பெரியார் சிலை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை - கருணாநிதி
07 டிசம்பர் 2006
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து காங்கிரஸ் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் கருணாநிதி, இந்த சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி தமக்கு காலையிலேயே வந்தது என்று கூறினார்.
பெரியார் சிலை மட்டுமின்றி பெரும் தலைவர்களுடைய சிலைகளிலும் அந்த தலைவர் சொன்ன கருத்துக்களிலும் வேறுபாடான நிலை சிலருக்கு இருக்கலாம் என்றும், அதற்காக சிலையை உடைப்பதை ஒரு போதும் இந்த அரசு அனுமதிக்காது என்றார்.
பெரியாரின் சிலை என்பது அதை சேதப்படுத்தியவரையும் சேர்த்து மனிதராக்கியவரின் சிலை என்றும், அதை உடைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க முடியாது என்றும் கருணாநிதி கூறினார்.
கருத்துக்கு கருத்து, எண்ணங்களுக்கு எண்ணம், கொள்கைக்கு கொள்கை என்று மோதல் இருக்க வேண்டுமே தவிர, சிலைகளை உடைப்பதையோ அதை சீரழிப்பதையோ ஒருபோதும் ஏற்க முடியாது என்று அவர் கூறினார்.
சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் உடனடியாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்தப் பிரச்சனையை யாரும் மேலும் வளர்த்து பூதாகாரமாக்க வேண்டாம் என்றும் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
நன்றிங்க
நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் சிலை திறப்பு
08 டிசம்பர் 2006
நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த மத்திய அமைச்சரும் திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாாறன் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் நேற்று நடைபெற்ற அதிமுக நிறுவனரும் மறைந்த தமிழக முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிலை திறப்பு விழாவில் திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மையார், முரசொலி மாறனின் மனைவி மல்லிகா, அவரது மகனும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.
நன்றிங்க
மத்திய, மாநில அரசியலில் மாற்றம் வரும் - ஜெயலலிதா
07 டிசம்பர் 2006
மத்தியிலும் மாநில அளவிலும் அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் எம்ஜிஆர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா எனினும் அதுபற்றி விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.
முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் இரு மாநில முதலமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு தோல்வியடைந்த உடனேயே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறினார். இரு மாநிலங்களின் பொதுப் பணித் துறை அமைச்சர்கள் பேசுவதில் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
சக்தி வாய்ந்த பல பெண்கள் அரசியலில் ஈடுபட்டுள்ள போதிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்றார்.
பாரத ரத்னா விருது பெற்ற எம்ஜிஆரின் சிலை திறப்பு விழாவை திமுக புறக்கணித்ததை கண்டித்த போதிலும், இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்காதது பற்றி அவர் கருத்து கூற மறுத்துவிட்டார். இதுபற்றி அவரிடம் கேட்ட போது சோனியா காந்தியிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று அவர் பதிலளித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா மற்றும் பெரியாரின் சிலைகளை திறக்க முயற்சிகள் மேற்கொண்டதும் அதிமுகதான் என்று ஜெயலலிதா கூறினார்.
நன்றிங்க
அரிய வாய்ப்பை நழுவவிட்டவர் ஜெயலலிதாதான் - கருணாநிதி
08 டிசம்பர் 2006
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் அரிய வாய்ப்பை தவற விட்டது ஜெயலலிதா அரசுதான் என்று முதலமைச்சர் கருணாநிதி புகார் கூறியுள்ளார்.
மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுவையில் இவ்வாறு கூறினார்.
முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதாதான் என்றும் எனவே வாய்ப்பை நழுவ விட்டது அவரது ஆட்சிதான் என்றும் கருணாநிதி குற்றம்சாட்டினார்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக இரு மாநில அமைச்சர்களும், கலந்து பேசவிருப்பதாகவும் அவர்கள் தரும் தகவல்கள் அடிப்படையில் மீண்டும் இரு மாநில முதலமைச்சர்களும் அடுத்த கட்ட பேச்சு நடத்த ஏற்பாடுகள் நடைபெறும் என்று அவர் கூறினார்.
