Showing posts with label கைது. Show all posts
Showing posts with label கைது. Show all posts

Wednesday, August 22, 2007

ஜமாத் தலைவர் மலேசியாவில் கைது?

தவ்ஹீத் ஜமாத் தலைவர் மலேசியாவில் கைது?:
ஆதரவாளர்கள் சென்னையில் போராட்டம்!


ஆகஸ்ட் 22, 2007

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் மலேசியாவில் கைது செய்யப்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் மலேசியா சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு பொதுக் கூட்டம் எதிலும் பேசக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. இதையடுத்து சுற்றுலா விசாவில் அவர் மலேசியா சென்றார்.

இந் நிலையில் கோலாலம்பூரில் நடந்த ஒரு இஸ்லாமிய அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் ஜெய்னுலாப்தீன். அவரது பேச்சு அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையடுத்து ஜெய்னுலாப்தீனை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிகிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். உடனடியாக ஜெய்னுலாப்தீனை நாடு கடத்துமாறு மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்தத் தகவல் நேற்று நள்ளிரவில் சென்னையில் பரவியது. இதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஏராளமானோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் முன்பு திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.

போலீஸார் விரைந்து வந்து அவர்களை அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இன்று காலையும் ஜமாத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று மலேசிய துணைத் தூதரகம் முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே ஒருமுறை இலங்கை சென்றபோதும் ஜெய்னுலாப்தீன் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

பொதுவானவை.

Monday, August 20, 2007

முடிந்தால் என்னை கைது செய்யலாம்!

'முடிந்தால் என்னை கைது செய்யலாம்':
தமிழக அரசுக்கு உமா பாரதி சவால்


ஆகஸ்ட் 20, 2007

சென்னை: முடிந்தால் என்னை தமிழக அரசு கைது செய்து பார்க்கட்டும் என முன்னாள் பாஜக மூத்த தலைவரும் பாரதீய ஜன் சக்தி கட்சியின் தலைவருமான உமா பாரதி சவால் விட்டுள்ளார்.

சேது சமுத்திர திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் உமா பாரதி மீது, மதக் கலவரத்தைத் தூண்டிய வகையில் பேசியதாக ராமேஸ்வரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய உமா,

என் மீது ராமேஸ்வரம், திருச்சி காவல் நிலையங்களில் வன்முறையைத் தூண்டியதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில் நான் முன் ஜாமீன் கோரவில்லை. காரணம், நான் அப்படிப் பேச மாட்டேன் என்று எழுதித் தந்தால் தான் முன் ஜாமீன் தருவார்கள்.

ராமர் சேது பாலத்தைக் காக்க என் வாழ்க்கையை அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன். ராமர் பாலத்தை உடைப்பதை எதிர்த்து என் போராட்டம் தொடரும். என்னை தூக்கில் போட்டாலும் கூட பரவாயில்லை. தமிழ்நாட்டில் சிறைகள் குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை.

முடிந்தால் என்னை முதல்வர் கருணாநிதி கைது செய்யட்டும். நான் இந்தத் திட்டதையே எதிர்ப்பதாக சொல்வதாக தவறு. ஆனால், இதனால் மீனவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அரசு தர வேண்டும். இதனால் சுனாமி ஏற்படாது என்ற உத்தரவாதத்தைத் தர வேண்டும். (சுனாமிக்கு எப்படி உத்தரவாதம் தருவது).

விடுதலைப் புலிகள் நடமாட்டம் நிறைந்த இப் பகுதியில் இத் திட்டத்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற உறுதிமொழியைத் தர வேண்டும். அதே போல ராமர் பாலத்தை இடிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியையும் தந்தாக வேண்டும்.

இந்த உத்தரவாதங்கள், உறுதிமொழிகள் தரப்படும் வரை சேது சமுத்திரத் திட்டப் பணிகளை நிறுத்த வேண்டும். நாளை நான் ரமேஸ்வரம் செல்கிறேன். அங்கு போனவுடன் எனது அடுத்தகட்ட திட்டத்தை அறிவிப்பேன்.

மேதா பட்கர், அருந்ததி ராய் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.

ராமர் பாலம் இருந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. பிரதமர் அலுவலகத்திலும் அது தொடர்பாக கடிதங்கள் உள்ளன.

