சல்மான் ருஷ்டியை விவாகரத்து செய்கிறார் பத்மலட்சுமி?
லண்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 2 ஜூலை 2007 ( 17:52 IST )
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை அவரது மனைவி பத்மலட்சுமி விரைவில் வி வாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (60). இவரும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவரும், மாடல் அழகியுமான பத்மலட்சுமியும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
இருவரும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்தியாவில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக கலந்துகொண்டனர்.
எனினும், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சல்மான் ருஷ்டியை விவாகரத்து செய்ய பத்மலட்சுமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சல்மான் ருஷ்டியை திருமணம் செய்ததன் மூலம் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டதாகவும், இதனால் விரைவில் முறைப்படி அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தனது நணபர்களிடம் பத்மலட்சுமி கூறியதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றிங்க
விவாகரத்து செய்த கொண்ட மாடல் அழகியை திருமணம் செய்ய பலர் முன் வருவர். விவாகரத்தான ருஷ்டியின் நிலை...???
"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''
Wednesday, July 04, 2007
ஜீவனாம்சம் சம்பள உயர்வா?
விவாகரத்தானவருக்கு சம்பள உயர்வா? மாஜி மனைவிக்கு அதிக ஜீவனாம்சம்
மும்பை: விவாகரத்தான ஆண்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தால், மாஜி மனைவிக்கு ஜீவனாம்ச தொகையை அதிகரித்து கொடுக்க வேண்டும் என்று மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.விவாகரத்தான ஆண்களுக்கு இனிமேல் சம்பள உயர்வு கிடைத்தால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்காது. மாஜி மனைவிக்கு இன்னும் அதிகமாக ஜீவனாம்சத்தை கொடுக்க வேண்டுமே என்ற வருத்தம் தான் இருக்கும்.மும்பையைச் சேர்ந்த அரசு ஊழியர் மோகன் ஹரி மோரே .
குடும்பப் பிரச்னையால் அவருக்கும், மனைவி சுஜாதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால், கடந்த 1999ல், அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். அப்போது, சுஜாதாவுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் ஜீவனாம்சமாக மோகன் கொடுக்க வேண்டும் என்று குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மோகன் ஜீவனாம்சம் கொடுத்து வந்தார்.இந்நிலையில், சுஜாதா சமீபத்தில் குடும்பநல கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "என்னை விவாகரத்து செய்த போது, எனது மாஜி கணவருக்கு சம்பளம் ரூ.மூன்று ஆயிரம் மட்டுமே. அத்துடன், அவருடைய வயதான பெற்றோர் அவருடன் இருந்தனர். அவர்களையும் பராமரிக்க வேண்டி இருந்தது. அதனால், அப்போது ஆயிரம் ரூபாய்
தான் ஜீவனாம்சம் தர முடியும் என்று கூறி விட்டார். சில ஆண்டுகள் கடந்த பிறகு, ஐந்தாவது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, எனது மாஜி கணவருக்கு சம்பளம் ரூ.எட்டு ஆயிரமாக உயர்ந்தது. ஆனால், எனக்கு கொடுத்து வந்த ஜீவனாம்ச தொகையை மட்டும் உயர்த்தவில்லை.
மேலும், அவருக்கு சம்பள உயர்வு நடைமுறைக்கு வந்த போது, நிலுவைத் தொகையாக ஆயிரக்கணக்கில் பணம் கிடைத்தது. அவருடைய வயதான பெற்றோரும் இப்போது இறந்து விட்டனர். அதனால், அவருக்கு நிதி நெருக்கடி எதுவும் கிடையாது. எனக்கு கொடுக்கும் ஜீவனாம்சத்தை அதிகரித்து கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்து இருந்தார்.அந்த மனுவை விசாரித்த குடும்பநல கோர்ட், "சுஜாதாவுக்கு கொடுக்கும் ஜீவனாம்ச தொகையில், மோகன், இனிமேல் ரூ.500 அதிகமாக கொடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது. அதைக் கேட்டு பதறிப் போன மோகன், மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
மோகனின் மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜே.என்.பாட்டீல் மற்றும் ஏ.ஏ.சையது அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது, "விலைவாசி உயர்ந்து வருவதால் தான் அரசு, மோகனுக்கு சம்பள உயர்வை அளித்தது. அதே போல, விலைவாசி உயர்வு சுஜாதாவுக்கும் உண்டு. அதை சமாளிக்க, அவருக்கு வேறு எந்த ஆதாயமோ அல்லது ஆதரவோ கிடையாது. அதனால், மோகன் அதிகப்படியாக ஊதியம் பெறும் போது, அவருடைய மனைவிக்கும் ஜீவனாம்ச தொகையை ரூ.500 அதிகரித்து தான் கொடுக்க வேண்டும்.