அந்த முயற்சியிலும் தோல்வி ஏற்பட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகும் என்று கருணாநிதி தெரிவித்தார்.
எம்ஜிஆர் சிலை திறப்பதை தாமதிக்க தாம் குறுக்கிட்டதாக ஜெயலலிதா கூறியிருப்பது அவதூறு வழக்கு போடுவதற்குரிய வாசகம் என்றும் கருணாநிதி கூறினார்.
நன்றிங்க
தென் தமிழ் நாட்டில் மட்டுமில்லை வடமாநிலங்களிலும் சாதிக் கலவரங்களுக்கு சிலைகள் சேதப்படுத்தப் படுவதுதான் காரணியாக இருக்கிறது. இதனால் அரசியல் தலைவர்களின் சிலைகள் இரும்புக் கூட்டுக்குள் வைக்கப்படும் அவலத்தை பார்க்கிறோம்.
சிலை வைப்பதற்காக போராட்டம் சிலை வைக்கக்கூடாது எனவும் போராட்டம். வழக்கு வம்பு அடிதடிகள் உயிர் சேதங்கள் தண்டனைகள் இதையெல்லாம் மறைந்த தலைவர்கள் இன்று இருந்திருந்தால் இந்த வன்முறை போக்குகளை விரும்ப மாட்டார்கள்.
-முஸ்லிம்
"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''
Friday, December 08, 2006
சரியான போட்டி.
அரசியல் பாடம் கற்க வேண்டும்: விஜயகாந்துக்கு கருணாநிதி பதில்
03 டிசம்பர் 2006
நதிநீர் பிரச்சனை உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களூக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவி அளிக்கக் கூடாது என மத்திய அரசு வழிமுறை வைத்துள்ளது என்று, விஜயகாந்துக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஞாயிறு அன்று கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசில் நீர்வளத்துறையை கேட்டு பெறவேண்டியது தானே என்று விஜயகாந்த் கூறுகிறார். நதிநீர் பிரச்சனை உள்ள மாநிலங்களுக்கு அந்த துறையை ஒதுக்குவதில்லை என்று மத்திய அரசு கொள்கை முடிவு கொண்டுள்ளது. இதனால் தான் 2 மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அந்த துறை ஒதுக்கப்படவில்லை. இந்த அரசியல் பாடத்தை விஜயகாந்த் முதலில் கற்க
வேண்டும் என்று கூறியுள்ளார்.
முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யத்தயாரா என்று விஜயகாந்த் கேட்டுள்ளார். அவர் நடித்துள்ள திரைப்படத்தில்,
'டைட்டிலுக்கு' பிறகு 'கிளைமாக்ஸ்' காட்சி வந்துள்ளதா? என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இலவச சமையல் எரிவாயு அடுப்பு வழங்குவது பற்றி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கிலோ அரிசி 2 ரூபாய் திட்டம், சத்துணவில் வாரம் 2 முட்டை, வண்ணத் தொலைக்காட்சி உட்பட அரசின் பல திட்டங்களுக்கு அவர் எதிர்ப்பு காட்டி வந்துள்ளார். இது ஜெயலலிதாவின் நல்லெண்ணத்துக்கு அடையாளம் என்று தனது அறிக்கையில் கருணாநிதி மேலும் கூறியுள்ளார்.
நன்றிங்க
சபாஷ் சரியான போட்டி
-முஸ்லிம்
03 டிசம்பர் 2006
நதிநீர் பிரச்சனை உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களூக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவி அளிக்கக் கூடாது என மத்திய அரசு வழிமுறை வைத்துள்ளது என்று, விஜயகாந்துக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஞாயிறு அன்று கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசில் நீர்வளத்துறையை கேட்டு பெறவேண்டியது தானே என்று விஜயகாந்த் கூறுகிறார். நதிநீர் பிரச்சனை உள்ள மாநிலங்களுக்கு அந்த துறையை ஒதுக்குவதில்லை என்று மத்திய அரசு கொள்கை முடிவு கொண்டுள்ளது. இதனால் தான் 2 மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அந்த துறை ஒதுக்கப்படவில்லை. இந்த அரசியல் பாடத்தை விஜயகாந்த் முதலில் கற்க
வேண்டும் என்று கூறியுள்ளார்.
முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யத்தயாரா என்று விஜயகாந்த் கேட்டுள்ளார். அவர் நடித்துள்ள திரைப்படத்தில்,
'டைட்டிலுக்கு' பிறகு 'கிளைமாக்ஸ்' காட்சி வந்துள்ளதா? என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இலவச சமையல் எரிவாயு அடுப்பு வழங்குவது பற்றி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கிலோ அரிசி 2 ரூபாய் திட்டம், சத்துணவில் வாரம் 2 முட்டை, வண்ணத் தொலைக்காட்சி உட்பட அரசின் பல திட்டங்களுக்கு அவர் எதிர்ப்பு காட்டி வந்துள்ளார். இது ஜெயலலிதாவின் நல்லெண்ணத்துக்கு அடையாளம் என்று தனது அறிக்கையில் கருணாநிதி மேலும் கூறியுள்ளார்.
நன்றிங்க
சபாஷ் சரியான போட்டி
-முஸ்லிம்
Wednesday, December 06, 2006
2.சேதியைக் கேட்டியளா?
குடியரசுத் தலைவர் பதவி: கலாமுக்கு பா.ஜ. ஆதரவு
30 நவம்பர் 2006
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இரண்டாவது முறையாக அந்த பதவியில் தொடருவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூலையுடன் முடிவடைகிறது. இரண்டாவது முறையாக அவர் குடியரசு தலைவர் பதவியை தொடர வேண்டும் என்று பரவலாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. மாணவ அமைப்புகள் சில, இதற்காக ஆதரவு திரட்ட தனி இணையதளம் துவக்கி பிரச்சாரம் செய்து வருகின்றன.
எனினும் முக்கிய அரசியல் கட்சிகள், குடியரத் தலைவர் தேர்தல் தொடர்பாக மவுனம் காத்து வருகின்றன. இதற்கிடையே குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் உட்பட சிலர் அந்த பதவிக்கு குறிவைத்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் மீண்டும் தொடர பாரதிய ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாரணாசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மிகப் பெரிய விஞ்ஞானியான கலாம், தனது பதவி காலத்தில் சிறப்பாகவும், தொலைநோக்கு பார்வையுடனும் செயல்படுவதாக கருத்து தெரிவித்தார்.
நாட்டுக்கு கலாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அவர் இரண்டாம் முறையாக குடியரசுத் தலைவராக தொடர பாரதிய ஜனதா ஆதரவு அளிக்கும். முஸ்லீம்களுக்கு தங்கள் கட்சி விரோதி அல்ல என்று ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்தார்.
நன்றிங்க
அடடா..... முஸ்லிம் சமுதாயத்தின் மீது இந்த பாஜக தலைவருக்குத்தான் எவ்வளவு அக்கறை புல்லரிக்குது போங்க.
இப்போ அடுத்த செய்தியை பாருங்களேன்.
பாபர் மசூதி : மக்களவை ஒத்திவைப்பு
06 டிசம்பர் 2006
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து மக்களவையில் இன்று பிஜேபி, சிவசேனா உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 14வது ஆண்டு தினமான இன்று மக்களைவில் பிஜேபி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இன்று காலை அவை கூடியதும், பிஜேபி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்று, ஜெய் ஸ்ரீராம், அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக் கொண்டிருந்தனர்.
மேலும் முகமது அப்சாலை தூக்கிலிட வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
காங்கிரஸ், சமாஜ்வாடி, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கடும் கூச்சல் - குழப்பம் நிலவியது.
இதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்தி வைத்து சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.
