நீதிபதிகளின் நூதன போராட்டம் தற்காலிக வாபஸ்
புதன்கிழமை, நவம்பர் 7, 2007
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் மாஜிஸ்திரேட்டை தாக்கியதைக் கண்டித்து, மதிய உணவு இடைவேளை இல்லாமல், நூதனப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நீதிபதிகள் அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
எழும்பூர் 5வது பெருநகர நீதிபதி முருகானந்தம் சமீபத்தில் வக்கீல்களால் தாக்கப்பட்டார். இதை கண்டித்த தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம், நேற்று உணவு இடைவேளையின்றி பணியாற்றும் நூதனப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
ஆனால் இந்தப் போராட்டத்தை நீதிபதிகள் திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக நீதிபதிகள் சங்கத் தலைவர் ராமலிங்கத்தைத் தொடர்பு கொண்டு பேசினார் ஷா.
அப்போது, தாக்கப்பட்ட சம்பவத்தில் மேல் நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி உறுதியளித்தார்.
இதையடுத்து நீதிபதிகளின் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படுவதாக நீதிபதிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
நன்றிங்க
போராட்டங்களை தவிர்க்க ஆணையிடும் நீதியே போராட்டம் நடாத்தினால் என்னய்யா செய்ய முடியும்?
"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''
Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts
Wednesday, November 07, 2007
Saturday, September 01, 2007
டாடா ஆலை-19ம் தேதி கிருஷ்ணசாமி போராட்டம்.
டாடா ஆலை-19ம் தேதி கிருஷ்ணசாமி போராட்டம்
செப்டம்பர் 01, 2007
திருநெல்வேலி: டாடாவின் டைட்டானியம் ஆலை அமைவதை எதிர்த்து 19ம் தேதி திருநெல்வேலியில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
டைட்டானியம் ஆலை அமைவதை வரும் 3ம் தேதி எதிர்த்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. எனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையை அணுகி அனுமதி பெற்றுள்ளோம்.
அதன்படி வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு இடைச்சிவிளையில் ஊர்வலம் தொடங்கி அரசூர் பூச்சிக்காடு, நடுவங்குறிச்சி பிரகாசபுரம் வழியாக கொம்படைக் கோட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கவுள்ளோம்.
இதில் எந்த கட்சியினர் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். கேபிள் டிவி, டாஸ்மக் மதுக்கடை, மணல் குவாரிகளை தமிழக அரசே நடத்துவது போல் கனிம வள மணல் விற்பனை தொழிலையும் அரசே ஏன் ஏற்று நடத்தக்கூடாது? என்றார்.
மேலும் தாமிரபரணி மணல் கொள்ளையை எதிர்த்து விரைவில் மிகப் பெரிய போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றிங்க
துவங்கட்டும், தமிழ்நாடு டைட்டானியம் வாரியம்.
செப்டம்பர் 01, 2007
திருநெல்வேலி: டாடாவின் டைட்டானியம் ஆலை அமைவதை எதிர்த்து 19ம் தேதி திருநெல்வேலியில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
டைட்டானியம் ஆலை அமைவதை வரும் 3ம் தேதி எதிர்த்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. எனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையை அணுகி அனுமதி பெற்றுள்ளோம்.
அதன்படி வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு இடைச்சிவிளையில் ஊர்வலம் தொடங்கி அரசூர் பூச்சிக்காடு, நடுவங்குறிச்சி பிரகாசபுரம் வழியாக கொம்படைக் கோட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கவுள்ளோம்.
இதில் எந்த கட்சியினர் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். கேபிள் டிவி, டாஸ்மக் மதுக்கடை, மணல் குவாரிகளை தமிழக அரசே நடத்துவது போல் கனிம வள மணல் விற்பனை தொழிலையும் அரசே ஏன் ஏற்று நடத்தக்கூடாது? என்றார்.
மேலும் தாமிரபரணி மணல் கொள்ளையை எதிர்த்து விரைவில் மிகப் பெரிய போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றிங்க
துவங்கட்டும், தமிழ்நாடு டைட்டானியம் வாரியம்.
