Wednesday, November 28, 2007

பிச்சைகாரரின் உல்லாச வாழ்க்கை!

விமானத்தில் பறந்து போய் ரயிலில் பிச்சை * கேரள பிச்சைகாரரின் உல்லாச வாழ்க்கை

கொச்சி: பிச்சை எடுத்து உல்லாசமாக வாழ்கிறார் கேரள பிச்சைக்காரர் ஒருவர். விமானத்தில் பறந்து சென்று பிச்சை எடுத்த அனுபவம் கூட இவருக்கு உண்டு.
காசர் கோட்டைச் சேர்ந்தவர் முகமது அலி. வயது அறுபது. சொந்த ஊரில் அரை ஏக்கர் நிலமும் வீடும் உள்ளது. வங்கி வைப்புத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் உள்ளது.

ஓட்டல்களில் தினமும் விலை உயர்ந்த உணவைத்தான் சாப்பிடுவார். ஒரு வேளையாவது பிரியாணி சாப்பிடாமல் இருக்க மாட்டார். மிகவும் பிரபலமான மில் தயாரிப்புகளில் 14 ஜோடி ஆடைகளை வைத்திருக்கிறார். சொந்த ஊரில் பெரும் தொழிலதிபர் போல் உடையணிந்துதான் நடமாடுவார். கவுரவமானப் பணியில் இருப்பதாக, ஊர்க்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வளவு ஆடம்பரமாக வசிக்கும் இவருக்கு வருமானம் எப்படி கிடைக்கிறது. பிச்சை எடுக்கிறார். அதுதான் இவரது தொழில். கேரளாவில் மசூதிகளில் தங்கி புதுப்புது இடங்களில் பிச்சை எடுப்பதில் பணம் சம்பாதித்து உல்லாசமாக வாழ்கிறார். தினமும் 250 ரூபாய் வரை பிச்சை மூலம் பார்த்துவிடுவார். விசேஷ நாட்களில் ஆயிரம் ரூபாய் சாதரணமாகக் கிடைத்துவிடுகிறது.

கந்தல் அழுக்கான உடைகளைக் கட்டிக் கொண்டு பிச்சை எடுப்பார். தொழில் முடிந்ததும், டிப்டாப் உடைக்கு மாறிவிடுவார். கிடைத்த பணத்தை உல்லாசமாக செலவிடுவார்.விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசை இவருக்கு ஏற்பட்டது. கோழிக்கோடு விமான நிலையத்தில் விசாரித்தார். டிக்கெட் வாங்கி, விமானத்தில் பயணம் செய்து கொச்சியில் இறங்கினார். அங்கிருந்து திரும்பி வர போதிய பணம் இல்லாததால், அழுக்கான லுங்கிக்கு மாறி, ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டே ஊர் திரும்பி விட்டார்.


நன்றிங்க, தினமல்ர் 28/11/2007

மிஸ்டர் பிச்சைகாரர் விமானத்தில் பறக்க கூடாதா?

விமானம் உயரே பறந்து ஒரு நிலைக்கு வந்தபின் அடுப்பில் மாட்டியுள்ள பெட்டை கழட்டி விட்டு, அவருக்கு விமானத்திலும் பிச்சை எடுக்கும் உரிமை வழங்க வேண்டும்!

பிச்சைகாரர் லட்ச ரூபாய் வைத்திருந்தால் அவரும் லட்சாதிபதிதான்.

''பிச்சைகார லட்சாதிபதி''

அட ...லாஜிக் இடிக்குதே

Tuesday, November 27, 2007

ஆங்கிலம் செய்த கொலை(!?)

ஆங்கிலம் தெரியாத விரக்தியால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
விடுதியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்

பூந்தமல்லி, நவ.27-

ஆங்கிலம் தெரியாததால் விரக்தி அடைந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.
என்ஜினீயரிங் மாணவர்

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் என்பவரின் மகன் விது(வயது 18).
இவர் சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் அவர் தங்கி இருந்தார்.

ஆங்கில பாடம் புரியவில்லை

மாணவர் விது மேல்நிலைப்பள்ளி வரையில் தமிழ் வழிகல்வி கற்பிக்கப்படும் பள்ளியில் படித்தவர். பிளஸ்-2 தேர்வில் 1,023 மார்க்கு பெற்று அரசு இடஒதுக்கீட்டில் என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்துள்ளார்.

