Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Wednesday, June 11, 2008

புதைக்கப்பட்ட வெடி குண்டுகள்

கும்மிடிப்பூண்டி: புதைத்து வைக்கப்பட்ட ராக்கெட் குண்டுகள்-2 பேர் கைது

புதன்கிழமை, ஜூன் 11, 2008

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே போலீசார் நடத்திய சோதனையில் ஒரு நிறுவனத்தின் குடவுனில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

சென்னையை அருகே கும்மிடிப்பூண்டியில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி தோட்டாக்களை மாணவர்கள் விளையாட்டாக எரித்தபோது அவை வெடித்ததில் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த தோட்டாக்கள் அங்கு எப்படி வந்தன என்ற விசராணை நடந்தபோது சிப்காட் தொழிற்பேட்டை அருகே கிணற்றில் மூட்டை மூட்டையாக துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கின.

இதையடுத்து தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அந்த தோட்டாக்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பழமையான தோட்டாக்கள் என்று தெரியவந்துள்ளது.

தொழிற்பேட்டையில் உள்ள ஏதாவது ஒரு பழைய இரும்பு நிறுவனம் அதை உருக்க இறக்குமதி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பழைய இரும்பு சாதனங்களை இறக்குமதி செய்யும்போது அவற்றுடன் சேர்ந்து இந்த தோட்டாக்கள் வந்திருக்கலாம், போலீசாருக்கு பயந்து இதை அவர்கள் வெளியில் கொட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் 16 இரும்பு நிறுவனங்களில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது விநாயகா அலாய்ஸ் ஸ்டீல் என்ற நிறுவனம் இதை இறக்குமதி செய்தது தெரிய வந்தது. மேலும் இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தான் போலீசுக்கு பயந்து தோட்டாக்களை கிணற்றில் போட்டனர் என்பதும் உறுதியானது.

இதையடுத்து அந்த நிறுவனத்தில் மேலும் சோதனைகள் நடந்தபோது குவியல் குவியலாக கையெறி குண்டுகள், ஏ.கே.47 துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணிவெடிகள் ஆகியவையும் இருந்தன.

மேலும் அந்த நிறுவனத்தின் குடவுனில் தோண்டிப் பார்த்தபோது ஏராளமாக குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. இவை மிகப் பழமையான குண்டுகளாகும், பெரும்பாலானவற்றில் அமெரிக்க முத்திரை உள்ளது.

இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்துவரும் இந்த நிறுவனத்தி்ன் அதிபர் அசோக்குமார் ஜெயின் (45), பொது மேலாளர் மனோஜ்குமார் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த குண்டுகளை கொதிகலனில் போட்டு உருக்கினால் வெடித்துச் சிதறிவிடும் என்பதால், வெடிமருந்தை நீக்கிவிட்டு பின்னர் உருக்கவும், அதுவரை வெளியாரின் கண்களில் படாமல் இருக்கவும் புதைத்து வைத்ததாக இந்த இருவரும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட எஸ்பி செந்தாமரைக்கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,

இரும்பு உருக்கு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் இரும்பு ஸ்கிராப்புடன் சில நேரம் வெடிபொருட்களும் வருவதுண்டு. அப்படி வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

அதைவிட்டுவிட்டு பதுக்கி, புதைத்து வைத்தாலோ, வெளியே வீசினாலோ அது சட்டப்படி குற்றம் என்றார்.

தீவிரவாத தொடர்பு இல்லை-டிஜிபி:

இந் நிலையில் டிஜிபி ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கும்மிடிப்பூண்டி இருகே சிப்காட் வளாகத்தில் பயன்படுத்தாத ஒரு கிணற்றில் துருப்பிடித்த நிலையில், பழைய பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன. தீவிரவாத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்றும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பற்றியும் சில தரப்பில் இருந்து (ஜெயலலிதா) குறை கூறப்படுகிறது. இது உண்மைக்குப் புறம்பானது.

கைப்பற்றப்பட்ட பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள், செல்கள், கையெறி குண்டுகள் மிகவும் பழையானவை (1917 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் தயாரானவை) என்பதும், அவை இந்தியாவில் தயாரானவை அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து இரும்பு கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்து, அவற்றை உருக்கி கம்பிகளாக மாற்றி விற்பனை செய்து வரும் 14 ஸ்டீல் கம்பெனிகள் சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகின்றன. இவற்றுள் ஒரு நிறுவனத்துக்கு வந்த கழிவுப் பொருட்களுடன் இந்த துருபிடித்த தோட்டாக்கள் வந்துள்ளதாகவும், அவற்றை கொதிகலனில் பயன்படுத்த முடியாதென்பதால், அந்த நிறுவனத்தினர் அவற்றை கிணற்றுக்குள் போட்டுள்ளனர்.