ஏற்கனவே கொடுக்கும் ஆயிரம் ரூபாயில், உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ செலவு மற்றும் பிற செலவுகளை சுஜாதா சமாளிக்க முடியாது. அதனால், சுஜாதாவுக்கு இனிமேல் மோகன் ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ.ஆயிரத்து 500, கொடுத்து தான் ஆக வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.
நன்றிங்க
சட்டங்களில் இருக்கும் பல ஓட்டைகளில் இது பெரிய ஓட்டை என்று சொல்லலாம்.
மணமுடித்து இல்லற வாழ்வில் தம்பதியராக இணையும் ஆண், பெண் இருவருக்கும் கணவன், மனைவி என்ற உறவு ஏற்படுகிறது. இந்த உறவினால் சுக, துக்கம். லாப. நஷ்டம் என வாழ்க்கையில் ஏற்படும் இன்பம் துன்பங்களில் இருவரும் பங்கேற்கிறார்கள்.
கணவனுக்கு மனைவி உதவுவது, மனைவிக்கு கணவன் உதவுவதும் பரஸ்பரம் இருவர் மீதும் கடமை.
திருமணத்திற்கு பின் இருவரும் கருத்து வேறுபாடு கொண்டு இனி கணவன் மனைவியாக இணைந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து விவாகரத்துக்கு செய்து கொண்டு பிரிந்த பின் அவன் யாரோ அவள் யாரோ என்று ஆகிவிடுகிறார்கள்.
இப்படி நீ யாரோ நான் யாரோ என்று பிரிந்த பின்னும் மனைவி என்ற அந்தஸ்தை முற்றாக முறித்துக் கொண்ட பெண்ணுக்கு கொஞ்ச காலம் மனைவியாக இருந்திருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக அவளுக்கு காமெல்லாம் ஜிவனாம்சம் என்ற பெயரில் ஒரு தொகையை கணவனாக இருந்தவன் கொடுத்து வரவேண்டும் என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஆண்களுக்கு இழைக்கப்படும் ஒரு அநீதி.
இங்கே நீதி மன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாக கருதாமல் விவகாரத்து பெற்றுக்கொண்ட ஒரு பெண் இனிமேல் கணவன் என்ற குறுக்கிடு இல்லாமல் தன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ள முடியும். திருமணத்திற்கு முன்பு என்ன நிலையோ அதே சுதந்திர நிலையை அந்தப் பெண் பெற்று விடுகிறார்.
இந்த நிலையில் தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணுக்கு ஜிவனாம்சம் என்ற பெயரில் மாத மாதம் ஒரு தொகையை கொடுப்பது எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
உழைப்புக்கு கிடைப்பதே ஊதிய உயர்வு.
விவாகரத்து செய்துகொண்ட பெண் என்ன உழைக்கிறார் என்று அவருக்கும் மாஜி கணவனின் ஊதிய உயர்விலிருந்து பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி நேர்மைப்படுத்த முடியும்?
மும்பை: விவாகரத்தான ஆண்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தால், மாஜி மனைவிக்கு ஜீவனாம்ச தொகையை அதிகரித்து கொடுக்க வேண்டும் என்று மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.விவாகரத்தான ஆண்களுக்கு இனிமேல் சம்பள உயர்வு கிடைத்தால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்காது. மாஜி மனைவிக்கு இன்னும் அதிகமாக ஜீவனாம்சத்தை கொடுக்க வேண்டுமே என்ற வருத்தம் தான் இருக்கும்.மும்பையைச் சேர்ந்த அரசு ஊழியர் மோகன் ஹரி மோரே .