ஆனால் என்ஜினீயரிங் கல்லூரியில் பாடத்திட்டம் ஆங்கிலத்தில் இருந்ததால் அவரால் அதனை சரியாக புரிந்து கொண்டு படிக்க இயலவில்லை. சமீபத்தில் நடந்த தேர்வுகளில் 5 பாடத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டார். இதனால் விது சோகமே உருவாக விரக்தியில் இருந்தார்.

தற்கொலை

இதுபற்றி அவர் தந்தையிடம் கூறி இருக்கிறார். அதற்கு அவரது தந்தை, ``எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து முன்னேறி வா'' என்று அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவர் விது விடுதியில் உள்ள குளியல் அறையில் தனது லுங்கியை இரண்டாக கிழித்து அதை கயிறு போல திரித்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான கடிதம்

மாணவர் விது தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திய போலீசார் கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். அதில் விது எழுதியிருந்ததாவது:-

``எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் சிறு வயதில் இருந்தே தமிழ் வழிகல்வியில் படித்தேன். என்ஜினீயரிங் படிப்பில் எல்லாம் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆங்கிலத்தில் படிக்க இயலாத காரணத்தால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்.''

இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதி இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் ஆல்ட்ரின் ஈஸ்டர், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றிங்க

நெஞ்சு கனக்கிறதய்யா!

மாணவ சமுதாயங்களே கல்வி என்பது வாழ்க்கைக்கு தேவையானதுதான். அதற்காக கல்விதான் வாழ்க்கை என்ற நிலை இல்லை என்பதை உணர்ந்து, பரீட்சையில் தோல்வி அடைந்தால் முனமுடைந்து தற்கொலை செய்வதை கைவிடுங்கள். எல்லா பிரச்சனைக்கும் தற்கொலைதான் தீர்வு என்பது கோழைத்தனம்.

நெஞ்சில் உறுதி வேண்டும்!

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த போலீஸ்...

மோட்டார் சைக்கிளில் சென்று
பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


சென்னை, நவ.27-

மோட்டார் சைக்கிளில் சென்று பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

தங்கச்சங்கிலி பறிப்பு

சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே உள்ள புதூர் செங்குன்றம் சாலையை சேர்ந்தவர் ராயப்பன். தனியார் பள்ளி காவலாளி. இவருடைய மனைவி தெரசம்மாள் (வயது55).
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அருகில் உள்ள கடைக்கு தெரசம்மாள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் `ஹெல்மெட்' அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, தெரசம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

விரட்டி பிடித்தனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த தெரசம்மாள், `திருடன்' `திருடன்' என்று சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் நின்ற பொதுமக்கள் கொள்ளையனை விரட்டினார்கள். அந்த ஆசாமி பதட்டமடைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

அந்த ஆசாமியை அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமாரிடம் ஒப்படைத்தனர்
சப்-இன்ஸ்பக்டர்

போலீஸ் விசாரணையில், வழிப்பறி செய்தவர், விருப்ப ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் என்பது தெரிய வந்தது. அவருடைய பெயர் ஜார்ஜ் (வயது 44). சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர்.

முதலில் வழிப்பறி செய்ததை அவர் மறுத்தார். தனது கண்ணெதிரே சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்ததாகவும், நானும் கொள்ளையனை பிடிக்க விரட்டி சென்றதாகவும், கீழே விழுந்த என்னை அவர்கள் தவறுதலாக பிடித்ததாகவும் தெரிவித்தார்.

கைது

போலீசார் இதை நம்பாமல் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் இன்னொரு தங்கச்சங்கிலி இருந்தது. இது பற்றி கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

போலீசார் துருவித்துருவி விசாரித்தபோது, செங்குன்றம் புழல் பகுதியில் ஒரு பெண் வக்கீலிடம் இந்த தங்கச்சங்கிலியை பறித்ததாக கூறினார். இதையொட்டி ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். அவர் மேலும் எத்தனை வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றிங்க

வேலியே பயிரை மேய்கிறதுன்ன சொல்வாங்களே...