Showing posts with label ஆஸ்தேரிலியா. Show all posts
Showing posts with label ஆஸ்தேரிலியா. Show all posts

Friday, July 20, 2007

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்!

16. அனீப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் பொய்யாக இருக்கலாம்: ஆஸ்திரேலிய பத்திரிகைகள்

மெல்போர்ன்: லண்டன் கிளாஸ்கோ விமான நிலைய தகர்ப்புத் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்த பெங்களூரூவைச் சேர்ந்த டாக்டர் அனீப் முகமது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கிளாஸ்கோ விமான நிலைய பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக ஆஸ்திரேலிய போலீசார் குற்றம் சாட்டினார். ஆனால் அவருக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. அதனால் அனீப் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததாக அனீப் மீது ஆஸ்திரேலிய போலீசார் குற்றம் சுமத்தினர். தற்போது இக்குற்றச்சாட்டும் பொய்யானதாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. அதனால் அனீப் விரைவில் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

நன்றிங்க

முஸ்லிம் என்றாலே சும்மா உப்பில்லாமல் குற்றச் சாட்டுகளை சுமத்துவது உலகமெங்கும் வழக்கமாகி விட்டது. இதிலே ஆஸ்திரேலியா போலீஸ் மட்டும் என்ன விதிவிலக்கா?