குடும்பப் பிரச்னையால் அவருக்கும், மனைவி சுஜாதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால், கடந்த 1999ல், அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். அப்போது, சுஜாதாவுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் ஜீவனாம்சமாக மோகன் கொடுக்க வேண்டும் என்று குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மோகன் ஜீவனாம்சம் கொடுத்து வந்தார்.இந்நிலையில், சுஜாதா சமீபத்தில் குடும்பநல கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "என்னை விவாகரத்து செய்த போது, எனது மாஜி கணவருக்கு சம்பளம் ரூ.மூன்று ஆயிரம் மட்டுமே. அத்துடன், அவருடைய வயதான பெற்றோர் அவருடன் இருந்தனர். அவர்களையும் பராமரிக்க வேண்டி இருந்தது. அதனால், அப்போது ஆயிரம் ரூபாய்
தான் ஜீவனாம்சம் தர முடியும் என்று கூறி விட்டார். சில ஆண்டுகள் கடந்த பிறகு, ஐந்தாவது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, எனது மாஜி கணவருக்கு சம்பளம் ரூ.எட்டு ஆயிரமாக உயர்ந்தது. ஆனால், எனக்கு கொடுத்து வந்த ஜீவனாம்ச தொகையை மட்டும் உயர்த்தவில்லை.
மேலும், அவருக்கு சம்பள உயர்வு நடைமுறைக்கு வந்த போது, நிலுவைத் தொகையாக ஆயிரக்கணக்கில் பணம் கிடைத்தது. அவருடைய வயதான பெற்றோரும் இப்போது இறந்து விட்டனர். அதனால், அவருக்கு நிதி நெருக்கடி எதுவும் கிடையாது. எனக்கு கொடுக்கும் ஜீவனாம்சத்தை அதிகரித்து கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்து இருந்தார்.அந்த மனுவை விசாரித்த குடும்பநல கோர்ட், "சுஜாதாவுக்கு கொடுக்கும் ஜீவனாம்ச தொகையில், மோகன், இனிமேல் ரூ.500 அதிகமாக கொடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது. அதைக் கேட்டு பதறிப் போன மோகன், மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
மோகனின் மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜே.என்.பாட்டீல் மற்றும் ஏ.ஏ.சையது அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது, "விலைவாசி உயர்ந்து வருவதால் தான் அரசு, மோகனுக்கு சம்பள உயர்வை அளித்தது. அதே போல, விலைவாசி உயர்வு சுஜாதாவுக்கும் உண்டு. அதை சமாளிக்க, அவருக்கு வேறு எந்த ஆதாயமோ அல்லது ஆதரவோ கிடையாது. அதனால், மோகன் அதிகப்படியாக ஊதியம் பெறும் போது, அவருடைய மனைவிக்கும் ஜீவனாம்ச தொகையை ரூ.500 அதிகரித்து தான் கொடுக்க வேண்டும்.
ஏற்கனவே கொடுக்கும் ஆயிரம் ரூபாயில், உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ செலவு மற்றும் பிற செலவுகளை சுஜாதா சமாளிக்க முடியாது. அதனால், சுஜாதாவுக்கு இனிமேல் மோகன் ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ.ஆயிரத்து 500, கொடுத்து தான் ஆக வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.
நன்றிங்க
சட்டங்களில் இருக்கும் பல ஓட்டைகளில் இது பெரிய ஓட்டை என்று சொல்லலாம்.
மணமுடித்து இல்லற வாழ்வில் தம்பதியராக இணையும் ஆண், பெண் இருவருக்கும் கணவன், மனைவி என்ற உறவு ஏற்படுகிறது. இந்த உறவினால் சுக, துக்கம். லாப. நஷ்டம் என வாழ்க்கையில் ஏற்படும் இன்பம் துன்பங்களில் இருவரும் பங்கேற்கிறார்கள்.
கணவனுக்கு மனைவி உதவுவது, மனைவிக்கு கணவன் உதவுவதும் பரஸ்பரம் இருவர் மீதும் கடமை.
திருமணத்திற்கு பின் இருவரும் கருத்து வேறுபாடு கொண்டு இனி கணவன் மனைவியாக இணைந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து விவாகரத்துக்கு செய்து கொண்டு பிரிந்த பின் அவன் யாரோ அவள் யாரோ என்று ஆகிவிடுகிறார்கள்.
இப்படி நீ யாரோ நான் யாரோ என்று பிரிந்த பின்னும் மனைவி என்ற அந்தஸ்தை முற்றாக முறித்துக் கொண்ட பெண்ணுக்கு கொஞ்ச காலம் மனைவியாக இருந்திருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக அவளுக்கு காமெல்லாம் ஜிவனாம்சம் என்ற பெயரில் ஒரு தொகையை கணவனாக இருந்தவன் கொடுத்து வரவேண்டும் என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஆண்களுக்கு இழைக்கப்படும் ஒரு அநீதி.