நன்றிங்க
ஒரு முஸ்லிம் அப்துல் கலாம் மீது அக்கறை கொண்டவர்களாக பாஜக கட்சி காட்டி கொண்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் எப்படி அல்வா கிண்டுறாங்கன்னு பாருங்களேன். முதல் செய்தியில் நாங்கள் முஸ்லிம்களுக்கு விரோதி அல்ல என்று வாயாற சொல்லிவிட்டு இரண்டாவது செய்தியில் நாங்க மட்டும்தான் முஸ்லிம்களின் விரோத கட்சி என்று வாய்கூசாமல் சொல்லி பாதகையில் எழுதி காட்டுறாங்களே இந்த பாஜாக கட்சிக்காரங்க என்னமா புளுகுறாங்கப்ப.
-முஸ்லிம்
30 நவம்பர் 2006
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இரண்டாவது முறையாக அந்த பதவியில் தொடருவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூலையுடன் முடிவடைகிறது. இரண்டாவது முறையாக அவர் குடியரசு தலைவர் பதவியை தொடர வேண்டும் என்று பரவலாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. மாணவ அமைப்புகள் சில, இதற்காக ஆதரவு திரட்ட தனி இணையதளம் துவக்கி பிரச்சாரம் செய்து வருகின்றன.
எனினும் முக்கிய அரசியல் கட்சிகள், குடியரத் தலைவர் தேர்தல் தொடர்பாக மவுனம் காத்து வருகின்றன. இதற்கிடையே குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் உட்பட சிலர் அந்த பதவிக்கு குறிவைத்து செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் மீண்டும் தொடர பாரதிய ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாரணாசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மிகப் பெரிய விஞ்ஞானியான கலாம், தனது பதவி காலத்தில் சிறப்பாகவும், தொலைநோக்கு பார்வையுடனும் செயல்படுவதாக கருத்து தெரிவித்தார்.
நாட்டுக்கு கலாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அவர் இரண்டாம் முறையாக குடியரசுத் தலைவராக தொடர பாரதிய ஜனதா ஆதரவு அளிக்கும். முஸ்லீம்களுக்கு தங்கள் கட்சி விரோதி அல்ல என்று ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்தார்.
நன்றிங்க
அடடா..... முஸ்லிம் சமுதாயத்தின் மீது இந்த பாஜக தலைவருக்குத்தான் எவ்வளவு அக்கறை புல்லரிக்குது போங்க.
இப்போ அடுத்த செய்தியை பாருங்களேன்.
பாபர் மசூதி : மக்களவை ஒத்திவைப்பு
06 டிசம்பர் 2006
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து மக்களவையில் இன்று பிஜேபி, சிவசேனா உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 14வது ஆண்டு தினமான இன்று மக்களைவில் பிஜேபி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இன்று காலை அவை கூடியதும், பிஜேபி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்று, ஜெய் ஸ்ரீராம், அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக் கொண்டிருந்தனர்.
மேலும் முகமது அப்சாலை தூக்கிலிட வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
காங்கிரஸ், சமாஜ்வாடி, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கடும் கூச்சல் - குழப்பம் நிலவியது.
இதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்தி வைத்து சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.
நன்றிங்க
ஒரு முஸ்லிம் அப்துல் கலாம் மீது அக்கறை கொண்டவர்களாக பாஜக கட்சி காட்டி கொண்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் எப்படி அல்வா கிண்டுறாங்கன்னு பாருங்களேன். முதல் செய்தியில் நாங்கள் முஸ்லிம்களுக்கு விரோதி அல்ல என்று வாயாற சொல்லிவிட்டு இரண்டாவது செய்தியில் நாங்க மட்டும்தான் முஸ்லிம்களின் விரோத கட்சி என்று வாய்கூசாமல் சொல்லி பாதகையில் எழுதி காட்டுறாங்களே இந்த பாஜாக கட்சிக்காரங்க என்னமா புளுகுறாங்கப்ப.
-முஸ்லிம்
Subscribe to:
Posts (Atom)