Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Wednesday, September 12, 2007

மண்ணுக்கு மரம் பாரமா..?

குப்பை தொட்டியில் ஆண் குழந்தையை வீசிய தாய் கைது

சென்னை : குப்பை தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டார். "திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றேன்' என அப்பெண், போலீசாரிடம் கூறினார். தாயுக்கும், குழந்தைக்கும் மருத்துவச் சோதனை நடைபெற உள்ளது.

சென்னை சைதாப்பேட்டை, ஜோன்ஸ் லேன் சடையப்பன் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி; "கேட்டரிங்' தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(38) சமையல் வேலை செய்கிறார். இவர்களது மகள் சிந்துஜா(20); பிளஸ் 2 படித்தவர்.கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பழனி(27). சென்னையில் டிரைவாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், சிந்துஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதால் காதலித்து வந்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த பின்பும், காதலர்கள் உறுதியாக இருந்தனர்.பின்னர், இரு வீட்டாரும் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். சென்னையில் வரும் ஞாயிற்றுக் கிழமை திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வருங்கால கணவருடன் "நெருங்கி' பழகிய சிந்துஜா கர்ப்பம் அடைந்தார். இவ்விவரத்தை பழனியிடம் தெரிவிக்கவில்லை. தாயிடம் கூட விஷயத்தை சொல்லாமல் சிந்துஜா மறைத்தார்.

வயிறு பெரிதாக இருந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் உடை அணிந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சிந்துஜாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. தன்னந்தனியாக போராடி, சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இவ்விவரம் வெளியில் தெரிந்தால் உறவினர்கள் அசிங்கமாக பேசுவர் என சிந்துஜா பயந்தார்.குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் கேரி பேக்கில் வைத்து, வீட்டின் சமையல் அறையில் வைத்து விட்டார். வீடு திரும்பிய அவரது தாய் சாந்தியிடம், "கேரி பேக்கில் பூனைக் குட்டி உள்ளது. அதனை மெதுவாக வெளியில் விட்டு விடுங்கள்; தூக்கி போட்டு விடாதீர்கள். பாவம் அடிபட்டு விடும்' என கூறினார்.

கூலி வேலை செய்து வரும் பக்கத்து வீட்டுக்காரர் சாலியா(55) என்பவரிடம் கேரி பேக்கை சாந்தி கொடுத்தார். அவர், குப்பை தொட்டி அருகே கேரி பேக்கை வைத்துவிட்டு சென்று விட்டார். அதில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.குப்பை தொட்டி அருகேயுள்ள வீட்டில் இருந்த கஸ்துõரி, குழந்தையை தூக்கினார். சுத்தம் செய்து, சட்டை அணிவித்து புட்டிப் பால் கொடுத்தார். இத்தகவல் குமரன் போலீசாருக்கு சென்றது. செனாய் நகரில் உள்ள "புரபஷனல் சைல்டு வெல்பேர்' என்ற தொண்டு நிறுவனத்தில் போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் சாந்தியும், அவரது மகள் சிந்துஜாவும் சிக்கினர். "குப்பை தொட்டியில் வீசிய குழந்தை தன்னுடையது தான்' என போலீசாரிடம் சிந்துஜா ஒப்புக் கொண்டார்.சிந்துஜா அளித்த வாக்குமூலத்தின் விவரம்: எனக்கும், எனது காதலர் பழனிக்கும் வரும் 16ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெற்றோர் இருவரும் சமையல் வேலைக்கு சென்று விடுவதால், பழனி அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றார். வருங்கால கணவர் என்பதால் அவரை அனுமதித்தேன்.கர்ப்பமடைந்த நான், வீட்டில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன். குழந்தை பிறந்த விவரம் வெளியில் தெரிந்தால், எனது பெற்றோர் தற்கொலை செய்து கொள்வர் என பயந்தேன்.

அதனால், குழந்தையை கேரி பேக்கில் வைத்து நாடகமாடினேன்.இந்த விவரம், எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு தெரிந்து விட்டது. என்னையும், எனது குழந்தையையும் பழனியும் அவரது குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்ள சம்மதித்து விட்டனர். எனது கணவர் கும்பகோணத்தில் இருந்து நாளை(இன்று) சென்னை வருகிறார். எங்களது திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.இவ்வாறு சிந்துஜா போலீசாரிடம் கூறினார். சிந்துஜா, குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை:

தி.நகர் துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், அசோக் நகர் உதவி கமிஷனர் சுப்புலட்சுமி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். குழந்தையை பெற்றெடுத்ததாக சிந்துஜா ஒப்புக் கொண்டார். அவர் மீது 317(குழந்தையை பெற்றெடுத்து அனாதையாக தெருவில் விடுதல்) பிரிவின் கீழ் சப்இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்தார். கைது செய்யப்பட்ட சிந்துஜா, இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சிந்துஜாவுக்கும், குழந்தைக்கும் மருத்துவச் சோதனை நடைபெற உள்ளது. அதன் பின், தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தை சிந்துஜாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளது.

நன்றிங்க, தினமலர் 12/09/2007

''மலடி மலடியென்று வையகத்தார் ஏசாமல்

தாயென்ற பெருமையினை மனங்குளிரத் தந்தவனே

கொடிக்குக் காய் பாரமா..?

பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமா..?''