இங்கே நீதி மன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாக கருதாமல் விவகாரத்து பெற்றுக்கொண்ட ஒரு பெண் இனிமேல் கணவன் என்ற குறுக்கிடு இல்லாமல் தன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ள முடியும். திருமணத்திற்கு முன்பு என்ன நிலையோ அதே சுதந்திர நிலையை அந்தப் பெண் பெற்று விடுகிறார்.
இந்த நிலையில் தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணுக்கு ஜிவனாம்சம் என்ற பெயரில் மாத மாதம் ஒரு தொகையை கொடுப்பது எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
உழைப்புக்கு கிடைப்பதே ஊதிய உயர்வு.
விவாகரத்து செய்துகொண்ட பெண் என்ன உழைக்கிறார் என்று அவருக்கும் மாஜி கணவனின் ஊதிய உயர்விலிருந்து பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி நேர்மைப்படுத்த முடியும்?
Friday, June 29, 2007
அமைதித் தூதராக டோனி பிளேயர்!
மத்திய கிழக்கின் அமைதித் தூதுவராக பிளேய்ர் நியமனம்
வெள்ளி, 29 ஜூன் 2007
மிக நீண்ட பிரவுபசாரத்திற்குப் பிறகு பிரிட்டனின் பிரதமர் பதவியை விட்டுவிலகிய டோனி பிளேய்ர், உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள மத்திய கிழக்கின் பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே அமைதியைத் தோற்றுவிக்கும் தூதுவராக மத்தியகிழக்கு அமைதிக்கான நான்கு உறுப்பினர் குழுமம் (Middleeast Peace Quartet) நியமித்துள்ளது. இந்த குழுமத்தின் உறுப்பினர்களாக ஐநா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன உள்ளன.
டோனி பிளேய்ர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டதால் நன்மை ஏதும் விளையப் போகிறதோ இல்லையோ, பாலஸ்தீன மக்கள் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதாகப் பாலஸ்தீன மக்கள் கருதுகிறார்கள். பிளேய்ர் அமைதித் தூதுவராக நியமிக்கப்பட்டதற்கு இஸ்ரேலின் பிரதமர் உல்மர்ட்டும், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸும் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், பாலஸ்தீனத்தில் சமீபத்தில் கவிழ்க்கப்பட்ட ஹமாஸ் அரசின் செய்தித் தொடர்பாளராக இருந்த காஸி ஹமத், "பிளேய்ர் பிரிட்டனின் பிரதமராக இருந்த வரை இஸ்ரேலிய அமெரிக்க அரசுகளின் ஊதுகுழலாகவே இருந்தார், பாலஸ்தீன மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டவராக நடக்கவேயில்லை, எனவே இவரால் பாலஸ்தீனர்களுக்குத் தீமை விளையவே வாய்ப்புள்ளது" என AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்திருந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
"இது (பிளேய்ர் நியமனம்) மேற்குக் கரையையும் காஸாவையும் நிரந்தரமாகப் பிரித்துவிடும் இஸ்ரேலிய தந்திரத்தைச் செயல் படுத்தவே உதவும்" என பாலஸ்தீனப் பெண்ணிய ஆர்வலர் உலா அல்ஹிலோ தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் பங்குத் தரகராக இருக்கும் முஆம்மர் லோலோ, "ஃபத்தாஹ் கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்குக் கரைக்கு மட்டுமே உதவியாக இருப்பார், காஸா பகுதியைத் தனிமைப்படுத்தி ஒடுக்கவே உதவுவார்" என்று கூறியுள்ளார்.
"பாலஸ்தீனர்களின் நலனுக்கு இதுவரை ஒரு துரும்பைக் கூடக்கிள்ளிப் போடாத பிளேய்ர், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேன்மேலும் தொடரவே உதவுவார்" என இன்னொரு ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஃபவ்ஸி கூறியுள்ளார்.
இருப்பினும் இனிவரும் காலங்களில் அவர் ஹமாஸுடன் நடந்து கொள்ளவிருப்பதைப் பொறுத்தே பிளேய்ர் எந்த அளவுக்கு அமைதித் தூதுவர் பணியை உண்மையில் மத்திய கிழக்கின் அமைதியை அடைய நிறைவேற்றுவார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நன்றிங்க
ஏகாதிபத்திய மூர்க்க குணங்கொண்ட டோனி பிளேயரை அமைதித் தூதுவராக நியமித்தால் என்ன நடக்கும்?