இது தொடர்பாக விநாயகா அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவன உரிமையாளர் அசோக்குமார் ஜெயின், மேலாளர் மனோஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்படுகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த அவை எதுவும் தற்போது பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல. எனவே இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளை தொடர்புபடுத்த எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

நன்றிங்க

//பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த அவை எதுவும் தற்போது பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல. எனவே இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளை தொடர்புபடுத்த எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.//


பொசுக்குன்னு இப்படிச் சொல்லிட்டா எப்படி?

அசோக், மனோஜ் என்ற பெயருக்குப் பதிலா 2 துலக்கப்பயலுவ பெயரைச் சேத்து எவனாவது இளிச்சவாய துலுக்கப்பயலுக 2 பேரை பிடித்து, அமெரிக்காவிலிருந்து பயங்கர ஆயுதங்களைக் கடத்திய பயங்கரவாதிகள் னு பேட்டி கொடுக்கலாமே, என்ன நாஞ்சொல்றது!

Thursday, February 21, 2008

அணு சக்தி ஒப்பந்தம்

அணு சக்தி ஒப்பந்தம் - யு.எஸ். எம்பிக்கள் திடீர் கெடு

வியாழக்கிழமை, பிப்ரவரி 21, 2008

டெல்லி: மே மாதத்திற்குள் அணு சக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் ஜூலைக்குள் அதை அமல்படுத்த முடியும். இல்லாவிட்டால் அடுத்து வரும் புதிய அரசு, ஒப்பந்தத்தை முழுமையாக மறு பரிசீலனை செய்யும். அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்காது என்று அமெரிக்க எம்.பிக்கள் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

அமெரிக்க எம்.பிக்களான ஜனநாயகக் கட்சியின் ஜான் கெர்ரி, ஜோசப் பிடேன், குடியரசுக் கட்சியின் சச் ஹேகல் ஆகியோர் டெல்லி வந்துள்ளனர்.

டெல்லியில், செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், மே மாதத்திற்குள் ஒப்பந்தத்தை இந்திய அரசு அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் அதை ஜூலை மாதத்திற்குள், புதிய அரசு அமைவதற்குள் ஒப்புதல் பெறப்படும். அதைத் தாண்டி விட்டால், புதிய அரசு வந்து விடும். புதிய அரசு இதே நிலையில் ஒப்பந்தத்தை ஏற்கும் எனக் கூற முடியாது.

ஒப்பந்தம் முழுமையாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். பல புதிய கெடுபிடிகளும், கட்டுப்பாடுகளும் வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், புதிய நிபந்தனைகளும் விதிக்கப்படலாம்.

மேலும், அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் உள்ளிட்ட பிற விவகாரங்களையும் புதிய அரசு கிளப்பக் கூடும்.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த அரசு முடிவதற்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது இந்தியாவுக்கு நல்லது. இல்லாவிட்டால் இந்தியாவுக்கு சிக்கலாகி விடும்.

இந்தியா ஜனநாயக நாடு. இங்குள்ள சில கட்டாயங்கள், நிர்பந்தங்கள் அமெரிக்காவுக்குப புரிகிறது. ஆனால் ஒப்பந்தம் நிறைவேறியாக வேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது. இது தோல்வி அடைந்தால், அமெரிக்கா மீது இந்தியாவில் தவறான எண்ணங்கள் பரவி விடும் என்றார் அவர்.

பாகிஸ்தான் தேர்தலில் பார்வையாளர்களாக செயல்பட்ட ஜான் கெர்ரி உள்ளிட்ட 3 எம்.பிக்களும் நேற்று பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பல்வேறு எம்.பிக்கள் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினர்.

இடதுசாரிகள் கண்டனம்:

அமெரிக்க எம்.பிக்கள் விதித்துள்ள மே மாத கெடுவுக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை.

இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும் என்பதாலேயே இதை அமல்படுத்த அமெரிக்கா நெருக்குதல் கொடுக்கிறது. ஆனால் அதற்கு இந்தியா அடி பணியாது என்று கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறுகையில், உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது. எனவே அதைத் தடுக்கத்தான் இவ்வாறு நெருக்கடி கொடுக்கிறது அமெரிக்கா என்று கூறியுள்ளார்.

நன்றிங்க

தூண்டில் காரன் மிதப்பு மேலேதான் கண்ணாயிருப்பான்!

Tuesday, September 11, 2007

பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது அமெரிக்கா.

10.பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது அமெரிக்கா : பிடல் காஸ்ட்ரோ குற்றசாட்டு

ஹவானா : அமெரிக்கா பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ குற்றம் சாட்டியுள்ளார். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ல் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தின குறிப்பில் இந்த தாக்குதலுக்கும் தீவிரவாதத்திற்கும் கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மக்களை அமெரிக்கா தவறாக வழி நடத்தி செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நன்றிங்க, தினமலர் 12.09.2007

மேய்ப்பவர் சரியில்லேன்னா ஆடுகள் வழி தவறிப்போகும்!

Sunday, September 02, 2007

நான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் உசாமா!?

06.நான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் `சவுக்கிய'மாக வாழ்கிறார் ஒசாமா



வாஷிங்டன் :அமெரிக்க படையினரிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும், தனது குடும்பம் குழந்தைகளுடன் பாதுகாப்பாகவே இருக்கிறார் அல்-குவைதாவின் ஒசாமா பின் லாடன்.




ஆறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வர்த்தக மையத்தின் மீது அல்-குவைதா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலிருந்து, அதன் தலைவர் ஒசாமா பின் லாடனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறது அமெரிக்கா.அமெரிக்காவின் சி.ஐ.ஏ., புலனாய்வு அமைப்பின்,பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு தலைவர், தனது பிரிவினரிடம், `ஒசாமாவின் தலையை அறுத்து, பெட்டியில் வைத்து கொண்டு வாருங்கள். எப்போதும், ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டி உங்களுடன் இருக்கட்டும்' என்று உத்தரவிடும் அளவுக்கு கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.அமெரிக்க படையினரும், உளவுப் பிரிவினரும் ஒசாமாவை தீவிரமாக தேடினர். அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்டாலும், ஒசாமா தனது குடும்பத்துடன் தான் தலைமறைவாக இருக்கிறார். அவரை சுற்றி குறைந்த பட்சம் 40 காவலர்கள் நிற்பர். அதைத்தாண்டி, அடுத்தடுத்த அடுக்கு பாதுகாப்பும் அவருக்கு உள்ளது.ஒரு கட்டத்தில் அமெரிக்க படையினர் ஒசாமா தலைமறைவாக இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து வந்ததை, மெய்காவலர் பார்த்து விட்டார். உடனடியாக ஒயர்லெஸ் ரேடியோ மூலம் தகவல் அனுப்பினார்.தனது மெய்க்காவலர்களுக்கு வேத மந்திரமாக ஒரு விஷயத்தை போதித்து வைத்திருக்கிறார் ஒசாமா. அமெரிக்கப் படை சுற்றி வளைத்துவிட்டால், `ஒசாமவை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ளவேண்டும்' என்பது தான் அது.அமெரிக்கப் படையினர் நெருங்கியதை அறிந்த மெய்க்காவலர்கள், அவரை படுக்க வைத்து வேறிடத்துக்கு துாக்கிச் சென்று விட்டனர். மலைப்பகுதி போர் தந்திரத்தில் அமெரிக்கப் படையினருக்கு திறமை இல்லாததால், ஒசாமாவை பிடிக்க முடியாமல் போய்விட்டது. மலைக்குகைகளை வெறுமனே சோதனையிடுவது தான் அவர்களது வழக்கமாக இருந்தது.