Saturday, August 18, 2007
ஆண்டிப்பட்டியில் மணல் அள்ளுகிறார்கள்.
ஆண்டிப்பட்டியில் மணல் அள்ளும் திமுகவினர்:
போராட்டத்தில் குதிப்பேன்: ஜெ எச்சரிக்கை
ஆகஸ்ட் 18, 2007
சென்னை: மணல் அள்ளுவதை தடுக்காவிட்டால் ஆண்டிப்பட்டி பகுதியில் நானே போராட்டத்தில் குதிப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள ஆற்றுப் படுகையில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெள்ளிமலையில் இருந்து வைகை ஆற்றுக்கு வரும் தண்ணீர், வைகை அணைக்கு சென்று அங்கிருந்து திறந்துவிடப்பட்டு ராமநாதபுரம் வரை பாய்கிறது. இதனால் விவசாயிகளும், பொது மக்களும் பெரிதும் பயனடைகிறார்கள்.
மக்களின் அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்து கொண்டிருக்கும் இந்த நீரை அவர்கள் இழக்கவுள்ளார்கள். தண்ணீர் செல்ல வேண்டிய இடத்தில் திமுகவினர் தொடர்ந்து மணலை அள்ளிய வண்ணம் இருக்கிறார்கள்.
இதனால் தண்ணீர் எந்த நோக்கத்திற்காக திறந்து விடப்படுகிறதோ அது நிறைவேறாமல் போகப் போகிறது.
மணலை அள்ளுவதால் பொது மக்களும், விவசாயிகளும் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
அதிலும் குறிப்பாக, ஆண்டிப்பட்டியில் உள்ள துரைசாமிபுரம் முதல் அய்யனார்புரம் வரையுள்ள ஆற்றுப் படுகைகளில் சுமார் 20 அடி அளவிற்கு மணல் மேடுகளைக் கொண்டிருப்பதனால் தான் வைகை ஆற்றுத் தண்ணீர் அந்த இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் சீராக செல்ல முடிகிறது.
இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் சுமார் 80,000 மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயனுள்ளதாக இத்தண்ணீர் இருக்கிறது. துரைசாமிபுரம் முதல் அய்யனார்புரம் வரையுள்ள பகுதியில் மணல் அள்ளுவதற்கு இதுவரை எந்த அரசும் அனுமதி கொடுத்தது இல்லை.
ஆனால் திமுக அரசு தான் முதல் முறையாக இதற்கு அனுமதி வழங்கியதன் பேரில், தேனி மாவட்ட கலெக்டரால் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் திமுகவினரின் சுயலாபத்திற்காக மணல் அள்ளுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்கிற கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை பகுதியில் வைகையாற்றில் திமுகவினர் மணல் அள்ளுகிற செயல் மனிதாபிமானமற்ற, ஈவு, இரக்கமற்ற செயலாகும்.
திருட்டுத்தனமாக யார் மணல் எடுத்துச் செல்ல முற்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசுக்கு வரவேண்டிய வருவாயை ஏமாற்றிப் பிழைக்க நினைப்போரை வளர்த்திடக்கூடாது என்றும் கடந்த 02-08-2007 அன்று நடந்த கனிம வளத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் அதற்கு முரணாக திமுக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இத்தகைய செயலை கடுமையாக கண்டிக்கிறேன்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீருக்காகவும், விவசாய பாசனத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கிற வைகையாற்றில் உள்ள மணலை எடுப்பதற்கு வழங்கப்பட்டிருக்கும் அரசின் அனுமதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இல்லாவிட்டால், அப்பகுதி மக்களை திரட்டி அதிமுக சார்பில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அரசுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நன்றிங்க
ஜெயாக்கா ஆண்டிப்பட்டியில் மட்டும் குதிக்காமல் தமிழ் நாட்டில் மணல் அள்ளுகிற இடத்திலெல்லாம் குதிக்கட்டும் போராட்டத்தில்.
