Showing posts with label செல்போன். Show all posts
Showing posts with label செல்போன். Show all posts

Tuesday, August 14, 2007

செல்போன், வாக்மேனுடன் பிச்சைக்காரர்!

செல்போன், வாக்மேனுடன் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்

வத்தலகுண்டு, ஆக. 15: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் செல்போன், வாக்மேன் சகிதம் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார்.

வத்தலகுண்டு பஸ் நிலையத்தில், சித்தி விநாயகர் கோயில் உள்ளது. அக்கோயில் முன்பு 35 வயது மதிக்கத்தக்க பிச்சைக்காரர், வாக்மேனில் பாட்டு கேட்டவாறும், அவ்வப்போது செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டும் பிச்சை எடுத்து வருகிறார்.

பலர் எப்போதும்போல, அவருக்கு பிச்சை போட்டுச் செல்கின்றனர்.

நன்றிங்க

தொழிற்நுட்பத்தில் வளர்ந்துள்ளதாகச் சொல்லிக்கொண்டே வல்லரசுகளிடம் கையேந்தும் இந்தியாவின் குறியீடா இவர்?

பிச்சைக்காரர் கைத்தொலைபேசியில் 9440000000 தட்டி அழைப்பைச் சொடுக்குகிறார். எதிர்முனையின் அழைப்பு மணி ஒலிக்கிறது. அழைப்பையேற்று எதிர்முனையில் ஹலோ... என்றகிறார் ஒரு அம்மா.

பிச்சைக்காரர்: நாந்தாம்மா பிச்சைக்காரன் பேசுறேன்.

அந்த அம்மா: ஹலோ பிச்சைக்காரன் எப்படியிருக்கே?

பிச்சைக்காரன்: ஒங்க புண்ணியத்திலே நல்லாயிருக்கேம்மா, ஏதாவது பிச்சை போடுங்கம்மா?

அந்த அம்மா: சரி சரி வீட்டு நம்பர் 00/1111 முதலாளித் தெரு என்ற முகவரிக்கு வா!

பிச்சைக்காரர்: சரிங்கம்மா! என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டு, பிச்சையை கன்ஃபாம் செய்ய கைத் தொலைபேசியில் வேறு எண்களை தட்டுகிறார் மிஸ்டர் பிச்சைக்காரர்.

வாழ்க சுதந்திரம்!

வாழ்த்துக்கள்!!