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவதற்கு முன் ஒசாமாவின் மெய்க்காவலராக இருந்தவர் நசிர் அல் பாரி. ஒசாமாவின் வாழ்க்கை முறை பற்றி, `நியூஸ் வீக்' இதழுக்கு பிரத்யேகமாக அவர் பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறியதாவது:எனக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தபோது, பேரீச்சம்பழத்தை தனது வாயில் கூழ்போல அரைத்து, அதை அக்குழந்தைக்கு ஊட்டினார். அப்போது, குழந்தையின் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு, குழந்தையின் காதருகே, `அல்லா ஓ அக்பர்' என்று கூறினார்.மெய்க்காவலர்களிடம் பெரிதும் அன்பு செலுத்துபவர் ஒசாமா. தலைமறைவு வாழ்க்கை வசித்தாலும், குடும்பத்தை விட்டு அவர் பிரிவது இல்லை.நான் அவரிடம் மெய்க்காவலராக இருந்த போது, அவருக்கு ஆறு மனைவிகள். எட்டு ஆண் குழந்தைகள்; ஆறு பெண் குழந்தைகள். இவர்களில் மூத்த ஆண் குழந்தைகள் மூன்று பேர் சவுதி சென்றிருந்தனர்.தற்போது, ஒசாமா தனது நான்கு மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளுடன், குடும்ப வாழ்க்கையில் தான் உள்ளார். திருப்தியான குடும்ப வாழ்க்கையை அவர் மேற்கொண்டு வருகிறார். அவர் உண்மையான குடும்பத் தலைவராக செயல்படுகிறார். மனைவி மற்றும் குழந்தைகள் தேவையிலும் கவனம் செலுத்துகிறார்.அவரை மரியாதையுடன், `ஷேக்' என்று தான் நாங்கள் அழைப்போம்.

உலகிலேயே வல்லரசு நாடான அமெரிக்காவால் கூட அவரை பிடிக்க முடியாததால், முஸ்லிம்கள் மத்தியில் அவர் மீது மரியதை அதிகரித்து உள்ளது. ஒசாமாவின் கவுரவமும், தைரியமும் முஸ்லிம்கள் மத்தியில் அவரது புகழை மேலும் உயர்த்தி உள்ளது. அல்லாவால் அனுப்பப்பட்டவர் என்று கருதுவதால், ஒசாமா செய்யும் எந்த காரியமும் சரியானதாகவே இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர் முஸ்லிம்கள்.பயங்கரவாதிகள் ஆவேசமாக பேசுவர் என்று தான் மற்றவர்கள் நினைப்பர். ஆனால், ஒசாமா மென்மையாக பேசக்கூடியவர். தனது பேச்சின் இடையே, குரானில் இருந்தும் சில கவிதைகளில் இருந்தும் மேற்கோள் காட்டுவார். எல்லாமே இஸ்லாமிய வழி அறப்போரை வலியுறுத்துவதாகத்தான் இருக்கும்.அவர் பேசும் போது, அமெரிக்கா பற்றி மட்டும் கோபமாக குறிப்பிடுவார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவருக்கு அமெரிக்கா மீது வெறுப்பு வளர்ந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் தயாரான எதையும் அவர் பயன்படுத்துவது இல்லை. பெப்சி கூட குடித்தது இல்லை.

ஒசாமாவின் மெய்காவலர் குழுவில் இருந்து நான் விலகி ஏமன் வந்து விட்டாலும், இப்போதும் கூட அல்-குவைதாவின் அனுதாபி தான்.இவ்வாறு அல் பாரி கூறினார்.அல் பாரி கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய, `நியூஸ் வீக்' பத்திரிகை, `இன்னும் மலை சூழ்ந்த பகுதியில் தான் ஒசாமா தலைமறைவு வாழ்க்கையில் இருக்க வேண்டும்; அப்பகுதியில் கவனம் செலுத்தினால், ஒசாமாவை பிடித்து விடலாம்' என குறிப்பிட்டுள்ளது.

நன்றிங்க, தினமலர்-02.09.2007

நல்ல புலன் விசாரணை

அமெரிக்கா உசாமாவை தேடி மலை சூழ்ந்த பகுதிக்கு செல்லும்போது அல்பாரியையும் கையோடு கூட்டிச் செல்லட்டும் வழி காண்பிக்க.

Thursday, August 16, 2007

அணு குண்டு சோதனை நடத்தினால்...

அணு குண்டு சோதனை நடத்தினால்
ஒப்பந்தம் ரத்து: அமெரிக்கா


ஆகஸ்ட் 16, 2007

வாஷிங்டன்: இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் அடுத்த நிமிடமே இந்தியாவுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள சிவில் அணு சக்தி ஒப்பந்தம் ரத்தாகி விடும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது.

அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனால் இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் காங்கிரஸ் கூட்டணி அரசு உறுதியாக உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு பாதகமான பல அம்சங்கள் இருப்பதாக பரவலாக கருத்து உள்ள நிலையில், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் உடனடியாக ஒப்பந்தம் முறிந்து விடும் என அமெரிக்கா திடீரென மிரட்டியுள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மக் கூறுகையில், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் உடனடியாக ஒப்பந்தம் முறிவடைந்து விடும் என ஒப்பந்தத்தில் ஒரு அம்சம் உள்ளது.

அதேபோல அணு சோதனை நடத்தினால் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கிய அனைத்துப் பொருட்களும் திரும்பப் பெறப்படும் எனவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது என்றார் மெக்கார்மக்.

அமெரிக்காவுடனான 123 அணு சக்தி ஒப்பந்தத்தில், இந்தியாவின் அணு குண்டுச் ேசாதனைக்கு எந்தவிதத் தடையும் இல்லை. அது நமது உரிமை. அதை நாம் அமெரிக்காவிடம் விட்டுக் கொடுக்கவில்லை என்று சமீபத்தில்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.

ஆனால் பிரதமரின் பேச்சில் சம்மட்டியால் அடிப்பது போல, அணு குண்டு சோதனை செய்தால், ஒப்பந்தம் ரத்து என பட்டவர்த்தனமாக அமெரிக்கா தெளிவாகத் தெரிவித்து விட்டது.

நன்றிங்க

அணு ஒப்பந்தத்தில் அமெரிக்கா போட்ட குண்டு சூப்பர்!

Wednesday, August 08, 2007

நாம் என்ன அமெரிக்காவின் அடிமைகளா?

நாம் என்ன அமெரிக்காவின் அடிமைகளா?- ஜெ. கேள்வி

ஆகஸ்ட் 07, 2007

சென்னை: அணு சக்தி ஒப்பந்தம் மூலம் அமரிக்காவுக்கு, மத்திய அரசு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.

இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைக் கண்டித்து இன்று ஒரு அறிக்கை விட்டுள்ளார் ஜெயலலிதா. அதில் கூறியிருப்பதாவது:

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான சம அந்தஸ்து கொண்ட ஒப்பந்தம் போலவே இல்லை. மாறாக, எஜமானர், அடிமை சாசனம் போலவே இருக்கிறது. நமது நாட்டை அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.

இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ஆராய எம்.பிக்கள், விஞ்ஞானிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. 22 கட்சிகளைக் கொண்ட கூட்டணியான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு, வெளிநாட்டு எஜமானர்களிடம் நமது நாட்டை அடகு வைத்து விட்டது. அவர்கள் கூறியபடிதான் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து எம்.பிக்கள், விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவின் ஆய்வுக்கு விட வேண்டும். அவர்கள் ஒப்புதல் கொடுத்த பின்னர்தான் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும்.

அணு சக்தித் துறையில் இந்தியா முன்னேற்றப் பாதையில் நடை போட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய விஞ்ஞானிகளின் அணு ஆய்வுத் திறமை பாதிக்கப்படும், தடைபட்டுப் போகும். அவர்களின் ஆய்வு மனநிலை பின்னடைவை சந்திக்கும்.

நமது நாட்டு அணு சக்தி நிலையங்களை அமெரிக்கா ஏன் பார்வையிட வேண்டும்?. அவர்கள் நாட்டில் உள்ள அணு சக்தி நிலையங்களைப் பார்வையிட நம்மை அமெரிக்கா அனுமதிக்குமா?

இனிமேல், பிற நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும்போது நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலை அரசு பெற வேண்டும். அதற்கேற்ப நமது அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

மக்கள் மனதைப் புரிந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டு, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே முடியாது என்று கூறுகிறது மத்திய அரசு.

ஈராக் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ளதாக கூறி அந்த நாட்டை சிதறடித்து விட்டது அமெரிக்கா. வட கொரியாவையும் குறி வைத்து தற்போது காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஈரான் மீதும் படையெடுக்க காத்துக் கொண்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்தியா ஏன் அமெரிக்காவுடன் இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும். நாமாக வலியச் சென்று ஏன் அவர்களின் வலையில் விழ வேண்டும் என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.

நன்றிங்க

ஒஹோ...இந்தியா, அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன்னு முந்தைய ஜனாதிபதி மறுத்து விட்டதால், அணு ஒப்பந்தத்தில் கண்ணை மூடிக்கிட்டு கையெழுத்திட புதிய ஜனாதிபதியை காங்கிரஸ் தலைவி தேர்ந்தெடுத்தாரோ...?