இத் திட்டத்தால் நாட்டுக்கு கேடு தான் விளையும், குறிப்பாக தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும். இந்தத் திட்டமே மிக மிக அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை இடதுசாரிகள் உண்மையிலேயே எதிர்த்தால் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை உடனே வாபஸ் பெற வேண்டும் என்றார் உமா பாரதி.

நன்றிங்க

அடேங்கப்பா... ஆட்டம் பலம்மாயிருககே, உறுதிமொழி பட்டியல் ரொம்ப நீளந்தான்.

Tuesday, August 14, 2007

2. ப்ளுபிலிம் ஒத்திகையில் ஈடுபட்ட விபசார கும்பல்.

தமிழ்நாடு

11. ப்ளுபிலிம் ஒத்திகையில் ஈடுபட்ட விபசார கும்பல் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்.

கோயம்பேடு : ஜெ.ஜெ., நகரில் குரூப் செக்சில் ஈடுபட்டு கைதானவர்கள் ஆபாச "சிடி' படப்பிடிப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்டதும், அவர்களுடன் சிக்கிய புரோக்கர், "தொழிலில்' ஜூனியர் கன்னட பிரசாத் என்று பெயரெடுத்தவர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, ஜெ.ஜெ.,நகர் மற்றும் முகப்பேர் பகுதிகளில் அரசு உயர் அதிகாரிகள் மட்டுமின்றி தொழிலதிபர்களும், ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் வசித்து வருகின்றனர். உயர் வருவாய் பிரிவினரான இவர்களில் "சபல' பிரியர்களை குஷிபடுத்துவதற்காக இப்பகுதிகளில் உள்ள சில வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் விபசார தொழில் களைகட்டியுள்ளது. இது குறித்து போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து திருமங்கலம் உதவி கமிஷனர் அழகு சோலைமலை தலைமையில் ஜெ.ஜெ.,நகர் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர், அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

கோல்டன் ஜார்ஜ் நகர் சுடுகாடு பகுதியில் குரூப் செக்ஸில் ஈடுபட்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த புரோக்கர்கள் பஷீர்(22) சயனுதீன்(33), சமீர்(22) ஆகியோரும் அவர்களுடன் விபசார பெண்கள் ஆயிஷா(19), ரஷீயா(18), பூஜா மற்றும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த விபசார புரோக்கர் சாகுல் ஹமீது(44) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் விபசார புரோக்கர் சாகுல் ஹமீது குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட கன்னட பிரசாத்தைப் போலவே சாகுல் ஹமீதும் தமிழகம் முழுவதும் விபசார தொழிலை நடத்தி வந்துள்ளார். இவன் கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அழகான ஏழை பெண்களை வேலை தருவதாக தமிழகம் அழைத்து வந்து பல இடங்களில் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும் கோல்டன் ஜார்ஜ் நகர் சுடுகாட்டில் கைது செய்யப்பட்டபோது அவர்கள் ஆபாச "சிடி' படப்பிடிப்பிற்கான ஒத்திகையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இரவு நேரங்களில் "தொழில்' நடத்தும் இந்த கும்பல் பகலில் ஆள் நடமாட்டமற்ற சுடுகாட்டுப் பகுதியில் மறைந்து இருப்பார்களாம். ஏற்கனவே, இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் விபசார வழக்குகளும் பதிவாகியுள்ளது. பிற மாநில பெண்களை "சப்ளை' செய்வதில் சாகுல் ஹமீது பிரபலமானவர் என்பதால் அவரை "ஜூனியர் கன்னட பிரசாத்' என்று அவர்களது வட்டாரத்தில் பட்டப் பெயர் வைத்து அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஜெ.ஜெ.,நகர் போலீசார் சாகுல் ஹமீதை, தங்களது பாதுகாப்பில் எடுத்து விசாரித்தால் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதனிடையே அவரை பெயிலில் எடுக்க வக்கீல்கள் மனு செய்துள்ளதாக தெரிகிறது. இவ்வழக்கு அம்பத்துõர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

நன்றிங்க, DINAMALAR 14/08/07

அட மானங்கெட்ட ஜென்மங்களா...!