ம்ம்ம்... ஆட்சி கையிலே இல்லேன்னா எல்லாரும் இப்படி மாறிடுவாங்க போலேயே... நெசந்தானா...?
போராட்டத்தில் குதிப்பேன்: ஜெ எச்சரிக்கை
ஆகஸ்ட் 18, 2007
சென்னை: மணல் அள்ளுவதை தடுக்காவிட்டால் ஆண்டிப்பட்டி பகுதியில் நானே போராட்டத்தில் குதிப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள ஆற்றுப் படுகையில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெள்ளிமலையில் இருந்து வைகை ஆற்றுக்கு வரும் தண்ணீர், வைகை அணைக்கு சென்று அங்கிருந்து திறந்துவிடப்பட்டு ராமநாதபுரம் வரை பாய்கிறது. இதனால் விவசாயிகளும், பொது மக்களும் பெரிதும் பயனடைகிறார்கள்.
மக்களின் அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்து கொண்டிருக்கும் இந்த நீரை அவர்கள் இழக்கவுள்ளார்கள். தண்ணீர் செல்ல வேண்டிய இடத்தில் திமுகவினர் தொடர்ந்து மணலை அள்ளிய வண்ணம் இருக்கிறார்கள்.
இதனால் தண்ணீர் எந்த நோக்கத்திற்காக திறந்து விடப்படுகிறதோ அது நிறைவேறாமல் போகப் போகிறது.
மணலை அள்ளுவதால் பொது மக்களும், விவசாயிகளும் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
அதிலும் குறிப்பாக, ஆண்டிப்பட்டியில் உள்ள துரைசாமிபுரம் முதல் அய்யனார்புரம் வரையுள்ள ஆற்றுப் படுகைகளில் சுமார் 20 அடி அளவிற்கு மணல் மேடுகளைக் கொண்டிருப்பதனால் தான் வைகை ஆற்றுத் தண்ணீர் அந்த இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் சீராக செல்ல முடிகிறது.
இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் சுமார் 80,000 மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயனுள்ளதாக இத்தண்ணீர் இருக்கிறது. துரைசாமிபுரம் முதல் அய்யனார்புரம் வரையுள்ள பகுதியில் மணல் அள்ளுவதற்கு இதுவரை எந்த அரசும் அனுமதி கொடுத்தது இல்லை.
ஆனால் திமுக அரசு தான் முதல் முறையாக இதற்கு அனுமதி வழங்கியதன் பேரில், தேனி மாவட்ட கலெக்டரால் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் திமுகவினரின் சுயலாபத்திற்காக மணல் அள்ளுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்கிற கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை பகுதியில் வைகையாற்றில் திமுகவினர் மணல் அள்ளுகிற செயல் மனிதாபிமானமற்ற, ஈவு, இரக்கமற்ற செயலாகும்.
திருட்டுத்தனமாக யார் மணல் எடுத்துச் செல்ல முற்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசுக்கு வரவேண்டிய வருவாயை ஏமாற்றிப் பிழைக்க நினைப்போரை வளர்த்திடக்கூடாது என்றும் கடந்த 02-08-2007 அன்று நடந்த கனிம வளத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் அதற்கு முரணாக திமுக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இத்தகைய செயலை கடுமையாக கண்டிக்கிறேன்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீருக்காகவும், விவசாய பாசனத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கிற வைகையாற்றில் உள்ள மணலை எடுப்பதற்கு வழங்கப்பட்டிருக்கும் அரசின் அனுமதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இல்லாவிட்டால், அப்பகுதி மக்களை திரட்டி அதிமுக சார்பில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அரசுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நன்றிங்க
ஜெயாக்கா ஆண்டிப்பட்டியில் மட்டும் குதிக்காமல் தமிழ் நாட்டில் மணல் அள்ளுகிற இடத்திலெல்லாம் குதிக்கட்டும் போராட்டத்தில்.
ம்ம்ம்... ஆட்சி கையிலே இல்லேன்னா எல்லாரும் இப்படி மாறிடுவாங்க போலேயே... நெசந்தானா...?
Subscribe to:
Posts (Atom)