இரண்டு பூனைகள், தமக்குக் கிடைத்தப் பணியாரத்தை சமமாகப் பங்கு போட்டுத் தரும்படி குரங்கின் உதவியை நாடி, பிறகு குரங்கு பூனைகளை ஏமாற்றிய கதைதான் நினைவுக்கு வருகிறது.
அய்யோ பாவம் பூனைகள்!
வெள்ளி, 29 ஜூன் 2007
மிக நீண்ட பிரவுபசாரத்திற்குப் பிறகு பிரிட்டனின் பிரதமர் பதவியை விட்டுவிலகிய டோனி பிளேய்ர், உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள மத்திய கிழக்கின் பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே அமைதியைத் தோற்றுவிக்கும் தூதுவராக மத்தியகிழக்கு அமைதிக்கான நான்கு உறுப்பினர் குழுமம் (Middleeast Peace Quartet) நியமித்துள்ளது. இந்த குழுமத்தின் உறுப்பினர்களாக ஐநா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன உள்ளன.
டோனி பிளேய்ர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டதால் நன்மை ஏதும் விளையப் போகிறதோ இல்லையோ, பாலஸ்தீன மக்கள் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதாகப் பாலஸ்தீன மக்கள் கருதுகிறார்கள். பிளேய்ர் அமைதித் தூதுவராக நியமிக்கப்பட்டதற்கு இஸ்ரேலின் பிரதமர் உல்மர்ட்டும், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸும் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், பாலஸ்தீனத்தில் சமீபத்தில் கவிழ்க்கப்பட்ட ஹமாஸ் அரசின் செய்தித் தொடர்பாளராக இருந்த காஸி ஹமத், "பிளேய்ர் பிரிட்டனின் பிரதமராக இருந்த வரை இஸ்ரேலிய அமெரிக்க அரசுகளின் ஊதுகுழலாகவே இருந்தார், பாலஸ்தீன மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டவராக நடக்கவேயில்லை, எனவே இவரால் பாலஸ்தீனர்களுக்குத் தீமை விளையவே வாய்ப்புள்ளது" என AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்திருந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
"இது (பிளேய்ர் நியமனம்) மேற்குக் கரையையும் காஸாவையும் நிரந்தரமாகப் பிரித்துவிடும் இஸ்ரேலிய தந்திரத்தைச் செயல் படுத்தவே உதவும்" என பாலஸ்தீனப் பெண்ணிய ஆர்வலர் உலா அல்ஹிலோ தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் பங்குத் தரகராக இருக்கும் முஆம்மர் லோலோ, "ஃபத்தாஹ் கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்குக் கரைக்கு மட்டுமே உதவியாக இருப்பார், காஸா பகுதியைத் தனிமைப்படுத்தி ஒடுக்கவே உதவுவார்" என்று கூறியுள்ளார்.
"பாலஸ்தீனர்களின் நலனுக்கு இதுவரை ஒரு துரும்பைக் கூடக்கிள்ளிப் போடாத பிளேய்ர், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேன்மேலும் தொடரவே உதவுவார்" என இன்னொரு ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஃபவ்ஸி கூறியுள்ளார்.
இருப்பினும் இனிவரும் காலங்களில் அவர் ஹமாஸுடன் நடந்து கொள்ளவிருப்பதைப் பொறுத்தே பிளேய்ர் எந்த அளவுக்கு அமைதித் தூதுவர் பணியை உண்மையில் மத்திய கிழக்கின் அமைதியை அடைய நிறைவேற்றுவார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நன்றிங்க
ஏகாதிபத்திய மூர்க்க குணங்கொண்ட டோனி பிளேயரை அமைதித் தூதுவராக நியமித்தால் என்ன நடக்கும்?
இரண்டு பூனைகள், தமக்குக் கிடைத்தப் பணியாரத்தை சமமாகப் பங்கு போட்டுத் தரும்படி குரங்கின் உதவியை நாடி, பிறகு குரங்கு பூனைகளை ஏமாற்றிய கதைதான் நினைவுக்கு வருகிறது.
அய்யோ பாவம் பூனைகள்!
Subscribe to:
Posts (Atom)