Showing posts with label சிவசேனா. Show all posts
Showing posts with label சிவசேனா. Show all posts

Wednesday, August 15, 2007

சுதந்திரதினத்தில் வந்த செய்தி..

பத்திரிகை அலுவலகம் சூறை

மும்பை : சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை வில்லனாக சித்தரித்த, "அவுட்லுக்' ஆங்கில வார இதழின் மும்பை அலுவலகத்தை, சிவசேனா கட்சியினர் சூறையாடினர்.

"அவுட்லுக்' வார இதழின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. இந்த இதழில், வில்லன்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் அசாருதீன் ஆகியோருடன் சிவசேனா தலைவர் பால் தாக்கரே பெயரும், கேலிச் சித்திரமும் வெளியிடப்பட்டு இருந்தது. ஹிட்லர் போன்ற தோற்றத்தில், பால் தாக்கரே சித்தரிக்கப் பட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள், "அவுட்லுக்' இதழின் அலுவலகத்துக்குள் நேற்று புகுந்தனர். அங்கிருந்த பொருட் களை சூறையாடினர்.

நன்றிங்க, DINAMALAR 15/08/07


அப்ப கருத்துச் சுதந்திரம் காவிகளுக்கு மட்டும்தானா...?

மற்றவர்களுக்கில்லையா...?