Tuesday, August 21, 2007

நள்ளிரவில் கதவைத் தட்டி...

நள்ளிரவில் கதவைத் தட்டி சோறு கேட்கும்
குழந்தை - மதுரையில் புது பீதி!


ஆகஸ்ட் 21, 2007

மதுரை: மதுரையில் நள்ளிரவில் குழந்தை ஒன்று கதவை தட்டி சோறு கேட்பதாக தகவல் வெளியானதை அடுத்து மக்கள் பீதியில் உள்ளனர்.

மதுரை மதிச்சியம், செனாய் நகர், கரும்பாலை, ராமராயர் மண்டகப்படி, வைகை வடகரை ஆகிய வைகை ஆற்றையொட்டியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் குழந்தை ஒன்று ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி சோறு கேட்பதாக பரபரப்பான தகவல் பரவியுள்ளது.

'சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு வீட்டில் குழந்தைக்கு அம்மை வந்தபோது அந்தக் குழந்தையை அவர்கள் எரித்து விட்டார்களாம். அந்தக் குழந்தைதான் தற்போது நள்ளிரவில் வீடு வீடாக வருவதாக' குழந்தையை 'நேரில் பார்த்தவர்கள்' கூறி வருகின்றனர்.

இந்தப் புதிய வதந்தியால் இப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.

பெரும்பாலான வீடுகளில் விடிய விடிய மின்சார விளக்கு எரிந்த நிலையிலே காணப்படுகின்றது. இரவு சினிமாவுக்கு செல்வதை கூட மக்கள் தவிர்த்து வருகின்றனர். தங்கள் இஷ்ட தெய்வ கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூசை செய்து ஆறுதல் பெறுகின்றனர். வீடு, கடைகளில் வேப்பிலைகளும் கட்டியுள்ளனர்.

நன்றிங்க, thatstamil 21/08/07

நோ கமெண்ட்

Wednesday, April 25, 2007

25.இப்படியும் சில முஸ்லிம்கள்.

05.உடுமலை அமராவதி ஆற்றில் வீசி மகனையே நரபலி கொடுத்த தந்தை

உடுமலை: பெற்ற மகனையே நரபலி கொடுப்பதற்காக அமராவதி ஆற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

உடுமலை அருகே சோழமாதேவியை சேர்ந்த முகம்மது அலி மகன் முகம்மது இக்பால் (32).மாந்திரீகம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். இதே பகுதியில் வசிக்கும் மாந்திரீகர் ஜாபருடன் சேர்ந்து மாந்திரீகம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். இதனால், இக்பால் மனைவி ஜமீலா தனது சொந்த ஊரான கேரளா மாநிலம் சோலக்கரைக்கு சென்றுவிட்டார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்து திண்டுக்கல்லில் அமைதியாக குடும்பம் நடத்தினார். இந்நிலையில், இவரின் மகன் ஆரீப்கான் (3) பிணமாக அமராவதி ஆற்றில் மிதந்தார்.

இச்சம்பவம் குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, குழந்தையின் தந்தை முகம்மது இக்பால் மற்றும் மாந்திரீகவாதி ஜாபர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதில், சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர்.

குழந்தை நரபலி : கொலை நடந்த அமராவதி ஆற்றுக்கு முகம்மது இக்பாலை போலீசார் அழைத்து சென்று, கொலை நடந்தது எப்படி என்பது குறித்து கேட்டனர். அப்போது, ஜாபர் முதலில் குழந்தையை ஆற்றுக்கு அழைத்து வந்ததை மட்டும் கூறியுள்ளார். பின்னர், குழந்தையை பாறை மீது அமரவைத்து தண்ணீருக்குள் தள்ளியதாகக் கூறியுள்ளார்.

போலீசார் கூறும் போது, "அதிக மாந்திரீக ஈடுபாடு காரணமாக கொலை நடந்துள்ளது. முகம்மது இக்பால் கொலை செய்தது உறுதியாகியுள்ளது. பிரேத பரிசோதனையிலும், குழந்தை தண்ணீருக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கொலைக்கான காரணம், கொலை நடந்தது எப்படி என்பது குறித்து விரைவில் தெரியவரும்' என்றனர்.

24.04.2007 தினமலர் செய்திக்கு நன்றிங்க.

பெற்ற பிள்ளையாகட்டும் மற்ற பிள்ளைகளாகட்டும், பிள்ளைகளை பலியிடுவது இஸ்லாத்தில் இல்லை. மந்திர சடங்குகள் ஒருவனை எந்த அளவுக்கு மூடனாக்கி விடுகிறது. பெற்ற பிள்ளையை மாந்தீரிகத்துக்காக நரபலி கொடுக்க முன் வருபவன் கல்நெஞ்சகனாகவே இருப்பான்.

மாந்திரத்தால் மாங்காய் பறிக்கலாம் என்ற மூடநம்பிக்கைகளுக்கு முஸ்லிம்களும் விதிவிலக்கானவர்கள் இல்லை. இதற்கு இந்த செய்தியே சான்றாக இருக்கிறது.

குழந்தைகளின் மீதான அன்பு பாசம் இரக்கம் இந்த பண்புகளை இவர்களிடமிருந்து இறைவன் பறித்து விட்டான்!

இப்படியும் சில முஸ்லிம்கள்!!!