டிதர்களிடம் கேட்ட போது, "பெண்கள் விவாகரத்து கோரும் போது, அதற்கு முஸ்லிம் மதத்தில் சில நிபந்தனைகளும், விதிமுறைகளும் உள்ளன. ஹசீனா விஷயத்தில், அவர் செய்தது சரியானது தானா என்பதை முஸ்லிம் சட்டப்புத்தகத்தை அலசி ஆராய்ந்து தான் முடிவு சொல்ல முடியும்' என்றனர். ஹசீனாவுக்கு
ஆதரவாக அவரது தந்தை உறுதியுடன் உள்ளார். ஹசீனாவும், யார் என்ன சொன்னாலும், இனி ஷரீப்புடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
நன்றிங்க 08.07.07 தினமலர்.
தலாக் எனும் விவாகரத்து செய்து கொள்ளும் சட்டம் கணவன், மனைவி இருவருக்குமே பொதுவானதாக இருக்கிறது. விவாகரத்து செய்து கொள்ளும் முறைகளில் வேண்டுமானால் சற்று வித்தியாசம் இருக்கிறது. மற்றபடி கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பொருந்திப் போகவில்லையென்றால் இருவருக்குமே பிரிந்து கொள்ளும் உரிமையை இஸ்லாம் வழங்கி இருக்கிறது.
எழுத்து மூலம் விவாகரத்து செய்யக்கூடாது என்று இஸ்லாத்தில் எந்த சட்டமும் இல்லை. ஆனால் எழுத்து மூலம் விவாகரத்தைத் தெரிவிக்கும் முறைக்கு ஒரு நிபந்தனை உண்டு. திருமணத்துக்கு எவ்வாறு இரு சாட்சிகளை ஏற்படுத்திக்கொள்கிறோமோ அதே முறையில் எழுத்து மூலம் தெரிவிக்கும் விவாகரத்துக்கும் இரண்டு சாட்சிகளை ஏற்படுத்தி உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், தன் கணவரிடமிருந்து பிரிந்து விட வேண்டும் என்பதில் ஹஸீனா உறுதியாக இருக்கும் நிலையில், அதை மறுக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. அவருடைய கணவருடன் சேர்ந்து வாழ வற்புறுத்தும் உரிமையும் எவருக்கும் இல்லை. இஸ்லாம் இதில் தலையிடுவதில்லை.
பெண்கள் குலா முறையில் விவாகரத்து பெற முன் வரும்போது அதை புறக்கணித்து கண்டிப்பாக உன் கணவருடன் நீ வாழ்ந்தாக வேண்டும் என்று சொல்லவும் இஸ்லாமிய மத பண்டிதர்களுக்கும் உரிமை இல்லை. அப்படி உரிமை உள்ளது என்று சொல்ல வருபவர்கள் தமது தரப்பு வாதத்திற்கான ஆதாரங்களை இஸ்லாத்திலிருந்து எடுத்தெழுதலாம்.
தன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய படவா முகமது ஷரீபை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
Wednesday, July 04, 2007
பத்மலட்சுமி விவாகரத்து செய்கிறார்!
சல்மான் ருஷ்டியை விவாகரத்து செய்கிறார் பத்மலட்சுமி?
லண்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 2 ஜூலை 2007 ( 17:52 IST )
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை அவரது மனைவி பத்மலட்சுமி விரைவில் வி வாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (60). இவரும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவரும், மாடல் அழகியுமான பத்மலட்சுமியும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
இருவரும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்தியாவில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக கலந்துகொண்டனர்.
எனினும், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சல்மான் ருஷ்டியை விவாகரத்து செய்ய பத்மலட்சுமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சல்மான் ருஷ்டியை திருமணம் செய்ததன் மூலம் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டதாகவும், இதனால் விரைவில் முறைப்படி அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தனது நணபர்களிடம் பத்மலட்சுமி கூறியதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றிங்க
விவாகரத்து செய்த கொண்ட மாடல் அழகியை திருமணம் செய்ய பலர் முன் வருவர். விவாகரத்தான ருஷ்டியின் நிலை...???
லண்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 2 ஜூலை 2007 ( 17:52 IST )
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை அவரது மனைவி பத்மலட்சுமி விரைவில் வி வாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (60). இவரும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவரும், மாடல் அழகியுமான பத்மலட்சுமியும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
இருவரும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்தியாவில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக கலந்துகொண்டனர்.
எனினும், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சல்மான் ருஷ்டியை விவாகரத்து செய்ய பத்மலட்சுமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சல்மான் ருஷ்டியை திருமணம் செய்ததன் மூலம் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டதாகவும், இதனால் விரைவில் முறைப்படி அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தனது நணபர்களிடம் பத்மலட்சுமி கூறியதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றிங்க
விவாகரத்து செய்த கொண்ட மாடல் அழகியை திருமணம் செய்ய பலர் முன் வருவர். விவாகரத்தான ருஷ்டியின் நிலை...???
Subscribe to:
Posts (Atom)