Sunday, 23 March, 2008 11:10 AM
.
வாடிகன், மார்ச் 23: இத்தாலியை சேர்ந்த இஸ்லாமிய தலைவர் ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்ட வாடிகனில் நடைபெற்ற விழாவில் மதம் மாறிய அவருக்கு போப் 16வது பெனடிக்ட் ஞானஸ்நானம் செய்து வைத்தார்.
.
மக்தி அல்லாம் என்ற அந்த இஸ்லாமிய தலைவர் பத்திரிகை ஒன்றில் துணை ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை விமர்சித்து அவர் கட்டுரைகள் எழுதி வந்தார். இதன் காரணமாக அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் வாடிகனில் இன்று நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கத்தோலிக்க மதத்திற்கு அவர் மாறினார். அவருக்கு போப் 16வது பெனடிக்ட் ஞானஸ்நானம் செய்து வைத்தார்.
அல்லாமுடன் சேர்ந்து மேலும் 6 இஸ்லாமியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர்.
எகிப்தில் பிறந்த அல்லாம் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களில் பயின்றவர். தன் வாழ்நாளில் இஸ்லாத்தை தாம் கடைபிடித்ததேயில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றிங்க
//தன் வாழ்நாளில் இஸ்லாத்தை தாம் கடைபிடித்ததேயில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.//
ம்ம்ம்...
ஆள் யாருன்னு இப்போ வெளங்குது!